Jump to content

ராசா அண்ணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

ராசா அண்ணை போல இப்படி பலரும் இருக்கலாம். அவரைப் போல எதுவித நன்றிகளும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவுபவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னமும் இயங்கிக்கொண்டு இருக்கின்றது.

ராசா அண்ணை புத்தகம் படித்தார் என்பது அவர் உங்களுக்கு படிக்கத்தந்த புத்தகங்களில் இருந்து தெரிகின்றது🙂. ஆனால் பட்டம், பதவி, சுயதம்பட்சம் இல்லாத எளிமையான மனிதர். அதனால்தான் எதையும் இலேசாக எடுத்து தன்னுடைய வாழ்க்கையை எதுவித பதட்டங்கள் இன்றி நடாத்துகின்றார்.

உண்மை கிருபன். ராசா அண்ணை போல் பலர் எமக்குள் இருக்கிறார்கள். பல்கலையோ, பட்டமோ ஏதுமற்ற மேதைகள். வாழ்வைப் பாடமாக வாழ்பவர்கள். இப்படியானவர்கள் போற்றுதற்குரியவர்கள். இவர்களில் ஒருவரான ராசா அண்ணையுடன் சிநேகம் கிடைத்ததில் பெருமைப்படுகிறேன்.

13 hours ago, Kadancha said:

புத்தக படிப்பு மற்றும் துறை சார்ந்த படிப்பு என்பது (விஞ்ஞானம் கூட) ஓர் reference framework.

அந்த frame work எவரின் சிந்தனை ஓட்டத்தில் பதிந்து விட்டால், அதை மீறி அவர்கள் வருவது கடினம்.

இதனால் தானோ, தமிழ் தலைவர்களால்  சிங்களத்தை கையாள முடியவில்லை என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

இதனாலேயே, இங்கு விஞ்ஞானம் என்றால் நாம் (அந்த விஞ்ஞானம் சொல்லும்) வரலாற்றை ஏற்கிறோம் என்பவர்களின் வாதம் தவறு  என்கின்றேன். 

இதை உங்களின் தனிப்பட்ட அனுபத்தில்  எழுதுவதற்கு மன்னிக்கவும்.

விஞ்ஞானம் ஒரு பகுதியாக இருக்க முடியுமே தவிர, அது சொல்லும் தரவு மட்டும்  வைத்து வரலாறு சொல்லப்பட முடியாது.

இயேசு பௌத்த துறவி எனும் திரியில் புதிய பதிவை ஐடா இருக்கிறேன். 

அது இதுவரைக்கும் இருக்கும் வரலாற்றை புரட்டிப் போடும்.

மற்றது, இந்த விஞ்ஞான ஆய்வுகள், வரலாற்றாய் பொறுத்தவரையில், ஏற்கனனவே இருக்கும் frame  work உடன் முரண்படும் கருதுகோள் என்றால், நிதி மறுக்கப்படுகிறது.

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்பார்கள். சிலவேளைகளில் சில விடயங்களை ஏன்படிக்கிறோம் என்றுகூடத் தெரிவதில்லை. பரீட்சையின் பின்னர் அப்பாடத்தினை வாழ்நாளில் ஒருபோதுமே வாழ்க்கைக்குப் பாவித்திருக்க மாட்டோம். 

தமிழ்த் தலைமகள் பற்றி நீங்கள் கூறுவது சிந்திக்க வைக்கிறது. சட்டங்களைக் கரைத்துக் குடித்த தமிழ்த் தலைமகள், ஏதும் படிக்காத பாமரச் சிங்களத் தலைவர்களிடம் தோற்றுத்தான் போனார்கள். 

