Jump to content

நீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

பதிலுக்கும்,உங்கள் நேரத்திற்கும் நன்றி அண்ணா ...உங்கள் பதில் எனக்கு உடன்பாடாக இல்லை...

நன்றி ரதி. ஒருவேளை நான் விளக்கிய முறை போதாமல் அல்லது தெளிவில்லாமல் இருக்கலாம்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் விளக்கத்திற்கு நன்றி வன்னியன்.
இதே மாதிரி வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிலில் உள்ளவர்களை விட கூடுதலான வேலை வாய்ப்பை பெறுகிறார்களே?எப்படி? ஏன்?இதையும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.

இதில் பல மோசடிகள் மத்திய ஆளும்வர்க்கத்தின் துணையோடு நடைபெறுகின்றன, அதற்கு இந்த எடுபிடி அதிமுக பதவியில் நீடிக்க மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துள்ளது.

சுருக்கமாக சொல்கிறேன்.

உதாரணமாக செயலலிதா இறந்து ஓபிஎஸ் பதவி ஏற்றதுமே மத்திய அரசின் அழுத்தத்தால் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தில் சட்ட திருத்தம் திரைமறைவில் அரங்கேறியது. அது தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்களும் பங்குபெறலாம் என்பது. தமிழ்நாடு மின்வாரியத்தில் இதன்மூலம் பிற மாநிலத்தவர்கள் தற்போது நுழைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களின் அஞ்சல் துறை வேலைகளில் சொந்த மாநில மக்களைவிட பஞ்சாப் அரியானா மாநிலத்தவர்கள் தமிழில் 95 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கியதாக காட்டப்பட்டது.

அதேபோல திருச்சி பொன்மலை ரயில்வே வேலைகளிலும் உள்ளடி வேலைகளால் தமிழர்கள் உரிமைகள் பறிபோயுள்ளது.

தற்பொழுது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கே 90 சதவீதம் வேலை வாய்ப்பில் உரிமை என உரிமைக் குரலோடு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளன / கொண்டு வரப்போகிறது இன்னும் சிலவற்றில். 

2 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் 
ஏற்கனவே தமிழ் ஆங்கிலம் இருமொழி கொள்கை இருக்கும் போது,

இப்போ மூன்றாவது மொழியும் கட்டாயமாக்கப்படுகிறதே உங்கள் அபிப்பிராயம் என்ன?
உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

மூன்றாவது மொழி தமிழ்நாட்டில் இன்னும் வரவில்லை, அப்படி அடிமை அரசு துரோகம் செய்யாது என நம்புகிறேன், ஏனெனில் இந்தி எதிர்ப்பை / மொழி உணர்வை மூலதனமாக வைத்துதான் திராவிட அரசியலின் மையப்புள்ளியே இருக்கிறது.

எனது மகன் பள்ளியில் மூன்றாவது விருப்ப பாடமாக ஃப்ரென்ச் மொழி படித்து,வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படித்து அங்கேயே உள்ளார். அவருக்கு ஃப்ரென்ச் மொழி உதவவில்லை. அவரின் வேலைக்கு தேவையுமில்லை. எனது பேரன் தமிழ்நாடு பாடத் திட்டத்தில்தான் முதலாம் வகுப்பில் படிக்கிறார். இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே.

அப்படி அடிமை அரசால் மறைமுகமாக மூன்றாவது மொழி படித்தே ஆகவேண்டுமென்றால்,விருப்ப மொழியாக ஃப்ரென்ச் அல்லது தெலுங்கு படிக்க வைக்கலாமென உத்தேசம்.

We feel, Telugu is closer to the heart than Mallu !

மொத்தத்தில் தமிழ் நாட்டிற்கு இப்பொழுது ஒரு தன்னமில்லாத, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் தேவை காலத்தின் கட்டாயம். இல்லையெனில் தமிழ் நாட்டை கூறு போட்டு விற்றுவிடுவார்கள்..😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

மொத்தத்தில் தமிழ் நாட்டிற்கு இப்பொழுது ஒரு தன்னமில்லாத, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் தேவை காலத்தின் கட்டாயம். இல்லையெனில் தமிழ் நாட்டை கூறு போட்டு விற்றுவிடுவார்கள்..😜

மிகவும் நன்றி வன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பு செய்தியை பார்க்கவும்.. CBI விசாரணையின் நிலை அனைவரும் அறிந்ததே..! 🤗

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/31/cbi-goes-after-haryanvis-who-topped-tamil-in-postal-exam-1611066.html

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 24/9/2020 at 11:35, ராசவன்னியன் said:

"குலக் கல்வி"த் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

தராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புற குழந்தைகள், பாதி நாளை பள்ளியிலும், மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.

அதாவது, கோவிலில் பணியாற்றுபவர் குழந்தை கோவிலிலும், விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும், தோட்டியின் மகன் அந்தக் கலையைக் கற்பதிலும் மீதி நாளை செலவிடலாம்.

‘குலக்கல்வித் திட்டம்’ என இதனைப் பெயரிட்டு, தி.க.,  தி.மு.க. போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இது மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான, மிகப் பெரிய போராட்டங்கள் மாகாணத்தில் நடக்க ஆரம்பித்தன.

இதற்கு ஒரு வருடத்திலேயே ராஜாஜியின் அரசு வீழ்ந்தது. அதற்குப் பிறகு அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவே முடியவில்லை.:)

ஆனால், இந்தச் சர்ச்சையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணரல்லாதோர் எழுச்சிக்கான காலம் துவங்கியது. இதன் உச்சமாக காமராஜர், கட்சியின் தேசியத் தலைவராக, கிங் மேக்கராக உயர்ந்தார்.

ராஜாஜி, ஜாதியைக் காப்பாற்றத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாரா..? என சிலர் கேட்கக்கூடும். அவர் என்ன நினைத்தார் என யாருக்குத் தெரியும்?

அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பதை வைத்துத்தான் இது "குலக்கல்வித் திட்டம்" எனக் குறிப்பிடப்பட்டது.

வினவு

தங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி ராஜவன்னியர். தமிழ்நாட்டில் பெரியாரின்  சமூகநீதி போராட்டங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு கல்வியை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டுவந்து சேர்தத வரலாறு குறித்து அறிந்துள்ளேன். தங்களின் அனுபவப்பதிவு  அது தொடர்பான மேலதிக விளக்கத்தை கொடுத்துள்ளது.  நன்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கு தமிழக அரசே பொறுப்பு' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்.

1601990817123266.jpg

"மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும்.." என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் 'வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி..?' என்றனர்.

தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.

உதகை ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கான நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது? என்பது குறித்து பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

பாலிமர் செய்திகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

NEET Issue | நீட் மோசடி | திருட்டுத்தனம் செஞ்சாலும் ஒரு நியாயம் வேண்டாமா ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.