சசிகலா எப்போது விடுதலையாவார்? சிறை தண்டனை நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? விரிவான தகவல்கள்

By
கிருபன்,
in தமிழகச் செய்திகள்
-
Tell a friend
-
Topics
-
0
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
75 ஆவது இந்திய சுதந்திர தினத்தினை கொண்டாடும் அனைத்து யாழ்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். இந்திய பிரதமர் கூறுவது போல இந்தியா 25 ஆண்டுகளில் அபிவிருத்தியடைந்த நாடாவதற்கு வாய்ப்புள்ளதா? தற்போது இந்தியாவினை வறிய மற்றும் நடுத்தர வர்க்க பொருளாதார நாடு என வரையறுக்கின்றனர். ஆனாலும் அபிவிருத்தியடைந்த நாடு எனும் நிலையினை எட்ட தற்போதுள்ள பொருளாதார நிலையினை விட 3 மடங்கு பொருளாதார ரீதியில் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும். அது 25 வருடத்தில் சாத்தியமா? உறுதியாக முடியும், என நம்புகிறேன். தற்போதய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% உள்ளது, இந்த வளர்ச்சி விகிதம் குறையாமல் பேணப்பட்டால் 20 வருடத்டிற்குக்குறைவாகவே இந்தியாவினால் அந்த இலக்கினை எட்ட முடியும். அனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஆரம்பத்தில் அதிகமாகக்காணப்பட்டு பின்னர் குறைவடைய ஆரம்பிக்கும். தற்போதே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% விகிதமாக உள்ளது என்பது சிந்திக்க வைக்கின்ற விடயமாக உள்ளது ( எனது அபிப்பிராயம் மட்டுமே, தவறாக இருக்கலாம்). இந்தியாவின் பெருமளவான உறபத்தி பொருள்களின் மூலப்பொருள்களுக்கு சீனாவிலும், மருந்து பொருள்களின் மூலப்பொருளிற்கு ஐரோப்பாவிலும் தங்கியுள்ளது, அத்துடன் இந்தியாவின் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தங்கியுள்ளது, கொழும்பு துறைமுகத்தின் 85% பங்குகள் சீனா வசம் உள்ளதாகக்கூறுகிறார்கள். அபிவிருத்தி என்பது வெறுமனே பொருளாதார அபிவிருத்தியில் தங்கிவிடுவதில்லை, சமூக அபிவிருத்தியிலும் உள்ளடங்கியுள்ளது. உலகில் 2 வது மிகப்பெரும் பொருளாதாரமான சீனா கூட அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்னும் நிலையில்தான் உள்ளது. அத்துடன் வருமானப்பங்கீடு மிக மோசமான அளவில் ஏற்றத்தாழ்வு நிலை காணப்படுகிறது, இந்த நிலை நீடித்தால் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக முடியாது. ஆனாலும் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி மிக சீரான அளவில் உள்ளது, இந்த சாதனையினை நிகழ்த்தின அனைத்து இந்தியர்களும் பெருமைக்குரியவர்களே. தற்போதய உலகில் இந்தியாவை ஒரு தீர்மானிக்கும் சக்தியாக (பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும்) மாற்றியமைக்கு ஒவ்வொரு இந்திய குடிமகனது கடின உழைப்பே காரணம். தற்போது உலகளவில் இந்தியாவினை மதிப்பிற்குரிய நாடாகவே பார்க்கிறார்கள் என்பதனால் அனைத்து இந்தியர்களும், தாம் இந்தியர் என்பதில் தாராளமாகப்பெருமை கொள்ளலாம். சுதந்திர தின வாழ்த்துக்கள்.