8 hours ago, உடையார் said:

எல்லாரும் ஒன்றாகதான் இருந்திருக்கின்றோம் எவ்வளவு சிறிய உலகம், அமுதனும் என் நண்பர்.... அவரின் கூட்டமும்..... கலையரசன் (உயரமானவன்).... தர்ஷனி.... 😂

அமுதனையும், கலையரசனையும் எனக்குத் தெரியும். பல்கலை முடியும்வரை அவர்களுடன் தொடர்பிலிருந்தேன். இவர்களுடன் தில்லை, சுரேஷ், சுரேஷன், சுரேஷலிங்கம், உமா, நரேன், யுதிஷ்ட்டன், ராஜேஷ் என்று ஒரு பெரிய அன்ரி கூறுப்பே இருந்தது. இனிமையானவர்கள். ஆரம்பக் காலத்தில் எனக்குப் பெருமளவு உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள்.

ஆனல், தர்ஷினியைத் தெரியவில்லை. தர்மினியைத் தெரியும், அது வேற கதை.

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ரஞ்சித், பொதுவாக நான்... கதைகள் படிப்பது குறைவு.
நேற்று, சும்மா ஒருக்கால் எட்டிப் பார்ப்போம் என்றுவந்து.. 
முதல் பந்தியை, வாசிக்க தொடங்கிய பின், அதனை விட்டு நகர முடியாமல்...
முழுப் பகுதியையும்... ஒரே மூச்சில் வாசிக்க வைத்து விட்டது உங்கள் எழுத்து. 👍

ராசா அண்ணை... பணக்கார குடும்பத்தில் பிறந்து,
திருமணவாழ்வு வரை... எத்தனையோ துன்பங்களை அனுபவித்த பின்பும்,
இன்று அவர்... பத்துப் பேருக்கு தொழில் வழங்கக் கூடிய நிலையில் இருக்கும்..
அவரது மனத் தைரியத்தை பார்த்து,  வியந்து போனேன். 🙏

உங்கள் கதையின் மூலம்... யாழ். களத்தில் மீண்டும், 
பழைய  நண்பர்கள் அறிமாகியுள்ளது.. இன்னும் சிறப்பு.  :)

எனது எழுத்தில அப்படி எதுவுமில்லை சிறி. என்னைப் பாதித்தவர்கள் பற்றி எழுதும்பொழுது உணர்ச்சிவசப்படுகிறேன், அதனால் சிலவேளைகளில் வாசிக்கும்படி வந்துவிடுகிறது.உங்க்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது மெத்தச்சரி. எனது பல்கலையின் பல நண்பர்களையும் இதால் அறிந்துகொண்டேன்.

24 minutes ago, Eppothum Thamizhan said:

நான் அப்போது Physics Lab இல் Instructor ஆக இருந்தேன். December 1995இல் வெளிநாடு வந்துவிட்டேன்.

உங்களை எனக்குத் தெரியும் அண்ணை. பெயர் மட்டும் கேட்காதேங்கோ. உங்களிட்ட கோஸ்வேர்க்கும் செய்து தந்திருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

பதிவுக்கு நன்றி.

இறுதிப்போரும் தடைமுகாமும் துன்பங்களையும் கடந்து வாழ்வை தெடருவது ஒரு முன்னுதாரணம்தான். வாழ்க்கை குறித்த ஒரு புரிதலும் தேடலும் எப்போதும் ஒரு ஆரோக்கியத்தை எற்படுத்தும்

பணியிடத்தில் 35 வருடங்களாக வேலை செய்து இரண்டு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்ற ஒருவர்  நேற்று காலை மரணித்து விட்டார் என்று  குறுஞ் செய்தி வந்தது. உடற் பருமனோ ஆரோக்கியக் குறைவோ அவருக்கு இருந்ததாக நான் கருதவில்லை.  தற்போதைய தொற்று நோயும் தாக்கவில்லை. எனது புரிதலின்படி வேலை அவரும் இயக்கும் சக்தியாக இருந்திருக்கலாம் அது முடிவுக்கு வந்ததும் அவரை பாதித்திருக்கலாம்.  குறைந்தது என்னுமொரு பத்து வருடம் ஒய்வூதியத்தில் வாழ்ந்திருக்காலம் என்று யோசித்தேன். 

