Jump to content

வடமாகாண சபைக்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படவில்லை ஆதாரத்துடன் விளக்குகின்றார் முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன்


Recommended Posts

 

வடமாகாண சபைக்கு அனுப்பிய நிதி எவ்வகையிலும் திருப்பி அனுப்பப்படவில்லை ஆதாரத்துடன் விளக்குகின்றார் முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன்
2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் 32 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் விருதுகளைப் (பதக்கங்கள்) பெற்றுக் கொண்டது. ஏனைய மத்திய மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களை ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபையின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக நடைபெற்றது என முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறையே இல்லாதொழிக்க வேண்டுமென அரசின் பல்வேறு அமைச்சர்களும் பேசிவருகின்றனர்.
இவ்வாறு இல்லாது ஒழிப்பதற்காக அவர்கள் கூறும் காரணங்களில் ஒன்று மாகாணசபை வினைத்திறனாக செயற்படவில்லை என்பதாகும். இதற்கு உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னால் பிராந்திய விடயங்கள் மற்றும் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அனுப்பப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திரும்பி வந்ததாக ஓர் முழுமையான பொய்யான காரணத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.
2013 புரட்டாதி மாதம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை 2018 புரட்டாதி வரை செயற்பட்ட காலத்தில் வடக்கு மாகாண சபைக்கென மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தொடர்ச்சியாக பொய்யான பிரசாரம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அமைச்சர்கள் மற்றும் இன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட கடந்த வாரம் பிராந்திய விவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரை ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இப்பிரசாரம் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் அதனை நிரூபிக்குமாறு நாம் தொடர்ச்சியாக உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்ற பொழுதும் அதனை நிரூபிப்பதை விட்டுவிட்டு ஓர் பொய்யை தொடர்ந்து சொன்னால் அது உண்மை போன்று நிலை நிறுத்தப்பட்டுவிடும் என்ற கொயபல்ஸ் கோட்பாட்டையொற்றி இப்பிரசாரம் தொடர்கிறது. உண்மையான தகவல்களையும் தரவுகளையும் இவ்வறிக்கையூடாக முன்வைப்பதன் மூலம் இப்பொய்பிரசாரத்தை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
முதலில் குற்றச்சாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். வடக்குக்கு அனுப்பிய நிதி திரும்பிவந்தது என்பது மக்களைக் குழப்புவதாகும். வடக்கு மாகாணத்துக்கான நிதியானது இரண்டு நிறுவனங்களூடாக மத்திய அரசு அனுப்புகிறது. ஒன்று மாகாண சபை, மற்றையது மத்திய அரசால் பல்வேறு அமைச்சர்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்த மாவட்ட செயலாளர்களூடாக (கச்சேரி) அனுப்பப்பட்டு செலவிடப்படும் நிதி.
ஆனால் வடக்குக்கு அனுப்பப்பட்ட நிதி என்றவுடன் மக்கள் மாகாண சபைக்கு அனுப்பப்பட்ட நிதியாகவே விளங்கிக்கொள்கின்றமை தவறாகும். மாகாண சபைக்கு அனுப்பப்பட்ட நிதிக்கு மட்டுமே மாகாணசபை பொறுப்பாகும், அந்த நிதி தொடர்பாகவே மாகாண சபை பதிலளிக்க முடியும். மாவட்ட கச்சேரிகளூடாக மத்திய அரசாங்கம் செலவுசெய்த நிதிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர்களே பதிலளிக்க வேண்டும். ஏனெனில் இந்த நிதிக்கும் மாகாண சபைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதியை பரந்த அளவில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. மீண்டெழும் செலவினம்
2. பிரமாண அடிப்படையிலா நன்கொடை
3. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை
இதில் மீண்டெழும் செலவினம் என்பது மாகாண சபை ஊழியர் சம்பளங்கள், கொடுப்பனவுகள் உள்ளிட்ட நிர்வாக செலவீனங்களைக் குறிக்கும். இந்த நிதி தொடர்பாக விமர்சனங்கள் எதுவும் கிடையாது.
பிரமாண அடிப்படையிலான நன்கொடை என்பது மாகாண அமைச்சுகளின் மேம்பாட்டுக்கான (தளபாடங்கள், கணணிகள், வாகனங்கள் உள்ளிட்டவை கொள்வனவு செய்தல்) நிதியும், மாகாணசபை உறுப்பினர்களுக்கான தொகுதி அபிவிருத்திக்கான வருடாந்த ஒதுக்கீடும் இதில் அடங்கும். இந்த நிதியும் திரும்பிப் போதல் என்ற பிரச்சினை இல்லை.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை என்பது மாகாண அரசின் பல்வேறு அமைச்சுக்களினூடாக செய்யவேண்டிய அபிவிருத்திக்கான நிதியாகும். இவ்வகைக்குள் அடங்கும் நிதியே அபிவிருத்திக்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பபடுவதாக பொய்பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
