Jump to content

ராசா அண்ணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎-‎09‎-‎2020 at 13:07, ரஞ்சித் said:

 

1992 அல்லது 1993 ஆக இருக்கும். நான் கொழும்பில் இருந்து எனது உயர்தர பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலம். வெள்ளவத்தையில் பிரேம்நாத் மாஸ்ட்டரின்ர இன்டர் மொட் ஸ்டடி சென்டரில், புறாக்கூடு போன்ற அறையில் நெருக்கமாக அமர்ந்து, அவர் சொல்லித்தரும் கணக்கினை ஒரு வரி மீதமில்லாமல் கொப்பியில் பதிந்துகொண்டு, பரீட்சைக்குக் காத்திருந்த காலம். 

தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் செல்லப்பெயர் ( பட்டப்பெயர்தான்) கொண்டுதான் பிரேம்நாத் மாஸ்ட்டர் அழைப்பார். அவர் ஒரு வகுப்பில் எங்கள் பெயரை அழைத்து ஒரு கேள்வி கேட்டார் எண்டால், அது எமக்கு ஆத்மதிருப்தி. வகுப்பில் முன்னால் இருந்த சரக்குகளுக்கெல்லாம் எங்கள் பெயர் தெரிந்துவிடும் என்கிற சந்தோஷம், "விலாசம்", இப்படி ஏதோ ஒன்று. 

அந்த வகுப்பில்த்தான் எனது உற்ற நண்பனை நான் சந்தித்தேன். மாநிறம், அழகன், மலையாள நடிகர்கள் போன்ற முக வசீகரமும், ஆண்மையான குரலும் கொண்டவன். வகுப்பிற்க்கு வரும்போது, செல்லும்போது அவனுடன் பேசுவேன். பழகுவதற்கு இனிமையானவன் என்பதால், அவனைச் சுற்றி எப்போதுமே ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். என்னிலும் ஒரு வயது கூடியவன், இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தயாராவதற்கு எங்களுடன் வகுப்பிற்கு வந்துகொண்டிருந்தான். 

வெள்ளவத்தை ஹம்ப்ட்டன் லேனில், முன்னாள் ராணுவ அதிகாரியொருவரின் வீட்டில் அவர் வாடகைக்குக் கொடுப்பதற்குக் கட்டியிருந்த "லயன்களில்" நானும் அடைக்கலமாகியிருந்தேன். என்னைத்தவிர அங்கே குடியிருந்தவர்கள் எல்லாருமே ஒன்றில் கொழும்பில் வேலைபார்த்துவந்தர்கள் அல்லது வெளிநாடு போகும் கனவில் உறவுகள் அனுப்பும் பணத்தில் வெள்ளவத்தைத் தெருக்களில் பகலெல்லாம் சுற்றிவிட்டு, இரவுகளில் தூங்குவதற்கு மட்டுமே லயன்களுக்கும் திரும்பும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள். அவர்களில் படித்துக்கொண்டிருந்தது நான் மட்டும்தான். இடைக்கிடையே ஏதாவது ஒரு லயன் அறையில் "படம்" ஓடும். என்னையும் ஒருநாள் அதற்கு அறிமுகப்படுத்தினார்கள். அட கடவுளே, இதையெல்லாம் கூடவா கூடியிருந்து கூட்டமாகப் பார்ப்பார்கள் என்று வியந்துகொண்டே அவ்வப்போது நான் சென்று அமர்ந்துகொள்வேன். பாடசாலை, வகுப்புக்கள் என்று நாள்முழுதும் அலைந்து திரியும் எனக்கு, தனி லயனில் தனிமை வாட்டும். சிலவேளை முகட்டைப் பார்த்துக்கொண்டே தூங்குவேன். சீமேந்துத்தரை, வெற்றுப்பாய், உறையிலாத தலையணை, நானும் கவலைப்பட்டதில்லை, எவருமே கேட்டதில்லை. 

எனது லயன் வாழ்க்கை பற்றி ஒருநாள் எதேச்சையாக எனது நண்பனிடம் கூறினேன். என்னை ஆச்சரியமாகப் பார்த்த அவன், "ஏண்டா இவ்வளவுநாளும் சொல்லவில்லை?" என்று கேட்டான். "நீ, வா எங்கட வீட்டிற்கு, எனக்கும் படிக்கத் துணையில்லை, நாங்கள் பாஸ்ப்பேப்பர் செய்யலாம்" என்று ஒருநாள் சொல்லவும், மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டேன்.