-
By கிருபன் · பதியப்பட்டது
சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கி விட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விடும் என்ற பிம்பம், தொடர்ச்சியாகவும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது பற்றிய விமர்சனங்களை முன்வைப்போர், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் எதிரிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கட்டமைக்கப்படுகிறார்கள். மாற்றுக் கருத்துக்கு மதிப்பற்ற சமூகத்தைத் திட்டமிட்டு கட்டமைப்பதற்கு, ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்; இது மிகவும் அபாயகரமானது. சர்வதேச நாணய நிதியம் மீதான விமர்சனங்களைக் கண்டு ஆட்சியாளர்கள் கலங்குகிறார்கள். அதனாலேயே மாற்றுக் கருத்தாளர்கள் முடக்கப்படுகிறார்கள். இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கப் போகும் ஒரு பெரிய பேரழிவுக்கான முன்னோட்டம் மட்டுமே! இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வரோக நிவாரணி, சர்வதேச நாணய நிதியத்திடமே இருக்கிறது என்பது கிட்டத்தட்ட முடிந்த முடிவாகி விட்டது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்குவது பற்றிக் கதைப்பவர்கள், அடிப்படையான மூன்று விடயங்களை திட்டமிட்டு மறைக்கிறார்கள். முதலாவது, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை மேற்கொள்வதன் ஊடு, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என்று ஆதரிப்பவர்கள், எவ்வாறு இந்த நெருக்கடியை கையாள்வது என்பது பற்றி விரிவாகப் பேசுவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனானது, எவ்வாறு இலங்கையின் கடனை அடைக்க உதவப் போகிறது என்பது பற்றி, இதுவரையும் வாய் திறக்கவில்லை. இந்த இடத்தில், சில விடயங்களை ஆணித்தரமாக பேச வேண்டி உள்ளது. இலங்கையின் மொத்த அந்நியக் கடன் அண்ணளவாக 52 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறக்கூடிய அதிகபட்சக் கடன், நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமேயாகும். அத்தொகையும் பல்வேறு தவணைகளிலேயே வழங்கப்படும். எனவே, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் கடன் தொகை, இலங்கையின் கடனை அடைக்க போதுமானது அல்ல. வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதனூடு, மீண்டும் சர்வதேச அரங்கில் கடன் பெறுவதற்கு தகுதியானதாக மாறுகிறது. இதனால், இலங்கையால் மீண்டும் கடனை பெற்றுக் கொள்ள இயலும். இந்த ஒற்றைக் காரணத்துக்காகவே, இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்றுக்கொள்ள அடம்பிடிக்கிறது. இப்பொழுது முன்மொழியப்படும் யோசனைகள் அனைத்தும் மேலும், இலங்கையை கடனாளி ஆக்குவதைப் பற்றியதேயன்றி, இலங்கையின் கடனைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. தற்போதைய கதையாடல்களின் ஊடு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது, கடன் வாங்க இயலாது போனமை என்பதாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பல்பரிமாண அம்சங்கள் பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. குறிப்பாக, நாட்டில் புரையோடிப் போயுள்ள ஊழல் முக்கியமான காரணம். கடந்த மூன்று தசாப்த காலங்களில், விலக்கில்லாது எல்லா அரசாங்கங்களும் ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளன. ஆனால், இன்று இது பேசுபொருள் அல்ல. திசைதிருப்புதல்களின் ஊடாக, பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான காரணிகள் பேசப்படாமல், பார்த்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், என்றாவது இவை பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் போது, கட்டமைப்பு ரீதியான மாற்றம் தவிர்க்க இயலாததாகும். அதை ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதிகாரத்தை ருசிப்போரும் விரும்பவில்லை. இரண்டாவது அம்சம், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெறுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவன்று. 