Jump to content

சங்கத் துறைமுகம் - முசிறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத் துறைமுகம் - முசிறி

முன்னுரை

IMG-20200916-131958.jpg

ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தது. சேரநாட்டு துறைமுகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது முசிறித் துறைமுகமாகும். இதைச் சங்க இலக்கியங்கள் மிகவும் பாராட்டுகின்றன. அவற்றை இங்கு நன்கு ஆராய்வோம்.

முசிறித் துறைமுகத்தின் அமைவிடம்

முசிறித் துறைமுகம் மேலைக் கடல் என்றழைக்கப்படும் அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது. இதைக் கேரளக் கடற்கரை, மலபார் கடற்கரை என்றெல்லாம் அழைப்பர். முசிறித் துறைமுகம் இயற்கையாய் அமைந்த துறைமுகமாகும். இது இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கொடுங்கல்லூர் (Cranganoor) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற கொச்சி துறைமுகத்துக்கு மிக அருகில் இது அமைந்துள்ளது. இது பெரியாறு அல்லது பேரியாறு என்று அழைக்கப்படும் சுள்ளி ஆற்றங்கரையின் கழிமுகப் பகுதியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. சங்கக் காலத்தில் இதனருகில் சேரர்களின் தலைநகரான வஞ்சி மாநகர் அமைந்திருந்தது. தொண்டி, பூம்புகார் போன்ற பிற பட்டிணங்களுடன் இந்நகர் நெருக்கமான வணிகத்தொடர்பு கொண்டிருந்தது.

1*BGRmRhN8if1F2rRXxoRDBg.jpeg

முசிறித் துறைமுகத்தின் பழமை

முசிறித் துறைமுகம் இந்தியாவின் பழமையான துறைமுகமாகும். இதன் புகழ் இந்தியா மட்டுமல்லாமல் மேல்நாடுகளிலும் பரவியிருந்தது. பழம் சிறப்புமிக்க இராமாயணத்தில் வால்மீகி இதை “மிரிசிபதனம்” என்ற பெயரில் அழைக்கின்றார். மௌரியர் காலத்தின் சாணக்கியர் இதைச் “சௌர்ணெயம்” என்று அழைத்தார். யவனர்கள் இதை “முசிறிஸ்” என்று அழைத்தனர். முதன் முதலாக இந்தியாவிற்குக் கடல்வழிக் கண்டுபிடித்த ஹிப்பாலாஸ் (Hippalus) என்ற மாலுமி கி.பி 40 இல் அலெக்சாண்டிரியா நகரத்திலிருந்து செங்கடல் வழியாக முசிறித் துறைமுகத்தைத்தான் முதல் முதலாய் அடைந்தான். எகிப்து நாட்டைச் சார்ந்த தாலமி என்ற பயணி இத்துறைமுகத்தைக் கண்டு “முசிறிஸ்” என்று பெயரிட்டுச் செல்கின்றார். பெரிப்புளுஸ் என்ற கிரேக்க நாட்டு ஆய்வாளர் தன் “செங்கடல் செலவு” (Periplus of the Erythrean Sea) என்ற நூலில் இந்நகரை “முசிறிஸ்” என்று அழைத்து இதைக் “கேரளபுத்திராஸ்” (Cerobothra:) ஆண்டதாகவும் கூறுகின்றார் (Neelakanta Sastri.P:57). இங்கு அரேபியக், கிரேக்க வணிகக் கப்பல்கள் ஏராளமாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பிளினி என்ற பயணி தன் இயற்கை வரலாறு (Naturalis Historia) என்ற புவிநூலில் இத்துறைமுகத்தைக் குறிப்பிடுவதுடன், இங்கு அதிகப்படியான கடற்கொள்ளையர்கள் தொல்லை இருப்பதாகவும் எழுதியுள்ளார் (Neelakanta Sastri.P:53). முசிறித் துறைமுகத்தின் மிளகு ஏற்றுமதியை இவ்வெளிநாட்டுப் பயணிகள் சாலவும் பாராட்டியுள்ளனர்.