கொள்ளுப்பிட்டியில் காலிவீதியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு வீதியில் அவனது வீடு. சிங்கப்பூர் பிஸிநெஸ்காரரான அவனது தந்தையின் பணச்செழிப்பில் வாங்கப்பட்ட அந்த வீட்டில், அவனும், அவனது பெற்றோர், இரு தங்கைகள் மற்றும் "பெரியம்மா" வும் வாழ்ந்துவந்தனர். இந்தப் பெரியம்மா பற்றியும் பேச வேண்டும். முதலில் அவரை எனது நண்பனின் தாயாரின் அக்காள் என்றுதான் எண்ணினேன். பிள்ளைகளுடனும், அவனது பெற்றோர்களுடனும் அவர் காட்டிய பாசமும் அக்கறையும் அலாதியானது. ஒருநாள் அவனிடமே கேட்டேன், "அவவுக்குக் குடும்பம் இல்லையோ, ஏன் அவ உங்களோட இருக்கிறா? என்று நான் கேட்டதற்கு, "அவதானடா எங்கட அப்பாவின்ர முதல்த் தாரம், அவவுக்குப் பிள்ளைகள் ஒண்டும் பிறக்கவில்லையெண்டதற்காக அப்பாவின்ர ஆக்கள் வாரிசு வேண்டும் எண்டு அம்மாவைக் கலியாணம் செய்துவைச்சவையள், அவ எங்களோடதான் இருக்கிறா" என்று சொன்னான். தன் கண்முன்னேயே தனது கணவர் இன்னொரு பெண்ணுடன், திருமணம் முடித்து, பிள்ளைகள் பெற்று வாழ்வதைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டில் தானும் வாழ்ந்துவரும் அந்தப் பெரியம்மா மீது எனக்கு இனம்புரியாத இரக்கமும், மரியாதையும் ஏற்பட்டது. இதுவல்லவா தியாகம்?! ஆனால், அவரைத் தமது சொந்தத் தாய்போல அக்குடும்பம் பார்த்துக்கொண்ட விதம் இப்படியும் வித்தியாசமான மனிதர்கள் எம்முடன் வாழ்கிறார்கள் என்பதையும் எனக்கு உணர்த்தியது. 

நீங்கள் ஏ லெவல் மட்டுவில் படித்தேன் என்று முந்தி எழுதிய நினைவு:unsure: ...உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கின்றது ...தொடர்ந்தும் எழுதுங்கள் 

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் ஏ லெவல் மட்டுவில் படித்தேன் என்று முந்தி எழுதிய நினைவு:unsure: ...உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கின்றது ...தொடர்ந்தும் எழுதுங்கள் 

ஏ லெவல் படிக்கத் தொடங்கியது மிக்கேல் கல்லூரியில்த்தான். ஆனால், பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை முறிந்தபின்னர், 1990 இல் ஜூன் மாதம் கொழும்பிற்கு வந்துவிட்டேன். மிக்கேல் கல்லூரிக்கு அருகில், வெபர் ஸ்டேடியத்திற்குப் போகும் வழியில் ரத்திணசிங்கம் மாஸ்ட்டரிடம் சிறிதுகாலம் டபிள் மத்ஸ் இற்குப் போய்க்கொண்டிருந்தேன். அதிகாலை நேர வகுப்பு, அமைதியும், காலை புலரும் வண்ணமும் அலாதியாய் இருக்கும். 

உங்களின் ஆதரவிற்கு நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 22:49, முதல்வன் said:

மானிப்பாய் பிரபா எங்கே என்று தெரியவில்லை. 

புஸ்பா - கல்ப்பனா கனடாவில் என்று நினைக்கிறேன்.

மானிப்பாய் பிரபா இபோது லண்டனில் இருக்கிறார். ஆளே மாறிப்போயிட்டார் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன், சாமி மாதிரி, திருநீரும், பொட்டும்தான் குறை. அவரைப்பற்றியும் முன்னர் ஒருதடவை இங்கு எழுதினேன். இப்போதும்கூட அடிக்கடி பலகலைக் கழக குறூப்பில் பேசுவோம். 

புஷ்ப்பாவும் கல்ப்பனாவும் டொரொன்டோவில். நன்றாகவே இருக்கிறார்கள். மொரட்டுவை 93 எனும் நண்பர் வட்டத்தை ஆரம்பித்து, ஒவ்வொருவராய்த் தேடிப்பிடித்து இன்று அனைவரையும் ஒன்றிணைத்தது புஷ்ப்பாதான். சில வாரங்களுக்கு முன்னர்கூட சூமில் அனைவரும் கலந்துகொண்டு அரட்டை அடித்தோம்.