ஒருவரின் வாழ்க்கை முறையும் இயல்பும் நல்ல ஒரு உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கு பதிவதற்கு அதுவும் ஒரு காரணம். இங்கு பதிந்ததால் எமக்கும் ஒரு நல்ல உணர்வு அவரது அனுபவத்திலிருந்து கிடைக்கின்றது. 

உண்மை,

இங்கு வெள்ளையர்களிடம் ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. முடிந்தவரை வேலை செய்வார்கள். ஓய்வுபெறும் வயதெல்லை 67 என்றாலும்கூட, தொடர்ந்தும் வேலைக்குச் செல்வார்கள். எப்போது வேலையை விட்டு நிற்கிறார்களோ, அத்துடன் அவர்களது வாழ்வும் அஸ்த்தமிக்கத் தொடங்கிவிடும். நோய்கள், தனிமை, சலிப்பு என்று சிறிதுகாலத்திலேயே மரணமடைந்துவிடுவார்கள். இது உண்மைதான். என்னுடம் வேலைபார்க்கும் ஒரு வெள்ளையருக்கு 67 வயது. கண்பார்வைகூட சரியாக இல்லை. ஆனால், இன்றும் வருகிறார். ஒன்றில் நேர்சிங் ஹோமுக்குக் கொண்டுபோய்விடுவார்கள், வீட்டிலிருந்தாலும் இறந்துவிடுவேன், அதனால் தொடர்ந்தும் வேலைக்கு வந்துகொண்டிருக்கிறேன்  என்று அடிக்கடி சொல்வார். எவ்வளவு உண்மை.

ராசா அண்ணை பற்றி பொதுவெளியில் நான் எழுதியது எனது எண்ணங்களைப் பகிரத்தான், ஆனால் பலரினதும் கருத்துக்களைக் கேட்கும்பொழுது, பலவிடயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களின் கருத்துப் பகிவிற்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

 

அமுதனையும், கலையரசனையும் எனக்குத் தெரியும். பல்கலை முடியும்வரை அவர்களுடன் தொடர்பிலிருந்தேன். இவர்களுடன் தில்லை, சுரேஷ், சுரேஷன், சுரேஷலிங்கம், உமா, நரேன், யுதிஷ்ட்டன், ராஜேஷ் என்று ஒரு பெரிய அன்ரி கூறுப்பே இருந்தது. இனிமையானவர்கள். ஆரம்பக் காலத்தில் எனக்குப் பெருமளவு உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள்.

ஆனல், தர்ஷினியைத் தெரியவில்லை. தர்மினியைத் தெரியும், அது வேற கதை.

ஆமா தர்மினிதான்.. இப்ப Melbourne இல்... 

இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் கலையரசன் நேற்றும் வீட்டுக்கு வந்துவிட்டு போனவர், அடிக்கடி சந்திப்போம்

சுரேஸ் & அமுதன் தான் கூட பழக்கம் மற்றவர்களுடன் சும்மா பழக்கம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

ஆமா தர்மினிதான்.. இப்ப Melbourne இல்... 

இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் கலையரசன் நேற்றும் வீட்டுக்கு வந்துவிட்டு போனவர், அடிக்கடி சந்திப்போம்

சுரேஸ் & அமுதன் தான் கூட பழக்கம் மற்றவர்களுடன் சும்மா பழக்கம்தான்

அமுதன் அமெரிக்காவில், சுரேஷ் கனடாவில் என்று நினைக்கிறேன். கலை பேர்த்தில் என்று தெரியும். ராஜேஷும், சுரேஷலிங்கமும் இங்கே, சிட்னியில்  இருக்கிறார்கள். உங்களை நன்றாகத் தெரியும் போல் இருக்கிறதே?!

3 minutes ago, உடையார் said:

ஆமா தர்மினிதான்.. இப்ப Melbourne இல்... 

