Jump to content

பிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது.

செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார். அவருடைய அனுபவங்கள் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் தமிழ் வடிவத்தை இங்கு தருகிறோம். இது ஒரு வரலாற்று குறிப்பாக கொள்ள முடியுமா என்பதில் நிறைய விவாதங்கள் இருக்கும். எனினும், சிங்கள ஊடகத்தில் வெளியான தகவலாக மீள் பதிவிடுகிறோம்.

அந்த பதிவு கீழே-

செல்வராஜா தேவகுமார் அல்லது ரகு 1996 முதல் 2007 வரை பிரபாகரனின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். வெடிகுண்டு காயமடைந்து பாதத்தின் ஒரு பகுதியை இழந்த பின்னர், பிரபாகரன் தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவியை துறக்க வேண்டியிருந்தது.

ரகு பதவியை துறந்தத போதிலும், அவர் புலிகளின் உறுப்பினராக இருந்தார். வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் கடைசி நாட்களில், ரகு பொதுமக்கள் மத்தியில் ஒளிந்துகொண்டு அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு திரும்பினார்.

ரகு ஒரு சாதாரண மனிதனாக பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளர் என்ற உண்மையை மறைத்து, வவுனியாவின் இராமநாதபுரம் இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்தார். பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளராக இருந்த ரகுவை, அப்போது வடக்கு மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி., நிமல் லெவ்கேயின் கீழிருந்த புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

பொலிஸ் காவலில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், பிரபாகரனின் இருப்பிடங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருக்கும் இடத்தைப் பற்றியும் பல உண்மைகளை வெளியிட்டார்.

மூத்த டி.ஐ.ஜி நிமல் லெவ்கே இது குறித்து தெரிவிக்கையில்,

ரகு பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளராக அடையாளம் காணப்பட்டார். அப்போது காவல்துறை ஆய்வாளராக இருந்த சுல்பிகர் எனக்கு கீழ் பணிபுரிந்தார். ரகுவை பற்றி அறிந்து, அவரை காவலில் எடுத்தோம். ரகுவை பொறுப்பேற்றபோது பிரபாகரன் உயிருடன் இருந்தார். எனவே ட்ரோன்களில் இருந்து எடுக்கப்பட்ட வான்வழி புகைப்படத்தை ரகுவுக்குக் காட்டினோம், பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க ஒரு பெரிய முயற்சி செய்தோம். அப்போதும பிரபாகரன் பெரிய மக்கள் கூட்டத்திற்குள் மறைந்திருந்ததால் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, பிரபாகரன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரகு மூலம் ஒரு பெரிய ஆயுதங்களைக் கண்டுபிடித்தோம். பிரபாகரனின் எச்.பி.16 வகை துப்பாக்கி மற்றும் குண்டு துளைக்காத உடுப்பு ஆகியன கடைசியாக போர்கள் நடந்த வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் இவை பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. எச்.பி.16 துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. பிரபாகரன் பயன்படுத்திய குண்டு துளைக்காத உடுப்பு அவருக்காக தயாரிக்கப்பட்டது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இது முழு உடலையும், காதுகளிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்களை உருகுவதன் மூலம் பெறப்பட்ட பித்தளைகளைப் பயன்படுத்தி இது செய்யப்பட்டது.

88 தற்கொலை ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. யுத்தத்தில் உயிருடன் பிடிபடாமல் தற்கொலை செய்ய புலிகள் மத்தியில் அவை விநியோகிக்கப்பட்டதாக ரகு எங்களிடம் கூறினார். கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் 2,000 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ் உயர் வெடிபொருட்களும் உள்ளன

டி.ஐ.ஜி லெவ்கேவின் ஒருங்கிணைப்பின் கீழ் முல்லைத்தீவிவில் ரகுவை சந்தித்தோம். ரகு  பல ஆண்டுகளாக தனது பிரதான மெய்க்காப்பாளராக பணியாற்றுவதைத் தவிர பொதுமக்களைக் கொல்லவோ அல்லது இராணுவத்திற்கு எதிராகப் போராடவோ செல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரகு யாழ்ப்பாணத்தில் ஒரு காய்கறி கடையை நடத்தி வருகிறார் மற்றும் பல பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை பராமரிக்கிறார்.

பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளரான ரகு ஒரு செய்தித்தாளுக்கு பேட்டி அளிப்பது இதுவே முதல் முறை.

‘நான் படிக்கும் போது, இந்திய ராணுவம் எங்கள் பகுதியில் முகாமிட்டது. நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கற்றேன். பாடசாலைக்குச் சென்றபோது, இந்திய வீரர்கள் சிகரெட் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தினர். சிகரெட் வாங்கவும் பணம் தரமாட்டார்கள். எங்கள் குடும்பத்தில் தினமும் இந்திய இராணுவத்திற்கு காசு வாங்க பணமில்லை. நான் மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களையும் சிகரெட்டைக் கொண்டு வரச் சொன்னார்கள். முகாம் கடந்து சிகரெட் இல்லாமல் பாடசாலைக்கு செல்ல முடியாததால் நான் பாடசாலை செல்வதை நிறுத்தினேன். இதன் காரணமாக இந்திய இராணுவத்தின் மீது எனக்கு பெரும் வெறுப்பு எழுந்தது.

