Jump to content

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - டக்ளஸ் உறுதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதிக வள பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலை தற்போது பல வைத்திய சேவை பிரிவுகள் விரிவாக்கம் கண்டுவரும் நிலையில் அதற்கான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஊழியர்களின் பற்றாக்கறை அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் அதற்கான தீர்வு அவசியமானது என்றும் வலியுறுத்தியிருந்தனர்

மேலும் குறித்த வைத்தியசாலையானது தற்போது வடபகுதியில் பாரியளவிலான சேவையை முன்னெடுத்து வருகின்றபோதிலும் குறைந்தளவான வசதிகளுடனேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தின் வைத்திய சேவையின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக அதனை வளப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பிரிவுகளை யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கான  வசதி வாய்ப்புக்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

வைத்தியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் போதனா வைத்தியசாலையின் தேவைப்பாகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சருடன் தாம் சந்திப்பொன்றை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அதனூடாக வைத்தியசாலையின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வைத்தியர் பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.https://www.virakesari.lk/article/89916

Link to comment
Share on other sites

மீன் பிடி துறை அமைச்சருக்கு இங்கு என்ன வேலை..... அத்துறை சம்பந்தமான அமைச்சர் வர வேணும்  இல்லாட்டி வட மாகாணா அபிவிருத்திக்கு பொறுப்பான அரசின் பிரதிநிதியான அங்கஜன் வர வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் வேலை எல்லாவற்றுள்ளும் தலையை காட்டி பெயரெடுத்து அரசியல் செய்வது, செயற்பாடு பூச்சியம். நானும் ஒரு அரசியல்வாதி! ஆமா, தொல்பொருள் ஆராய்ச்சிக்கு தமிழர் யாரும் முன்வரவில்லை என ஒப்பாரி வைத்து திரிந்தார், இப்போ ஒருவர் முன்வந்திருக்கிறார். என்னாச்சு வாய் வீச்சு?  இவர் கதையை வேறு பக்கம் திருப்பிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

மீன் பிடி துறை அமைச்சருக்கு இங்கு என்ன வேலை..... அத்துறை சம்பந்தமான அமைச்சர் வர வேணும்  இல்லாட்டி வட மாகாணா அபிவிருத்திக்கு பொறுப்பான அரசின் பிரதிநிதியான அங்கஜன் வர வேணும்.

 

23 minutes ago, satan said:

சிலரின் வேலை எல்லாவற்றுள்ளும் தலையை காட்டி பெயரெடுத்து அரசியல் செய்வது, செயற்பாடு பூச்சியம். நானும் ஒரு அரசியல்வாதி! ஆமா, தொல்பொருள் ஆராய்ச்சிக்கு தமிழர் யாரும் முன்வரவில்லை என ஒப்பாரி வைத்து திரிந்தார், இப்போ ஒருவர் முன்வந்திருக்கிறார். என்னாச்சு வாய் வீச்சு?  இவர் கதையை வேறு பக்கம் திருப்பிவிட்டார்.

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

மீன் பிடி துறை அமைச்சருக்கு இங்கு என்ன வேலை..... அத்துறை சம்பந்தமான அமைச்சர் வர வேணும்  இல்லாட்டி வட மாகாணா அபிவிருத்திக்கு பொறுப்பான அரசின் பிரதிநிதியான அங்கஜன் வர வேணும்.

தானும் செய்யுறன் என்று காட்டனுமே.

ஆனால் இறுதியில்.. ஒன்றும் செய் படாது.  சுருட்டிப் பொக்கட்டுக்குள் போட கணக்குக் காட்ட திட்டங்கள்.. ஆளணி சேர்ப்பு காட்டனுமே. புல்லுக்குளம் நிரவலோடு போட்டது போல.. எத்தனை எத்தனை.. எனியும் தொடரும். 

யாழ் போதனா வைத்தியசாலையில் இருக்கும் ஸ்கானர் கூட புலம்பெயர் உறவுகளின் அன்பளிப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

 

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

எல்லாவற்றையும் செய்யும் வல்லமை தன்னிடமே உண்டு என்று தம்பட்டம் அடிப்பதால் அவர்களிடம் போய் முறையிட்டுள்ளார்கள். அவர்களை சரியானவர்களிடம் அனுப்பி வைப்பதை விட்டு, தான் பெற்றுத் தருவேன் என்பது ஏமாற்று மட்டுமல்ல, பிழையான வழிகாட்டுதலையும்  வழங்குகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

எல்லாவற்றையும் செய்யும் வல்லமை தன்னிடமே உண்டு என்று தம்பட்டம் அடிப்பதால் அவர்களிடம் போய் முறையிட்டுள்ளார்கள். அவர்களை சரியானவர்களிடம் அனுப்பி வைப்பதை விட்டு, தான் பெற்றுத் தருவேன் என்பது ஏமாற்று மட்டுமல்ல, பிழையான வழிகாட்டுதலையும்  வழங்குகிறார்.