 

On 17/9/2020 at 22:49, முதல்வன் said:

இந்திரலிங்கமாக கூட இருக்கலாம். 🤣🤣🤣

நாடக மன்னன் லீலாவாகவும் இருக்கலாம் 🤣🤣🤣

மத்ஸ் டிபாட்மன்ட் இந்திரலிங்கத்தைச் சொல்லுறியளோ? நீங்கள் அவராக இருக்கமாட்டியள், எங்கட ரகசியமெல்லாம் தெரிஞ்சிருக்கு உங்களுக்கு ?!

லீலாவாக இருக்கவும் வாய்ப்பில்லை. லீலாவுக்கு யாழ்க்களம் பற்றித் தெரிந்திருக்குமோ தெரியாது. ஆள் செய்திச்சேவைக்கு வீடியோ எடுக்கிறதில பிஸியெண்டு கேள்வி.

உங்களைக் கெதியாப் பிடிச்சுடுவன் எண்டு நினைக்கிறன், பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

மானிப்பாய் பிரபா இபோது லண்டனில் இருக்கிறார். ஆளே மாறிப்போயிட்டார் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன், சாமி மாதிரி, திருநீரும், பொட்டும்தான் குறை. அவரைப்பற்றியும் முன்னர் ஒருதடவை இங்கு எழுதினேன். இப்போதும்கூட அடிக்கடி பலகலைக் கழக குறூப்பில் பேசுவோம். 

 

நவலி பிரபா -  New Hostel கஜே😂; தண்ணியில் மிதந்தவன், நல்ல பெடியன் 

புஷ்பா - கனடாவில் Real Estate

நிமலன் - இங்குதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நவலி பிரபா -  New Hostel கஜே😂; தண்ணியில் மிதந்தவன், நல்ல பெடியன் 

இப்ப எல்லாம் விட்டாச்சு, தண்ணி, சிகரெட் எண்டு எதுவுமேயில்லை. ஆளே மாறீட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

உங்களைக் கெதியாப் பிடிச்சுடுவன் எண்டு நினைக்கிறன், பாப்பம்.

பார்ப்பம் பார்ப்பம். ரா.. ரா (சந்திரமுகி பாட்டுத்தான் ஞாபகம் வருது) 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

பார்ப்பம் பார்ப்பம். ரா.. ரா (சந்திரமுகி பாட்டுத்தான் ஞாபகம் வருது) 🤣🤣🤣

ஏதாவதொரு க்ளூ கிடைக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 தரம் குண்டடிச்சு சுத்தி திரியும் அக்கரைப்பற்று கலீலை தெரியுமா. 

நானாகவும் இருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

8 தரம் குண்டடிச்சு சுத்தி திரியும் அக்கரைப்பற்று கலீலை தெரியுமா. 

நானாகவும் இருப்பேன்.

அவர் வெக்டரிட்டப் படிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீத்தாராம் .?? கடம்பன் .?? இன்னும் எத்தனை பேர் இருக்கினம் அண்ணை. வடமராட்சிகாரர் 🤣🤣🤣

 

28 minutes ago, ரஞ்சித் said:

ஏதாவதொரு க்ளூ கிடைக்குமோ? 

சொய்சாபுர பஸ்ராண்டில் சி.வி குணரத்ன தொழில்பயிற்சி அமைச்சர் ஆமிக்கு காசு சேர்க்கும் போது கரும்புலி தாக்குதல் நடந்து ஆமி கம்பஸுக்குள்ளே வந்து பிடிச்சுக்கொண்டு போன ஆட்களை எல்லாரையும் உங்களுக்குத்தெரியுமா அண்ணை 🤭🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முதல்வன் said:

சீத்தாராம் .?? கடம்பன் .?? இன்னும் எத்தனை பேர் இருக்கினம் அண்ணை. வடமராட்சிகாரர் 🤣🤣🤣

 

சொய்சாபுர பஸ்ராண்டில் சி.வி குணரத்ன தொழில்பயிற்சி அமைச்சர் ஆமிக்கு காசு சேர்க்கும் போது கரும்புலி தாக்குதல் நடந்து ஆமி கம்பஸுக்குள்ளே வந்து பிடிச்சுக்கொண்டு போன ஆட்களை எல்லாரையும் உங்களுக்குத்தெரியுமா அண்ணை 🤭🤔

ஓம். ஓரளவிற்குத் தெரியும். ஏனென்றால் நானும் பிடிபட்டனான். மொரட்டுவை பொலீஸ் ஸ்டேஷனில ரெண்டுநாள் வைச்சிருஞ்சு செய்துபோட்டுத்தான் விட்டவன்கள். நீங்களும் இருந்தனீங்களோ? 