நான் பாடசாலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தேன். நான் வீட்டில் இருப்பதால் சோர்வாக இருந்தேன். அப்போது, விடுதலைப் புலிகளில் ஆட் சேர்க்கப்படுவதாக கேள்விப்பட்டு, வீட்டை விட்டு சென்று புலிகளில் இணைந்தேன். ர். வாய்ப்பு கிடைத்ததும் நான் இந்திய வீரர்களை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து விடுதலைப் புலிகளில் சேர்ந்தேன்.

புலிகளில் சேர்ந்த பிறகு எனக்கு ரகு என்ற பெயர் வைத்தார்கள். சிறுவர் போராளியாக பயிற்சியை முடித்த பின்னர் புலிகளின் காவல் முகாம், பதுங்கு குழிகளை வெட்டுதல், பிற முகாம்களுக்கு உணவு மற்றும் பானம் எடுத்துச் செல்லும் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது.

நான் சிறு வயதில் புலிகளில் கொமாண்டோ பயிற்சிக்கு பெற தெரிவானேன். 4 மாத கொமாண்டோ பயிற்சி பெற்னே். தலைவரின் மெய்க்காப்பாளர்களாக பயிற்சி பெற சுமார் 750 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர். கொமாண்டோ பயிற்சியில் சிறந்து விளங்கியவர்கள் வி.ஐ.பி. பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பயிற்சியை 4 மாதங்கள் கொடுத்தேன்.

அந்த நேரத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு முகாமில் இருந்து பயிற்சி பெற்றோம். பயிற்சியின் முடிவில், நான் உட்பட 100 பேர் மட்டுமே நன்கு பயிற்சி பெற்றவர்கள் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு படையினருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பிரபாகரனின் பாதுகாப்புப் பிரிவில் தெரிந்தெடுக்கப்பட்ட எங்களின் குடும்ப விபரங்களை புலனாய்வுத்துறையினர் கண்காணித்தனர். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்ற தமிழ் அமைப்புகளுடன் தொடர்பை கொண்டிருந்தார்களா என கண்காணித்தனர். கடுமையான கண்காணிப்பின் பின் பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டோம். அந்த பிரிவில் கடுமையான ஒழுங்கு விதிகள் இருந்தன. மது, சிகரெட் மற்றும் வெற்றிலை போன்றன கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

ஒருவர் மது அருந்தினால் பிடிபட்டால், அவர் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார். பிரபாகரனின் மெய்க்காப்பாளர்கள் கடமையில் மட்டுமல்ல, எந்த நேரத்திலும் மது அருந்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் புகைபிடித்த சிகரெட்டுகள் மற்றும் வெற்றிலை சிக்கினால், அதற்கு தண்டனையுண்டு.

(இதேவேளை- தம்முடன் உரையாடிய சில மணி நேரத்தில் ரகு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்ததாக சிங்கள ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்)

பிரபாகரன் தனது பாதுகாப்புப் படையில் சுமார் 750 உறுப்பினர்களைக் கொண்டிருந்தார். ஆனால் ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் அவரது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லோரும் சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். வன்னி இறுதி யுத்தம் தொடங்கிய பின்னர், அனைத்து -750 மெய்காவலர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அவரது மெய்க்காப்பாளர்களின் பொறுப்பில் இருந்தேன். அவரைப் பாதுகாக்கும் முழு பொறுப்பும் என்னிடமே.

பிரபாகரன் பயணம் செய்ய இரண்டு வெள்ளை வேன்கள் மற்றும் ஒரு பஜிரோ ஜீப்பைப் பயன்படுத்துகிறார். மூன்று வாகனங்களும் ஒரே நேரத்தில் பயணிக்கின்றன. மூன்று வாகனங்களில் எதில் பயணிப்பதென்பதை கடைசி நிமிடத்தில் பிரபாகரன் தீர்மானிக்கிறார். அவர் தனக்கு விருப்பமான ஒரு வாகனத்தில் ஏறியதும், மற்ற இரண்டு வாகனங்களும் பின்தொடர்கிறன. அவர் எங்கு செல்கிறார் என்று கூட சொல்லவதில்லை. அவர் போன பிறகு நாங்கள் கிளம்புகிறோம்.

தனது பாதுகாப்புத் திட்டங்களை பிரபாகரனே திட்டமிட்டார். அவரது பாதுகாப்புக்காக பிற தலைவர்களின் எந்த பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அவர் தனது பாதுகாப்பு திட்டங்களையே செயல்படுத்தினார். மற்றவர்களின் பாதுகாப்புத் திட்டங்களை அவர் நம்பவில்லை.

பின்னர் நான் பிரபாகரனால் அவரது பிரதான மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டேன். அவருக்கு என் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவருக்காக நான் இறக்கத் தயாராக இருந்தேன். எங்களுக்கு நல்ல புரிதல் இருந்தது.

