Jump to content

மெய்நிகர் வெளியில் பாலியல் வசைகள்


Recommended Posts

சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு கருத்தியல்களின் அடிப்படையிலான உரையாடல்களில் அல்லது பிரச்சினைகளில் கருத்துகள் தீரும்போது தேர்ந்தெடுக்கும் உபாயம் தனிநபர் மேல் தாக்குதல் தொடுப்பதாக மாறிவிடுகின்றது. சுருக்கமாக வசைபாடுவது என்று சொல்லலாம். குறித்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பேசும் கருத்தியலுக்கும் அவர்களது நடைமுறைக்குமான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்தியல் வறுமைகள் பெருமளவு இருக்கின்றன என்பது எனது அவதானம். ஓர் ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர் அதே ஒடுக்குமுறையை ஆதரிக்கவே செய்வார்; மனிதர்களின் உளவியல் பின்னணி அவர்கள் அறிந்த கருத்துக்களில் இருந்து மாத்திரம் உருவாகுவதில்லை, அவர்கள் உண்மையாக எதனால் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவற்றிலிருந்தே உருவாவது. நமது சமூக அமைப்பு இவ்வாறான வசையாளர்களுக்கெதிராக நீண்டதும் பெரியதுமானதொரு மவுனத்தைக் காத்துவருகிறது. அதுவே வசையாளர்களின் பலம். நடைமுறையில் வன்முறையை மற்றவர்கள் மேல் நிகழ்த்தும் பலருக்கும் ஆதரவான வாதங்களை உருவாக்குபவர்கள் இந்த வசையாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே.

அண்மையில் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் நளினி ரட்ணராஜா, அம்பிகா சற்குணராஜா, மோகன தர்சினி ஆகிய மூன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் மேல் வசையாளர்களால் கும்பலாக நிகழ்த்தப்பட்ட எதிர்த்தலை / தாக்குதலைப் பார்த்தால் பாலியல் வசைகளுக்கு வெளியே எதையும் எதிர்வாதமாக வைக்கத் தெரியாத சமூகமாக நம் பெரும்பான்மை மக்கள் இருப்பது வெளிப்படுகிறது. இந்தப் பாலியல் வசைகளுக்கு எதிராகப் பேசியவர்கள் சிறிய எண்ணிக்கையானவர்களே. இந்த மூவரும் வசைகளை எதிர்கொண்ட விதம் மாறுபட்டது என்பதால் இவகளைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன். நளினி தன்னுடைய கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ஒரு விவாதச் சூழலை கடந்த தேர்தல் காலத்தில் உருவாக்கியிருந்தார். அம்பிகா தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை வெளியிட்ட ஐபிசி தமிழ் என்ற ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார், மோகன தர்சினி தன் மேல் இணையத்தில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பாலியல் வசைகளை உருவாக்கி அளித்துக்கொண்டிருக்கும் வவுனியாவைச் சேர்ந்த கிராம சேவையாளரான சுயாந்தன் என்பவருக்கு அவரது தொழில்சார் உயர் மட்டங்களிற்கு குற்றச்சாற்றுக் கடிதமொன்றை உத்தியோகபூர்வமாக அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தை அவர் முகநூலில் வெளியிட்ட பின் அதை முகநூல் விதிகளுக்கு எதிரானதாக ‘ரிப்போர்ட்’ செய்வதன் மூலம் பலரும் அதனை அழிக்க உதவி வருகின்றனர், பாலியல் வசையாளர்களின் பின்பலமான இந்த நலன்விரும்பிகள் ரகசியமான தங்கள் ஆதரவை இவற்றின் மூலம் வெளிப்படுத்துவார்கள், அப்பொழுது தான் அவர்கள் தொடர்பில் எழக்கூடிய குற்றச்சாற்றுகளிலிருந்தெல்லாம் தப்பிக்கும் வாய்ப்புத் தொடரும். ஆகவே நாங்கள் இங்கே கவனத்தைக் குவிக்கவேண்டியது வசைகளையும் அவதூறுகளையும் செய்யும் குறித்த தனிமனிதர் சார்ந்து மட்டுமல்ல, அவர்களிற்கான ஆதரவுத் தளங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் பற்றியும் தான். அவர்களை வெளிப்படுத்துவதும் இந்த உரையாடலில் முக்கியமானதே.

