Jump to content

அமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க உதவியது- வெளிவிவகார செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுடன் 2007 இல் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க உதவியது- வெளிவிவகார செயலாளர்

Rajeevan ArasaratnamSeptember 14, 2020

அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது.
அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுதங்களஞ்சியங்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது.
ஆனால் சோபா பிரச்சினைக்குரியது ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர்  ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சவுத் ஏசியன் மொனிட்டரிற்காக பி.கே பாலசந்திரனுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

spacer.png

கேள்வி- தற்போதைய பூகோள அரசியல் சூழ்நிலையை இலங்கை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தப்போகின்றது?

ஒருநாட்டில் மாற்றம் பெறக்கூடிய பல விடயங்கள் உள்ளன.அது ஒரு நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கைகளை மாற்றலாம் ஆனால் நாட்டின் அமைவிடத்தினை அதனால் மாற்ற முடியாது.
இலங்கையின் அமைவிடத்தின் முக்கியம் காரணமாக இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள முக்கிய நாடுகளுக்கு இலங்கை மிகவும் கவரும் தன்மையை கொண்டதாக காணப்படுகின்றது.
ஆனால் இந்த கவரும் தன்மையுடன் பல சவால்களும் உருவாகின்றன.
இலங்கை இந்த சாதகதன்மையையும் சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
இலங்கை மக்களுக்கு அரசியல் பொருளாதார இராஜதந்திரரீதியில் நன்மையளிக்கும் வகையில் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு கடுமையாக பாடுபடவேண்டும்.
இந்த மூலோபாய நலன்கள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது எங்களுக்கு தெரியாது.உலகில் அனைத்து விடயங்களும் மாற்றமடையலாம்.
இதன் காரணமாகவே ஜனாதிபதிஇலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணும் நாடாகவிளங்கவேண்டும் என விரும்புகின்றார்.
இதேவேளை நாங்கள் ஒருவருக்கு எதிராக இன்னொரு நாடு இலங்கை மண்ணை பயன்படுத்துவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

 

ஏனென்றால் நாங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கை இந்தியாவின் கடல்சார்வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றது.
சிவ்சங்கர் மேனன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது போல பாக்குநீரிணையின் 40 கடல்மைலுக்குள் காணப்படும் விமானந்தாங்கி கப்பலாக இலங்கை காணப்படக்கூடாது.
இந்தியாவின் மூலோபாய கரிசனைக்குரிய நாடாக விளங்கக்கூடாது என்பதை நாங்கள் கண்டிப்பாக மனதில் வைத்திருக்கவேண்டும், ஜனாதிபதி இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார் .
இந்தியாவின் மூலோபாயபாதுகாப்பு தேவைகள் அபிலாசைகள் குறித்து மிகவும் அவதானமாகயிருக்கவேண்டும்,இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகளுக்கு எங்கள் கடற்பரப்பினைபயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது.
பாதுகாப்பு விடயத்தில் நாங்கள் இந்தியாவுடன சிறந்த உறவை கொண்டுள்ள அதேவேளை பல நாடுகள் இலங்கையுடன் இராணுவஉறவை ஏற்படுத்திக்கொள்வதில் விருப்பமாக உள்ளதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
ஆனால் நாங்கள் ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் பாதுகாப்பு உறவுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
இந்த உடன்படிக்கைகள் எங்கள்தேசிய பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
பொருளாதார தொடர்புகளில் இருந்து வேறுபட்ட பாதுகாப்பு தொடர்புகள் எங்களுக்கு தேவையில்லை.
இந்தியாவும்இதேகொள்கையை கொண்டுள்ளது.

 

கேள்வி-
2
அமெரிக்காவும் சீனாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளன –சீனாவை முடக்குவதற்கு அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அமெரிக்கா அனைத்தையும் செய்கின்றது-இது இலங்கையை எவ்வாறு பாதிக்கும், சீனா இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது இந்த முதலீடுகள் பாதிக்கப்படுமா?

 

பதில்- இரண்டு யானைகள் மோதும்போது புற்கள் நசுங்கும்.அமெரிக்காவும் சீனாவும் தற்போது வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளன.அது இலங்கையை சில வழிகளில் பாதிக்கும்.
உதாரணத்துக்கு ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு தலைப்பட்ச தடை இலங்கையின் ஈரானுக்கான தேயிலை ஏற்;றுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்கா சிசிசிசி உட்பட 24 நிறுவனங்களுக்கு தடைவிதித்துள்ளது.இந்த நிறுவனம் இலங்கையில் பாரிய கட்டுமான பணிகளில்ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான சீனா ஹார்பர் என்ஜினியரிங் நிறுவனம் போர்ட் சிட்டியின் கட்டுமான பணிகளை முன்னெடுத்துள்ளது.ஆனால் இந்த நிறுவனம் அமெரிக்காவின் பட்டியலில் இல்லை.
இந்த திட்டத்தை வர்த்தகயுத்தம் எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியாது.
போர்ட்சிட்டியின் அடுத்த கட்டம் சர்வதேச முதலீட்டாளர்களை கவருவதற்கான உட்கட்டுமானமாகும்.
தற்போதைய சூழலில் நாங்கள் பலதரப்பட்டவர்களிடமிருந்து முதலீடுகளை பெறவேண்டும்.
இது முக்கியம்ஏனென்றால் கொழும்பு போர்ட் சிட்டியை கைவிடமுடியாது.

கேள்வி-

இலங்கை எம்.சி.சி உடன்படிக்கையையும் சோபா உடன்படிக்கையையும் அங்கீகரிக்கவேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுக்கின்றது,எனினும் இந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் இலங்கையின் அரசமைப்;பிற்கு முரணானவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உங்களுடைய நிலைப்பாடு என்ன?

 

பதில்- எம்.சி.சி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கப்பட்டதும் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிப்போம் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.
இது குறித்து தீர்மானம் எடுப்பதை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவுடனான முன்னைய பாதுகாப்பு உடன்படிக்கையான ஏசிஎஸ்ஏ 2007 இல் கைச்சாத்திடப்பட்டு 2017 இல் புதுப்பிக்கப்பட்டது.
அந்த உடன்படிக்கை விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை கண்டுபிடித்து அழிக்க உதவியது.
ஆனால் சோபா பிரச்சினைக்குரியது ஏனென்றால் அது அமெரிக்க பாதுகாப்பு தரப்பினர் இலங்கையில் ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்களை கொண்டு செல்வதற்கும்,இலங்கையின் சட்டகட்டமைப்புக்கு அப்பால் தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும்.
எந்த உடன்படிக்கை தொடர்பான எந்த இறுதி முடிவும் நாட்டின் நலன்கள், அரசமைப்பு சட்டம் ஆகியவற்றை கருத்தில்கொண்டதாக காணப்படவேண்டும்.

 

 

http://thinakkural.lk/article/68571

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.