Jump to content

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?

 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன். அவர் தன் உடலை வருத்தி உண்ணா நோன்பிருந்த இரண்டாவது தினம் இன்றாகும்.

இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரில் நவம்பர் 27, 1963 அன்று திலீபன், இராசையா தம்பதிகளுக்குப் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பக்கால உறுப்பினராகவும் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தவர். 1987ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை தமிழர் தாயகத்தில் அமைதிப்படையாக காலடி வைத்தது இந்திய ராணுவம்.

ஒப்பற்ற தியாகத்தை உலகறியச் செய்த ஈழத் தமிழர்களின் உன்னத புதல்வனுக்கு நினைவு தினம்! | Athavan News

ஈழ தமிழரின் பிரச்னையை தீர்க்க என்று கூறி இந்திய- இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போதும், அது தமிழர்களுடைய தேசிய பிரச்னையை தீர்ப்பதற்கும், தமிழர் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையிலான அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்க வழிகோலவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு தமிழர் தரப்பு அலோசனைகளையும் இந்திய இலங்கை அரசுகள் பெறவில்லை. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்பும் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு எதிராக பெரும் மனித உரிமை மீறல்களையும் அடக்கு முறைகளையும், தமிழர் தாயகமாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களையும் மிக வேகமாக தொடர்ந்தார்.

thileepan last wish: மாவீரன் திலீபனின் இறுதி ஆசை இதுதான்! - thileepan death anniversary september 26 | Samayam Tamil

இந்த நிலையில் தான், சிங்கள அரசிடம் தமிழ் இனப்பிரச்னைக்கு நீதி கேட்பதில் பயன் இல்லை என முடிவெடுத்த திலீபன், இந்திய அரசு தான், தமிழினப்பிரச்னையில் தலையிட்டது, மக்களின் உரிமை பிரச்னைக்கு உத்தரவாதம் அளித்தது, விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்தது. ஆகவே இந்திய அரசிடமே தமிழ் மக்களின் உரிமையைக்கோரி போராடுவதன் மூலம் அதன் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

Eelam | Tamileelam | Indo Srilanka Peace Accord | July 29

மஹாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக பறை சாற்றும் இந்திய அரசிடம், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நீதி கேட்டு, ஆயுதப்போராளியான திலீபன், அகிம்சை வழியில் செப்டம்பர் 15, 1987.அன்று ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து நீர் கூட அருந்தாமல் உண்ணா விரதப் போரை ஆரம்பித்தார்.

தியாக தீபம் திலீபன் பாடல்கள் – Pulikalin Kural

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2. சிறைக் கூடங்களிலும், ராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3. அவசரகாலச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே திலீபனின் கோரிக்கைகள் ஆகும்.

இந்த ஐந்து கோரிக்கைகளும் புதிதானவை அல்ல. ஏற்கனவே இலங்கை அரசுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விஷயங்கள்தான்.

அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக இருகின்றன.

அதேபோல, உண்ணாவிரத மேடை ஏறுவதற்கு முன்பு தன்னுடைய நண்பர்களிடம்,

1 கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

2 ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்

3 எனக்கு மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யக்கூடாது.

4 நான் உணர்வு இழந்த பிறகும் என் வாயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றக்கூடாது

5 இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது என இந்த 5 உறுதிமொழிகளையும் வாங்கிக்கொண்டுதான் மேடை ஏறினார். அதே நேரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் திலீபனின் கோரிக்கைகளை முன் வைத்து அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

திலீபன் அங்கு அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத மேடையில் ஏறி சிரித்த முகத்துடன் அமரும் போது எவரும் அவர் உயிர் தம் கண் முன்பாகவே பிரியும் என்று எதிர்பார்க்கவில்லை.

அகிம்சைப் போராட்டங்களை, இந்தியா மதிக்கும்… இந்தியாவின் அடிப்படைத்தத்துவம், ஆன்மீகத் தத்துவம், உயர்வான தத்துவம் அனைத்துமே அகிம்சைக் கோட்பாடுதான் என தமிழர்கள் நம்பினர். மேலும், 1986ம் ஆண்டு இந்திய அரசால் தொலைத் தொடர்புச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது, அதை திரும்பத் தர வலியுறுத்தி, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டப் போராட்டம் வெற்றி பெற்றதும் அகிம்சைக்கு இந்தியா தலைவணங்கும் என மக்கள் நம்பியதற்கு மற்றொரு காரணம்.

ஆனால் திலீபன் தன் உறுதியான போராட்டம் தமிழர் வாழ்வில் மக்கள் புரட்சியூடான ஓர் மாற்றத்தை கொண்டு வரும் என நம்பினார்.

நாட்கள் நகர்ந்தன…ஆனால் இந்திய அரசு தரப்பில் திலீபனின் கோரிக்கைகள் தொடர்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. நாவறண்டு தொண்டைக்குழிக்குள் சொற்கள் புதைந்து போக… உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டு 4ம் நாள் உரையாற்றுகின்றார்… திலீபன்.

“அன்பார்ந்த தமிழீழ மக்களே! விளக்கு அணையுமுன்னர் பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கின்றேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேச முடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்!

மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது உடல் உறுப்புக்கள் செயலிழப்பதனால் இனிமேல் என்னால் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் என்னைத் தொடர்ந்து வருவார்கள் அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார்.

Thileepan: The Reckoning That Non-Violence Didn't Stand A Chance - Colombo Telegraph

நாட்கள் கடக்க கடக்க இந்திய அரசின் மீதான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது. இந்திய அரசு மவுனமாக நாட்களை நகர்த்தியது.இருந்தும் திலீபன் தன் உடலை திரியாக்கி உயிரை நெய்யாக்கி லட்சிய வேள்வியில் உருகிக்கொண்டிருந்தார். திலீபன் இருந்த மேடைக்கு அருகிலேயே இன்னொரு மேடை அமைத்து உண்ணா விரதத்துக்கு ஆதரவாரக பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில்,

“திலீபன் அழைப்பது சாவையா – இந்தச் சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா – அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா” என்று அன்று குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

தினம் செத்துக்கொண்டிருக்கும் திலீபனின் நிலை கண்டு…,

‘விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான் பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு சொத்தல்லோ – எங்கள் சுகமல்லோ தாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் – போய் முடியப் போகின்றான்… போய் முடியப் போகின்றான்.. என்று கவிஞர் புதுவை இரத்தினதுரையும் கதறி நின்றார்.

Thileepan, Hunger and Remembrance – Ilankai Tamil Sangam

தான் இறக்கப்போவது உறுதி என்று அறிந்திருந்தும், தனது கொள்ளையில் மிகவும் உறுதியுடன் பயணித்தார் திலீபன். ஆனால் காந்திய தேசம் திலீபனின் ஐந்து அம்சக்கோரிக்கைகளுக்கும் செவி சாய்காகாது போக … அவர் தனது போராட்டத்தின் 12ஆவது நாள் சாவைத் தழுவினார்.

தியாக தீபம் திலீபனின் மரணம் தொடர்பில், “திலீபனின் மரணம் பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி, ஒருவன் தான் நேசித்த மண்ணுக்காக எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்ய முடியுமோ அந்த அற்புதமான அற்பணிப்பைத்தான் அவன் செய்தான்” என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தியாக தீபம் திலீபனின் மரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு அடிப்படை காரணமாகவும் அமைந்தது. சாத்வீக ரீதியான திலீபனின் சாவை கண்டும் இலங்கை அரசு திருந்தவில்லை, இந்திய அரசும் ஈழத்தமிழர் பிரச்னையின் உண்மை நிலையை இன்று வரையில் உணரவில்லை.

http://www.ilakku.org/thileepanindiarevolution/

 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டமே ஆக்கிரமிப்பாளர்களின் தடைகளை உடைக்கும்

 

ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு விதித்துள்ள தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதோடு, அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவேந்தல் இடத்தில் இருந்த திலீபனின் திருவுருப்படம் மற்றும் பதாதைகளை இரவோடு இரவாக தனது காவல்துறையினைக் கொண்டு அகற்றியுள்ளது.

தியாகி திலீபனை நினைவுமூகூருதல் என்பது, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை நினைவுகூரும் செயல் என இன்று செவ்வாய்கிழமை யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிறிலங்கா அரச கட்டமைப்பின் இத்தகையை தடைகளை உடைக்கும் வல்லமை, மக்கள் போராட்டங்களுக்கே உண்டென்பதனையே மேற்படிச் சம்பவங்கள் மீண்டும் வெளிக்காட்டி நிற்பததாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாகி தீலீபனின் முழக்கம், இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளது.

பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரப்பு செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பானது, அபிவிருத்தி, இனநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழத் தேசியத்தினை நீக்கம் செய்ய முனைவதோடு, தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் செயலிலே ஈடுபட்டு வருகின்றது. சிறிலங்காவின் நீதித்துறையினாலோ அல்லது அதன் கட்டமைப்புக்கள் ஊடாகவோ தமிழர் தேசம் இதனை எதிர்த்துப் போராடிவிட முடியாது.