இந்த சம்பவம் 2004 ல் நடந்தது. அந்த நேரத்தில் நான் பிரபாகரனின் பிரதான மெய்க்காப்பாளராக இருந்தேன். ஒருநாள் பிரபாகரன் பஜிரோ ஜீப்பில் சென்றார். அவருக்கு இரண்டு வெள்ளை டொல்பின் வாகனங்கள் பாதுகாப்பளித்தன. புதுக்குடியிருப்பு பகுதி வழியாகச் செல்லும்போது, பிரபாகரனின் பஜிரோ ஜீப்பில் திடீரென தீப்பிடித்தது.

அந்த நேரம் ஜீப்பில் நான் இருந்தேன். தீ விபத்து ஏற்பட்டவுடன் ஜீப் நிறுத்தப்பட்டது. நான் உடனே நடவடிக்கை எடுத்து பிரபாகரனை தீயிலிருந்து வெளியேற்றினேன். அந்த நேரத்தில் பிரபாகரன் தப்பி ஓடவில்லை. அவர் பயப்படவில்லை. எந்த பீதியும் இல்லை. அவர் புன்னகைத்து அடுத்த வாகனத்தில் ஏறினார். எந்த உரையாடலும் இல்லாமல் அவர் விரும்பிய வழியில் சென்றார். இந்த சம்பவம் குறித்து புலிகள் புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இது பிரபாகரனின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியா என்று புலிகளின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வந்தன. ஆனால் விசாரணையில் இது அப்படி இல்லை என்று தெரிய வந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு வடமராட்சி நடவடிக்கையின் போது, படையினர் தன்னை கைது செய்ய முயன்ற போதும், இந்திய தலையீடு காரணமாக அவ்வாறு செய்ய முடியவில்லை என்று பிரபாகரன் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

இராணுவ ஆழ ஊடுருவும் பபடைப்பிரிவின் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் 2001 ஆம் ஆண்டில் பிரபாகரன் பயணித்த பஜிரோ ஜீப்பை குறிவைத்து வெடிகுண்டு ஒன்றை வெடித்து வெடித்தனர். குண்டுவெடிப்பில் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பிரபாகரன் ஜீப்பில் இல்லை என்று ரகு கூறினார்.

பிரபாகரனுக்கு உணவு தயாரிக்க மூன்று சமையல்காரர்கள் இருந்தனர். அவர் உணவருந்த முன்னர், அந்த உணவை நான் முதலில் சாப்பிட்டேன். நான் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து பிரபாகரன் சாப்பிட்டார். சாப்பாட்டில் ஏதேனும் விஷம் இருக்கிறதா என்று பார்க்க இதைச் செய்தோம்.

ஈழத்தை வெல்வதற்கான போராட்டத்தை வழிநடத்த தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று பிரபாகரன் அடிக்கடி கூறியுள்ளார். அதனால்தான் அவர் எப்போதும் கவனமாக இருப்பதை உறுதி செய்தார். ரகுவின் கூற்றுப்படி, இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி தாக்குதலை தீவிரப்படுத்திய பின்னர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்தி, எச்சரிக்கையடைந்தனர்.

பிரபாகரனின் பயணப்பாதையில் ஒருமுறை அழுத்த குண்டை புதைக்க வைக்க குழி தோண்டப்பட்டிருந்தது. அதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

(தொடரும்)

https://www.pagetamil.com/145342/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂


விட்ட தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுகொளவ்து என்பது இன்றி அமையாத ஒன்று 
ஆகவே இந்த கட்டுரை தமிழர்களால் சேமிக்க பட்டு வைக்க பட வேண்டும் என்பதே எனது அவா 
 

புலிகளின் தவறுகளில் இருந்து பாடம் கற்ற பலர் இன்று 
அரசியல் ஞானிகளாக வலம் வருவதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

விட்ட தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுகொளவ்து என்பது இன்றி அமையாத ஒன்று 
ஆகவே இந்த கட்டுரை தமிழர்களால் சேமிக்க பட்டு வைக்க பட வேண்டும் என்பதே எனது அவா 

கட்டுரை  உண்மையை சொன்னால் நல்லது இது தமிழ்பேஜ்  கூட்டம் முன்பும் ஒரு தொடர் ஆரம்பத்தில் சரியாய் எழுதி இடையில் விஷமம் பண்ணியவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான விடயம் எல்லோரும் இதுதான் சமயமென மிளாகய் அரைக்கின்றார்கள் எம் தலையில், உண்மையை எழுதினால் நல்லது.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது இவரது பேட்டியை முழுமையாக இணைப்பீர்களா.

தலைவருக்கு ஆமைக்கறி அலாதி பிரியம், கேபியை காட்டிக்கொடுத்தது தான் என்று எல்லாம் திடுக்கிடும் பேட்டியை முழுமையாக இணைத்தால் என்ன சொல்ல வாறார் என்றாவது விளங்கலாம் அல்லவா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.