1965ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்ச்சியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளது. இதுவரை 16 தடவைகள் இவ்வகையான கடன் திட்டங்களுக்குள் இலங்கை ஆட்பட்டு உள்ளது. தொடர்ச்சியாகக் கடன் வாங்கிய போதும், இலங்கையால் அதன் அந்நியக் கடனைக் குறைக்கவோ, அடைக்கவோ இயலவில்லை. மாறாக, இலங்கையின் அந்நியக் கடனின் தொகை, தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் இம்முறை பெறப்படுகின்ற கடன் மட்டும், இலங்கையின் கடன் சுமையை எவ்வாறு தீர்க்கும் என்பது பற்றி, யாரும் கருத்துரைப்பதில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுகின்ற ஒவ்வொரு முறையும், இலங்கை தொடர்ச்சியான சமூகநல வெட்டுகளை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்வது தகும். வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்பதாயின், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறப்பட்ட ஒவ்வொரு தடவையும், ஒருங்கே சமூகநல வெட்டுகளும் அந்நிய கடன் அதிகரிப்பும் நடந்துள்ளன. பேசப்படாத மூன்றாவது முக்கிய விடயம், இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் யார் என்கிற விடயத்தை, இன்று வரை இலங்கை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளது. குறிப்பாக, இலங்கைக்கு கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் எவை என்கிற தகவல், இன்று வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது இரண்டு அம்சங்களை கோடிட்டுக் காட்டுகிறது. முதலாவது, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் யார் என்பதை அறிகின்ற உரிமை, அனைத்து இலங்கையர்களுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் இரகசியம் காப்பதானது, கடன் வழங்குநர்கள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. இதை மறைப்பதற்காக, சீனக் கடன்தான் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது என்ற பொய், திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மத்தியில், சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வது, நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு ஒரு பாதையை புலப்படுத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஆனால், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதன் பெயரால், இலங்கையில் கட்டமைப்பு மாற்றங்களைக் கோருகிறது. இந்த மாற்றங்கள் இலங்கையில் எஞ்சியுள்ள சமூகநலத் திட்டங்களையும் முழுமையாக அழித்துவிடக் கூடியவை. சர்வதேச நாணய நிதியத்திடம் சரணாகதி அடைவதையே நோக்காகக் கொண்டுள்ள அரசாங்கத்திடம், எதிர்பார்க்க அதிகமில்லை. ‘அந்நியத் தலையீடு’, ‘இறையாண்மைக்கு சவால்’ என்று அடிக்கடி கூச்சலிடுகின்ற பேரினவாதிகளையும் கொண்டுள்ள அரசாங்கமே, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதனூடு, இலங்கையின் இறையாண்மையை அடகுவைக்கும் செயலை முன்னெடுக்கிறது. கவனிப்புக்குரியது யாதெனில், கடனை திருப்பிச் செலுத்துவதில் அக்கறை காட்டுகிற அரசாங்கம், திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, இன்னமும் கடனைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்படுகிறது. எந்தக் கட்டமைப்பு ஊழலை வரன்முறையின்றி சாத்தியமாக்கியதோ, அதே கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்ப்பது மடத்தனம். சர்வதேச நாணய நிதியத்துடன், ‘அலுவலர் நிலை உடன்பாடு’ (Staff Level Agreement) விரைவில் எட்டப்படும் என்று, ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார். கேள்வி யாதெனில், இந்த உடன்பாட்டை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா? மடியில் கனமில்லையாயின் வெளிப்படுத்த வேண்டியதுதானே! Devil is in the detail என்றொரு கூற்று ஆங்கிலத்தில் உண்டு. இந்தக் கூற்று, இதற்கு மிகவும் பொருந்தும். சர்வதேச நாணய நிதியத்திடம் உடன்படிக்கை எட்டப்பட்டது என்ற செய்தியால் பலனில்லை. என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பதும் இலங்கை அரசாங்கம் உடன்பட்ட நிபந்தனைகள் எவை என்பன, பகிரங்கப்படுத்த வேண்டும். மக்கள் இப்போது, அரசாங்கத்திடம் கோர வேண்டியது, வெளிப்படைத் தன்மையையே ஆகும். மூடிய கதவுகளுக்குப் பின்னால், எமது தலைவிதியை யாரோ சிலர் முடிவு செய்வதை அனுமதிக்க இயலாது; அனுமதிக்கவும் கூடாது. நாட்டின் வளங்களும் சொத்துகளும், இலங்கை குடிமக்களுக்குச் சொந்தமானவை; மக்களுக்காகவை. அவற்றை மக்களின் அனுமதியின்றி பகிர்ந்தளிப்பதோ, தனியார் மயமாக்குவதோ, குத்தகைக்கு விடுவதோ மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல; வீட்டுக்குள் அனுமதியின்றிப் புகுந்து திருடும் செயலுக்கு ஒப்பானது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சர்வதேச-நாணய-நிதியம்-கலைய-வேண்டிய-மாயைகள்/91-302368 -