மக்கள் போராட்டத்தின் ஊடாகவே சிறிலங்காவின் அனைத்து தடைகளையும் உடைக்க முடியும் என்ற நிலையினையே விடுதலைப்பசியோடு தியாகி தீலிபனின் இருந்த இன்றைய முதன்நாள் நினைவுகள் உணர்த்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

 

http://www.ilakku.org/மக்கள்-போராட்டமே-ஆக்கிரம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
A Sinhala song for Dilipan
Written by - K. Ananda Therar
Sung by - Jayathilaga Bandara
Look at the sky and bear the fire.
Look at the ocean of blood that flowed on the earth
Brother Thilipan who paid compensation from life
You and I are the children of the same mother, Thilipan...
We are Sinhalese, we are Tamil. We don't understand our stupidity.
The next generation should unite the country and love humanity.
For a moment you remember your qualities and sit beside that temple
I'll come and bow my knees and kiss your statue
 
முகநூலில் இருந்து!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் வலுவிழந்து சென்றாலும் உள வலுவிழக்காது உறுதியாய் உரையாற்றிய திலீபன்!தந்தையின் தவிப்பும், தலைவனின் சந்திப்பும்!

 

இன்று தியாகி திலீபனின் 3ம் நாள், 33 ஆண்டுகளின் முன், தியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணா விரத ஒழுங்குகளை உடனிருந்து கவனித்த ராஜன்,  இன்றைய நாளை எம்முடன் நினைவு கூர்ந்தார்.

திலீபன் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இளைஞன். எமது இனத்தின் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சி மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்ற இளம் தலைமுறையின் கருத்தால் ஈர்க்கப்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொள்கிறான்.

தீலிபனை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சுகந்தன் அண்ணா, அதன் பின்னர் கந்தையா அண்ணரின் வழிநடத்தலில் அரசியல் பணி செய்து அந்த காலத்தில் வடக்கில் இருந்த சிறு எண்ணிக்கையான போராளிகள் எல்லாம் தங்கள் சொந்த சைக்கிளில் ஓடி இயக்கத்தை வளர்த்தார்கள்.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று -  www.pathivu.com

இந்த வேளையில் தீலிபன் தன் தகப்பனாரின் சயிக்கிளையும்.. அவரின் ஸ்கூட்டரை யும் பாவித்து இந்த விடுதலைப்போராட்டத்தை யாழ் மாவட்டம் எங்கும் சென்று அமைப்பை வளர்தெடுத்தார். பின்னர் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பினை ஏற்று பணியாற்றினார்.

உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து மறுநாள் முதல் அவர் தந்தை ஒவ்வொரு நாளும் மேடையின் ஓரமாக நாலு மூலைகளிலும் மாறி மாறி நின்று கண்ணீருடன் நின்ற தவிப்பை வார்த்தையால் எழுத முடியாது. மற்றவர்கள் அணு அணுவாக உயிர் போவதை பார்ப்பதற்கும் பெற்ற தகப்பன் பார்ப்பது என்பதும் துயரின் இனுமொரு அத்தியாயம்.

செப் 19,1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஐந்தாம் நாள் – தமிழ் வலை

மூன்றாம் நாள் உடல் சோர்ந்து சிறுநீர் கழிக்க முடியாத வேதனையிலும், உடல் வலி, தலைவலியுடன் திலீபன் உழன்ற வேளைகளில் நாம் அவர் தலையையும் கால்களையும் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இந்த வேளையில். தீலிபன் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனை முழு மக்களையும் ஆட் கொண்டிருந்தது. பக்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து கவிதைகளும், விடுதலை வேண்டிய கருத்துக்களும் பகிர்ந்து கொண்டவர்களும் இந்த உபாதையிலிருந்தும் திலீபன் விடுபட வேண்டும் என்றும் மக்கள் ஒருங்கிணைந்த தொடர் உண்ணா விரதமாக தொடர்வோம் என்றும் ஒரு சிலர் திலீபன் நீராவது அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பலரும் இதனை தான் வலியுறுத்தினார்கள். எனினும் இதில் இருவர் மாத்திரம் எடுக்கப்பட்ட முடிவுக்கானத் தீர்வு கிட்டும் வரை நீராகாரம் கூட உட்கொள்ளாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்வது என்ற முடிவில் மாறாமல், இருந்ததை என்னால் உறுதியாக கூற முடியும். ஒன்று திலீபன் மற்றது தேசியத்தலைவர்.

இரண்டாம் நாள் இரவு தலைவர் திலீபனை பார்க்க வந்த போது இடம்பெற்ற இருவரின் மேடை கலந்துரையாடலாக இருந்தாலும் சரி தனிப்பட்ட கலந்துரையாடலாக இருந்தாலும் சரி, திலீபனுடன் கூட இருந்து பங்கு பற்றியவன் என்ற வகையில் என்னால் இதனை உறுதியாக கூறமுடியும்.

எட்டாம் நாள் - Eela Malar

பின்னர் மேடையிலிருந்து தீலிபன் தலைவரிற்கு எழுதிய கடிதத்தை கொண்டு போய் தலைவரின் கையில் கொடுத்தவன் என்றவகையிலும் மக்களிற்கு எழுதிய கடிதத்தை இறுதி வணக்க கூட்டத்தில் வாசித்தவன் என்ற வகையிலும் இவர்களின் உறுதிப்பாடு இறுதி வரை எடுத்துக் கொண்ட கொள்கையிலும், முடிவிலும் உறுதியாகவே இருந்தனர் என்பதற்கான சான்றாகும்.

தீலிபனிற்கும் தலைவரிற்கும் மேடையில் நடந்த கலந்துரையாடல் என்பது இந்திய அரசு அதிகாரிகளுடன் பலாலி தளத்தில் நடந்தது என்னவென்பது தொடர்பாகவே அமைந்தது. தலைவருடைய வரலாற்றில் கொள்கையில் சமரசம் செய்த சம்பவம் ஒரே ஒரு முறை நடந்தது.( தொடரும்)

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் வலுவிழந்து சென்றாலும் உள வலுவிழக்காது உறுதியாய் உரையாற்றிய திலீபன்!

 

தியாக தீபம் திலீபனின் சாகும் வரையான உண்ணா விரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவில், அவர் தோழன் ராஜனின் பதிவு…

தீலிபன் மூன்றாவது நாள் உடல் பலம் இழந்து இரவு இரவாக முனகியதும் கால்கள் கைகள் குறண்டியதும் இரு நவீனன்களும் நானும் அன்றிரவு எம்மோடு நின்ற முரளி வாஞ்சி அண்ணா, அஜந்தன் மாறன், துஷ்யந்தன் போன்ற போராளிகள் தலையை வாரி அழுத்தி விடுவதும், கால்களை பிடித்து உருவி விடுவதுமாக இருந்தோம்.

காலையில் மக்கள் கண்ணீருடன் மேடையின் முன்னால் இருந்து, இந்திய அதிகாரிகள் வந்து தீலிபனை காப்பாற்ற மாட்டார்களா? என்று கூட்டமாகவும், தனித்தனியாகவும் மேடையில் சுற்றி நிற்கும் போராளிகளிடம் கலந்துரையாடத் தொடங்கினார்கள்.

அவர்கள் கண்ணீரைப் பார்த்து எங்களுக்கு கண்ணீர் வரும். நாங்கள் போராளிகள் அழுதால் வெட்கம் என்ற உணர்வோடு அழுகையை அடக்குவோம் .

இந்த வேளையில் தீலிபனின் அண்ணன் இளங்கோவும் அங்கிருந்தார். அவரும் அமைப்பில் இணைந்து எங்கள் தொழில் நுட்பப்பிரிவில் கடமையாற்றியதையும் அவர் தன் தம்பியைப் பார்த்து அவ்வப்போது கதைத்தையும் அவர்கள் நண்பர்களாக பேசித் சிரித்ததையும் பார்த்த நாம், இன்று ஒரு மௌன போராட்டத்தையும் சகோதர சோகத்தையும் காண வேண்டியிருந்தது.

அந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கும்போது இன்று கண்ணீரும் கவலையுமாகத்தான் உள்ளது. 1987 இல் கண்ட இளங்கோ அண்ணையை இன்று வரை தேடுகிறேன் சந்திக்க முடியவில்லை.

அப்பா, அண்ணன், குடும்ப உறவினர்கள், ஊர் நண்பர்கள் ஏன் உலக மக்கள் எல்லோரும் அவர் உரிமைக்காக உயிர் உருக்கி நடாத்திய போராட்டத்தைக் கண்டு கலங்கி நின்ற வேளை, அவரது ஊரவர் ஒருவர் தீலிபனின் இரண்டாவது அண்ணனிற்கு திருமணம் நடந்த வேளையில் மாப்பிள்ளைத் தோழனாக யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த காலத்தில் கலந்து கொண்டு குடும்ப நிகழ்வை நடாத்திய மேடைக்கு பின், இந்த மேடையில் இப்படி பார்க்கிறேனே என்று கூறி என்னிடம் கதறி அழுதது இன்றும் நினைக்கும் போது கண்களை கலங்கவைக்கிறது.

மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் நான் எங்கள் செயலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்திய தொடர்பாடல் அதிகாரி பெரியசாமியுடன் நட்புடன் பகிரும் தகவல்களையும், மாத்தையா அண்ணா, யோகி அண்ணாவிடம் கேட்டு பெறும் தகவல்களையும் வைத்து மக்களை தேற்றும் காலமாகவும் அன்றைய தினம் அமைந்தது.

