Jump to content

பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள பிள்ளையான் பிணையில் வெளிவருவது சாத்தியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள பிள்ளையான் பிணையில் வெளிவருவது சாத்தியமா?

BharatiSeptember 12, 2020
  • இரா.துரைரத்தினம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் ரி.எம்.வி.பி கட்சி தலைவர் எஸ். சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் கட்சி சார்ந்தவர்களிடம் காணப்பட்டது.

spacer.png

 

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி அறிந்தவர்கள் அந்த நம்பிக்கையை கொண்டிருக்க மாட்டார்கள்.

 

ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க முடியாது என அச்சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் கொடுக்க தவறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற போது அவர் விடுதலை செய்யப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டி அப்படியானால் பிள்ளையான் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என யாரும் கேள்வி எழுப்பலாம்.

 

தேர்தல் பிரசார காலத்திலும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் பிள்ளையான் விடுதலை செய்யப்படுவார் அல்லது பிணையில் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை மட்டக்களப்பு மக்கள் பலரிடம் காணப்பட்டது.

 

1994ஆம் ஆண்டு 112ஆசனங்களை பெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைப்பதற்கு ஒரு ஆசனம் தேவைப்பட்ட நிலையில் மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் அந்த அரசுக்கான ஆதரவை வழங்கியிருந்தார்.

விடுதலைப்புலிகளின் தற்கொலைதாரி என சந்தேகிக்கப்பட்ட வரதன் என்பவரின் நடமாட்டம் தெரிந்தும் தகவல் கொடுக்க தவறினார் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு செயலாளரின் தடுப்பு காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்டு சந்திரசேகரன் வெற்றி பெற்றார்.

 

சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தாரே ஒழிய அவர் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் மீதான குற்றத்தை விலக்கி சட்டமா அதிபர் திணைக்களம் அவரை விடுதலை செய்தது.

ஆனால் ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்ற விசாரணை நிறைவடைந்து மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது.

 

கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்ட அவர் அங்கு உரையாற்றுகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்த தமிழ் பிரதிநிதிகளின் கதைகளுக்காக என்னை சிறைப்படுத்தி உள்ளார்கள். கடந்த ஐந்து வருடங்களாக நான் சிறையில் உள்ளேன். என்னை விடுதலை செய்ய சபாநாயகர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமது தலைவர் சிறையில் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் காரணம் என அவரின் கட்சியை சார்ந்தவர்கள் தேர்தல் காலத்தில் குற்றம் சாட்டியிருந்தனர்.

 

அரசியல் பழிவாங்கலாக தமது தலைவர் பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற ரி.எம்.வி.பி கட்சியினரின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா என பார்ப்பதற்கு முதல் இக்கொலை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பார்க்க வேண்டும்.

பிள்ளையான் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற ஆதங்கம் அவரின் கட்சியை சார்ந்தவர்களிடம் உண்டு. சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட்ட காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பார்.

 

ஆனால் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதேன் என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

அதற்கு விடை காணவேண்டும் எனெனில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை நடந்த சூழல், அதன் பின் நடத்தப்பட்ட விசாரணைக்குழுக்களின் பரிந்துரைகளை பார்ப்பது அவசியமாகும்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நற்கருணை ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். அச்சம்பவத்தில் அவரின் மனைவி சுகுணம் ஜோசப், உட்பட அருட்சகோதரிகள் பொதுமக்கள் என எட்டுப்பேர் படுகாயமடைந்தனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக 10வருடங்களின் பின்னர் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி ரி.எம்.வி.பி கட்சியை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்ரர் என்று அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராசா, கஜன் மாமா என அழைக்கப்படும் ரங்கநாயகம் கனகநாயகம் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் 11ஆம் திகதி பிள்ளையான் என்று அழைக்கப்படும் எஸ்.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.

ஜோசப் பரராசசிங்கம் கொலை, திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை, மூதூரில் 17 தொண்டுநிறுவன பணியாளர்கள் படுகொலை உட்பட 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராசபக்ச உடலகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஒன்றை 2006ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் நியமித்தார்.

2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற 16 சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த ஆணைக்குழுவுக்கு பணிக்கப்பட்டிருந்தது.

அந்த ஆணைக்குழு விசாரணை நடத்துவதற்காக அடையாளப்படுத்தப்பட்ட 16 படுகொலை சம்பவங்கள் இவைதான்.

1. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லட்சுமன் கதிர்காமர் படுகொலை.

2. மூதூரில் அக்சன் பாம் பணியாளர்கள் 17பேரின் படுகொலை.

3. மூதூர் வெலிக்கந்தைப்பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டமை.

