Jump to content

தேங்காயின் விலை 100 ரூபாய்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காயின் விலை 100 ரூபாய்!

September 15, 202001
Share0
1574871224938332-0-960x638.jpg?189db0&18

அடுத்த மாதம் முதல் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 85 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் 150 மில்லியன் தேங்காய்கள் மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

https://newuthayan.com/தேங்காயின்-விலை-100-ரூபாய்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் சட்னி , புரோட்டவிற்கு ஊற்றபடும் குருமா எல்லாவற்றையும் மறக்க வேண்டியான் .. 😢..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டை சிங்கள இராணுவம் அறைக்கு ஒரு குண்டு வீதம் குண்டு வைத்து தகர்த்துவிட்டது. ஆனால் வளவில் நின்ற தென்னைகள் காயங்களோடு தப்பி.. இப்போ காய்த்துக் குலுங்குகின்றன.

ஊரில் தேங்காய்க்குப் பஞ்சம் என்பது கொஞ்சம் அபரிமிதமாக இருக்கிறது. ஆனால்.. தேங்காய் பிடுங்க ஆக்களுக்கு பஞ்சம் என்றால் அது யதார்த்தம். 

இப்ப வளவுக்குள் தேங்காய் புடுங்க.. கூலி 500 ரூபா.. கூடவே இரண்டு தேங்காய்கள் இனாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி விசுவமடு பக்கம் தென்னை வைத்தவர்களை தென்னை ஏமாற்றவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

எங்கள் வீட்டை சிங்கள இராணுவம் அறைக்கு ஒரு குண்டு வீதம் குண்டு வைத்து தகர்த்துவிட்டது. ஆனால் வளவில் நின்ற தென்னைகள் காயங்களோடு தப்பி.. இப்போ காய்த்துக் குலுங்குகின்றன.

ஊரில் தேங்காய்க்குப் பஞ்சம் என்பது கொஞ்சம் அபரிமிதமாக இருக்கிறது. ஆனால்.. தேங்காய் பிடுங்க ஆக்களுக்கு பஞ்சம் என்றால் அது யதார்த்தம். 

இப்ப வளவுக்குள் தேங்காய் புடுங்க.. கூலி 500 ரூபா.. கூடவே இரண்டு தேங்காய்கள் இனாம். 

முந்தி ஒரு மரத்துக்கு  ஒரு தேங்காய் கூலி  அல்லது ஊதியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில், பொருளாதார வலு கூடுவதால் எதிர்காலத்தில் தென்னை மரத்தில் மனிதர்கள் ஏறமாட்டார்கள் என்று, மாற்று வழிகளில் தேங்காய் பறிக்கும் வழிவகைகளை கண்டறிய அரசு ஒரு குழுவினை அமைத்தது.

தாய்லாந்தில், குரங்குகளை பழகினார்கள். மேலை நாடுகளில் எழுந்த எதிரிப்பினால், இப்போது குட்டை இன தென்னை மரங்களை வளர்க்கின்றனர். 

Link to comment
Share on other sites

மக்கள் தலையில் சட்னி அரைக்கும் அரசு வந்துள்ளதால் தேங்காய் விலை கூடத்தானே செய்யும்.😲

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.