நாளாம் நாள் பகல் தீலிபன் மனவலிமை ஓங்கி தன் உறுதியையும் உணர்வையும் வெளிப்படுத்திய உரை ஒன்றை வழங்கியது எங்கள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வை தந்தது. தீலிபனின் உரை இன்றும் எல்லோர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனாலும் அவர் கண்ட கனவை நிறை வேற்ற முடியாது தமிழர்கள் தங்களுக்காக உறுதியுடன் போராடிய தலைமையையும், அமைப்பையும் காலத்திடம் பறி கொடுத்து பரிதவித்து நிற்கின்றனர்.

எனினும் அந்தக் கனவு இன்றும் நீறுபூத்த நெருப்பாக எம்மக்கள் மனதில் இருப்பதுடன் எம்மவர் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழனாகவும் உலகத் தமிழரின் அகிம்சை தலைவனாகவும் தீலிபனை ஏற்று இன்று உலகத்தமிழினம் தொடர்ந்தும் போராடுவது தீலிபனின் கனவு நிறை வேறும் என்பதை பறை சாற்றுவதாகவே நான் உணர்கிறேன்.

தொடரும்…

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் புன்னகை இழந்த முகம்!

தியாக தீபம் திலீபனின் 4ம் நாள் நினைவு பதிவுகளில் தவறவிடப்பட்ட ஓர் குறிப்புடன் ராஜன் தன் 5ம் நாள் நினைவுகளை எம்முடன் மீட்கிறார்.  

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமாரன் அண்ணன், ஈரோஸ் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த பரா அண்ணா ஆகியோர் 4ம் நாள் வந்து தீலிபனை பார்த்து கலந்துரையாடினார்கள். எங்கள் போராட்ட வரலாற்றில் 1986 இல் கொள்கை முரண்பாடுகள் பகை முரண்பாடாகி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புகள் மீதானதடை என தொடர்ந்த போதும், தீலிபன் அன்றைய காலகட்டத்தில் விடுதலை இலக்கிலிருந்து பிறழாத ஈரோஸ் அமைப்புடன் நல்லுறவை பேணிய காலகட்டம் அது. அதன் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு எடுத்து காட்டாக அமைந்தது.

இந்த வேளையில் ஒன்றை குறிப்பிட்டு ஆக வேண்டும், 1986ம் ஆண்டின் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா உட்பட பிற அமைப்புகளின் உறுப்பினர்கள்  தீலிபனின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். போராட்டம் திசைமாறி விடக்கூடாதென்ற முனைப்பினால் உருவான அமைப்புகளிடையேயான முரண்பாடுகள், இந்திய இராணுவ தலையீடு என்பன இப்போது விடுதலைப்புலிகளின் தலைமையில் மக்கள் ஓரணியில் திரண்டு போராடும் நிலையை தோற்றுவித்திருந்தது.

தீலிபனின் ஐந்தாம் நாள் அதிகாலை, அவரது உதடுகள் வெடித்த இடத்திலிருந்து உப்பு பூத்த மாதிரி வெள்ளையாக வாயிருந்தது. மெதுவாக துணியால் துடைத்த வண்ணம் இருந்தோம். சின்ன சிரிப்புடன் முழித்து பார்க்கும் தீலிபன் இன்று கண் விழித்து கூட பார்க்க வில்லை. நான் நவீனன்களை பார்க்கிறேன். அவர்கள் என்னை சோகமாக பார்க்கிறார்கள். ஒரு குழந்தை குடங்கி படுப்பது போல் தீலிபன் படுத்திருந்தார். வழமையாக நல்லூர் வீதியை சுற்றிவரும் நான் மேடையால் இறங்காமலையே தீலிபன் பக்கத்திலேயே இருந்தேன். தீலிபன் பக்கத்திலேயே 24 மணிநேரம் இருக்க வேண்டும் என்பது அவர் எனக்கு இட்ட அன்புக்கட்டளை.

ஆரம்ப காலங்களில் கிட்டு அண்ணா தங்குமிடம் தான், இராணுவ அரசியல் மக்கள் சந்திப்பு அனைத்து வேலைகளும் நடக்கும் செயலகமாக இயங்கும்.

யாழ் குடா முழுமையாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்த பின் அரசியல் பிரிவிற்கு என்றொரு செயலகம் யாழ் பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் முன் இயங்க தொடங்கியது. இந்த செயலகத்தின் நிர்வாகத்தை கப்டன் ரமேஷ் மாஸ்டர் பார்த்தார். நான் வெளியீட்டு பிரிவு பொறுப்பாளராக இருந்தேன். இரு நவீன்கள் தீலிபனிற்கு உதவியாக இருந்தார்கள். மாறன் துஸ்ஸந்தன் ஆகிய போராளிகளும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருமே மேடையை சுற்றிய நிர்வாகத்தை செய்ய, செயலக நிர்வாகத்தை ரமேஷ் மாஸ்டர் பார்த்ததை இங்கு  இன்று நினைவு கூரவேண்டும்.

ஒலி பெருக்கியில் பாட்டு போட்டால் தீலிபன் நித்திரை குழம்பி விடும் என கருதி, கண் விழிக்கும் மட்டும் பாட்டு போடவேண்டாம் என்று கூறிவிட்டு அவர் விழி திறந்து உதிர்க்கும் ஓர் சிறிய சிரிப்புக்காக எல்லோரும் காத்திருந்தோம். மக்கள் மேடை முன் மயான அமைதியாக குந்தியிருந்தார்கள். அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்கள் தீலிபன் மேடையை எட்டிப்பாரத்தவண்ணம் இருந்தார்கள்.

இந்நிலையில் திலீபனின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளியும் மட்டக்களப்பில் மதன் என்ற போராளியும் தொடர்  அடையாள உண்ணாவிரதம் இருந்தமையும் பதிவு செய்யப்பட வேண்டும்.

மக்கள் பலரும் தாமாகவே நல்லூரிலும் பிற இடங்களிலும் உணாவிரத போராட்டங்களை தொடங்கினர். இப்படி எல்லோரும் தீலிபனின் உண்ணாவிரதத்தை முடிவிற்கு கொண்டு வர உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தார்கள்.

மத்தியானம் நெருங்கி கொண்டிருக்கும் வேளை தீலிபன் கண்களை திறந்து பார்த்தார் ஆனால் அவரின் வழமையான அந்த புன்சிரிப்பு அந்த முகத்தில் இல்லை. அவ்வேளை மக்கள் ஆரவாரப்பட்டார்கள். ஏன் என்று மேடையை சுற்றிய பார்த்த போது இந்திய இராணுவத்தின் யாழ் கோட்டை பொறுப்பதிகாரி கேணல் பரா குழு  மேடையை நோக்கி அமைதியாக வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். எல்லோர் மனதிலும் ஏதோ இன்று ஓர் நல்ல செய்தி கிடைக்கப் போகின்றது என்று ஆவலுடன் நின்றோம். அவர் வந்தார் தீலிபனை பாரத்தார் கும்பிட்டார். அங்கு நின்றவர்களுள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அவருடன் உரையாடினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் சென்று விட்டார்கள்.

கதைத்தவர்களிடம் கேட்ட போது, அவர் மேலிடத்திற்கு தான் பார்த்ததையும், உங்கள் வேண்டு கோள்களையும் கூறி நல்ல செய்தியுடன் வருவதாக சொன்னதாக கூறினர். ஆனால் பின்பு அவர் வரவே இல்லை. நல்ல செய்தியும் வரவில்லை. அன்று களத்தில் நின்ற இராணுவ அதிகாரிகள் உண்ணமையை உணர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இன்று அவர்கள் எழுதும் புத்தகங்கள் சான்றாக உள்ளது. என்ன செய்வது அரசியலில் முடிவு எடுப்பவர்கள் அரசியல்வாதிகள் கருவிகளாக செயற்படுகிறவர்கள் படையினர்.

இன்றுடன் என் மனதில் இருந்த நம்பிக்கையும் இல்லாது போய்விட்டது. நானும் தீலிபனும், திருமாஸ்ரிடம் சென்று மாஸ்டர் உண்ணாவிரதம் இருக்க போறேன் என்ன நடக்கும் என்று தீலிபன் கேட்ட போது, அவர் கூறிய விளக்கங்கள் அதனை ஒரு வகுப்பாகத்தான் பார்க்கலாம் .அவர் கூறிய கருத்தில் ஒன்று தீலிபன் டிக்சிற் உன்னை சாகவிடுவார்’ என்பது. அந்த தீர்கதரிசனமான கருத்து மெய்யாக போகிறதோ என மனதில் தோன்றியது.

இன்றைய நவீன உலகத்தில் மன்னர் ஆட்சிக்கொப்பான ஆட்சியை நிறுவுவதற்கான முனைப்பிலுள்ள ராஜபக்ச அரசு தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முனைகிறது. அவ்வேளையில், தமிழர் பிரதிநிதிகளென விடுதலை புலிகள் அமைப்பினர் இந்திய, இலங்கை  அரசுகளால் ஏற்று கொள்ளப்பட்டு, ஆயுத கையளிப்பு, உத்தியோகபூர்வ அலுவலகங்கள், பேச்சுவார்த்தைகள் என் தொடர்ந்தன. அங்கு இந்திய அமைதிக்காப்பு படையின் கட்டுப்பாட்டிலான ஓர் நிர்வாகம் இடம்பெற்று கொண்டிருந்தது.

