Jump to content

சசிகலா எப்போது விடுதலையாவார்? சிறை தண்டனை நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? விரிவான தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா எப்போது விடுதலையாவார்? சிறை தண்டனை நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? விரிவான தகவல்கள்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
15 செப்டெம்பர் 2020, 13:30 GMT
வி.கே. சசிகலா

பட மூலாதாரம், GETTY IMAGES

 

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. 

ஆனால், அவர் செப்டம்பர் மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகளும் உள்ளன என்கிறார் அவரது வழக்கறிஞர்.

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் வி.கே. சசிகலா. 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இவருடைய உறவினர்களான ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோரும் இதே சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்வுசெய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கான தண்டனையை உறுதி செய்ததால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. இதற்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தலைமையில் அதிமுக இயங்கி வந்தது. 

சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்திருந்தார். ஆனால், சசிகலா சிறை சென்ற சில மாதங்களிலேயே சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினரை ஒதுக்கிவிட்டு எடப்பாடி கே. பழனிச்சாமி செயல்பட ஆரம்பித்தார். 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நிலையில், வி.கே. சசிகலாவின் விடுதலை, கூடுதலான அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. அவர் சிறையிலிருந்து எப்போது விடுதலையாவார் என்பது அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

வி.கே. சசிகலா
 

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெங்களூரப மத்திய சிறைத் துறையிடம் சசிகலாவின் விடுதலை தொடர்பாக கேள்விகளை அனுப்பி, அவற்றுக்கான பதில்களைப் பெற்றுள்ளார்.

அதன்படி, "வி.கே. சசிகலா விடுதலை செய்யப்படும் தினம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியாக இருக்கும். ஆனால், அதற்குள் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை அவர் செலுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் அவர் 2022 பிப்ரவரி 27ஆம் தேதி விடுவிக்கப்படுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் அவர் சிறை விடுப்பு எடுத்தால், விடுதலை பெறும் தேதி மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனையை கணக்கிட்டது எப்படி?

சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சிறைக்குச் சென்றார். ஆகவே நான்காண்டு சிறை தண்டனையின் முடிவில் அவர் 14.02.2021ல் விடுதலையாக வேண்டும். 

ஆனால், இந்த சொத்துக்குவிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டு, 1997ல் சில நாட்களும் பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கல் டி குன்ஹா விதித்த தண்டனையை அடுத்து 2014ல் சில நாட்களும் அவர் சிறையில் இருந்தார். இப்படி மொத்தம் 35 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். 

தனது தண்டனை காலத்தில் இரண்டு முறை அவர் சிறை விடுப்பு எடுத்திருக்கிறார். மொத்தமாக 17 நாட்கள் அவர் சிறை விடுப்பில் வெளியில் இருந்துள்ளார். ஏற்கனவே தண்டனை அனுபவித்த 35 நாட்களில் இந்த 17 நாட்களைக் கழித்துவிட்டால், அவர் 2021 ஜனவரி 27ல் விடுதலை அடைவார் என கர்நாடக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு

வி.கே. சசிகலா

பட மூலாதாரம், KASHIF MASOOD

 

இருந்தபோதும், வி.கே. சசிகலா இந்த மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார் அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன். 

"வி.கே. சசிகலாவின் விடுதலை தேதி 2021 ஜனவரி 27 என்பது சரிதான். ஆனால், நன்னடத்தைக்கு என அளிக்கப்படும் சலுகைக் காலம் இதில் கணக்கிடப்படவில்லை. 

கர்நாடகா சிறை விதிகளின்படி ஒரு கைதிக்கு மாதம் மூன்று நாட்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர் சிறை சென்ற பிப்ரவரி மாதம், அவர் சிறை விடுப்பு எடுத்த மாதங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. 

ஆகவே அவர் சலுகை பெறக்கூடிய மாதங்கள் என்று கணக்கிட்டால் 43 மாதங்கள் இருக்கின்றன. இந்த 43 மாதங்களுக்கு 129 நாட்கள் தண்டனை குறைப்பு கிடைக்கும். அதன்படி சசிகலா இந்த ஆண்டு செப்டம்பர் 27ல் இருந்து அக்டோபர் ஒன்றாம் தேதிக்குள் விடுதலை ஆவார்" என்கிறார் அவர்.

ஆனால், நன்னடத்தைக்கான இந்த சலுகை வி.கே. சசிகலாவுக்கு கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

"இந்த நன்னடத்தை விதிகளை ஒரு கைதி உரிமையாகக் கோரமுடியாது என்பது உண்மைதான். ஆனால், இது ஒன்றும் சிறப்புச் சலுகை அல்ல. சிறப்புச் சலுகை என்றால் அதனை சிறையின் அதிகாரிகள் மனது வைத்தால்தான் பெற முடியும். ஆனால், இது சிறை விதிகளின்படி இயல்பாகவே வழங்கக்கூடிய சலுகை. இதுவரை கர்நாடகா சிறைகளில் எல்லோருக்குமே இந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. வி.கே. சசிகலாவுக்கு இந்தச் சலுகை வழங்கப்படாவிட்டால், கர்நாடகா சிறை வரலாற்றில் அதுதான் முதன்முறையாக இருக்கும்" என்கிறார் ராஜா செந்தூர்பாண்டியன்.

ஆர்.டி.ஐயில் கேள்வி கேட்டவவர், சசிகலாவுக்கு நன்னடத்தை சலுகை வழங்கப்படுமா, அவை எத்தனை நாட்கள்? என்ற கேள்வியை எழுப்பாததால், அது குறித்து கர்நாடகா சிறைத் துறை பதிலளிக்கவில்லை என்றும் சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அந்தத் தொகை செலுத்தப்பட்டுவிடும் என்றும் ராஜா செந்தூர் பாண்டியன் பிபிசியிடம் தெரிவித்தார். 

வி.கே. சசிகலா

பட மூலாதாரம், PTI

 

சொத்துக் குவிப்பு வழக்கு என்பது மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு. 1991-1996 காலகட்டத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது தன் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கில் பிரதான குற்றவாளிக்கு துணையாக இருந்ததாக வி.கே. சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட ஜெ. ஜெயலலிதா, வி.கே. சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஜெயலலிதா அப்போது வகித்து வந்த முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தார். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் தீர்ப்பளித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, வழக்கிலிருந்து நால்வரையும் விடுவித்தார்.

இதற்குப் பிறகு கர்நாடகா அரசு இது தொடர்பாக மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், மற்ற மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

 

https://www.bbc.com/tamil/india-54165530

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு

அடுத்த தேர்தலில் பிஜேபி யுடன் கூட்டு வைத்தால் உடனேயே விடுவிக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.