அப்படியானால் காண்டீபனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும் உங்களுக்கு. அம்பேலா எனும் அம்பலவானர்தான் இவர்களுக்கெல்லாம் பாஸ்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

அமுதன் அமெரிக்காவில், சுரேஷ் கனடாவில் என்று நினைக்கிறேன். கலை பேர்த்தில் என்று தெரியும். ராஜேஷும், சுரேஷலிங்கமும் இங்கே, சிட்னியில்  இருக்கிறார்கள். உங்களை நன்றாகத் தெரியும் போல் இருக்கிறதே?!

அப்படியானால் காண்டீபனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும் உங்களுக்கு. அம்பேலா எனும் அம்பலவானர்தான் இவர்களுக்கெல்லாம் பாஸ்!!!

அம்பேலா திருகோணமலை - இவரைத்தெரியாமல்😂

அம்பேலாவின் முகம் இன்னும் மனதிலிருக்கு கண்ணாடி போட்டு நடக்கிற நடையே வேற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

திருகோணமலை - இவரைத்தெரியாமல்😂

மெத்தச்சரி.

2 minutes ago, உடையார் said:

திருகோணமலை - இவரைத்தெரியாமல்😂

நீங்களும் இவர்களது பட்ஜோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

மெத்தச்சரி.

நீங்களும் இவர்களது பட்ஜோ?

கௌசி எனக்கு நெருங்கிய உறவு, பத்து வருடமாக தொடர்பில்லை. ஆமா அதே பட்ஜ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

பின்னுக்கு பொல்கொட வாவிக்கு பக்கத்திலை உடும்பு பிடிச்சு சாப்பிடற ஆட்கள் தானே நீங்கள்.

சிங்களவன் கபரகொய்யா அடிக்கமாட்டான் 🤣🤣🤣

பள்ளத்துக்கு சாப்பிட வாறனீங்களோ. 

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. 

C கண்டீனிலை கையை கமக்கட்டுக்குள்ளே சொறிஞ்சு சொறிஞ்சு 1  ரூபாய் பிளேன்ரீ போடுறவனையும் மறந்திருக்க மாட்டீங்க 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இப்புத்தகங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

இந்தப்புத்தகம் பற்றியும் அடிக்கடி பேசுவார். 

நன்றி. 

இநத புத்தகங்களுக்கு சிறு வரலாறு உண்டு. பெருமைக்காக சொல்லவில்லை.

இந்த புத்தகங்களுடன், பிரேம்நாத்திடம் எனது அம்மாவினால்  வழங்கப்பட்ட வேறு  கணித நூல்களும் எனது குடும்பத்தின் (அன்றைய நிலையில்) அழியாச் சொத்துக்கள். யாழில் இருந்து கொழும்பு வரும் போது, வேறு பல பொருட்களை தவிர்த்து, இந்த புத்தகங்களை காவி வந்தேன். அதனால், தப்பி விட்டன.  நான் பிரேம்நாத்திடம் tuition எடுக்கவில்லை.  சிறிது காலத்தில், நிலைமை காரணமாக நான் வெளிநாடு வர, எனது அம்மாவினால் (அவரும் கணித ஆசிரியர்) அவற்றை, பிரேம்நாத்தை அறிந்து, நூல்களை பற்றி கதைத்து கொடுத்ததாக சொன்னார்.        

எம்மவர்களில் பலருக்கு பிரேம்நாத் மூலம் அந்த நூல்கள் வாயிலாக  (கணிதக்) கலை கிடைத்திருந்தால் மகிழ்ச்சியே.
 
இப்பொது சில நினைவு வருகிறது, சந்திரசேகரம் எழுதிய கேத்திர கணிதம். இதை விட அரை இஞ்சி தடுப்பில் இரு கேள்விக்கோர்வை (இவை அன்றைய JMB, London examination board, Cambridge examination Board), சில நினைவில் இல்லை.  