திலீபன் உண்ணா நோன்பிருந்தபோது ஓர் உத்தியோகபூர்வ போர்நிறுத்தம் இருந்தததால் அகிம்சை வழி அரசியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரை பயங்கரவாதியென முத்திரை குத்துவதும், அவர் நினைவேந்தலை பயங்கரவாத முன்னெடுப்பு என்று முத்திரை குத்த விளைவதும் சிங்கள அரசுகளின் மக்கள் எழுச்சியின் மீதான பயத்தினையே காட்டி நிற்கிறது.

ஓர் சமாதான காலத்தில் அகிம்சைவழியில் நீதிகேட்டவர் இன்றும் பயங்கரவாதி என்றால், அதன் பின்பும் ஆயுதம் தாங்கி இன்று உங்களுக்கு சேவகம் செய்யும் கருணா, பிள்ளையான், டக்ளஸ் சமாதான தூதுவர்களா?    மொத்தத்தில் ஜனநாயகம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு அரச பயங்கரவாத நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் இன்றைய சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனை இன்றய அரசியல் தலைமைகளாக தம்மை காட்டி கொள்பவர்களும், ஏனைய நாடுகளும் பிராந்திய நலன்களிற்காக தொடர்ந்து தமிழர் பலிக்கடாவாக்கப்படுகிறதை கண் மூடி, வாய் பொத்தி மவுனமாக பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையை எப்படி மாற்றலாம் என்ற பொறிமுறைமை பற்றி தாயகத்திலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள அறிவார்ந்தோர் உட்பட அனைத்து மக்களும் வயது வேறுபாடின்றி சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை செயல் வடிவம் பெறும்போது தீலிபன் கனவு நிறைவேறும்.

 

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-5/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 06ம் நாள்

 

 

06th-day-with-Lieutenant-Colonel-Thilipan-scaled.jpg

 

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.

ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

நூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தூன் மறைவிடம் சென்று சிறுநீர் இகழிக்கப் போவதாகக் கூறினார். ஆவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம் பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார்;.

அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. ஏனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். ஆவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார்.

அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..

என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப் போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஐPவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா?

திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.

திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

ஏமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.

நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்….

ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும், பூரிப்பும் எப்பொழுது மலரும்?

அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.

ஆனால் நமது மண்ணில் அப்படியா?

எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தாhப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்?

அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்?

அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை !

இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார்? சிங்களப் பேரினவாதம்தான் !

இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் !

தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி சரையும் போராடுவான்…”

போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.

உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. ஏன்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.

காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பேரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.

இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.

இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.

தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.

அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.

“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கபின்றனர்.

திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.

இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை

இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.

அவரின் இரத்த அழுத்தம் 85 . 60
நாடித்துடிப்பு- 120
சுவாசம் -22

– தியாக வேள்வி தொடரும்…

எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்

https://thesakkatru.com/06th-day-with-lieutenant-colonel-thilipan/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரினும் மேலாக எம் மக்களை நேசித்த திலீபனும் தோழர்களும்

தியாக தீபம் திலீபனின் 6ஆம் நாள் உண்ணாநோன்பு நிகழ்வு நினைவில் அவர் தோழன் ராஜனின் பதிவுகள்…

ஐந்து நாட்கள் கடந்தும் காந்தி வழியில் சுதந்திரம் வேண்டிய நேருவின் பேரன் ராஜீவ்காந்தி அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பளிக்கவில்லை. ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு பெளத்தனாக இருந்து கொண்டு புத்தரின் கோட்பாடுகளின்படி நடக்கவில்லை. அன்று இவர்கள் இருவரும் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தால், இந்நாட்டின் தலைவிதி வேறாக மாறியிருக்கலாம். இன்று இலங்கையில் முப்பது ஆண்டுகளில் உப்புச்சப்பற்ற வெறும் இனவாத ஆக்கிரமிப்பையே குறியாக கொண்ட ஆறு திருத்தச்சட்டங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்காது. இவ்வளவு உயிர்களும் மனித மற்றும் மூல வளங்களும் வீணாகி போயிருக்காது. இலங்கை இன்று ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக திகழ்ந்திருக்கும்.

இவர்களை விஞ்சி இன்று ஒருபடி மேலே போய் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் 2100 வருடங்கள் பின் சென்று தான் துட்டகைமுனுவின் வாரிசு என்பது போல் அநுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆனால் துட்டகைமுனுவின் செயலில் உள்ள நல்ல பக்கங்களை மறந்து அல்லது மறந்த மாதிரி நடந்து கொள்வதில் முனைப்பாக ஈடுபடுகிறார்.

இதன் ஒரு அம்சமாக தான் திலீபன் நினைவு நாளை தமிழர்கள் நடாத்தக் கூடாது என்று மனு நீதி மறந்த புது நீதி புகுத்துகிறார். துட்டகைமுனு எல்லாளனுக்கு வழங்கிய நீதியும் பிழை என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. அல்லது அவரது நீதிமன்றின் ஊடாகவே எல்லாளனுக்கு எல்லோரும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற துட்டகைமுனு வழங்கிய ஆணையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி நீக்கி விட்டோம் என அறிவித்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

திலீபன் உண்ணாவிரதம் இருந்த காலம், அன்றைய பாதுகாப்பு அமைச்சர் சேபால ஆட்டிக்கல உத்தியோகபூர்வமாக போராட்ட அமைப்புகள் அனைத்திற்கும் பொது மன்னிப்பு வழங்கிய காலம். இந்திய அமைதிப்படையிடம் தலைவரின் அறிவுறுத்தலின் படி யோகி அண்ணா ஆயுதங்களை ஒப்படைத்த காலம். ஏன் இன்றைய மகிந்த, கோத்தபாய அரசாங்கத்தில் அமைச்சராகவிருக்கும் வாசுதேவ நாணயக்கார திலீபனை வந்து பார்வையிட்டு கலந்துரையாடல் செய்து விட்டு தலைசாய்த்து வணங்கி விட்டு சென்ற நாள் இன்றாகும். இப்படி வரலாறு இருக்கும் போது 33 வருடங்களின் பின் திலீபன் பயங்கரவாதி, நோயாளி என்று கூறுபவர்களிற்கு தான் இனவாத நோய் 70 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது.

1987இல் யாழ். சென்று திலீபனை பார்த்து வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இன்று பாராளுமன்றத்தில் அமைச்சராக உள்ளார். திலீபன் என்னும் உன்னத போராளி உங்கள் பார்வையில் பயங்கரவாதி என்றால், அன்று திலீபனை பார்த்து வந்த அமைச்சருக்கும் இன்று ஆபத்து வந்துள்ளது. ஆகவே இவரும் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகவோ, நீதிமன்று முன்பாகவோ நிறுதப்படலாம். இனபேதம் இன்றி இந்த அராஜக சட்டங்களிற்கு எதிராக போராட வேண்டும் என்பதே திலீபனினை நினைவு கூர தடுக்கும் உத்தரவு சொல்லி நிற்கும் செய்தியாகும்.

ஆறாம் நாளாகிய இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் திருச்செல்வம், திருகோணமலையில் கிருபா, மட்டக்களப்பில் மதன் ஆகிய போராளிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்றும் திலீபன் உடல் வேதனையால் துவண்ட போதும் உறுதி தளராது விழித்து பார்ப்பதும், கதைகளை முடிந்தவரை கேட்பதும் தேவைகளுக்காக சைகை செய்வதுமாக கட்டிலில் புரண்ட வண்ணம் இருந்தார். திலீபனை பார்த்து விட்டாவது போவோம் என்று போராளிகள் வரிசையாக வந்து பார்த்து சென்றார்கள்.

திலீபனுடன் பழகிய தளபதிகள், உற்ற நண்பர்களாக கதைத்து பழகிய போராளிகள் திலீபன் காதுகளில் தங்கள் கருத்துக்களை மெதுவாக கூறினார்கள். மில்லரை வழியனுப்பி வைத்த தளபதி பிரபா வந்து திகைப்புடன் திலீபனை பார்த்தவண்ணம் அசையாது நின்றார். இருவரும் மில்லரை வழியனுப்பும் இறுதி நேரத்தில் ஒன்றாக நின்று வழியனுப்பியவர்கள். இன்று திலீபனின் நிலை கண்டு துவண்டு நின்றது உறுதியின் உறைவிடங்களுக்கு உள்ளுள்ள இளகிய மனதின் வெளிப்பாடாகவே தெரிந்தது.

உண்மையில் போராளிகள் மிக இளகிய மனம் கொண்டவர்கள், மற்றவர் துன்பத்தை தம் துன்பமாக கருதியே தம் உயிரிலும் மேலாக தம் மக்களை மதித்து தம் உயிர்களை துறக்க சித்தம் கொண்டனர். திலீபன் பெயர் வைத்து உருவாக்கிய ‘சுதந்திர பறவைகள்’ என்ற மகளீர் அமைப்பு பெண் பிள்ளைகள் திலீபனை வந்து பார்த்து கண்கலங்கி வரிசையாக சென்றார்கள். இன்று நிறைய போராளிகள் வந்து திலீபனை பார்த்து சென்றபோது கூடியிருந்த மக்கள் சோகத்தில் விம்மி அழத் தொடங்கினர். இருள் கவியும் நேரம் எல்லோர் மனங்களிலும் இனி திலீபனை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்ற உணர்வு படரத் தொடங்கியது.