முசிறித் துறைமுகத்தின் சிறப்பு

Screenshot-2020-09-16-13-27-33-944-org-m

முசிறித் துறைமுகம் கி.பி.முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் மிகப்பெரிய நகராய்த் திகழ்ந்தது. அது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்தது. இதன் தெருக்கள் கிழக்கு மேற்காயும், வடக்கு தெற்காயும் அமைக்கப்பட்டிருந்தன. இத்தெருக்களில் வீடுகள் வரிசையாய்க் காணப்பட்டன. முசிறியின் கடற்கரையெங்கும் பழந்தமிழ்க் குடிகளான பரதவரின் குடிசைகள் செறிந்து காணப்பட்டன. முசிறியின் ஒரு பகுதி “பந்தர்” என்றும் மற்றொரு பகுதி “கொடுமணம்” என்றும் அழைக்கப்பட்டது. பந்தரில் மிகப் பெரிய முத்துச்சந்தை காணப்பட்டது. கொடுமணத்தில் பொன் அணிகள் கொண்ட சந்தையும் காணப்பட்டது.

“கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம்

பந்தர்ப் பெயரிய பலர்புகழ் முத்தம்”
(பதிற்-74:5-6)

“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலோடு

பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்”
(பதிற்-67:1-2)

பந்தர் என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதன் பொருள் கடைவீதி என்பதாகும். எனவே இங்கு அரபுநாட்டு வணிகர்கள் வணிகம் புரிந்தனர் என்பதைப் பெறலாம். இத்துறைமுகத்தில் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம், லினன், மது வகைகள் போன்ற பொருட்கள் மேல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மிளகு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

“இன் இசை புணரி இரங்கும் பௌவத்து

நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்

கமழுந் தாழைக் கானல்இம் பெருந்துறை”
(பதிற்-55:3-5)

யவனர்கள் கப்பல்களில் ஏராளமான பொன்னைக் கொண்டுவந்து அளித்து விட்டு மிளகைப் பெற்றுச்சென்றனர். இச்செய்தியைத் தாயங்கண்ணார் என்ற புலவர் பெருமான்,

“சுள்ளி அம் பேரியாற்று வெண்நுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ”
(அகம்:149:8-11)

என்று புகழ்வதைக் காணலாம். முசிறித் துறைமுகத்தின் வணிகச் சிறப்பை பிற சங்கப் பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன.

“முதுநீர் முன்துறை முசிறி முற்றி” (அகம்:57:15)

“முழங்குகடல் முழவின் முசிறி அன்ன” (புறம்:343:10)

ஆரம்பத்தில் மிகவும் ஆழமுடன் வசதியாகக் காணப்பட்ட முசிறித் துறைமுகம் காலப்போக்கில் பெரியாறு அடித்துக் கொண்டு வந்து சேர்ந்த மணல் பெருக்கினால் ஆழம் குன்றியது. எனவே வணிகக் கப்பல்கள் இத்துறைமுகத்தை நெருங்க இயலாததாயிற்று. எனவே கப்பல்களைத் தொலைவில் நிறுத்திவிட்டுப் படகுகள் மூலம் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். இச்செய்தியை நக்கீரர் பெருமான்,

“மனை குவைஇய கறி மூடையால்

கலி சும்மைய கரை கலக்குறுந்து

கலம் தந்த பொற் பரிசம்

கழி தோணியான் கரை சேர்க்குந்து

... ... ... ... ... ... ... ... ... ... ...

முழங்குகடல் முழவின் முசிறி அன்ன”
(புறம்:343:3-10)

என்ற பாடலில் புலப்படுத்துகின்றார். முசிறித் துறைமுகத்தில் யவனரின் வணிகம் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. அவர்கள் தம் வணிகத்துக்குப் பேராதரவு நல்கிய ரோமாபுரிப் பேரரசர் அகஸ்டஸ் சீசருக்கு (Augustus Ceasar.27BC-14AD) இதன் துறைமுகத்தில் கோயில் (Templuem Auguste) ஒன்றைக் கட்டி அவரைப் பெருமைப்படுத்தினர் (Sir Martimer Wheeler.P:121). ஆனால் சேரநாட்டின் மீது படையெடுத்த பாண்டிய மன்னன் தலையானங்கானது செறுவென்ற நெடுஞ்செழியன், சேரன் மன்னன் குட்டுவன் சேரலைத் தோற்கடித்து இத்துறைமுகத்தைச் சூறையாடியதுடன், அங்கிருந்த யவனர் கோயிலையும் பாழ்படுத்தி, அதன் சிலையையும் கவர்ந்து சென்றான். இச்செய்தியை,

“வளங்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ

அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய

நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்”
(அகம்:149:11-13)

மற்றும்,

“கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்

முதுநீர் முன்துறை முசிறி முற்றி

களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்”
(அகம்:57:14-16)

போன்ற பாடல்கள் புலப்படுத்தும். கடல் வளம் செழித்த முசிறியின் மக்கள் பிற்காலத்திலும் “முசிறியார்” என்றும் சிறப்புடன் அழைக்கப் பட்டனர். தற்போது கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டளவில் இங்குச் சமணச் சமயம் செழித்திருந்ததை உணர்த்துவதுடன் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உணர்த்திய சமணம் சார்ந்த செய்திகளை இது உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது (Tamil Brahmi scripts found at Pattinam in Kerala, The Hindu, Chennai:14.03.2011).

