Jump to content

தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய உருக்கமான ஆடியோ வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய உருக்கமான ஆடியோ வெளியீடு

தற்கொலைக்கு முன் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய உருக்கமான ஆடியோ வெளியீடு

 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதிஸ்ரீ துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி(நாளை) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர், தற்கொலை முடிவை தானாகவே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் குறை கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

“ஒருவேளை நீட் தேர்வில் தோல்வி அடைந்து தனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது?” என்ற பயம் காரணமாக இந்த முடிவை தான் எடுத்ததாக ஜோதிஸ்ரீ கூறியிருக்கிறார். மேலும் தனது தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்த முடிவை எடுத்ததற்காக தனது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த ஆடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன், அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/12094907/Audio-of-student-Jyotishree-Durga-speaking-before.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் : சாதியும், மதமும் எங்கே சென்றன? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I am sorry , I am tired" Anitha முதல் Jyoti Durga வரை தொடரும் NEET மரணங்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி: ஜோதிஸ்ரீ துர்காவைத் தொடர்ந்து மற்றுமொரு மாணவன் தற்கொலை

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மற்றுமொரு மாணவன் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

தர்மபுரியை சேர்ந்த ஆதித்யா (வயது-20) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளதுடன் தேர்வில் பங்கேற்பதற்காக மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவ, மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நாளை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தேர்வு அச்சம் காரணமாக இன்று திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில், ஆதித்யா என்ற மற்றொரு மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவன் நாளை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையிலேயே வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுள்ளார்.

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு அச்சம் காரணமாக இன்று ஒரேநாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-அடுத்தடுத்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் எனும் அரக்கன் : என்ன செய்யப் போகிறோம்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனிதா- ஆதித்யா வரை தற்கொலைக்கு தூண்டும் நீட்| பொறுப்பேற்குமா மத்திய அரசு| சாட்டை| ஊமக்குத்து| சரவணன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.