 

http://www.ilakku.org/உயிரினும்-மேலாக-எம்-மக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகத்துறையும் திலீபனும்

 

தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் உண்ணா நோன்பு நாளின் நினைவுகளுடன், அவர் தோழன் ராஜனின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்தது.

இன்று ஏழாம் நாள். திலீபன் ஒரு ஆள் உதவி இல்லாமல் சரிந்து படுக்கவோ நிமிர்ந்து படுக்கவோ எழும்பி இருக்கவோ பலம் அற்றவராக, உயிர்ப்பும் மனவலிமையும் உள்ளவராக காட்சி தந்தார். ஆறாம் நாள் கிட்டண்ணாவின் அம்மா வந்து சென்ற பின் இன்று என்மனதில் கிட்டண்ணாவும் திலீபனுமாக முன்னெடுத்த பல நடவடிக்கைகள் மனக்கண் முன் வந்தது. கிட்டண்ணாவும் திலீபனும் யாழ் மாவட்டத்தில் இணைந்து அன்றைய காலத்தில் செய்த இராணுவ அரசியல் பணி, யாழ் குடாநாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் தொடர்வதற்கும் வீச்சுடன் வளர்ச்சியடைவதற்கும் வழிசமைத்தது. கிட்டண்ணா கண்டிப்பான அப்பாவாகவும் திலீபன் அரவணைக்கும் அம்மாவாகவும் இருந்ததை இன்று வாழும் அன்றைய நண்பர்கள் நினைவு கூருவார்கள். ஆனால் இன்று கிட்டண்ணா தொலைவில் இருக்கும் போது திலீபன் உண்ணா நோன்பை தொடங்கியிருந்தார்.

இறுதியில் இருவருமே இந்திய சதிக்கு பலியானமையும் அவர்கள் சாவிலும் ஒருவித ஒற்றுமையை காட்டி நின்றது.

இன்று காலை யோகி அண்ணா இந்தியா ரூடே. சஞ்சிகை நிருபர். தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிருபர் படப்பிடிப்பாளருடன் வந்திருந்தார். இந்திய அதிகாரிகளின் பேச்சுவார்த்தைப் பற்றிய நிகழ்வுகளை பகிர்ந்தார். எந்த முன்னேற்றமும் இல்லை என்பது புரிந்தது. பத்திரிகையாளர்களை காணும்போது ஆரம்பத்தில் திலீபன் ‘களத்தில்’ பத்திரிகையை தொடங்கி தானே எழுதியும் தானே விஜயா அச்சகத்தில் குலம் அண்ணா, குலேந்திரன் அண்ணாக்களுடன் நீண்ட நேரம் செலவழித்து நேர்த்தியாக அச்சிட்டு முதல் பத்திரிகையை கொண்டு வந்து கிட்டண்ணாவிடம் கொடுத்து கலந்துரையாடி மகிழ்ந்ததும், போராளிகள் வீரமரணம் அடையும் போது அவர்கள் படங்களுடன் சுவரொட்டி தயாரிக்க புளொக் செய்வதற்காக தவம் அண்ணா வீட்டில் தவம் கிடந்து அதை செய்வித்து அச்சகம் கொண்டு ஓடி போஸ்டர் அச்சிட்டு குடா நாடு முழுவதும் ஏரியா பொறுப்பாளர்களிடம் கொடுத்து ஒட்ட வைத்ததும் மீட்டிப் பார்க்கிறேன்.

திலீபன் எல்லோருக்கும் போஸ்டர் அச்சிட்டார். துண்டு பிரசுரம் எழுதினார். பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அவருக்கே நாங்கள் இவ்வளவும் செய்யவேண்டிய நிலைமைக்கு ஆளாகப்போகின்றோம் என்று நினைக்கும்போது அந்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.

இந்த வேளையில் குடாநாட்டு பத்திரிகை ஆசிரியர்கள் திலீபனை வந்து பார்த்து சென்றதை நினைக்கும்போது, பத்திரிகையாளர் பங்கு இந்த போராட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதை யாரும் மறக்க முடியாது. உதயன் பத்திரிகை ஆசிரியர் கானமயில்நாதன், செய்தி ஆசிரியர் வித்தியாதரன், ஈழமுரசு ஆசிரியர் கோபு ஐயா, செய்தி ஆசிரியர் காக்கா அண்ணா, ராதையன் அண்ணா, ஈழநாடு மாணிக்கம் அண்ணா, யோகநாதன் அண்ணா, முரசொலி ஆசிரியர் திருச்செல்வம் அண்ணா, செய்தி ஆசிரியர் பிறேம், தட்சணாமூர்த்தி எல்லோரும் தங்கள் கடமைகளை தீலிபனோடு சேர்ந்து ஆற்றியவர்கள். இதில் பலபேர் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட போதும் பேனா என்ற ஆயுதத்தால் இன்றும் திலீபனின் நாட்டுப் பற்றிற்காகவும் இனத்தின் உரிமைக்காகவும் பேனா என்ற ஆயுதத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அன்றைய காலகட்டத்தில் இடம்பெற்ற அவலங்களை உடனுக்குடன் வெளிக்கொணர்ந்த பத்திரிகை படப்பிடிப்பாளராக கடமையாற்றியவர்களின் பணிகளையும் நினைத்து பார்க்கும் போது, எப்படி எல்லாம் கனவுகளுடன் செயற்பட்டோம் ஏன் எங்கள் கனவும் திலீபன் கனவும் இன்று வரை நிறைவேறாது தொடர்கதையாக நீண்டு செல்கிறது? என்று மனம் அங்கலாய்க்கும்.

களத்திலும் புலத்திலும் சூழமைவுக்கு ஏற்ப நெறிபிறழாத ஊடக தர்மத்தின் பாற்பட்டு துணிந்து எம் உரிமைக்குரலை உயர்த்தி இம்மக்களுக்கு வழிகாட்டி, உலகத்துக்கு எம் வலியையும் வேதனையையும், மன உறுதியையும், உரிமையையும் உரக்க உரைக்க வேண்டிய பொறுப்பு எம் ஊடகங்களுக்கு உண்டு. இதன் மூலம் எம் இளைய தலைமுறையை, அடக்கு முறைகளுக்கு எதிராக போராடவும் நீதிக்காக குரல் கொடுக்கவும், உறுதியுடன் எழுந்துநிற்க கூடிய திலீபன்களாக உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகிறது.

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-7/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான‌ அகிம்சைக்கு சொந்த‌க் கார‌ர் 💪🙏 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 07ம் நாள்

07th-day-with-Lieutenant-Colonel-Thilipan-scaled.jpg

 

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின……

நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Today) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.

“இந்தியா ருடே” நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

‘இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை” என்றும் யோகி கூறினார்.

அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தைம் யோகியும் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..? என்று கேட்டார்.

பேசச் சத்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்றுதன் புன்னகையை உதிர்த்தது.

“எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”

ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.

படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார்.

1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல் வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர்.

திலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தனர்.யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான பிரச்சினைகள்

பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்களான பிரச்சினைகள், கடை முதலாளிகள் – தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் – ரச்சிக்கரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், டாக்ரர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள், லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம் உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன்.

யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்தகள், பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர்.

திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று சந்தித்தார். முடிவு? அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம் நின்றுவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத் தீர்க்கப்படும். என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான். அது.

மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்த்ததில்லை.

அவரிடம் இருப்பதெல்லாம் ஒரேயொரு நீளக்காற்சட்டை (ட்ரவுசர்) ஒரேயொரு சேர்ட் தான். அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வருவார். ஆந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளைக் களைந்து தோய்த்து காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வார். பின்னர் அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விடும்.

இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடி, வதங்கி தமிழினத்துக்காக தன்னையே அழித்துக் கொண்டிருக்கின்றாரே? ஏத்தனையே பேரின் பிரசிசினைகளைத் தீர்த்து வைத்த இவரின் பிரச்சினையை, தமிழினத்தின் பிரச்சினையை யார் தீர்க்கப் போகின்றார்கள்.

சீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ?
சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ?
கோலமுறு திரு நாடினிக் கொள்ளையர்….
விரித்த வலையினில் வீழ்ந்து அழிவதோ?
காலனெனும் கொடும் கயவனின் கையினால்..
கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ?
நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ..?
நாடு பெறும்வரை நம்மினம் தூங்குமோ…?

“ஈழமுரசு” பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப் பாராட்டியதை இன்று எண்ணிப்பார்க்கின்றேன்.

வாரா வாரம் பத்திர்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளிவிட வேண்டும். என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒருபிரதியை ராஜனிடமும் மறு பிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன்.

தலைவர் பிரபாகரன் “முன்னுரை” எழுதவேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்குச் சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாகத் தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

தலைவர் பிரபா ஒர் “இலக்கிய ரசிகன்” என்பது பலருக்குத் தெரியாது.

