Jump to content

பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பரந்தன் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அதை அண்டி வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பரந்தன் குமரபுரம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

 

குறித்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துரைக்கும் போது- எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த தொழிற்சாலைகள் அழைக்கப்பட்டால் அதை நாம் எதிர்ப்போம் எனவும், கடந்த அரசாங்கத்திற்கு எம்மால் ஒரு திட்ட முன்மொழிவு கொடுக்கப்பட்டது. பரந்தன் பகுதியில் வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பது தொடர்பில் கொடுக்கப்பட்டது. அவ்வாறு அமையப் பெற்றால் நாம் அந்த திட்டத்தை வரவேற்போம் எனவும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பிரதேச சபையின் உறுப்பினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

https://www.pagetamil.com/145745/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

ஏற்கனவே  தெருவுக்கு தெரு காரணமில்லா புற்று நோய்  தாக்கம் வடகிழக்கில்.

இது கண்ணை வித்து  அரண்மனையை வேண்டுவது போன்றதுக்கு ஒப்பானது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு. இதேபோல்.. காங்கேசந்துறை.. சீமெந்து தொழிற்சாலையும் எமக்கு வேண்டாம். எமது கனிமத்தை திருடுவது மட்டுன்றி எமது மண்ணின் பாதுகாப்புக்குரிய இயற்கை அரணான முருகைக்கற் பாறைகள் சிதைக்கப்படுவது நீண்ட கால ஒழுங்கில் எமக்குப் பாதகமே.

அல்லைப்பிட்டி அலுமினியத் தொழிற்சாலை வரவின் பின் அப்பகுதி விளை நிலங்கள்.. தரிசானதும்.. காற்றில் நச்சுத் துகள்கள் பரவி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே.. மக்கள் நெருக்கமுள்ள.. புழக்கமுள்ள.. விளை நிலங்களுள்ள.. இயற்கைக்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில்.. அமையக்  கூடிய... எந்த தொழிற்சாலைக்கும் இடமளிக்கக் கூடாது.

அப்படி மக்கள் நெருமற்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால்.. அவையும் இயற்கைக்கு பாதகமற்ற முறையில்.. சூழல் மாசு உண்டுபண்ணாத வகையில்.. அமைப்படுவதை உறுதி செய்து கொள்வது மிக மிக மிக அவசியம். 

Link to comment
Share on other sites

இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

இப்போதான் இது மூடியிருக்கு. இது இயங்கியபொழுது எத்தனை பரந்தன் வாழ் அல்லது அதனை அண்டிய ஊர்களில் உள்ள மக்களுக்கு வேலை வழங்கப்பட்டது. 0 
பெயர்தான் பரந்தன்இரசாயனம். ஆனால் வேலையாட்களெல்லாம் வெளி ஊர்தான்.

சூழலுக்கு பாதகமெனில் அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்றல்லவா பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

9 hours ago, Ellam Theringjavar said:

 

சூழலுக்கு பாதகமெனில் அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்றல்லவா பார்க்க வேண்டும்.

பூட்டி வைக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.