அது சரி! செய்தியை வாசிக்கவில்லை என்று ஒப்புக் கொள்ள மாட்டிங்கள் என்று தெரியும்! நல்ல வேளை சத்தியமூர்த்தியை துரோகி முத்திரை குத்தவில்லை! அது வரைக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

 

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

தலைப்பு சரியாகத்தான் இருக்கு. உங்கள் மனநிலையும் கற்பனையும் தான் தவறு.

அமெரிக்காவில் வைத்தியசாலை சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? சரி அப்படி போனவர்களுக்கு அந்த அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

இவரை நம்பிய மக்களுக்கு முதலில்ல மீன் பிடிக்க வழி செய்யட்டும்... அவர்கள் இன்னும் அல்லல் படுகின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தலைப்பு சரியாகத்தான் இருக்கு. உங்கள் மனநிலையும் கற்பனையும் தான் தவறு.

அமெரிக்காவில் வைத்தியசாலை சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? சரி அப்படி போனவர்களுக்கு அந்த அமைச்சர் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்?

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

 

22 hours ago, Justin said:

நல்ல வேளை சத்தியமூர்த்தியை துரோகி முத்திரை குத்தவில்லை! அது வரைக்கும் நன்றி!

இவர்களுக்கு எங்கே, யாருடன், எதை பேசுவது? என்கிற  விபரம் போதவில்லை என்று சொல்ல வருகிறார். அதை மற்றவர் தலையில் கட்டியடிக்க  முயல்கிறார். விட்டு நகருவோம் அது அவர் பிரச்சனை. 

Link to comment
Share on other sites

இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு; அமைச்சர் டக்ளஸ்

வாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த வருடம் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் கோரிக்ககை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய கலந்துரையாடலிலும் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார். .


 
இதுதொடர்பில் பதில் அளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஏற்கனவே 6 விதமான பயிர் செய்கைகளுக்கு நஸ்டஈடு வழங்கும் ஏற்பாடுகள் மாத்திரம் விவசாய அமைச்சில் காணப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைய, மேற்குறிப்பிட்ட பயிர் செய்கைகளுக்கும் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


 
எனவே, எதிர்காலத்தில் குறிப்பிட்ட பயர்செய்கைகள் பாதிக்கப்படும் போது உடனடியாக நஸ்டஈடு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாய அமைச்சின் குறித்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன்,

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.


 
எனவே, அடுத்த அமைச்சரவையில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி அம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஸ்டஈடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

 

http://thinakkural.lk/article/68978

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேரை தன்னைச்சுற்றி அணி திரட்டி ஏதோ படம் காட்டப் போறார் என்று நினைக்கிறேன். மாகாண சபைத் தேர்தல் ஏதும் அண்மையில்  வருகுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 hours ago, Justin said:

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

அண்ணை ஜெர்மனியிலை இருந்தாலென்ன வேற எங்கையாவது இருந்தாலென்ன கேட்ட கேள்விக்கு பதிலை காணம். ஓ இதுதான் அறிவுபூர்வமாக கருத்தெழுதுகிறது எண்டு எடுத்துக்கொள்ளலாமோ ??

Link to comment
Share on other sites

அம்பன் புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி

 

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

அப்போதைய கொறோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்துடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதி உறுதிளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நஸ்டஈடு வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் அழிவுகளுக்கு நஸ்டஈடு வழங்கும் விவசாய பயிர்களின் பட்டியலில் வாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்றவை இணைக்கப்பட்டுள்ளதாக நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://thinakkural.lk/article/69204

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 09:33, Eppothum Thamizhan said:

 

அண்ணை ஜெர்மனியிலை இருந்தாலென்ன வேற எங்கையாவது இருந்தாலென்ன கேட்ட கேள்விக்கு பதிலை காணம். ஓ இதுதான் அறிவுபூர்வமாக கருத்தெழுதுகிறது எண்டு எடுத்துக்கொள்ளலாமோ ??

பதில் அதிலேயே இருக்கிறது! புரிந்து கொள்ள கொஞ்சம் "வரிகளுக்கிடையே வாசிக்கும்" இயலுமை வேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

பதில் அதிலேயே இருக்கிறது! புரிந்து கொள்ள கொஞ்சம் "வரிகளுக்கிடையே வாசிக்கும்" இயலுமை வேண்டும்! 