அந்த நெஞ்சுக் கூட்டிற்குள் நிறைந்து கிடக்கும் இராணுவத் திட்டங்களும், அரசியல்ப் புரட்சிக் கருத்துக்களும், இலக்கியக் குவியல்களும் மலை போன்ற தமிழுணர்வும்…. அப்பப்பா! ஏராளம் ஏராளம்.! அப்படிப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்த திலீபனின் ஏழாம் நாள் தியாகப் பயணம் தொடர்கின்றது.

– தியாக வேள்வி தொடரும்…

எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.

https://thesakkatru.com/07th-day-with-lieutenant-colonel-thilipan/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீபன் கனவு பலிக்க வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – ICET

 
 

அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல் மனத்தால் வருந்தச்செய்யும் போராட்டமாக இந்தியாவின் தேசபிதா என்று கருதப்படும் மகாத்மா காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது தான் உண்ணாநோன்புப் போராட்டம் எனத் தெரிவித்திருக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, தர்மத்தைப் போதித்த இந்திய தேசத்திடம் நியாயம் கிடைக்கும் என்றே ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து நீதி கிடைக்காமல் தனது இன்னுயிரை நீர்த்தான் வீரமறவன் பார்த்தீபன் என்று தெரிவித்துள்ளது.

தியாகி தீபம் திலீபன் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை(International Council of Eelam Tamils) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

15.09.87 காலை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் முன்றலில் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்தார்,

 ஐந்தம்சக் கோரிக்கை:

  1. தமிழ் மண்ணிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும்.
  2. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
  3. தமிழ் பிரதேசத்தில் சிங்கள காவல் நிலையம் திறக்கப்படுவது நிறுத்த வேண்டும்.
  4. தமிழ் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தப்பட வேண்டும்
  5. வட-கிழக்கில் இடைகால ஆட்சி உடனே நிறுவ வேண்டும்.

மக்களின் ஆதரவு அலையென மோதியது. காந்திதேசம் என்று கருதப்படும் இந்தியாவிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த தியாக தீபம் திலீபன் 14வது நாள் அதாவது 1987 செப்டம்பர் 26ந் தேதி நல்லூர்க் கந்தனின் வேலில் மக்கள் கண்ணீர் மல்க அறையப்பட்டார் (வீரமரணமடைந்தார்). தமிழீழத் தேசமே அதிர்ந்தது. கிளர்ந்தெழுந்த மக்கள் இந்திய இராணுவமே வெளியேறு என்று இந்திய இராணுவத்தைத் தாக்கினர்.

“என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன்……. நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். இது தான் எனது இறுதி ஆசை’’ தியாகி திலீபனின் இறுதி உரையின் வரிகள் மக்களை புரட்சிக்குத் தயாராகுங்கள் என்று கூறியவண்ணம் அமைதியானது. தியாகி திலீபனுக்கு மிகவும் பிடித்த “ஓ மரணித்த வீரனே! – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா ” என்ற பாடலைக் கேட்டுக் கொண்டே கோமா நிலைக்குச் சென்றார். சனநாயக விழுமியங்களை மதித்து தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் மற்றும் சனநயக உரிமைகளை முன்வைத்து நீர் ஆகாரமின்றி உண்ணா நோன்பிருந்து தமிழ் மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரன், மக்கள் மனதில் என்றென்றும் அகிம்சையின் சின்னமாக விளங்கும் விடுதலை இயக்கத்தின் அன்றைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தீயாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பேரினவாத சிங்கள பௌத்த அரசின் நீதித்துறை தடை விதித்துள்ளதென்பது அடக்குமுறையின் மிக உச்சக்கட்ட வெளிப்பாடே.

தியாக தீபம் திலீபன் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் என்று புனையப்பட்ட மகாவம்ச மனநிலையின் உச்சத்தில் நின்று தமிழர்களைக் கொன்றுகுவித்த பௌத்த பேரினவாதியான கமால் குணரத்தினவின் கீழ்தரமான கூற்றை விடுதலை வேண்டி விற்கும் எந்த இனமும் ஏற்றுக்கொள்ளாது. விடுதலை வேண்டி இன்னுயிர் நீத்த ஒரு மாவீரனின் மரணத்தைக் கொச்சைப்படுத்திய ஈனப்பிறவி கமால்குணரத்தினவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறை வல்லுநரும் ஆகிய அரிஸ்டோட்டல் இருவிதமான அரசியல் புரட்சி பற்றி கோட்பாட்டு ரீதியாக பின்வருமாறு விளக்கியுள்ளார்.

1.ஓர் அரசியல் அமைப்பிலிருந்து இன்னுமொன்றுக்கு பூரணமாக மாற்றுவது.

2.இருக்கும் அரசியல் அமைப்பைத் திருத்துவது.

அரிஸ்டோட்டலின் இரண்டாவது விதியின்படி தமிழருக்குத் தீர்வு கிடைக்காது என்பது வரலாறு எமக்குக் கற்றுத்தந்த பாடம். வரலாற்றுப் பாடங்களின் படிப்பினையை உணர்ந்தே மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் முதலாவது விதியையே தேர்ந்தெடுத்தார். சிங்கள ஏகாதிபத்திய அரசியலமைப்பிலிருந்து விலகி தமிழ்மக்களுக்கான எம்மை நாமே ஆழும் சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதற்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். இதை நன்குணர்ந்த திலீபன் மக்கள் புரட்சி ஏற்படவேண்டும் என்ற பாரிய சிந்தனையுடன் தேசியத்தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்க முனைப்புடன் பாடுபட்டார். விடுதலைப்பலிகள் இயக்கத்தில் பெண்கள் இணையவேண்டும் என்ற சிந்தனையையும் தியாகி திலீபன் அவர்களே மக்கள் மத்தியில் விதைத்து வெற்றியும் கண்டார்.

ருசியப் புரட்சியாளன் லெனினின் கூற்றுப்படி “புரட்சி தானாக நிகழ்வதில்லை அதனை நிகழ்த்த வேண்டும்”. திலீபனும் தமிழீழப் போராட்டத்தை விரிவுபடுத்தி ஒரு பெரும் மக்கள் போராட்டமாக விரிவுபடுத்த விரும்பினார். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த பார்த்தீபனின் கனவு பலிக்க வேண்டுமானால் தமிழீழமக்கள் திரண்டெழுந்து சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறைகூவல் விடுக்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

 

http://www.ilakku.org/international-council-of-eelam-tamils/

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், படுகொலைசெய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று மாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனால் நடாத்தப்பட்டது.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடாத்திய தாக்குதலில் 18பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டவர்கள் வருடாந்தம் நினைவுகூரப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு அந்த நினைவுகூரலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு அனுஸ்டிப்புக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் அனுஸ்டிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஞாபகார்த்த தூபியருகே இந்த நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது சுடரேற்றி உயிர்நீர்த்தவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்தினார்.

வழமையாக இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்யும் ஏற்பாட்டுக்குழுவினருக்கு பொலிஸ் மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிகழ்வினை அவர்களால் நடாத்தமுடியவில்லையென மக்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த அப்பாவி பொதுமக்களை நினைவுகூருவதற்கு யாரும் தடைவிதிக்கமுடியாது என இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.

 

http://www.ilakku.org/புதுக்குடியிருப்பு-பகுத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் எனும் திறனாளன்…

தியாக தீபம் திலீபனின் எட்டாம் நாள் உண்ணா நோன்பின் போது அவரின் உடல் சோர்ந்து கிடந்த வேளையில், அவர் திறன்களை கண்டு வியந்த நாட்களை நினைவூட்டுகிறார் அவர் தோழன் ராஜன். 

திலீபன் பம்பரமாய் சுழன்று விடுதலைக்காய் 24 மணித்தியாலமும் உழைத்தவன். இன்றுடன் எட்டு நாட்கள், 192 மணித்தியாலங்கள் தண்ணீர், உணவு இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் காட்சியை பார்க்கும் போது அவரை முதன்முதலில் சந்தித்த நாட்கள் என் நினைவில் நிழலாடின.

அவரை முதன் முதலில் சந்தித்து உரையாடியது சுபாஸ் வீட்டில், அன்று திலீபன் என்னை அழைத்து சென்று சுபாஸ் வீட்டு தலைவாசலில் இருந்த சாய்மனை கதிரையில் இருந்து செய்யப்படவேண்டிய வேலைகளை எப்படி செய்யவேண்டும் என்று சொல்லித் தந்ததும் பின்னர்  நண்பர்கள் சுபாஸ், நவம், சுகு, விக்கினா, நகுலேஸ்,  அஜித், குட்டி சிறி என்று எங்கள் நண்பர்கள் வட்டம் பெரிதாகி திலீபனுடன் வேலை செய்யத் தொடங்கியதுமாக நாட்கள் நகர்ந்தன.

திலீபன் எப்போ எங்களை இந்தியா பயிற்சிக்கு அனுப்புவார் என்ற எண்ணத்துடன் தீலிபன் வரவை எதிர்பார்த்து மேஜர் சுபாஸ் வீட்டு தலைவாசலில் எல்லோரும் காத்திருப்போம் தலைமறைவாக அரசியல் பணி செய்த காலம். திலீபன் நினைத்த நேரம் தான் சந்திப்பு நிகழும்.