இப் புத்தகங்களில் பல எனது அம்மா படித்த  காலத்தில் (1949- 1954) லண்டன் இருந்து  நேரடியாக வாங்கியது, இலங்கையிலும் வாங்கியது, பின்பு எனது அண்ணர்களுக்காக (அன்றைய நிலையில், 1972 -1975)) மிகுந்த செலவில் லண்டன் இருந்து நேரடியாகவும், இலங்கையிலும் வாங்கப்பட்டது.

பேராசிரியர். சி. நடராசர் (இவரை அநேகமானவர்களுக்கு  பெயரளவிலாவது தெரிந்திக்கும் என்று நினைக்கிறன்) எழுதிய தூய கணிதம் எனது அண்ணரால் பிரதியேயமாக வாங்கப்பட்டது.        

கருமையான சாம்பல் நிறை உறையுள்ள Algebra  நூலை கொண்டு, complex numbers பிரேம்நாத் படிப்பித்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்த நூலில் தான், complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) என்ற ஒரு முறை இருக்கிறது. இதுவரையில்  வேறு எந்த நூலிலும் complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) இது வரை காணவில்லை  

பிரேம்நாத், complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) உங்களுக்கு அறிமுகப்படுத்தினாரா?

இப்போதும் complex  numbers பற்றி குழம்புவோருக்கு இந்த  னப் பரிசோதனையை  (mind experiment) உபயோகிக்கிறேன்.

இப்படி நூல்கள்  இருந்ததால், ஏறத்தாழ வீட்டிலேயே தூய / பிரோயக  கணிதபாடங்களை முடித்து வீடாக கூடியதாக இருந்தது, அம்மாவின் உதவி உடன். 

ஆயினும், சிலர் சொல்லி, வெக்டர் வேலாயுதம் இடம் படிக்க  சென்றேன், பாரீட்சியில் எப்படி புள்ளிகள் வழங்குகிறர்கள், மற்றும் தவிர்க்கப்பட வேண்டுய நுணுக்கங்களை அறிவதத்திற்கு. அனால், விதி அனுமதிக்கவில்லை, இலங்கையில் பரிட்சை எடுப்பதற்கு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், எனது அம்மா நூல்களை பிரேம்நாத்திடம்  கொடுத்து விட்டு, கடிதத்தில் எழுதியதை குறிப்பிட மறந்து விட்டேன்.

இன்று எது  உன்னுடையதோ, அது நாளை வேறு ஒருவரின் உடமை ஆகியதை தான் நேரடியாக உணர்ந்ததாக, அம்மா கடிதத்தில் எழுதி இருந்தார்.

நான் நேரடியாக இல்லாதால், ஓர் விதமான இழப்பை உணர்ந்தேன் (ஒப்பிட்டளவில் இள வயது காரணமாக இருக்கலாம்), ஆனால் திருப்தியுடன்.  

ஆனால், இப்பொது இழப்பு என்ற உணர்வில்லை, திருப்தி மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

பின்னுக்கு பொல்கொட வாவிக்கு பக்கத்திலை உடும்பு பிடிச்சு சாப்பிடற ஆட்கள் தானே நீங்கள்.

சிங்களவன் கபரகொய்யா அடிக்கமாட்டான் 🤣🤣🤣

பள்ளத்துக்கு சாப்பிட வாறனீங்களோ. 

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. 

C கண்டீனிலை கையை கமக்கட்டுக்குள்ளே சொறிஞ்சு சொறிஞ்சு 1  ரூபாய் பிளேன்ரீ போடுறவனையும் மறந்திருக்க மாட்டீங்க 🤣

உமா, ஜில், சிவானந்தன் என்னுடைய பட்ஜ். ஜில் பிறிஸ்பேனில இருக்கிறார், அடிக்கடி கதைப்போம். சிவானந்தனும், உமாவும் ஊரில. அதுசரி, நீங்கள் எந்த பட்ஜ் முதல்வன்?

