Jump to content

நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லை குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளை தளபதி

nallai.jpg?189db0&189db0.

 

யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்று (12) காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில், இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும், யாழ்.மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன் முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

இராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள். யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும்.” – என்றார்.

https://newuthayan.com/நல்லை-குருமுதல்வரை-சந்தி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 நாடு, 2 நிர்வாகம், 2 இராணுவக் கட்டமைப்பு – பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை…

September 12, 2020

jaffna-army-comandor.jpg

நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12.09.20) யாழ்ப்பானம் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன்முதலாக இந்து மத குருவை சந்தித்திருக்கின்றேன். அவரிடம் ஆசியினைப் பெற்றுள்ளேன். இந்த சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்.

ராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி லோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துதலாகும் இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

குறிப்பாக யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அத்தோடு இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும். அத்தோடு எமது பிரதேசத்தில் சமாதானம் முக்கியமானது இலங்கையர் அனைவரும் ஒரு நாட்டவர்கள் தான் என்ற கொள்கைக்கு இணங்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வசித்து வருகிறோம் இங்கே இரண்டு நாடுமில்லை இரண்டு நிர்வாகமும் இல்லை இரண்டு இராணுவ கட்டமைப்பு என்ற கதைக்கும் இடமுமில்லை. நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் இங்கே பிரிவினை என்ற வார்த்தைக்கு இடமில்லை.

ஆகவே நான் இராணுவ கட்டளைத் தளபதிஎன்ற வகையில் யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன். அத்தோடு மக்களை சந்தோஷமாக வாழ்வதற்கு உரிய வழிவகை நான் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடிய அவர், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த பின் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2020/150010/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆங்கிலேயனை ஏமாத்தி அதிகாரத்தை கைப்பற்றின மாதிரி, அடுத்த நாடகம் அரங்கேறுது. இனி அடுத்தது யாழ் ஆயர் சந்திப்பு.. பவுத்தத்துக்கு முன்னுரிமை, ஆசி மட்டும் நல்லை ஆதீனத்திடமா? நல்லா நடிப்பானுகள் காரியம் ஆகுமட்டும்.  தெற்கில் சண்டித்தனம் இங்கு குழைவு.

Link to comment
Share on other sites

3 minutes ago, satan said:

 ஆங்கிலேயனை ஏமாத்தி அதிகாரத்தை கைப்பற்றின மாதிரி, அடுத்த நாடகம் அரங்கேறுது. இனி அடுத்தது யாழ் ஆயர் சந்திப்பு.. பவுத்தத்துக்கு முன்னுரிமை, ஆசி மட்டும் நல்லை ஆதீனத்திடமா? நல்லா நடிப்பானுகள் காரியம் ஆகுமட்டும்.  தெற்கில் சண்டித்தனம் இங்கு குழைவு.

சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு;  சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி.

இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்.

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு;  சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி.

இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்.

சரியாக சொன்னீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

சர்வதேச அரங்கில் தமிழனுக்கு சாதகமாக என்னவோ நடக்குது அதுக்கு தான் இந்த கும்பிடு;  சீமான் கட்சி மீதானான தாக்குதல்; ஈழத்தமிழர் தமிழர் தெலுங்கு வழி தோன்றல்கள் என்ற நிறுவு முயற்சி.

இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை அல்ல மூன்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள்.

இது போர்த்துக்கேயருடன் 1520ல்  ஆரம்பித்த 500 வருடகால அடிமைத்தனம்.... மாறும் காலம் வரும் விரைவில்.

யுத்த குற்றவாளிகள் அரசினை அமைத்து இருப்பது எமக்கு சாதகமானது. கொரோன இடையில் வராமல் இருந்திருந்தால், செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவாவில் விக்கல் வந்திருக்கும்.

மார்ச் மாதம் இறுகும்.  டொரோண்டோவில் இருந்து ஒட்டவா போவது போல....தமிழர்களும் உலகெங்கும் போராடனும்....
 

Link to comment
Share on other sites

7 hours ago, Nathamuni said:

இது போர்த்துக்கேயருடன் 1520ல்  ஆரம்பித்த 500 வருடகால அடிமைத்தனம்.... மாறும் காலம் வரும் விரைவில்.

யுத்த குற்றவாளிகள் அரசினை அமைத்து இருப்பது எமக்கு சாதகமானது. கொரோன இடையில் வராமல் இருந்திருந்தால், செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவாவில் விக்கல் வந்திருக்கும்.

மார்ச் மாதம் இறுகும்.  டொரோண்டோவில் இருந்து ஒட்டவா போவது போல....தமிழர்களும் உலகெங்கும் போராடனும்....
 

சீமான் கட்சிக்குள் கலவரம் வரக் காரணமே இந்த ஜெனீவா கூட்டத் தொடர் தான்; 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.