அமைப்பில் இணையும் தவிப்பில் இருந்த நண்பர்களாக எங்களுக்குள் சில விடயங்களை கதைப்போம் அவற்றில் ஒன்று  இந்தியா சென்று பயிற்சி பெற்று செல்லக்கிளி அம்மான் வீரமரணத்தின் பின் ஒட்டிய போஸ்டரில் நின்றது போல் எஸ்.எம்.ஜி துப்பாக்கியுடன் நின்று  நாங்களும் படம் எடுக்க வேண்டும், மற்றது மானிப்பாயில் யூலை மாதத்தில் திருப்பதி புத்தக சாலையின் வாசலில் இராணுவத்தால் படுகொலை செய்த மக்களிற்கும், எங்கள் நண்பர்களுக்காகவும் அதே இராணுவத்தை திருப்பி அடிக்க வேணும் என்ற மனக்குமுறல் உடன் உலாவந்தோம்.

திலீபன் இந்தியாவுக்கு இந்தக் கிழமை அனுப்புகிறேன் என்று கூறி பல மாதங்கள் கடந்து விட்டது.  ஒரு நாள் அவர் வரவை எதிர்பார்த்து சுபாஸ் வீட்டில் எல்லோரும் காத்திருந்தோம் வழமை போல் அன்றும் வந்து சாய்மனை கதிரையில் அமர்ந்த திலீபனை நோக்கி, எப்போ என்னை அனுப்ப போகிறியள் என்று அஜித் கேட்டான். கேட்ட கையோடு மேசையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு சாய்மனை கதிரையில் படுத்திருந் திலீபனை பார்த்து இந்தமுறை பேய்க்காட்டினால் குத்துவன் என்று கோபமாக கிட்ட வந்தான் நாங்கள் எல்லாம் பாய்ந்து அவனை பிடித்து கத்தரிக்கோலை பறித்துக் கொண்டோம். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத மயான அமைதி தலைவாசலில் குடி கொண்டது.

அமைதியாக அஜித்தை அழைத்து புத்திமதி கூறிவிட்டு அடுத்தமுறை கட்டாயம் அனுப்புவேன் யோசிக்க வேண்டாம் உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகிறது என்று ஆறுதல் கூறி விடைபெற்றார். அதன் பின் நாங்கள் அஜித்தை நீ மொக்கு வேலை பார்த்து விட்டாய் என்று எல்லோரும் வாய்க்கு வந்த படி பேசினோம்.  ஆனால் அடுத்த முறை தலைவாசல் சந்திப்பில் அஜித்தை காணவில்லை. தீலிபன் எங்கள் குழுவில் அவனை மாத்திரம் இந்தியா அனுப்பி விட்டார்.

எங்கள் குழுவில் கோபம் கொண்ட நண்பன் விக்கினா ரெலி என்ற இயக்கத்தில் இணைந்து விட்டான் சுகு அதிரடிப்படை என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டான் குட்டிச்சிறி நான் சுபாஸ் திலீபன் பின்னால் நம்பிக்கையோடு திரிந்தோம். நவம் ரெலோ இயக்கத்திற்கு சென்றுவிட்டார். எங்கள் நண்பர்கள் வட்டம் சுருங்கத் தொடங்கியது நகுலேஸ் வெளிநாடு சென்றுவிட்டார்.

இத்தனை குழப்பங்களையும் அந்த ஆரம்ப காலங்களில் எங்கள் வட்டத்திற்குள் அமைதியாக சந்தித்து பொறுமையாக எல்லாப் பிரச்சனைகளையும் முகம் கொடுத்த திலீபன் அன்றும் அமைதியின்,  பொறுமையின் சிகரமாக இருந்தான் இன்று அமைதியாக உணர்வு இழந்து கிடக்கும் நிலையில் காணும்போது வேதனையாகயிருந்தது.

நான்கு நாட்களின் பின்னர் ரெலோ நவத்தை இந்தியா அனுப்பவில்லை திரும்ப வந்து திலீபனுடன் கதைத்து சேர்ந்துவிட்டார் போராளிகளினது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பொறுமையாக எப்படி இந்த விடுதலை இயக்கத்தை வளர்த்தார் என்பதிற்கு இச்சம்பவங்கள் சிறு  எடுத்துக்காட்டுகளே.

அந்த நாட்களில் நவாலியில் களைவோடை அம்மன் கோவிலில் இருந்த ஐயாவிடம் கதைத்து விட்டு சாப்பாடும் வேண்டி சாப்பிடுவதும் வழக்கம். இப்படி ஒரு நாள் அங்கிருந்து சயிக்கிளில் வெளிக்கிட்டு சிறு கறுப்பு சூட்கேஸ் ஒன்றுடன் வட்டுக்கோட்டை வீதியில் ஏறி நவாலி சேச்சடி என்ற இடத்திற்கு நான் சுபாஸ் நவம், திலீபனுடன் அங்குள்ள நண்பர்களான செல்லக்கிளி, மற்றும் ரவியை சந்திப்பதற்காக சேச் வாசலில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று அவர்களுடன் தீலிபன் கதைத்துக் கொண்டு நின்றார். எதிர்பாராமல் டேவிற்சனை தேடி சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒழுங்கையால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்தது தெரிந்தவுடன் எங்களை மெதுவாக கலைந்து செல்லுமாறு பணித்துவிட்டு தான் பஸ்ஸிற்கு போகும் பயணிமாதிரி நின்று கொண்டார். நானும் சுபாசும் எதிரில் உள்ள ஒழுங்கை ஒன்றில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஜீப் வண்டி சொல்லி வைத்தமாதிரி பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றது. தீலிபனிடம் இறங்கி கதைத்து கொண்டு நின்றார்கள். தீடீர் என்று தீலிபன் சூட்கேஸால் சுழட்டி அடிப்பது தெரிந்தது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் ஒழுங்கையால் ஓடி விட்டோம். அன்று கண்முன்னால் அந்த அமைதியான திலீபனின் துணிவையும், தந்திரத்தையும் கண்டோம். பொறுமை, செயல்திறன், வீரம், சமயோசித புத்தி என பல திறன்களை ஒருங்கே கொண்ட திலீபன், இன்றைய தினம் தன் இனத்தின் உறுதியை உணர்த்த உணர்விழந்து கிடக்கிறான்.

திலீபனின் திறனோடும், பயிற்சியோடும் வளர்ந்த பலர், 33 ஆண்டுகளின் பின் உலகெங்கும் சிதறி கிடைக்க அவர் கனவும், சொந்த மண்ணும் இன்னமும் அந்த மக்கள் புரட்சிக்காக காத்திருக்கிறது.

 

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-8/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்கம் உடையார் அண்ணா , அன்மையில் முக‌ நூலில் ஒரு செய்தி வாசித்தேன் , அதாவ‌து ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா அண்ண‌ன் திலீப‌னை ப‌ற்றி த‌ர‌ம் தாழ்த்தி ஊட‌க‌த்துக்கு பேட்டி கொடுத்து இருந்தார் 😡, அத‌ வாசிக்க‌ உண்மையில் என‌து இர‌த்த‌ம் கொதிச்ச‌து 💪😡, அண்ண‌ன் திலீப‌னின் பெய‌ரை சொல்ல‌வே ட‌க்கிள‌ஸ் போன்ற‌ ஆட்க‌ளுக்கு கொஞ்ச‌மும் அருக‌தை இல்லை ,சிங்க‌ள‌வ‌னின் எலும்பு துண்டை   ந‌க்கி பிழைக்கும் எச்சைக‌ள் வாயை அட‌க்கி வாசிப்ப‌து தான் அவ‌ருக்கு ந‌ல்ல‌ம் ,

யாழ்ப்பாண‌த்தில் சின்ன‌னில் நாங்க‌ள் விளையாடின‌ இட‌ங்க‌ளை எல்லாம் த‌ன் ம‌ய‌ம் ஆக்கி போட்டான் உதார‌ன‌த்துக்கு சிறித‌ர் திரை அர‌ங்கு , அந்த‌ திரைய‌ர‌ங்கில் எம்ம‌வ‌ர்க‌ள் இய‌க்கிய‌ அனைத்து த‌மிழீழ‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌து ,

2009ம்க்கு பிற‌க்கும் இவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் ஆனுவ‌ம் அட‌ங்க‌ வில்லை , ப‌. தேப்ப‌னுக்கு பிற‌ந்த‌ பிராடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவன் மகாத்மா ஆகிவிடலாம். ஆனால் ஒரு போதும் திலீபன் ஆக முடியாது.