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

மேலே இருக்கிறது ஒரேவரி. இதில எதுக்கு இடையாலை போய்  நான் வாசிக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 03:36, Justin said:

 

இரண்டு பேரும் தலைப்பை மட்டும் தான் வாசித்துக் கருத்துச் சொல்வீங்கள் போல! டக்கி ஆஸ்பத்திருக்குப் போகவில்லை, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டக்கியின் அலுவலகத்திற்கு வந்து கேட்டதற்கு தான் இந்த பதில். 

(இப்ப என்ன சொல்லப் போறீங்கள்? யாழ் ஆஸ்பத்திரி நிர்வாகம் முறைகெட்டு நடக்குது என்பீங்களோ?🤔)

யார் நல்லது செய்தாலும் பிடிக்காது நம்ம ஆட்களுக்கு 

25 minutes ago, Justin said:

பதில் அதிலேயே இருக்கிறது! புரிந்து கொள்ள கொஞ்சம் "வரிகளுக்கிடையே வாசிக்கும்" இயலுமை வேண்டும்! 

போனமாதம் அம்மாவை அழைத்துச் சென்றேன் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது நிர்வாகம் நன்றாகவே இருக்கிறது  வெளிச்சுத்தத்தை கவனத்தில் எடுத்தால் நல்லது 

சுத்தம் செய்பவர்கள் இருந்தாலும் சில பொது இடங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது நமது மக்களுக்கு தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

சிறிலங்கா அமெரிக்க தராதரமெண்டால் நீங்கள் ஏன் அண்ணை ஜேர்மனியில இருக்கிறீங்கள்? 

மேலே இருக்கிறது ஒரேவரி. இதில எதுக்கு இடையாலை போய்  நான் வாசிக்கவேண்டும்?

🤣சரி, இதோ உரித்த வாழைப்பழம், வாயை ஆவெண்டுங்கோ எ.தா: "சிறிலங்கா என்ற நாடு அமெரிக்க, ஜேர்மனி தராதரங்களை நெருங்காத ஊழல், சுத்துமாத்துகள், அரசியல் சாயங்கள் நிறைந்த நாடு! அமெரிக்காவில் , ஆஸ்பத்திரி குறைபாடுகளை மீன்பிடி அமைச்சிடம் கொண்டு செல்லவே மாட்டார்கள், எனவே மீன்பிடி அமைச்சு என்ன பதில் சொல்ல வேண்டுமென்ற கேள்வியே அர்த்தமற்றது!" 

எல்லாத்தையும் விரிவா எழுதினாத் தான் தமிழே விளங்குது, பெயரில தமிழ்🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யார் நல்லது செய்தாலும் பிடிக்காது நம்ம ஆட்களுக்கு 

போனமாதம் அம்மாவை அழைத்துச் சென்றேன் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது நிர்வாகம் நன்றாகவே இருக்கிறது  வெளிச்சுத்தத்தை கவனத்தில் எடுத்தால் நல்லது 

சுத்தம் செய்பவர்கள் இருந்தாலும் சில பொது இடங்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது நமது மக்களுக்கு தெரியாது 

தனி, யாழ் ஆஸ்பத்திரியை அடிப்படையில் முதன் முதலில் சிறப்பாக்கியது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் , 90 களில். பின்னர் வந்த பணிப்பாளர்கள் அதில் இருந்தே மெது மெதுவாக முன்னேற்றி வந்திருக்கின்றனர்.  சத்தியமூர்த்தி மிகவும் உழைக்கிறார். எங்கே உதவி கிடைக்கிறதோ அங்கே அவர் நல்ல உறவுகளை வளர்த்து மருத்துவமனையை வளமாக்குவார்! வெளியூரில் வாழும் நம்மவர் "மேற்கத்தைய தராதர நிர்வாகம் யாழில் வரும் வரை எல்லாத்தையும் இழுத்துப் பூட்டு" என்று பேசுவது ஒன்றும் புதிதில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

தனி, யாழ் ஆஸ்பத்திரியை அடிப்படையில் முதன் முதலில் சிறப்பாக்கியது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் , 90 களில். பின்னர் வந்த பணிப்பாளர்கள் அதில் இருந்தே மெது மெதுவாக முன்னேற்றி வந்திருக்கின்றனர்.  சத்தியமூர்த்தி மிகவும் உழைக்கிறார். எங்கே உதவி கிடைக்கிறதோ அங்கே அவர் நல்ல உறவுகளை வளர்த்து மருத்துவமனையை வளமாக்குவார்! வெளியூரில் வாழும் நம்மவர் "மேற்கத்தைய தராதர நிர்வாகம் யாழில் வரும் வரை எல்லாத்தையும் இழுத்துப் பூட்டு" என்று பேசுவது ஒன்றும் புதிதில்லையே!