முசிறி பாபிரஸ் ஒப்பந்தம்

உலகத்தில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தங்களில் மிகவும் பழமை வாய்ந்தது முசிறி பாபிரஸ் ஒப்பந்தமாகும். இது பாபிரஸ் தாளில் எழுதப் பட்டுள்ளது. இது முசிறியில் உள்ள தமிழ் வணிகர்களுக்கும், அலேக்சாண்டிரியாவில் உள்ள கிரேக்க வணிகர்களுக்குமிடையே ஏற்பட்டதாகும். இது இன்றைய எகிப்து கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதியாய்க் கிடைக்கப்பெற்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடன் சார்ந்த வணிக ஒப்பந்தமாகும். இதன்காலம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இவ்வுடன்படிக்கையின் மேற்புறமும் கீழ்ப்புறமும் காணக் கிடைக்கவில்லை. இவ்வொப்பந்தம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது முசிறித் துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள அலெக்சாண்டிரியா நகரை அடைவது சம்பந்தமான உடன்படிக்கையாகும். பின்பு அங்கிருந்து பொருட்கள் ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதில் எகிப்து மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே கடன்மாற்று விவரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது. எலுமிச்சை, தந்தம், நூலாடை போன்ற பொருட்களை 25 சதவிகிதச் சுங்க வரியுடன் முசிறியினின்று விற்கப்பட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டடுள்ளது. மேலும் கீழும் இதன் பகுதி கிடைக்காததால் இதில் கைச்சாத்திட்ட தமிழ், கிரேக்க வணிகர்கள் யார் என்று அறியக்கூடவில்லை. இதன் முன்பக்கத்தில் உடன்படிக்கையுடன் ஒப்புதலும், பின்பக்கத்தில் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் எடை அளவும் தரப்பட்டுள்ளது. இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளதால் இதில் ஈடுபட்ட தமிழ் வணிகர்களுக்குக் கிரேக்கமொழி நன்றாகத் தெரிந்திருப்பது புலனாகின்றது. இவ்வொப்பந்தத்தில் கப்பல்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும், ஒட்டகங்கள் மூலமாகவும் பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏசுக் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டுடனான வணிகம் முசிறியில் மிகச்சிறப்பாக நடைபெற்றதை இவ்வொப்பந்தம் உறுதி செய்கின்றது.

முசிறியின் அழிவு

மிகவும் சிறப்புடன் விளங்கிய முசிறித் துறைமுகம் காலப் போக்கில் பெயர் மாற்றங்கள் பெற்றதுடன் தன் செல்வாக்கையும் இழந்தது. நாளாவட்டத்தில் இது “மாக்கோதை”, “மாக்கோதைபட்டிணம்” என்றெல்லாம் அழைக்கப்பட்டது. பெரியாற்றின் ஓயாத வெள்ளப் பெருக்கால் இத்துறைமுகம் பேரழிவைச் சந்தித்தது. தொடர்ந்து சுள்ளியாறு மணலை அடித்துக்கொண்டுவந்து அதன் கழிமுகத்தில் சேர்த்து இத்துறைமுகத்தைத் தூர்ந்துபோகச் செய்தது. இதனால் அயல்நாட்டு வணிகம் குன்றியது. இறுதியாய்க் கி.பி. 1314 இல் ஏற்பட்ட பெருமழையாலும், வெள்ளப்பெருக்காலும் இது முற்றிலும் அழிந்து மண்மேடாய்ப் போனது. இதன் அருகில் “பட்டணம்” என்ற பெயரில் ஒரு சிறு பகுதி மட்டும் செயல்பட்டு வந்து. சீர்மிகு இந்நகரின் பெருமையை வெளிக்கொணரப் பல தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அவற்றில் பெரிய அளவு வெற்றி கிட்டவில்லை. இருந்த போதிலும் 2006-2007 இல் கேரள அரசின் தொல்லியல் துறையினர் கொச்சிக்கு அருகில் உள்ள “பட்டிணம்” என்ற பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டு பல பழம்பொருட்களைக் கண்டெடுத்தனர். இப்பகுதியே பண்டைய முசிறி என்று அவர்கள் உலகுக்கு வெளிப்படுத்தினர் (Excavation highlights in Malabar Maritime heritage, The Hindu, Chennai: 01.04.2007). அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் முடிவுகள் முசிறித் துறைமுகம் குறித்துச் சங்க இலக்கிய உரைக்கும் சான்றுகளை உறுதிப் படுத்துகின்றன.