தோழர் மோகன தர்சினியின் மேல் நிகழும் முகநூல் பாலியல் வசைகள் சமகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் அதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம். மோகன தர்சினியை பற்றி சுயாந்தன் என்பவர் பாலியல் வசைகளுள்ள பதிலொன்றை அண்மையில் போட்டிருந்தார், அதற்கெதிராக அவர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் “முடிந்தால் நீங்கள் இப்படி நான் பேசுவதைத் தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விட்டிருந்தார். குறித்த நபர் தன்னை ஓர் இந்துத்துவவாதியாகவும் ராஜபக்ஷக்களின் ஆதரவாளனாகவும் வெளிப்படுத்திக் கொள்பவர், அதனை வைத்து தன்னை அதிகாரங்களுக்கு நெருக்கமான, அச்சுறுத்தலான ஆளாக முன்வைக்கிறார். இந்த நிலையில் நமது சமூகங்களுக்கிடையில் இந்த உரையாடல் பொதுவெளிக்கு வரும்போது, வழக்கம் போல் ஒரு சிறு தொகையினர் தோழர் மோகன தர்சினிக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். சிலர் மவுனம், பலர் கள்ள மவுனம், வேறு சிலருக்கு அக்கறையில்லை.

ஆனால் நாம் ஏன் பேசியே ஆக வேண்டியிருக்கிறது. மோகன தர்சினி மேல் நிகழும் இந்தப் பாலியல் வசைகளுக்கெதிரான நம் கண்டனங்களையும், அவருக்கான தோழமையையும் வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும். அது வெறுமனே ஒரு பெண்ணுக்கான குரல் அல்ல. பொதுவெளியில் தமது கருத்துகளைப் பேசும் பலர் மீது இப்படியான வசைகளை உருவாக்குபவர்கள் நேரடியாக அவர்கள் மேல் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்த முடிவதில்லை. அரசியல் பேசும் பெண்களை அவ்வளவு விரைவில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நின்று எதிர்க்கும் வல்லமையும் போராட்ட உணர்வும் உள்ளவர்கள். இவர்கள் குறி வைப்பது அல்லது இப்படியான செயல்களால் உண்டாக்க விரும்பும் சமூக விளைவென்பது மிச்சமிருக்கும் பெரும்பான்மைப் பெண்களின் துணிச்சலை சிதைப்பது, பொதுவெளிக்குள் அவர்கள் நுழையும் முன்பே அச்சத்தை உருவாக்கிவிடுவது; அவர்களுக்கான குரல்களை வசைகளால் நசுக்குவது. உண்மையில் மேலே குறிப்பிட்ட அரசியல் செயற்பாட்டாளர்களின் மீது நேரடியாக நிகழ்த்தப்பட்ட பாலியல் வசைத் தாக்குதல்களின் போது மவுனமாக இருந்த மற்றும் இருக்கும் பலரையும் பாருங்கள், இவர்கள் பெண்களின் அரசியல் பேசும் வெளியை இல்லாமலாக்கவே முயல்வதுடன் துணிச்சலாக அரசியல் பேசும் பெண்கள் மீதான அச்சத்தால் அவர்களின் துணிச்சலை உடைக்கவும் முனைகின்றார்கள். இப்பிரச்சினைகளை அறிந்தும் நிலைப்பாடுகளை எடுக்காதவர்களின் கயமையானது சுயாந்தனை விட மோசமானது. இவர்களிற்குப் பின்னால் இந்த ஆணாதிக்க ஒழுங்கின் வால் இன்னமும் தெரிகிறது.