4. ஜோசப் பரராசசிங்கம் படுகொலை ( 25 டிசம்பர் 2005 )

5. திருகோணமலை நகரில் ஐந்து மாணவர்கள் படுகொலை ( 02.ஜனவரி 2006 )

6. இலங்கை சமாதான செயலகத்தின் பிரதிபணிப்பாளர் நாயகம் கேதீஸ் லோகநாதன் படுகொலை ( 12 ஓகஸ்ட் 2006 )

7. செஞ்சோலை 51 மாணவிகள் படுகொலை ( ஆகஸ்ட் 2006 )

8. அல்லைப்பிட்டி தேவாலய பங்குத்தந்தை நிஹால் ஜிம் பிரவுண் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் ( 28 ஒகஸ்ட் 2006 )

9. பேசாலை கடற்கரையில் 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 17 யூன் 2006 )

10. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் 17 பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( ( 13 மே 2006 )

11. பொத்துவில் பொலிஸ் பிரிவில் 10 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 17 செப்டம்பர் 2006 )

12. கெப்பிட்டிகொலவ பகுதியில் 68 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 15 யூன் 2006 )

13. அவிசாவளையில் தலையில்லாத 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ( 29 ஏப்ரல் 2006 )

14. வெலிக்கந்தையில் 13 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 29 மே 2005 )

15. சிகிரியா பகுதியில் 98 படையினர் கொல்லப்பட்ட சம்பவம் ( 16 ஒக்டோபர் 2006 )

16. நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ( 10 நவம்பர் 2006 )

விசாரணை நடத்திய உடலகம விசாரணை ஆணைக்குழு இந்த 16 சம்பவங்களில் ஜோசப் பரராசசிங்கம், திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை ரவிராஜ் படுகொலை உட்பட 7 படுகொலை சம்பவங்களை மட்டுமே விசாரணை நடத்தியிருந்தது. ஏனைய சம்பவங்கள் பற்றி சாட்சியமளிக்க யாரும் முன்வரவில்லை என்றும் அச்சம்பவங்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க முடியவில்லை என்றும் உடலகம ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

உடலகம விசாரணை ஆணைக்குழு மே 2009ல் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த இறுதி அறிக்கையில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் படுகொலை சம்பவம் பயங்கரவாத செயல் என குறிப்பிட்டிருந்தது. தேவாலயம் ஒன்றில் பொதுமக்கள் கூடியிருந்த வேளையில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத செயல் என்றும் அருட்சகோதரி உட்பட 8 பொதுமக்கள் இதில் காயமடைந்திருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி 2010ஆம் ஆண்டு நியமித்தார்.

2002ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது. இந்த ஆணைக்குழு 2011 நவம்பர் 15ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. இந்த அறிக்கையிலும் தேவாலயம் ஒன்றில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பி வைத்த தகவலில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களை கருணா பிள்ளையான் குழுவே படுகொலை செய்ததாக தெரிவித்திருந்தது. இதனை விக்கிலீங்ஸ் வெளியிட்டிருந்தது. இதனை கொழும்பு ரெலிகிறாப் இணையத்தளமும் 2013 செப்டம்பர் 13ஆம் திகதி பிரசுரித்திருந்தது.

2014 மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 25ஃ1 தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் ஆட்கடத்தல்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் மூவர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை நியமித்தார்.

முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஷ்டிசாரி, நியுசிலாந்து முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி டாம் சில்வியா, முன்னாள் பாகிஸ்தான் மனித உரிமை ஆணைக்குழு தலைவர் அஷ்மா யஹான்கிர் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தி 260 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்திருந்தது. இந்த அறிக்கையை 2015 செப்டம்பர் 16ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் பத்திரிகையாளர் முன்னிலையில் ஆணையாளர் வெளியிட்டு வைத்தார். இந்த அறிக்கையிலும் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை மற்றும் ரி.எம்.வி.பி என அழைக்கப்படும் பிள்ளையான் குழு மேற்கொண்ட படுகொலைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

2015 செப்டம்பர் மாதத்தில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை, திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை உட்பட 5 படுகொலை சம்பவங்கள் பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வலியுறுத்தியிருந்தன. இதற்கு பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த 5 சம்பங்கள் பற்றி விசாரணை முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பரிந்துரைத்தது மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம், உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச இராஜதந்திரிகளும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே 10 வருடங்கள் கடந்த நிலையில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை துரிதப்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

கிரிமினல் குற்ற வழக்கு ஒன்று சாதாரண சட்டத்தின் கீழ் நீதிமன்றில் விசாரிக்கப்படும் போது சம்பவத்தை நிரூபிக்க கூடிய சாட்சிகள், மற்றும் கிரிமினல் குற்றம் நடந்ததற்கான சான்றுப்பொருட்கள் என்பன நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் உதவி பொலிஸ் அத்தியட்கருக்கு மேற்பட்ட தரத்தில் உள்ளவருக்கு வழங்கும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே வழக்கின் பிரதான சான்று பொருள். குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பெற்ற அதிகாரியே பிரதான சாட்சி. ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் மரணவிசாரணை நடத்திய நீதிபதியும் ஒரு சாட்சியாகும். சந்தேக நபர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் இவர் முன்னிலையில் பதியப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் தடயப்பொருட்கள் எதனையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. கண்கண்ட சாட்சிகள் கூட அவசியமில்லை. சந்தேக நபர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே போதுமானது. ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் சந்தேக நபர் ஒருவர் சாட்சியாக மாறியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருக்கும் ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளில் ஆஜராகி வரும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் பிணையில் விடுவிக்கப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அத்தனை கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை அல்லது நீதிமன்ற உத்தரவை முன் உதாரணமாக ஏனைய வழக்குகளிலும் சமர்ப்பிக்க முடியும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டால் 10 அல்லது 20 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிகளையும் பிணையில் விடுவிக்குமாறு அத்தீர்ப்பை முன் உதாரணமாக கொண்டு நீதிமன்றில் பிணை மனுவை முன் வைக்க முடியும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் அனைவருக்கும் பிணை வழங்க வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கி கொள்ள அரசாங்கம் ஒரு போதும் விரும்பாது.

 

 

http://thinakkural.lk/article/67852

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.