பள்ளத்தில சாப்பிட வாறனாங்கள். அந்த மனுசன் வீட்டில வைச்சுச் சாப்பாடு தரும். கட்டை, கறுவல், மீசை, முகம் இன்னும் ஞாபத்தில இருக்கு.

c கண்டீனில தேத்தண்ணி ஞாபகம் இருக்கு. ஆனால், கம்பஸுக்கு வெளியில, ஆர்தர் சி கிளாக் சென்டருக்குப் பின்னால இருக்கிற அங்கிள் வீட்டுத் தேத்தண்ணிய அடிக்க ஏலாது. அந்தமாதிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

பின்னுக்கு பொல்கொட வாவிக்கு பக்கத்திலை உடும்பு பிடிச்சு சாப்பிடற ஆட்கள் தானே நீங்கள்.

சிங்களவன் கபரகொய்யா அடிக்கமாட்டான் 🤣🤣🤣

பள்ளத்துக்கு சாப்பிட வாறனீங்களோ. 

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. 

C கண்டீனிலை கையை கமக்கட்டுக்குள்ளே சொறிஞ்சு சொறிஞ்சு 1  ரூபாய் பிளேன்ரீ போடுறவனையும் மறந்திருக்க மாட்டீங்க 🤣

அந்த பள்ளகடைக்கு முன்னால் ஒரு லயன் இருந்த து ஞாபகமிருக்கா - சங்கரி கூட்டம் 😂🤣

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுவேற ஆகிட்டீங்கள் இனி தீட்டவும் ஏலாது. - இல்லையில்லை அது வேற வாய் இது வேற வாய் 😊

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

தெரியுமோ😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பிரேம்நாத், complex numbers பற்றிய மனப் பரிசோதனை (mind experiment) உங்களுக்கு அறிமுகப்படுத்தினாரா?

Complex numbers அருமையாகப் படிப்பித்தார். ஆனால், அதை மனதினால் சரிபார்க்கும் முறை சொல்லிக்கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அவரிடம் படித்த விடயங்களில் எனக்குச் சற்றுக் கடிணமானதாகத் தெரிந்தது Permutation & combination மட்டும்தான். ஆனால், பரீட்சையில் அவற்றைத் தவிர்த்தே எழுதினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவிக்கு பக்கதில் இருந்த கடை அன்ரி வீட்டில் இருந்த குறுப்பா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

உமா, ஜில், சிவானந்தன் இவையை தெரியுமோ அண்ணைமார்.

தெரியுமோ😁

உடையார், நீங்கள் யாரென்று ஒரே புதிராய் இருக்கு. என்னுடைய நெருங்கிய நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். 

1 minute ago, உடையார் said:

வாவிக்கு பக்கதில் இருந்த கடை அன்ரி வீட்டில் இருந்த குறுப்பா? 😁

ஓம் ஓம் ஓம். சூட்டி அன்ரி, பதா அன்ரி, அங்கிள்....எப்பிடித் தெரியும்? 

6 minutes ago, உடையார் said:

அந்த பள்ளகடைக்கு முன்னால் ஒரு லயன் இருந்த து ஞாபகமிருக்கா - சங்கரி கூட்டம் 😂🤣

கஜதேவ சங்கரி !!! பெயருக்கு ஏற்ற்மாதிரி ஆளும் சிங்கன். பல்கலையில் அடித்த லூட்டிக்கு அளவேயில்லை. இப்போது, இங்கிலாந்திலும் போய்க் கலக்குவதாகக் கேள்வி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

உடையார், நீங்கள் யாரென்று ஒரே புதிராய் இருக்கு. என்னுடைய நெருங்கிய நண்பர்களையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். 

ஓம் ஓம் ஓம். சூட்டி அன்ரி, பதா அன்ரி, அங்கிள்....எப்பிடித் தெரியும்? 