பெண்கள் அரசியல் பேசுவதைப் பொறுத்தவரையில் நாம் அவர்களின் ஒவ்வொரு குரலையும் பாதுகாக்க வேண்டுமென்பது பெண் என்பதற்காகவே அவர்களை ஏற்றுக்கொள்வதென்பதல்ல; பெண்களில் அரசியல் பேசுபவர்கள் மிகவும் சிறிய அளவான தொகையினரே, அதன் பின்னாலுள்ள சமூக மனநிலை எவ்வளவு மோசமான ஆண் ஆதிக்கம் கொண்டதென்பது நாம் அறிந்ததே, ஆகவே அவர்களும் பேசட்டும். ஆண்களைப் போலவே, அவர்கள் சொல்வது தவறென்றால் அதை உரையாடுவதில் எந்தப் பிழையும் இல்லை, எதிர்க்கலாம், ஆதரிக்கலாம், முரண் உரையாடல்களை நிகழ்த்தலாம். அது அவரவர் உரிமை. ஆனால் பாலியல் வசைகளை அள்ளி இறைக்கும்போதும் அதிகாரங்களைக் கொண்டு அவர்களை அடக்க நினைக்கும்போதும் அறிவும் சுயமரியாதையும் சமூகநீதி பற்றிய புரிதலும் உள்ளவர்கள் அதற்கெதிராகவே நிற்பார்கள். அதுவொரு கூட்டு அறம். அதை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தோழர் மோகன தர்சினி இவ்வசைகளின் மூலமும் அதிகாரத்தின் மூலமும் அடக்கப்பட நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்க மாட்டோம். சுயாந்தன் தனது செயலுக்கான வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவிப்பது மட்டும் தான் இதற்கான முதற்படியான தீர்வும் அறமும்.

ஆகவே எந்தப் பக்கம் நிற்கப்போகிறீர்கள் என்பது பற்றி நிலைப்பாடு எடுங்கள். உரக்கப் பேசுங்கள். யார் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்பதை வைத்தே நம் அரசியல் புரிதலை மதிப்பிட்டுக்கொள்ள இதுவும் ஒரு தருணம். பெண்கள் அழுது பலவீனமாகப் பொதுவெளியில் தம்மை முன் வைத்தால் பெரியளவான ஆதரவை வழங்கும் நம் சமூகம், அவர்கள் துணிச்சலான முகத்துடன் வரும்போது அதனை வெறுக்கிறது, பதற்றமடைகின்றது. அதுவே நம் சமூகம் பெண்களின் முன்னால் வைத்திருக்கும் நிலைக்கண்ணாடி. ஆகவே தான், தோழர் மோகன தர்சினியைப் போன்றவர்கள் பாலியல் வசையாளர்களுக்கெதிராக உண்டாக்கும் வெளியிலிருந்து இன்னும் ஆயிரமாயிரம் பெண்களின் குரல்கள் துணிச்சலாய் வெளிப்பட இந்த வெளிச்சத்தைக் காப்பாற்றுவோம்.

கிரிசாந்

http://vithaikulumam.com/2020/09/15/20200914/?fbclid=IwAR1g6Bf5otVDFNXqx8SXAmS4mops-xuoYrATFL4nfvQkIq5zRU7Y2pbKV8s

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

23 hours ago, நிழலி said:

அண்மையில் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் நளினி ரட்ணராஜா, அம்பிகா சற்குணராஜா

அவருடைய பெயர் அம்பிகா சற்குணநாதன் என நினைக்கிறேன்..

 மனிதர்களின் உளவியல் பின்னணி அவர்கள் அறிந்த கருத்துக்களில் இருந்து மாத்திரம் உருவாகுவதில்லை, அவர்கள் உண்மையாக எதனால் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ”

எப்படி வளர்க்கபடுகிறார்கள் என்பதுதான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நினைக்கிறேன்.. 

பெண்கள் அழுது பலவீனமாகப் பொதுவெளியில் தம்மை முன் வைத்தால் பெரியளவான ஆதரவை வழங்கும் நம் சமூகம். ”

பெண்கள் பலவீனமானவர்கள், இப்படி பொதுவெளியில் நடந்தால் பிரச்சனைகளை இலகுவில் சமாளிக்கமுடியும் என்ற மாயையை தருகிறது.. அவ்வளவுதான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.