Jump to content

20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவை பொதுஜன பெரமுன மீள்பரிசீலனை செய்வதன் பின்னணிக் காரணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பி.கே.பாலச்சந்திரன்
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த வரைவுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்ளும் அதன் நேச அணிக் கட்சிகள் மத்தியிலும் கிளம்பிய பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து அந்த வரைவை மீள்பரிசீலனை செய்வதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தது. அந்த வரைவுக்கு ஆட்சேபங்களின்றி அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதுடன் வர்த்தமானியிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தபோதிலும், அது பொதுவெளிக்கு வந்ததும் பொதுஜன பெரமுன உள்ளும் அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் எதிரணி மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் மிகவும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வந்தது. இதன் மூலமாக அந்த வரைவில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய அம்சங்களை ஆராய்ந்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச குழுவொன்றை நியமித்தார்.


சிங்கள தேசியவாத கோட்பாட்டாளரும் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான கலாநிதி குணதாச அமரசேகரவும் சிங்கள தேசியவாத சட்டத்தரணி மனோகர டி சில்வாவும் 20ஆவது திருத்த வரைவின் சில ஏற்பாடுகளை ஆட்சேபித்ததை கண்டு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச ஆச்சரியமடைந்திருப்பார். வேறு தெரிவு இல்லாத நிலையில், கோதபாய ராஜபக்ச, மாற்று வரைவொன்றை தான் வெளியிடுவதாக அவர்களுக்கு கூறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
சிங்கள தேசியவாத சக்திகள் எதை விரும்புகின்றனர் என்பது பற்றிய எதுவுமே இதுவரை தெளிவில்லை. ஆனால், இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருக்கும் தடையை நீக்குவது மேற்குலகுக்கு ஆதரவான சிங்கள புலம்பெயர் சமூகத்தவரும் தமிழ்  பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகத்தவரும் ஊடுறுவுவதற்கு வழிவகுக்கக்கூடும் என்று இந்த சிங்கள தேசியவாத சக்திகள் அஞ்சுவதாக பலரும் சந்தேகிக்கின்றனர். இரட்டை பிரஜாவுரிமை உடையவரும் பொதுஜன பெரமுனவை பின்னணியிலிருந்து இயக்குகின்றவருமான பசில் ராஜபக்சவுக்கு எதிரானவர்கள் என்று கூறப்படுகின்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச போன்றவர்கள் அவர் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் வருவதை விரும்பவில்லை. பசில் ராஜபக்ச கடைசியாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்தவேளையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சை தன்வசம் எடுத்துக்கொண்டு இலங்கையின் பொருளாதார மன்னன் போன்று செயற்பட்டார். அத்துடன் அதிகாரத்தை பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்தவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.