முடிவுரை

இந்தியாவில் தோன்றிய பழமையான அரசு குலத்தவரில் சேரர்கள் முதன்மையானவர்கள். அவர்களின் சிறப்பிற்கு அவர்கள் மேற்கொண்ட உலகளாவிய கடல் வணிகமே முக்கிய காரணம். வாசனை பொருட்களான மிளகு, பட்டை, இலவங்கம், ஏலம், கிராம்பு, முந்திரி போன்றவற்றின் ஏற்றுமதியால் அவர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனா போன்ற அயல் நாட்டு வணிகர்கள் முசிறித் துறைமுகத்தில் ஆர்வத்துடன் வணிகம் புரிந்தனர். அவர்கள் பொன்னை கொட்டிக் கொடுத்துவிட்டு மிளகை அள்ளிச்சென்றனர். மேலும் இதை ஒட்டிய கொடு மணத்திலும், பந்தரிலும் அவர்களின் வணிகம் செழித்தது. இங்கு செயல்பட்ட முத்துத் தொழிலகமும், பொன் ஆபரணத் தொழிலகமும் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றன. பண்டைய தமிழர்களின் சிறப்பான தொழில் வளத்திற்கு இவையே சாலச்சிறந்த சான்று. தமிழகத்தில் முதன்முதலாக தொழிற்கூடங்களை அமைத்து செயல்படுத்தியவர்கள் என்ற பெருமையை இவற்றால் சேர மன்னர்கள் பெற்றனர். முசிறியில் ரோமானிய வணிகர்கள் தம் அரசனுக்கு கோயில் கட்டி வழிபட்டதன் மூலம் எந்த அளவிற்கு அவர்கள் வணிகம் இங்கு வேரூன்றிச் செழித்தது என்பதை அறியலாம். சேர மன்னர்களின் வாழ்விற்கும், வளத்திற்கும், செழிப்பிற்கும், சிறப்புக்கும், பெருமைக்கும் இம்முசிறித் துறைமுகமே முக்கிய காரணமாய் அமைந்தது. ஆனால் விதிவசத்தால் இத்துறைமுகத்தை அவர்கள் முறையாகப் பராமரிக்காததால் அது காலப்போக்கில் அழிவினைச் சந்தித்தது. அது யாது என்று அறியக்கூடாத அளவிற்கு மக்கள் மனதினின்று மறைந்து போனது பேரிழப்பாகும். பண்டைய தமிழரின் சிறந்த பொருளியல் அறிவிற்கும், வணிகத் திறனுக்கும், தொழில் சிறப்பிற்கும் சாலச்சிறந்த சான்றாய் சேரரின் முசிறித் துறைமுகம் விளங்கியது என்பதில் ஐயமில்லை.

மு. கயல்விழி

உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.

http://www.muthukamalam.com/essay/literature/p256.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 09:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சங்கத் துறைமுகம் - முசிறி

முன்னுரை

IMG-20200916-131958.jpg

ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தது. சேரநாட்டு துறைமுகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது முசிறித் துறைமுகமாகும். இதைச் சங்க இலக்கியங்கள் மிகவும் பாராட்டுகின்றன. அவற்றை இங்கு நன்கு ஆராய்வோம்.