6 minutes ago, முதல்வன் said:

சீத்தாராம் .?? கடம்பன் .?? இன்னும் எத்தனை பேர் இருக்கினம் அண்ணை. வடமராட்சிகாரர் 🤣🤣🤣

அட, அவங்களை வேற தெரியுமா??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

அட, அவங்களை வேற தெரியுமா??? 

கடம்பன் இப்போ லைக்காவில் senior Switching Engineer, பாலா லைக்காவில் Data scientist. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பட்ஜில 5 பேர். நான், புஷ்ப்பா, நவாலி பிரபா, லீலாகிருஷ்ணன், கோழி ரமேஷ். மற்றையவர்கள் எல்லோரும் ஜூனியர்ஸ் என்று நினைவு. 

Just now, முதல்வன் said:

கடம்பன் இப்போ லைக்காவில் senior Switching Engineer, பாலா லைக்காவில் Data scientist. 
 

அது தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

ஓம். ஓரளவிற்குத் தெரியும். ஏனென்றால் நானும் பிடிபட்டனான். மொரட்டுவை பொலீஸ் ஸ்டேஷனில ரெண்டுநாள் வைச்சிருஞ்சு செய்துபோட்டுத்தான் விட்டவன்கள். நீங்களும் இருந்தனீங்களோ? 

அதுக்குப்பிறகும் 4ஆம் மாடியில் வைச்சிருந்தவையை தெரியுமா .? 

சிங்களவன் ஒட்டின தமிழனே வெளியேறு என்ற banner இற்கு பதிலடியாக if Tamils out Bombs In என்று பணர் ஒட்டி சஸ்பண்ட் ஆனவையை தெரியுமா 

3 minutes ago, ரஞ்சித் said:

எங்கட பட்ஜில 5 பேர். நான், புஷ்ப்பா, நவாலி பிரபா, லீலாகிருஷ்ணன், கோழி ரமேஷ். மற்றையவர்கள் எல்லோரும் ஜூனியர்ஸ் என்று நினைவு. 

நீங்களே உங்களை காட்டித்தாறீங்கள் அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

அதுக்குப்பிறகும் 4ஆம் மாடியில் வைச்சிருந்தவையை தெரியுமா .? 

சிங்களவன் ஒட்டின தமிழனே வெளியேறு என்ற banner இற்கு பதிலடியாக if Tamils out Bombs In என்று பணர் ஒட்டி சஸ்பண்ட் ஆனவையை தெரியுமா 

நீங்களே உங்களை காட்டித்தாறீங்கள் அண்ணை 

என்ர பெயரையே வெளிப்படையாப் போட்டிருக்கிறன், இதில இன்னும் காட்டித்தர என்னவிருக்கிறது?

4 ஆம் மாடிக்குப் போனவர்களில இரண்டு ஜூனியர்ஸைத் தெரியும், ஒருவர் அல்பேர்ட் மற்றையவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை.  விஷ்ணு??

4 minutes ago, முதல்வன் said:

சிங்களவன் ஒட்டின தமிழனே வெளியேறு என்ற banner இற்கு பதிலடியாக if Tamils out Bombs In என்று பணர் ஒட்டி சஸ்பண்ட் ஆனவையை தெரியுமா 

இது நான் கேள்விப்படாதது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

4 ஆம் மாடிக்குப் போனவர்களில இரண்டு ஜூனியர்ஸைத் தெரியும், ஒருவர் அல்பேர்ட் மற்றையவரின் பெயர் சரியாக நினைவில் இல்லை.  விஷ்ணு??

விஸ்ணுவர்த்தன், சக்திவேல், அல்பேட்.

நீங்க கஜே அடிச்ச அறையிலே 304, கழுதை விளையாடின ஆட்களை எல்லாம் யோசிச்சு பாருங்கள். 🤣🤣🤣

 

உங்களில் மரியாதையும் மதிப்பும் கூடுது அண்ணை. ஆனால் இப்போதைக்கு நான் யாரென்பதை சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன் அண்ணை. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரஞ்சித் said:

எங்கட பட்ஜில 5 பேர். நான், புஷ்ப்பா, நவாலி பிரபா, லீலாகிருஷ்ணன்,

. மற்றையவர்கள் எல்லோரும் ஜூனியர்ஸ் என்று நினைவு. 

அது தெரியும்

 

1 hour ago, முதல்வன் said:

8 தரம் குண்டடிச்சு சுத்தி திரியும் அக்கரைப்பற்று கலீலை தெரியுமா. 