20ஆவது திருத்த வரைவு ஜனாதிபதி கோதபாயவுக்கு நெருக்கமான – அவரது ‘வியத்மக’ அமைப்பை சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்றினால் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் அவசரமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதே அதற்கு எதிரான பொதுவான முறைப்பாடாகும். வியத்மக அமைப்பு என்பது அரசியல் சார்பற்ற புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களையும் கொண்ட ஒரு கூட்டு அமைப்பாகும். இந்த அரசியல்சார்பற்ற புத்திஜீவிகள் பொதுவில் அரசியல்வாதிகளை பற்றி ஒரு மங்கலான அபிப்பிராயத்தையே கொண்டவர்களாகவும் தேர்தல்களும் பாமரர்கள் நிரம்பிய பாராளுமன்றமும் நல்லாட்சி, நீதி, செயற்திறன் மற்றும் தேசிய முன்னேற்றத்துக்கு குந்தகமாக இருப்பவர்கள் என்ற அபிப்பிராயத்தை கொண்டவர்களாகவும் பொதுவில் இருக்கிறார்கள்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது எந்தவிதமான ஆக்கபூர்வமான தடுப்புகளும் சமப்படுத்தல்களும் இல்லாத (Checks and Balances) சகல அதிகாரங்களும் பொருந்திய பதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகவும் 20ஆவது திருத்த வரைவு விளங்குகிறது. ஒரு தடுப்பு பொறிமுறையாக பாராளுமன்றம் செயற்படுவதை (Checking Mechanism) இல்லாமல் ஆக்குகின்ற இந்த வரைவு சட்டங்களையும் நிதி சம்பந்தப்பட்ட சட்டமூலங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான ஒன்றாக மாத்திரம் பாராளுமன்றத்தை நோக்குகிறது. பிரதமரும் அமைச்சரவையும் (சகலரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்) கொள்கை வகுப்பதில் அல்லது அரசின் முக்கிய பதவிகளுக்கு நியமனங்களை செய்வதற்கு எந்தவொரு பங்கும் இல்லாத அல்லது சொற்ப பங்கை கொண்ட நடைமுறைப்படுத்தல் அமைப்புகளாக மாத்திரம் இருக்கும். சகல அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு விட்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு அதிகாரமும் இல்லாதவர்களாகவும் விடப்பட்டு விடுவர் என்பதால் ஆளும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த வரைவை  எந்தவகையிலும் விரும்பவில்லை என்று சில  பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அறியமுடிகிறது. ஜனாதிபதி எளிதில் சந்திக்க முடியாதவராக இருந்தால் அவர்களின் நிலைமை மேலும் சிக்கலானதாக இருக்கும்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, 20ஆவது திருத்த வரைவுக்கு வெளிப்படையாக ஆட்சேபனையை தெரிவிக்கவில்லை என்றபோதிலும், அவரும் மனவேதனை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் போலும், அரசியல் நிலைவரங்களை பரீட்சித்து பார்ப்பதற்காக அல்லது அரசியல் கட்சிகள் அவற்றின் கருத்தை வெளிப்படுத்தட்டுமே என்பதற்காக அவர் மௌனமான இருந்தார் போலும். ஆனால், 20ஆவது திருத்த வரைவு தற்போதிருக்கும் வடிவில் கடுமையான ஆட்சேபங்களுக்குள்ளாகியிருப்பதை கண்ட அந்த கணமே – அதுவும் பொதுஜன பெரமுனவுக்குள் இருப்பவர்களே எதிர்ப்பை வெளிக்காட்டியபோது – பிரதமர் தவறுகளை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாகவே இறங்கி சர்ச்சைக்குரிய விடயங்களை ஆராய குழுவொன்றை நியமித்தார்.
பௌத்த குருமாரில் ஒரு பிரிவினரிடமிருந்து கிளம்பியிருப்பதாக கூறப்பட்ட ஆட்சேபங்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னணி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சிங்கள பௌத்த தேசியவாதம் ஆயுதப்படைகளினால் உரிமைபடுத்திக் கொள்ளப்படும் என்றும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இராணுவ காவல் தலைவர்களுக்கு மதகுருமார் தலைவணங்க ஏற்படலாம் என்றும் மகாசங்கம் அஞ்சுகிறது போலும் என்று குறிப்பிட்டார்.
சிங்கள பௌத்த தேசியவாதிகள் சிறுபான்மையினத்தவர்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்களது அரசியல் உரிமைகளை மறுப்பதற்கு விரும்பக்கூடும் என்கின்ற அதேவேளை, சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்களுக்காக ஜனநாயகத்தை உறுதிபடுத்த உறுதிபூண்டிருக்கிறார்கள். கடந்த 70வருடங்களாக அனுபவித்து வந்த ஜனநாயகத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக 20ஆவது திருத்தச் சட்ட வரைவை அவர்கள் நோக்குகிறார்கள் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார்.


20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அரசாங்கத்தில் தங்களது பங்கு மேலும் வலுவிழந்து போகும் என்று பொதுஜன பெரமுனவின் நேசக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். 20ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் தருணத்தில் எதிரணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின. பொதுஜன பெரமுனவின் பசப்பு வார்த்தைகளுக்கு மருண்டு போய்விட வேண்டாம் என்று சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டார்.


பொதுஜன பெரமுனவுக்கு தற்போது பாராளுமன்றத்தில் 149 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேவைப்படுகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை  நிறைவேற்றுவதற்கு 150 உறுப்பினர்கள் தேவை. பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் எதிரணியிலிருந்து குறைந்தபட்சம் 10 பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்கு வியூகங்களை வகுத்து செயற்படுவதாகவும் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பிறகு தவிர்க்கப்பட்டு வந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கூட தம்பக்கம் இழுப்பதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் மனோ கணேசன் கூறினார். ஆனால், இதுவரையில் எதிரணியிலிருந்து கட்சித்தாவல் இடம்பெறுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. 


ஆளும் பொதுஜன பெரமுனவின் தற்போதைய நெருக்கடி நிலையை எதிரணிக்கு அனுகூலமாக பயன்படுத்துவதற்கு அதுவும் குறிப்பாக சமகி ஜனபலவேகய தலைவர் சஜித் பிரேமதாச செயலில் இறங்குவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்காத நிலையில், முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கரு ஜயசூரிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்ப்பதற்கு வெகுஜன இயக்கமொன்றை தொடங்கியிருக்கிறார்.
‘அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் குறைபாடுகளை கொண்டது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அரசாங்க நிர்வாகம் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு தடையாக இருக்கின்ற பிரிவுகள் சிலவற்றை திருத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். எதிரணியிலுள்ள நாங்களும் அத்தகைய ஒரு நடவடிக்கையை ஆதரித்திருப்போம். ஆனால், அந்த 19ஆவது திருத்தத்தை, கொடூரமானதும் சர்வாதிகாரமானதுமான 20ஆவது திருத்தத்தினால் பதிலீடு செய்வது மிகவும் தவறானதாகும். 19ஆவது திருத்தத்தின் குறைபாடுகளுக்கு தீர்வு 18பிளஸ் அல்ல, என்று மனோ கணேசன் 2010ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு அதிவிசேடமான அதிகாரங்களை பெறுவதற்காக நிறைவேறிய 18ஆவது திருத்தத்தை நினைவுபடுத்தி கருத்து தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினால் 2015ஆம் ஆண்டு 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு 18ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (டெய்லி எக்ஸ்பிரஸ்) 

https://www.virakesari.lk/article/90057

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.