முசிறித் துறைமுகத்தின் அமைவிடம்

முசிறித் துறைமுகம் மேலைக் கடல் என்றழைக்கப்படும் அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது. இதைக் கேரளக் கடற்கரை, மலபார் கடற்கரை என்றெல்லாம் அழைப்பர். முசிறித் துறைமுகம் இயற்கையாய் அமைந்த துறைமுகமாகும். இது இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கொடுங்கல்லூர் (Cranganoor) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற கொச்சி துறைமுகத்துக்கு மிக அருகில் இது அமைந்துள்ளது. இது பெரியாறு அல்லது பேரியாறு என்று அழைக்கப்படும் சுள்ளி ஆற்றங்கரையின் கழிமுகப் பகுதியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. சங்கக் காலத்தில் இதனருகில் சேரர்களின் தலைநகரான வஞ்சி மாநகர் அமைந்திருந்தது. தொண்டி, பூம்புகார் போன்ற பிற பட்டிணங்களுடன் இந்நகர் நெருக்கமான வணிகத்தொடர்பு கொண்டிருந்தது.

1*BGRmRhN8if1F2rRXxoRDBg.jpeg

முசிறித் துறைமுகத்தின் பழமை

முசிறித் துறைமுகம் இந்தியாவின் பழமையான துறைமுகமாகும். இதன் புகழ் இந்தியா மட்டுமல்லாமல் மேல்நாடுகளிலும் பரவியிருந்தது. பழம் சிறப்புமிக்க இராமாயணத்தில் வால்மீகி இதை “மிரிசிபதனம்” என்ற பெயரில் அழைக்கின்றார். மௌரியர் காலத்தின் சாணக்கியர் இதைச் “சௌர்ணெயம்” என்று அழைத்தார். யவனர்கள் இதை “முசிறிஸ்” என்று அழைத்தனர். முதன் முதலாக இந்தியாவிற்குக் கடல்வழிக் கண்டுபிடித்த ஹிப்பாலாஸ் (Hippalus) என்ற மாலுமி கி.பி 40 இல் அலெக்சாண்டிரியா நகரத்திலிருந்து செங்கடல் வழியாக முசிறித் துறைமுகத்தைத்தான் முதல் முதலாய் அடைந்தான். எகிப்து நாட்டைச் சார்ந்த தாலமி என்ற பயணி இத்துறைமுகத்தைக் கண்டு “முசிறிஸ்” என்று பெயரிட்டுச் செல்கின்றார். பெரிப்புளுஸ் என்ற கிரேக்க நாட்டு ஆய்வாளர் தன் “செங்கடல் செலவு” (Periplus of the Erythrean Sea) என்ற நூலில் இந்நகரை “முசிறிஸ்” என்று அழைத்து இதைக் “கேரளபுத்திராஸ்” (Cerobothra:) ஆண்டதாகவும் கூறுகின்றார் (Neelakanta Sastri.P:57). இங்கு அரேபியக், கிரேக்க வணிகக் கப்பல்கள் ஏராளமாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பிளினி என்ற பயணி தன் இயற்கை வரலாறு (Naturalis Historia) என்ற புவிநூலில் இத்துறைமுகத்தைக் குறிப்பிடுவதுடன், இங்கு அதிகப்படியான கடற்கொள்ளையர்கள் தொல்லை இருப்பதாகவும் எழுதியுள்ளார் (Neelakanta Sastri.P:53). முசிறித் துறைமுகத்தின் மிளகு ஏற்றுமதியை இவ்வெளிநாட்டுப் பயணிகள் சாலவும் பாராட்டியுள்ளனர்.

முசிறித் துறைமுகத்தின் சிறப்பு

Screenshot-2020-09-16-13-27-33-944-org-m

முசிறித் துறைமுகம் கி.பி.முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் மிகப்பெரிய நகராய்த் திகழ்ந்தது. அது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்தது. இதன் தெருக்கள் கிழக்கு மேற்காயும், வடக்கு தெற்காயும் அமைக்கப்பட்டிருந்தன. இத்தெருக்களில் வீடுகள் வரிசையாய்க் காணப்பட்டன. முசிறியின் கடற்கரையெங்கும் பழந்தமிழ்க் குடிகளான பரதவரின் குடிசைகள் செறிந்து காணப்பட்டன. முசிறியின் ஒரு பகுதி “பந்தர்” என்றும் மற்றொரு பகுதி “கொடுமணம்” என்றும் அழைக்கப்பட்டது. பந்தரில் மிகப் பெரிய முத்துச்சந்தை காணப்பட்டது. கொடுமணத்தில் பொன் அணிகள் கொண்ட சந்தையும் காணப்பட்டது.

“கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம்

பந்தர்ப் பெயரிய பலர்புகழ் முத்தம்”
(பதிற்-74:5-6)

“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலோடு

பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்”
(பதிற்-67:1-2)

பந்தர் என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதன் பொருள் கடைவீதி என்பதாகும். எனவே இங்கு அரபுநாட்டு வணிகர்கள் வணிகம் புரிந்தனர் என்பதைப் பெறலாம். இத்துறைமுகத்தில் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம், லினன், மது வகைகள் போன்ற பொருட்கள் மேல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மிளகு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

“இன் இசை புணரி இரங்கும் பௌவத்து

நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்

கமழுந் தாழைக் கானல்இம் பெருந்துறை”
(பதிற்-55:3-5)

யவனர்கள் கப்பல்களில் ஏராளமான பொன்னைக் கொண்டுவந்து அளித்து விட்டு மிளகைப் பெற்றுச்சென்றனர். இச்செய்தியைத் தாயங்கண்ணார் என்ற புலவர் பெருமான்,

“சுள்ளி அம் பேரியாற்று வெண்நுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ”
(அகம்:149:8-11)

என்று புகழ்வதைக் காணலாம். முசிறித் துறைமுகத்தின் வணிகச் சிறப்பை பிற சங்கப் பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன.

“முதுநீர் முன்துறை முசிறி முற்றி” (அகம்:57:15)

“முழங்குகடல் முழவின் முசிறி அன்ன” (புறம்:343:10)

ஆரம்பத்தில் மிகவும் ஆழமுடன் வசதியாகக் காணப்பட்ட முசிறித் துறைமுகம் காலப்போக்கில் பெரியாறு அடித்துக் கொண்டு வந்து சேர்ந்த மணல் பெருக்கினால் ஆழம் குன்றியது. எனவே வணிகக் கப்பல்கள் இத்துறைமுகத்தை நெருங்க இயலாததாயிற்று. எனவே கப்பல்களைத் தொலைவில் நிறுத்திவிட்டுப் படகுகள் மூலம் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். இச்செய்தியை நக்கீரர் பெருமான்,

“மனை குவைஇய கறி மூடையால்

கலி சும்மைய கரை கலக்குறுந்து

கலம் தந்த பொற் பரிசம்

கழி தோணியான் கரை சேர்க்குந்து

... ... ... ... ... ... ... ... ... ... ...

முழங்குகடல் முழவின் முசிறி அன்ன”
(புறம்:343:3-10)

என்ற பாடலில் புலப்படுத்துகின்றார். முசிறித் துறைமுகத்தில் யவனரின் வணிகம் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. அவர்கள் தம் வணிகத்துக்குப் பேராதரவு நல்கிய ரோமாபுரிப் பேரரசர் அகஸ்டஸ் சீசருக்கு (Augustus Ceasar.27BC-14AD) இதன் துறைமுகத்தில் கோயில் (Templuem Auguste) ஒன்றைக் கட்டி அவரைப் பெருமைப்படுத்தினர் (Sir Martimer Wheeler.P:121). ஆனால் சேரநாட்டின் மீது படையெடுத்த பாண்டிய மன்னன் தலையானங்கானது செறுவென்ற நெடுஞ்செழியன், சேரன் மன்னன் குட்டுவன் சேரலைத் தோற்கடித்து இத்துறைமுகத்தைச் சூறையாடியதுடன், அங்கிருந்த யவனர் கோயிலையும் பாழ்படுத்தி, அதன் சிலையையும் கவர்ந்து சென்றான். இச்செய்தியை,

“வளங்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ

அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய

நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்”
(அகம்:149:11-13)

மற்றும்,

“கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்

முதுநீர் முன்துறை முசிறி முற்றி

களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்”
(அகம்:57:14-16)

போன்ற பாடல்கள் புலப்படுத்தும். கடல் வளம் செழித்த முசிறியின் மக்கள் பிற்காலத்திலும் “முசிறியார்” என்றும் சிறப்புடன் அழைக்கப் பட்டனர். தற்போது கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டளவில் இங்குச் சமணச் சமயம் செழித்திருந்ததை உணர்த்துவதுடன் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உணர்த்திய சமணம் சார்ந்த செய்திகளை இது உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது (Tamil Brahmi scripts found at Pattinam in Kerala, The Hindu, Chennai:14.03.2011).