உண்மை நிலை என்னவெனில் அபிவிருத்திக்காக மாகாணசபை கோரிய நிதியில் 20 – 40 வீதமே மத்திய அரசால் அனுமதிக்கப்படுகின்றது. அனுமதிக்கப்பட்ட தொகையை வைத்தே நாம் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கின்றோம். ஆனால் அனுமதிக்கப்படும் தொகைகூட முழுமையாகவும் உரிய காலத்திலும் வழங்கப்படுவதில்லை. சில வேளைகளில் குறித்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நிதி அடுத்த ஆண்டில் கூட வழங்கப்பட்டுள்ளது.
இதில் அனுமதிக்கப்பட் தொகை என்பது மத்திய அரசாங்கம் மாகாணத்துக்கு வழங்குவதற்கு ஒத்துக் கொண்ட தொகையாகும். வழங்கப்பட்ட தொகை என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட தொகையில் காசாக வழங்கப்பட்ட தொகையாகும்.
அனுமதிக்கப்பட்ட தொகையை நம்பி நாம் திட்டங்களை ஆரம்பிக்கின்ற பொழுதும் குறித்த ஆண்டுக்கு அனுமதிக்கப்பட் தொகையை விட குறைவாகவும் மிக காலம் தாழ்த்தியும் நிதி வழங்கப்படுவதனால் அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்திற்கு மத்திய அரசின் மேற்கண்ட வகையிலான செயற்பாடுகளே காரணமாகும்.
மேற்கண்ட அட்டவணையில் காட்டப்பட்டபடி வழங்கப்பட்ட தொகைக்கு மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஆனால் வழங்கி முடிக்காத குறை நிதி என்பது மாகாண சபையின் அபிவிருத்தி செலவீன பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே பெறப்படுகின்றது. இதுவே வாடிக்கைகாகவும் உள்ளது.
இம் மேலதிகமாக செலவு செய்யப்பட்ட நிதியானது ஆண்டு தோறும் மாகாண சபை செலவீனங்களில் இருந்து மிச்சம் பிடிக்கப்பட்டு சேமிக்கப்படும் மாகாண நிதியிலிருந்த பயன்படுத்தப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் அவ்வாண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு 22 மில்லியன் செலவுசெய்யப்படவில்லை. எனினும் இந்நிதி திருப்பி அனுப்பப்படவுமில்லை. மத்திய அரசு மிக காலம் தாழ்த்தி வழங்கியதகாலேயே இந்நிதி குறித்த திகதிக்குள் செலவு செய்யப்படவில்லை. மாறாக அடுத்த ஆண்டு முற்பகுதிக்குள் அது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
எனவே, அனுப்பப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லை என்பது 100 வீதம் பொய்யான தகவல் மட்டுமன்றி அந்தந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகை செலவு செய்யப்பட்டுள்ளமையே உண்மையாகும்.
அனுமதிக்கப்பட்ட தொகையை விட குறைவான நிதியையும், அதனை தாமதமாகவும் வழங்குவதன் மூலமும் அபிவிருத்தி வேலைகளை தாமதப்படுத்துவது மத்திய அரசே.
இலங்கையின் மத்திய, மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றுக்கியவற்றின் நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி நிர்வாகம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து உயர்ந்த மட்டத்திலான செயற்பாட்டை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு வெற்றிபதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுக் கணக்குகளை மதிப்பீடு செய்வதற்கான இலங்கை பாராளுமன்ற குழுவே இதனை மேற்கொள்கி;றது. 2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாண சபை பெருமளவு பதக்கங்களை பெற்றிருந்தது. வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் என 32 மாகாண சபை நிறுவனங்கள் இதில் பங்குபற்றி இருந்தன.
2018 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் 32 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் விருதுகளைப் (பதக்கங்கள்) பெற்றுக் கொண்டது. ஏனைய மத்திய மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்களை ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபையின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக அல்லது வெகு சிறப்பாக இருப்பதனையே மேற்கண்ட தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் பல்வேறு அரச தலைவர்களும் வடக்கு மாகாண சபைக்கு நிர்வாக நடத்த தெரியாது என்றும் வினைத்திறன் அற்றது என்றும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ச்சியாக பேசி வருவதானது மாகாண சபை முறையை ஒழிக்கின்ற உள்நோக்கத்துடன் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரம் ஆகும். இதுவரை எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் பல ஆண்டுகளாக இப்பிரச்சாரத்தை அரசாங்கமே மேற்கொள்வதானது இவர்களது தவறான உள்நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
எனவே வடக்கு மாகாண சபை நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக தொடரும் கொயபல்ஸ் பிரச்சாரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்த வேண்டும் என்பதுடன் இத்தகைய சதி நோக்கம் கொண்ட பிரசாரத்தை கணக்கில் எடுக்க வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்கின்றோம். – என்றார்.
 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.