By கிருபன் · பதியப்பட்டது
சீனக் கப்பல்: இராஜதந்திர அழுத்தத்தில் இலங்கை என். கே அஷோக்பரன் சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பல், ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கவும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது என, ஓகஸ்ட் 13ஆம் திகதி, தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது. ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடமிருந்து, கடும் இராஜதந்திர அழுத்தத்தை, கடந்த தினங்களில் இலங்கை சந்தித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, ரணில் ஜனாதிபதியாகிய சில வாரங்களிலேயே, ஒரு மிகப்பெரிய இராஜதந்திர சவாலை சந்திக்க வேண்டிய சூழலை, இது உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது; அமெரிக்காவின் இராணுவக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. இவ்வளவு ஏன், சில நாள்களுக்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் இராணுவக் கப்பல் ‘தைமூர்’ இலங்கைக்கு வந்திருந்தது. இந்த நிலையில், சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கை வருகை மட்டும், ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது வாஸ்தவமான கேள்வி. சாதாரண இராணுவக் கப்பலைப் போன்றதல்ல ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பல். ‘ஆராய்ச்சிக் கப்பல்’ என்ற பதம், ‘யுவான் வாங் 5’ கப்பலை விளிக்கப் பயன்பட்டாலும், ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில், அது ‘ஒற்றறியும் கப்பலாகவே’ கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியா இதனை ஒற்றறியும் கப்பலாகவே பார்ப்பதோடு, இலங்கைக்கான இதன் வருகையை, தனது தேசிய பாதுகாப்புக்கு எதிரான பெரும் சவாலாகப் பார்க்கிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘யுவான் வாங் 5’ கப்பல், 2007இல் இயங்கத் தொடங்கியது. கடல்கடந்த வான்வெளி கண்காணிப்புக்கான அதிநவீன கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்தக்கப்பல், குறைந்தது 222 மீற்றர் நீளமும் 25.2 மீற்றர் அகலமும் கொண்டதாகவும், விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டமைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘யுவான் வாங் 5’ என்பது, சீனாவின் ‘யுவான் வாங்’ தொடரின் மூன்றாம் தலைமுறை விண்வெளி கண்காணிப்பு கப்பலாகும். ‘யுவான் வாங் 5’ சமீபத்தில், ‘வென்டியன்’ ஆய்வக தொகுதியை தொடங்குவதற்கான கடல்சார் கண்காணிப்பு பணியை, வெற்றிகரமாக முடித்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. இது, சீன ‘டியாங்காங்’ விண்வெளி நிலையத்தின் முதல் ஆய்வக தொகுதி ஆகும். இந்தக் கப்பலானது, இதுவரை 5,80,000 கடல் மைல்களுக்கு மேல் பாதுகாப்பாகப் பயணித்துள்ளது. 2020ஆம் ஆண்டில், பசிபிக் பெருங்கடலில் ‘லாங் மார்ச்-5பி’ ஏவுகணையை ஏவுவதற்கான கடல்சார் கண்காணிப்பு, அளவிடும் பணிக்காகவும் இது பயன்படுத்தப்பட்டு இருந்தது. அத்துடன், பல சர்வதேச துறைமுகங்கள் வழியாக, 20,000 கடல் மைல்களுக்கு மேல் பயணித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘யுவான் வாங் 5’ கப்பல் தொடர்பில், இந்தியா அச்சம் கொள்வதற்கான பிரதான காரணம், அதன் ஒற்றறியும் வீச்செல்லையாகும். பல செய்தித்தளங்களும் இந்தக் கப்பல் 700 - 750 கிலோ மீற்றர் அளவுக்கான ஆய்வு வீச்சு எல்லையைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆகவே, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்தக் கப்பல் நின்றால், அதன் ஒற்றறியும் வீச்செல்லைக்குள் இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள ‘இஸ்ரோ’வின் ‘சதீஷ் தவான் விண்வெளி மையம்’, திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ‘இஸ்ரோ’வின் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’, கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகள், தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஆறு கடற்படைத்தளங்கள், இந்திய கடற்படையின் தெற்குக் கட்டளையகம் உள்ளிட்ட இவையெல்லாம் வரும் என்பதுதான் இந்தியாவின் பெருங்கவலை. மேலும், ஜூன் 28ஆம் திகதி, இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்காக சீனா அனுமதி கோரிய போது, ஓகஸ்ட் 11 முதல் 17 வரையான திகதிகளுக்கே அனுமதி கோரப்பட்டிருந்தது. இது ஓகஸ்ட் 15 இந்திய சுதந்திரதினத்தை மையப்படுத்திய காலமாக அமைந்ததும் இந்தியாவை மேலும் சலனப்படுத்தி இருக்கலாம். ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பல், இலங்கைக்கு இந்தக் காலப்பகுதியில் வருவதற்கான எந்த அத்தியாவசியத் தேவையும் இல்லை. மேலும், இலங்கையின் வௌிவிவகார அமைச்சு குறித்த, கப்பலின் வருகைக்கான ஒப்புதலை அளித்த காலம் என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகிறது. ஜூலை 12ஆம் திகதி என்பது, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வௌியேறி, ரணிலை பதில் ஜனாதியாக நியமித்துவிட்டு, பதவி விலகாது இருந்த குழப்பகரமானதொரு காலப்பகுதி ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் அன்றி, வௌிவிவகார அமைச்சராக இருந்த ஜீ.எல் பீரிஸ், இந்தக் கப்பலின் வருகைக்கு அனுமதியளித்தது ஏன் என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது மிகப்பெரியதோர் இராஜதந்திர சவாலாக மாறும் என்பதை, ஜீ.எல் பீரிஸ் அறிந்திருக்கவில்லையா? அல்லது, எப்படியும் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான்; எனவே, அந்த அரசாங்கத்தில் தனக்கு வாய்ப்பு இருக்காது என்று தெரிந்துகொண்டே, வேண்டுமென்றே இந்தக் காரியத்தைச் செய்தாரா என்றும்கூட கேட்க வேண்டியதாக இருக்கிறது. ஓர் அரசாக இலங்கையானது, இன்னோர் அரசுக்கு, அதன் வேண்டுகோளை ஏற்று அனுமதியளித்துவிட்டு, அதைப் பின்னர் மறுப்பது என்பது, இராஜதந்திரப் பேரிடராகும். அதைச் செய்வது, அவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவைக் கடுமையாகப் பாதிக்கும். சீனா, மிக நீண்டகாலமாக இலங்கைக்கு நல்ல நண்பனாகவே இருந்திருக்கிறது. ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்தான், சீனா வட்டிக்கடை வியாபாரியாக மாறியது. ஆனாலும், சீனா நட்பு நாடுதான். நட்பு நாடாக இருந்தாலும், அதை மீண்டும் மீண்டும் சீனா சொல்லிக்காட்டினாலும், இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த கடந்த மாதங்களில் சீனா, இலங்கைக்கு என்ன உதவிகளைச் செய்திருந்தது? ஏறத்தாழ 572 பில்லியன் டொலர் கையிருப்பிலுள்ள இந்தியா, கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டொலர் அளவுக்கான கடன் உதவிகளை, இலங்கைக்கு உதவி மிகவும் தேவைப்பட்டதொரு காலப்பகுதியில் வழங்கியிருந்தது. ஆனால், ஏறத்தாழ 3,480 பில்லியன் டொலர் கையிருப்பிலுள்ள சீனா, இலங்கைக்கு உதவி மிகவும் தேவைப்பட்டதொரு காலப்பகுதியில் எந்தளவு உதவிகளை வழங்கியிருந்தது? இவையெல்லாம், இலங்கையின் சாதாரண குடிமக்களின் மனதில் எழும் கேள்விகள் ஆகும். ஆகவே, இந்தியாவைச் சீண்டிப் பார்க்க சீனா செய்யும் இந்தப் ‘பனிப்போர்’ வகையிலான கைங்கரியத்துக்கு, இலங்கை ஏன் பலிகடாவாக வேண்டும்? இதுவும் இலங்கையின் சாதாரண குடிமக்களின் மனதில் எழும் கேள்வி ஆகும். சீனாவுக்கும் இந்தியாவுதுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையின் நிலை பரிதாபகரமானது. சீனா, இலங்கையின் நட்பு நாடு; எதிரி நாடல்ல. ஆகவே, சீனாவின் கோரிக்கைகளை நிராகரிக்க, இலங்கைக்கு நியாயமான காரணங்கள் தேவை. இந்தியாவின் நலனை மையமாகக்கொண்டு மட்டும் இலங்கை, தனது வௌிநாட்டுக் கொள்கையை வகுக்க முடியாது. ஆனால், இலங்கையின் நட்பு நாடும் அயல்நாடும் பெரியண்ணனுமான இந்தியாவைத் தவிர்த்துவிட்டும் இலங்கை ஒரு வௌிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருக்க முடியாது. இதுதான், இலங்கை சிக்கியுள்ள சிக்கலின் சிக்கல் நிலை. மேலும், இலங்கையின் மொத்தக்கடனில் 10% சீனாவால் வழங்கப்பட்டது. ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற, கடன் மீள்கட்டமைப்புச் செய்ய, சீனாவின் ஒத்துழைப்பு அவசியம். ஆகவே, சீனாவை இலங்கை உதாசீனம் செய்யவும் முடியாது. மறுபறத்தில், இதன் அரசியல் பக்கத்தைப் பார்த்தால், ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், அவர் ஜனாதிபதியாவதற்கு இந்தியா முட்டுக்கட்டையாகச் செயற்பட்டது என்பதுதான் பொதுவிலுள்ள நம்பிக்கை. அமெரிக்காவும் ரணிலை ஆதரித்திருக்கவில்லை. அதற்கான காரண காரியங்கள் தனித்து ஆராயப்பட வேண்டியவை. ஆகவே, தன்னை எதிர்க்காத சீனாவை, தனக்கு முட்டுக்கட்டை போட நினைத்த இந்தியாவுக்காகவும், தன்னை ஆதரிக்காத அமெரிக்காவுக்காகவும், எதிர்க்க வேண்டிய தேவை, ரணிலுக்கு இல்லை. டளஸ் ஜனாதிபதியாகிவிடுவார் என்பது, இந்தியாவும் அமெரிக்காவும் கொழும்பிலுள்ள ஆங்கிலம் பேசும், தம்மைத்தாமே ‘சிவில் சமூகம்’ என முன்னிறுத்தும் சிலரும் போட்ட தப்புக்கணக்கு. ஆகவே, அரசியல் ரீதியில் இந்தியாவுக்காகவும் அமெரிக்காவுக்காகவும் வேலைசெய்ய வேண்டிய தேவை, ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது. ஆனாலும், இந்தியாவுடனான இலங்கையினது நீண்டகால நல்லுறவைக் கருத்தில் கொண்டு, சீனாவிடம் கப்பலின் வருகையை தாமதிக்க முடியுமா என்று இலங்கை கோரியிருந்தது. அதன்படி, இந்திய சுதந்திர தினம் நிறைவடைந்த பின்னர், ஓகஸ்ட் 16ஆம் திகதி, சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை வரவிருக்கிறது. இலங்கையின் வரமும் அதன் அமைவிடம்தான்; சாபமும் அதுவேதான்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனக்-கப்பல்-இராஜதந்திர-அழுத்தத்தில்-இலங்கை/91-302311 -
By கிருபன் · பதியப்பட்டது
அதானி கிரீன் எனர்ஜிக்கு மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/அதானி-கிரீன்-எனர்ஜிக்கு/ -
By கிருபன் · பதியப்பட்டது
சீன கப்பல் இலங்கை வருகை – இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் – 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.இந்நிலையில்தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.இதேவேளை இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையிலேயே, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரம் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தென் இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழக கடலோர பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு படை போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ளதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் உள்பட 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி இலங்கை கடல் பகுதியில் இருந்து ஏதேனும் சந்தேகப்படும்படியான படகுகள் வருகிறதா? அகதியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது? என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து அதிநவீன ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ரேடார் கருவி உளவு கப்பலில் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கும். சீனகப்பல் 750 கி.மீ. சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.அம்பாந்தோட்டை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமாக 6 படைதளங்கள் உள்ளன. அங்குள்ள தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட தகவல்களை சீனகப்பல் சேகரிக்கும் அபாயம் உள்ளதால் சீன உளவு கப்பல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனகப்பல் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னரே மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க செல்லும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.(15) http://www.samakalam.com/சீன-கப்பல்-இலங்கை-வருகை-இ/
-
Recommended Posts