முசிறி பாபிரஸ் ஒப்பந்தம்

உலகத்தில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தங்களில் மிகவும் பழமை வாய்ந்தது முசிறி பாபிரஸ் ஒப்பந்தமாகும். இது பாபிரஸ் தாளில் எழுதப் பட்டுள்ளது. இது முசிறியில் உள்ள தமிழ் வணிகர்களுக்கும், அலேக்சாண்டிரியாவில் உள்ள கிரேக்க வணிகர்களுக்குமிடையே ஏற்பட்டதாகும். இது இன்றைய எகிப்து கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதியாய்க் கிடைக்கப்பெற்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடன் சார்ந்த வணிக ஒப்பந்தமாகும். இதன்காலம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இவ்வுடன்படிக்கையின் மேற்புறமும் கீழ்ப்புறமும் காணக் கிடைக்கவில்லை. இவ்வொப்பந்தம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது முசிறித் துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள அலெக்சாண்டிரியா நகரை அடைவது சம்பந்தமான உடன்படிக்கையாகும். பின்பு அங்கிருந்து பொருட்கள் ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதில் எகிப்து மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே கடன்மாற்று விவரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது. எலுமிச்சை, தந்தம், நூலாடை போன்ற பொருட்களை 25 சதவிகிதச் சுங்க வரியுடன் முசிறியினின்று விற்கப்பட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டடுள்ளது. மேலும் கீழும் இதன் பகுதி கிடைக்காததால் இதில் கைச்சாத்திட்ட தமிழ், கிரேக்க வணிகர்கள் யார் என்று அறியக்கூடவில்லை. இதன் முன்பக்கத்தில் உடன்படிக்கையுடன் ஒப்புதலும், பின்பக்கத்தில் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் எடை அளவும் தரப்பட்டுள்ளது. இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளதால் இதில் ஈடுபட்ட தமிழ் வணிகர்களுக்குக் கிரேக்கமொழி நன்றாகத் தெரிந்திருப்பது புலனாகின்றது. இவ்வொப்பந்தத்தில் கப்பல்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும், ஒட்டகங்கள் மூலமாகவும் பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏசுக் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டுடனான வணிகம் முசிறியில் மிகச்சிறப்பாக நடைபெற்றதை இவ்வொப்பந்தம் உறுதி செய்கின்றது.

முசிறியின் அழிவு

மிகவும் சிறப்புடன் விளங்கிய முசிறித் துறைமுகம் காலப் போக்கில் பெயர் மாற்றங்கள் பெற்றதுடன் தன் செல்வாக்கையும் இழந்தது. நாளாவட்டத்தில் இது “மாக்கோதை”, “மாக்கோதைபட்டிணம்” என்றெல்லாம் அழைக்கப்பட்டது. பெரியாற்றின் ஓயாத வெள்ளப் பெருக்கால் இத்துறைமுகம் பேரழிவைச் சந்தித்தது. தொடர்ந்து சுள்ளியாறு மணலை அடித்துக்கொண்டுவந்து அதன் கழிமுகத்தில் சேர்த்து இத்துறைமுகத்தைத் தூர்ந்துபோகச் செய்தது. இதனால் அயல்நாட்டு வணிகம் குன்றியது. இறுதியாய்க் கி.பி. 1314 இல் ஏற்பட்ட பெருமழையாலும், வெள்ளப்பெருக்காலும் இது முற்றிலும் அழிந்து மண்மேடாய்ப் போனது. இதன் அருகில் “பட்டணம்” என்ற பெயரில் ஒரு சிறு பகுதி மட்டும் செயல்பட்டு வந்து. சீர்மிகு இந்நகரின் பெருமையை வெளிக்கொணரப் பல தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அவற்றில் பெரிய அளவு வெற்றி கிட்டவில்லை. இருந்த போதிலும் 2006-2007 இல் கேரள அரசின் தொல்லியல் துறையினர் கொச்சிக்கு அருகில் உள்ள “பட்டிணம்” என்ற பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டு பல பழம்பொருட்களைக் கண்டெடுத்தனர். இப்பகுதியே பண்டைய முசிறி என்று அவர்கள் உலகுக்கு வெளிப்படுத்தினர் (Excavation highlights in Malabar Maritime heritage, The Hindu, Chennai: 01.04.2007). அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் முடிவுகள் முசிறித் துறைமுகம் குறித்துச் சங்க இலக்கிய உரைக்கும் சான்றுகளை உறுதிப் படுத்துகின்றன.