யதார்த்தமான கருத்து சொல்ல முற்படும் போது பல எதிர் தாக்குதலை சந்தித்து தான் ஆகவேண்டும் 

அதிகமாக சிங்களப் பிள்ளைகள்  மருத்துவம் படிக்கின்றனர் யாழ்ப்பாணத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யதார்த்தமான கருத்து சொல்ல முற்படும் போது பல எதிர் தாக்குதலை சந்தித்து தான் ஆகவேண்டும் 

அதிகமாக சிங்களப் பிள்ளைகள்  மருத்துவம் படிக்கின்றனர் யாழ்ப்பாணத்தில் 

எல்லாத்தையும் யதார்த்தத்தின் பெயரால் நல்லா சமாளிக்கிறீங்கள்.

அது சரி.. சிங்களப் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் மருத்துவம் படிப்பதையிட்டு பெருமைப்படுகிறீர்கள். தென்னிலங்கையில்... எத்தனை யாழ்ப்பாணப் பிள்ளைகள்.. மட்டக்களப்பு பிள்ளைகள் மருத்துவம் படிக்கினம்..??! இதுவும் ஒரு யதார்த்தமான கேள்வி தானே.. தெரிஞ்சா பதில் சொல்லுங்கோ..?!

மொத்த வட மாகாணத்திற்கே ஒரு மருத்துவ பீடம் தான். அதிலும் சிங்கள மாணவர்களை உள்வாங்கினால்.. தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை என்னாவது..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

🤣சரி, இதோ உரித்த வாழைப்பழம், வாயை ஆவெண்டுங்கோ எ.தா: "சிறிலங்கா என்ற நாடு அமெரிக்க, ஜேர்மனி தராதரங்களை நெருங்காத ஊழல், சுத்துமாத்துகள், அரசியல் சாயங்கள் நிறைந்த நாடு! அமெரிக்காவில் , ஆஸ்பத்திரி குறைபாடுகளை மீன்பிடி அமைச்சிடம் கொண்டு செல்லவே மாட்டார்கள், எனவே மீன்பிடி அமைச்சு என்ன பதில் சொல்ல வேண்டுமென்ற கேள்வியே அர்த்தமற்றது!" 

எல்லாத்தையும் விரிவா எழுதினாத் தான் தமிழே விளங்குது, பெயரில தமிழ்🤦‍♂️

நல்லா சமாளிக்கிறீர்கள். கேள்வி அவர்கள் மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து கேட்டதல்ல, இது அவருக்கு சம்பந்தமில்லாத துறையுடன் சம்பந்தப்பட்டதென்றால் அவர் என்ன கூறியிருக்கவேண்டுமென்பது! இது அவ்வளவு கஷ்டமான தமிழாக தெரியவில்லையே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செண்பகம் said:

அம்பன் புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி

 

 

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

அப்போதைய கொறோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்துடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதி உறுதிளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நஸ்டஈடு வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் அழிவுகளுக்கு நஸ்டஈடு வழங்கும் விவசாய பயிர்களின் பட்டியலில் வாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்றவை இணைக்கப்பட்டுள்ளதாக நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://thinakkural.lk/article/69204

இவர் அமைச்சராகும் வரை நிவாரணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பல வீதிகள் கடந்த 5 வருடங்களாக திருத்தங்கள் இன்றி தான் திறந்து வைக்கனும் என்பதற்காகவே திருத்தப்படாமல் இருந்தது.

குறிப்பாக யாழ் நகரில்.. பிறவுண் வீதியை திருத்தவே மாட்டேன் என்று அடம்பிடித்தாராம் இந்த அமைச்சர். காரணம்... அது தமிழ் தேசியம் ஆக்கள் அதிகம் வாழுற வீதின்னு. கடந்த ஆட்சியில் தான் திருத்த ஆரம்பித்தார்கள்.. அதற்குள் இவர் வந்திட்டார்.. எனி அது கிடப்பிற்குப் போய் விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நல்லா சமாளிக்கிறீர்கள். கேள்வி அவர்கள் மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து கேட்டதல்ல, இது அவருக்கு சம்பந்தமில்லாத துறையுடன் சம்பந்தப்பட்டதென்றால் அவர் என்ன கூறியிருக்கவேண்டுமென்பது! இது அவ்வளவு கஷ்டமான தமிழாக தெரியவில்லையே!!

அவர் ஏன் கூறவில்லை என்பதற்கான பதில் மேலே மேற்கோள் காட்டியதில் இருப்பதாகத் தெரியவில்லையோ? இனி வாழைப்பழத்தை ப்ளெண்டரில் போட்டு மூக்குக் குழாயிலா உங்களுக்கு ஊட்டுவது?🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.