நானே ஒழிந்திருக்கின்றேன்😁 பழைய ஞாபகங்களை மீட்டிய உங்களுக்குதான் நன்றி, சிட்னி வரும்போது நேரில் சந்திப்போம் அதுதான் திரில்.. உங்களை நான் கண்டுபிடித்ததுவிட்டேன் ர....

இந்த தமிழனைதான் முடியவில்லை🥱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

உங்களை நான் கண்டுபிடித்ததுவிட்டேன் ர....

அடக் கடவுளே, ஆரப்பா நீங்கள்?

1 minute ago, உடையார் said:

இந்த தமிழனைதான் முடியவில்லை🥱

எனக்கு அவருடைய முகம் ஞாபகமிருக்கு, பெயர் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

உமா, ஜில், சிவானந்தன் என்னுடைய பட்ஜ். ஜில் பிறிஸ்பேனில இருக்கிறார், அடிக்கடி கதைப்போம். சிவானந்தனும், உமாவும் ஊரில

உமா திருகோணமலையில், சிவானந்தன் யாழ்ப்பாணம் டெலிக்கொமில் இருந்த ஞாபகம். மானிப்பாய் பிரபா எங்கே என்று தெரியவில்லை. 

புஸ்பா - கல்ப்பனா கனடாவில் என்று நினைக்கிறேன்.

ஆனால் நான் யாரெண்டு மட்டும் சொல்லமாட்டேன்.

சொன்னால் உங்கள் ஒருத்தரையும் திட்ட முடியாது.

 

இந்திரலிங்கமாக கூட இருக்கலாம். 🤣🤣🤣

நாடக மன்னன் லீலாவாகவும் இருக்கலாம் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

ஆனல், தர்ஷினியைத் தெரியவில்லை. தர்மினியைத் தெரியும், அது வேற கதை.

அதுசரி தர்மினியை யாருக்கும் தெரியாமல் இருக்குமே!!😜 Groundக்குள்ளை இறங்கினாலே பெரிய கூட்டம் நின்று விசிலடிக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இனி பெயரை மாத்திக்கொண்டு வந்து தான் உங்களையெல்லாம் திட்டவேணும். 

சரி ஏதாவது பழைய பெயர்கள் இல்லாமலா போகும். 

குறுக்ஸ் தான் வழி 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

அடக் கடவுளே, ஆரப்பா நீங்கள்?

எனக்கு அவருடைய முகம் ஞாபகமிருக்கு, பெயர் தெரியவில்லை.

அப்போ உங்களுக்கு NDT கோஷ்டிகள் ஆட்டோ (சங்கர்), குரு , நிமலன் , அவனுடைய வுட்பி (பாடகி) எல்லோரையும் தெரிந்திருக்க வேண்டுமே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ உங்களுக்கு NDT கோஷ்டிகள் ஆட்டோ (சங்கர்), குரு , நிமலன் , அவனுடைய வுட்பி (பாடகி) எல்லோரையும் தெரிந்திருக்க வேண்டுமே!!

இப்ப உங்களையும் தெரியும் நண்பா - தங்கமே தங்கம்; கலையும் உங்கு சில வருடமிருந்திருக்கின்றார் சந்தித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2020 at 11:53, ரஞ்சித் said:

ராசா அண்ணையின் திருமணமோ அல்லது திருமண முறிவோ அல்லது வன்னிக்கு அவர் திரும்பிச் சென்றதோ நான் அங்கிருக்கும் வரையில் அறியாதது.

நான் சிட்னிக்கு வந்து 5 வருடங்களின் பின்னர் எனது நண்பனின் சகோதரியை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனது நண்பன் பற்றியும், ராசா அண்ணை பற்றியும் அறிந்துகொண்டேன். சில நாட்களிலேயே எனது நண்பனுடன் தொலைபேசியில் நீண்டநேரம் உரையாடினேன், ராசா அண்ணைபற்றிக் கேட்டபோது, "அவர் வன்னியில மச்சான், பொடியளோட இருக்கிறார் எண்டு நினைக்கிறன்" என்று சொன்னான். 