நானாகவும் இருப்பேன்.

கலீலை தெரியாது

லீலா செய்த வேலைகள் - இன்றுவரை மறக்க முடியாது, எல்லோரையும் நன்றாக தெரியும்

முதல்வன் - இன்னும் கண்டுபிடிக்கவில்லை 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

லீலா செய்த வேலைகள் - இன்றுவரை மறக்க முடியாது

லீலா கலை விழாவுக்கு சரஸ்வதி மண்டபத்திலே போட்ட மௌனநாடகம் ஞாபகம் இருக்கா உடையார் அண்ணே 🤣🤣🤣

 

15 minutes ago, உடையார் said:

முதல்வன் - இன்னும் கண்டுபிடிக்கவில்லை 🤔

கடைசி மட்டும் பிடிக்கமாட்டீங்கள். 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

நீங்கள் ஏ லெவல் மட்டுவில் படித்தேன் என்று முந்தி எழுதிய நினைவு:unsure: ...உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் இருக்கின்றது ...தொடர்ந்தும் எழுதுங்கள் 

ரதி, நானும் மட்டக்களப்பில் படித்திருக்கிறேன். சிறுவயதில். அரசடி பள்ளிக்கூடம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முதல்வன் said:

லீலா கலை விழாவுக்கு சரஸ்வதி மண்டபத்திலே போட்ட மௌனநாடகம் ஞாபகம் இருக்கா உடையார் அண்ணே 🤣🤣🤣

 

இல்லாமலா 🤣😂 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

ரதி, நானும் மட்டக்களப்பில் படித்திருக்கிறேன். சிறுவயதில். அரசடி பள்ளிக்கூடம்!!

நானும் மாமாங்கம் பார் ரோட்டிலே கொஞ்சகாலத்தை கழிச்சிருகிறேன்.

HNB குவாடர்ஸில். 

அதெல்லாம் பொற்காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முதல்வன் said:

நானும் மாமாங்கம் பார் ரோட்டிலே கொஞ்சகாலத்தை கழிச்சிருகிறேன்.

HNB குவாடர்ஸில். 

அதெல்லாம் பொற்காலம்.

நாங்கள் ETA கட்டிடத்துக்கு முன்னால் வீட்டில் இருந்தோம். அப்பா RMP. விஜயா , ராஜேஸ்வரா , ரீகல் தியேட்டர்களின் படம்பார்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

ரதி, நானும் மட்டக்களப்பில் படித்திருக்கிறேன். சிறுவயதில். அரசடி பள்ளிக்கூடம்!!

ஓ ...யாழில் இருக்கும் நிறைய பேர் மட்டுவில் இருந்திருக்கிறார்கள் ...மகிழ்ச்சி 

Link to comment
Share on other sites

40 minutes ago, ரதி said:

ஓ ...யாழில் இருக்கும் நிறைய பேர் மட்டுவில் இருந்திருக்கிறார்கள் ...மகிழ்ச்சி 

நான் ஒரு வயதில் இருந்து 5 வயது வரைக்கும் மட்டுவில் இருந்திருக்கின்றேன். கல்லடி உப்போடை எனும் பெயர் நினைவில் இருக்கின்றது. அங்கு தான்  வீடு. சீனியப்பு என்பவரின் கடையும் நினைவில் இருக்கின்றது. வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறு வீதியால் சென்றால் ஆறும், அதன் அருகில் ஒரு முஸ்லிம் பெரியவரின் கல்லறையும் உள்ளது. 
மட்டுவில் ஏற்பட்ட சூறாவளியில் அரும் தப்பில் குடும்பம் தப்பியதாக அம்மா அடிக்கடி சொல்வார். என் அக்கா சிசிலியா கொன்வெண்டில் 2 ஆம் வகுப்பு வரைக்கும் படித்து இருக்கின்றார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஓ ...யாழில் இருக்கும் நிறைய பேர் மட்டுவில் இருந்திருக்கிறார்கள் ...மகிழ்ச்சி 

தங்கச்சி! நான் முதலே மட்டக்களப்பு எனக்கு அடிபட்ட ஊர் எண்டு சொல்லிப்போட்டன். 😎

ஆனைப்பந்தி பிள்ளையாருக்கு என்ரை பேரை சொல்லி கோசானிட்டை அர்ச்சனை செய்யச்சொன்னனான். இண்டு வரைக்கும் வீபூதி சந்தனமும் வரேல்லை பதிலும் வரேல்லை.என்ன மனிசரப்பா? நம்பினவன் நடுச்சந்தியிலைதான் போல கிடக்கு..😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.