முடிவுரை

இந்தியாவில் தோன்றிய பழமையான அரசு குலத்தவரில் சேரர்கள் முதன்மையானவர்கள். அவர்களின் சிறப்பிற்கு அவர்கள் மேற்கொண்ட உலகளாவிய கடல் வணிகமே முக்கிய காரணம். வாசனை பொருட்களான மிளகு, பட்டை, இலவங்கம், ஏலம், கிராம்பு, முந்திரி போன்றவற்றின் ஏற்றுமதியால் அவர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனா போன்ற அயல் நாட்டு வணிகர்கள் முசிறித் துறைமுகத்தில் ஆர்வத்துடன் வணிகம் புரிந்தனர். அவர்கள் பொன்னை கொட்டிக் கொடுத்துவிட்டு மிளகை அள்ளிச்சென்றனர். மேலும் இதை ஒட்டிய கொடு மணத்திலும், பந்தரிலும் அவர்களின் வணிகம் செழித்தது. இங்கு செயல்பட்ட முத்துத் தொழிலகமும், பொன் ஆபரணத் தொழிலகமும் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றன. பண்டைய தமிழர்களின் சிறப்பான தொழில் வளத்திற்கு இவையே சாலச்சிறந்த சான்று. தமிழகத்தில் முதன்முதலாக தொழிற்கூடங்களை அமைத்து செயல்படுத்தியவர்கள் என்ற பெருமையை இவற்றால் சேர மன்னர்கள் பெற்றனர். முசிறியில் ரோமானிய வணிகர்கள் தம் அரசனுக்கு கோயில் கட்டி வழிபட்டதன் மூலம் எந்த அளவிற்கு அவர்கள் வணிகம் இங்கு வேரூன்றிச் செழித்தது என்பதை அறியலாம். சேர மன்னர்களின் வாழ்விற்கும், வளத்திற்கும், செழிப்பிற்கும், சிறப்புக்கும், பெருமைக்கும் இம்முசிறித் துறைமுகமே முக்கிய காரணமாய் அமைந்தது. ஆனால் விதிவசத்தால் இத்துறைமுகத்தை அவர்கள் முறையாகப் பராமரிக்காததால் அது காலப்போக்கில் அழிவினைச் சந்தித்தது. அது யாது என்று அறியக்கூடாத அளவிற்கு மக்கள் மனதினின்று மறைந்து போனது பேரிழப்பாகும். பண்டைய தமிழரின் சிறந்த பொருளியல் அறிவிற்கும், வணிகத் திறனுக்கும், தொழில் சிறப்பிற்கும் சாலச்சிறந்த சான்றாய் சேரரின் முசிறித் துறைமுகம் விளங்கியது என்பதில் ஐயமில்லை.

மு. கயல்விழி

உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.

http://www.muthukamalam.com/essay/literature/p256.html

 

நன்றி புரட்சி.

இந்த எழுத்தாளர்கள் உட்பட பலருக்கு ஒரு விசயத்தில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள்.

அது "இந்தியா"....

இந்தியா என்ற நாட்டினை பல நூற்றுக்குக்கணக்கான சிற்றரசுகளை, பேரசுகளை, ஜமீன்களை, அமீரகங்களை, சுல்தானகங்களை வெற்றி கொண்டு அல்லது சமாதான உடன்படிக்கை செய்து உருவாக்கியது கிழக்கிந்திய கொம்பனி.

அதுக்கு முதல் இந்தியாவே கிடையாது.

தென்னிந்தியா தவிர்ந்த ஏனைய பகுதிகளை ஒன்றாக இணைத்து, கிழக்கு இந்தியாவுக்கு முன்னர் பாரதமாக ஆண்டது மௌரிய சாம்ராஜ்யத்தின் அசோகன்.

கொலம்பசும் இல்லாத இந்தியாவை தேடியே கிளம்பினார். வாஸ்கொடகாமாவும் அவ்வாறே.

அதேபோலவே, டச்சு கிழக்கிந்திய கொம்பனி, பிரெஞ்சு கிழக்கிந்திய கொம்பனி அடுத்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கொம்பனி.

இவர்கள் அனைவரும் குதிரைக்கு முன்னால் வண்டியை கட்டி உள்ளனர் என்று தோன்றுகிறது.

ஆனால், இந்திய துணைக்கண்டத்தினையே, இந்தியா என்று சுருக்கமாக சொன்னார்களோ தெரியவில்லை.

இந்த கட்டுரையாளரும், இந்தியா என்று சொல்வதன் காரணம், அவர் இன்று இந்தியாவினுள் வாழவதன் காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.