வன்னியில் இறுதியுத்தக் காலத்தில் ராசா அண்ணை தமிழீழ தொல்பொருள் அமைப்பில் இருந்திருந்தார். அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்ணுற்றவர்கள் அவரது பெற்றோருக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நண்பனின் வீட்டார் நம்பிக்கொண்டிருந்தார்கள். 

ஆனால், தெய்வாதீனமாக, தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. தான் வெளியேறிவிட்டதை நண்பனுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் அக்கராயனுக்கே சென்றுவிட்டார். அவர் தப்பிவிட்ட செய்தி அவரது தங்கைமூலம் எனக்கு அறியக் கிடைத்தது. அவரது உடல்நலம் பற்றிப் பேசிவிட்டு, "தலைவர் பற்றித் தெரியுமா" என்று கேட்டபோது, "அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

சுமார் 16 வருடங்களுக்குப் பின்னர் தாயகம் திரும்ப எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அங்குசென்று சந்திக்கப்போகும் மனிதர்களில் ராசா அண்ணை முக்கியமானவர் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆரியகுளத்திற்கு அருகிலிருக்கும் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்திக்கொண்டிருந்த ராசா அண்ணையை இரவு 8 மணிக்குச் சந்தித்தேன். அதே புன்முறுவல், அதே உபசரிப்பு, அதே கனிவு, ஆனால் உடல்மெலிந்து, வயதானவர் போன்று தெரிந்தார். "எப்படி இருக்கிறியள் அண்ணை" என்று கேட்டபோது, "ஏதோ இருக்கிறம், வாழ்க்கை எனக்கெண்டு என்ன வைச்சிருக்கிதோ, அதைச் செய்துகொண்டிருக்கிறன்" என்று சொன்னார். அவருடன் பேசிக்கொண்டே அவரின் மோட்டார் சைக்கிள் நிலையத்தைப் பார்வையிட்டேன். பல இளைஞர்கள், படித்துவிட்டு வேலையில்லாமல்த் திண்டாடியவர்களை தன்னுடன் சேர்த்து தன்னால் முடிந்த வேலைகளைக் கொடுத்திருந்தார். குறைந்தது 8 அல்லது 10 பேர் வரையில் இருக்கும், சுறுசுறுப்பாக  , மகிழ்வுடன் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். கட்டைக்கை சேர்ட்டும், வேட்டியும் அணிந்து, மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த  அவரைப் பார்க்கும்போது அனுதாபமும், கூடவே கவலையும் ஏற்பட்டது. ஆனால், அதுதான் அவரது வாழ்க்கை. வாழ்வைத் தொலைத்து, பிள்ளைகளைப் பிரிந்து, மனைவியாலும் உறவுகளாலும் ஒதுக்கப்பட்டு, ஊரில் உதவி தேவைப்பட்டவர்களை அரவணைத்து இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார். 

எனக்குக் கிடைத்த அந்த 30 நிமிட நேரத்தில் அவருடனான எனது பழைய நினைவுகளில் சிலவற்றைப் பகிர்ந்துவிட்டு மனமில்லாமல் பிரிந்து வந்தேன்.

நான் எனது வாழ்நாளில் சந்தித்த அற்புதமான மனிதர்களில் ராசா அண்ணைக்கு என்றும் ஓரிடம் இருக்கும். புத்தகப் படிப்பே அறிவெனும் மாயையினைக் களைந்து, மனிதனின் அனுபவங்களும், அவனது சிறப்பான குணாதிசயங்களும் உயரிய மனிதர்களைத் தோற்றுவிக்கும் என்பதற்கு ராசா அண்ணை ஒரு உதாரணம். 

அனுபவங்கள் நல்ல பாடங்கள். நல்ல கதைகளுக்கும் மூலமாக அமைகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.