2 minutes ago, பையன்26 said:

சிங்க‌ள‌வ‌ன் எலும்பு துண்டு ந‌க்கி பிழைக்கும் எச்சைக‌ள் வாயை அட‌க்கி வாசிப்ப‌து தான் அவ‌ருக்கு ந‌ல்ல‌ம் ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பையன்26 said:

வ‌ண‌க்கம் உடையார் அண்ணா , அன்மையில் முக‌ நூலில் ஒரு செய்தி வாசித்தேன் , அதாவ‌து ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா அண்ண‌ன் திலீப‌னை ப‌ற்றி த‌ர‌ம் தாழ்த்தி ஊட‌க‌த்துக்கு பேட்டி கொடுத்து இருந்தார் 😡, அத‌ வாசிக்க‌ உண்மையில் என‌து இர‌த்த‌ம் கொதிச்ச‌து 💪😡, அண்ண‌ன் திலீப‌னின் பெய‌ரை சொல்ல‌வே ட‌க்கிள‌ஸ் போன்ற‌ ஆட்க‌ளுக்கு கொஞ்ச‌மும் அருக‌தை இல்லை , சிங்க‌ள‌வ‌னின் எலும்பு துண்டை  ந‌க்கி பிழைக்கும் எச்சைக‌ள் வாயை அட‌க்கி வாசிப்ப‌து தான் அவ‌ருக்கு ந‌ல்ல‌ம் ,

யாழ்ப்பாண‌த்தில் சின்ன‌னில் நாங்க‌ள் விளையாடின‌ இட‌ங்க‌ளை எல்லாம் த‌ன் ம‌ய‌ம் ஆக்கி போட்டான் உதார‌ன‌த்துக்கு சிறித‌ர் திரை அர‌ங்கு , அந்த‌ திரைய‌ர‌ங்கில் எம்ம‌வ‌ர்க‌ள் இய‌க்கிய‌ அனைத்து த‌மிழீழ‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌து ,

2009ம்க்கு பிற‌க்கும் இவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் ஆனுவ‌ம் அட‌ங்க‌ வில்லை , ப‌. தேப்ப‌னுக்கு பிற‌ந்த‌ பிராடு 

 

.

49 minutes ago, theeya said:

அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பவன் மகாத்மா ஆகிவிடலாம். ஆனால் ஒரு போதும் திலீபன் ஆக முடியாது.

 

முற்றிலும் உண்மை உற‌வே   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 08ம் நாள்

 

 

08th-day-with-Lieutenant-Colonel-Thilipan-scaled.jpg

 

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..

லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.

தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லைனெ;றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?

வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை, மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி; சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..

பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படு;த்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். புக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்
சிவந்த தமிழ் மண்ணில்
சந்ததி ஒன்று
சரித்திரம் படைக்க….
முந்திடும் என்பதால்….
முளையிலே கிள்ளிட…..
சிந்தனை செய்தவர்
சிறுநரிக் கூட்டமாய்….
‘இந்தியப்படையெனும்’
பெயருடன் வந்தெம்
சந்திரன் போன்ற…
திலீபனின் உயிரைப்
பறித்திட எண்ணினால்…..
பாரிலே புரட்சி…..
வெடித்திடும் என்று….
வெறியுடன் அவர்களை…..
எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

இரத்த அழுத்தம் – 80/50
நாடித் துடிப்பு – 140
சுவாசம் – 24

– தியாக வேள்வி தொடரும்…

எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.

 

https://thesakkatru.com/08th-day-with-lieutenant-colonel-thilipan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் தியாகத்தை உலகம் புரிந்து கொள்ளுமா?

மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் தியாகி திலீபன் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்று சொன்னால், அது தியாகி திலீபன் அவர்களது நோக்கத்தைச் சுருக்கியே காட்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற காலங்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுடன் கூடவே பயணிக்கின்றார் திலீபன். அங்குவைத்து தமிழர் தாயகத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் இனங்கள் தொடர்பாக ஐ. நா.நியமங்களுக்குட்பட்டு ராஜீவ் காந்தியிடம் முன்வைக்கப்பட்ட இனவழிப்பு மற்றும் மனித உரிமைப் பிரச்சனைகளை தீர்த்துவைக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைமையால் வேண்டப்பட்டபோது, ராஜீவ் காந்தி அவர்கள் வாய்மொழி மூலமாக வழங்கிய வார்த்தைகளை நிறைவேற்றத் தவறியமையால் வேறு வழி இன்றி, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக தன் இனத்தை திட்டமிடப்பட்ட இனவழிப்புக்களில் இருந்து எமது இனத்தைக் காப்பாற்றுங்கள் இல்லையெனில் எதிர்காலத்தில், இலங்கை தேசத்தில் வாழும் சிறுபான்மைத் தமிழினம் சிங்களப் பெரும்பான்மையால் துடைத்தெறியப்படும் எனும் செய்தியை திலீபன் தனது தற்கொடையால் உணர்த்திச் சென்றுள்ளார்.

இன்று திலீபன் அவர்களின் 33ஆம் வருட நினைவேந்தல் நாட்களை மையப்படுத்தி வழமையாக இடம்பெறும் எழுச்சி நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களும் இளையோரும் எடுக்கும் முயற்சிகளும்  எப்படியாவது அவரின் நினைவேந்தலை செய்ய வேண்டும் எனும் தவிப்பும் அவர் கோரிய மக்கள் புரட்சிக்கு வித்திடும் களமாக அமையப்போவது மட்டும் உறுதியானது.

33 வருட தொடர் போராட்டங்களின் பின்பும் அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட முடியாத சூழலில், பெருகி வரும் அடக்குமுறைகளால் தமிழர்களின் மனவுறுதி மென்மேலும் வலுப்பெறும் என்பது மட்டும் உறுதி.

1945-1951ஆம் ஆண்டுகளில் ஐ.நா சமவாயத்தால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் இன ஒடுக்குமுறை மற்றும் இனவழிப்புத் தொடர்பான பரிந்துரைகளுக்கு அமைவாக திட்டமிட்ட இன அழிப்புக்கு ஏதுவான முன்னுரிமைப்படுத்த பட்ட விடயங்கள் சார்ந்ததாக அவரது ஐந்து அம்சக்கோரிக்கைகளும் அமைந்தன. அவை தமிழரின் நில அபகரிப்பு நிறுத்தம் இராணுவ பொலீஸ் மற்றும் ஊர்காவல்படைகளின் பயங்கர வாத தடைச்சட்டத்தின் பேரிலான போர்நிறுத்த கால அத்துமீறல்களும் படுகொலைகளும் நிறுத்தப்படல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றையே வலியுறுத்தின. அதனை உலகம் செவி சாய்க்காமையாலேயே பிற்பட்ட காலங்களில் தமிழினப் படுகொலைகள் தமிழர் தாயகத்தை பிணக்காடாகவே மாற்றியிருந்தது.

அதன் விளைவு 1988-1990 காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொண்டனர். தாயம் நோக்கிய பெரும் பயணத்தின் வெற்றி விளிம்பில் சர்வதேச சதியால் இன்று அது முள்ளிவாய்க்கால் முடிவு வரை வந்து நின்றாலும் பதினொரு வருடங்களின் பின்னர் தமிழ் இளையோர் அகிம்சை சார்ந்த அரசியல் போராட்டத்தை திலீபனின் நினைவு நாளில் தடைகள் மத்தியிலும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக முன்னெடுக்க முயல்வது ஒரு நல்ல தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட பேரணிகள் அரச படைகளால் தடை செய்யப்பட்டாலும் அவர்கள் முன்வைக்கின்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளும் திலீபன் அவர்கள் 33 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்து ஆகுதியாகிய அதே ஐந்தம்சக்கோரிக்கைகளும் தற்கால இனவாத சர்வாதிகாரப்போக்குடைய அரசின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகளுக்கேற்ப சிறுமாற்றம் செய்யப்பட்டவையாகவே காணப்படுகின்றன.

மனித உரிமைகள் அலட்சியப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டதன் காரணமாக மனித குலத்தின் மனச்சாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்கள் நிகழ்ந்ததாக உலகம் தழுவிய மனித உரிமைகள் அமைப்பின் முகவுரை குறிப்பிடுகின்றது.

இன்று மனித உரிமைகள் பற்றி உலக மக்கள் எல்லோரும் பேசுகின்றார்கள். இப்போது அது உலகெங்கும் மீறப்படுகின்ற ஓர் விடயமாகவும் தினசரி பேசுபொருளாகவும் விளங்குகிறது.

குறிப்பாக இலங்கை தொடர்பில் ஏகப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டே வருகின்றன. அதற்குக் காரணம் கடந்த கால சிங்கள அரசுகள் திட்டமிட்டு நடாத்திய இனப்படுகொலைகள் 2009 இல் உச்சம் தொட்டமையும் அதற்கான பொறுப்பு கூற மறுத்தலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தமிழர் வாழ் நிலங்களின் மீதான நில ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ் சமுதாயத்தின் அறவழிப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றமை என பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

மனித உரிமைகள் வரையறைவுகளின் கீழ் பெரும்பான்மையானவர்கள் பேசுவதும் விவாதிப்பதும் அடிப்படை உரிமை மீறல்கள் மற்றும் பரிகார நீதி பற்றியதாகவே இருக்கின்றது.

இதற்காக அந்த மக்கள் செய்கின்ற அறவழிப் போராட்டங்களை ஒடுக்கு முறைகளுக்கூடாக அடக்கி விட்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் விதத்தில் ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்ற முதலாளித்துவ நாடுகளால் கூட்டுச் சேர்ந்துவரையப்பட்டதே 1966ஆம் ஆண்டின் அனைத்துதேச குடிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (international convention of civil and political rights  ICCPR) ஆகும்.  ICCPR இன் மூலாதார அறிக்கையில் சுதந்திரமான கருத்துரிமைகளை வரம்பிற்குட்படுத்தும் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவைகள் பிரிவு19-3டி மற்றும் 20 ஆகியனவாகும். இவைகள் தேசிய பாதுகாப்பின் பெயரால் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வாய்ப்பை பயன்படுத்த ஒடுக்குமுறை அரசுகளுக்கு வாய்ப்பளிக்கின்றது.

இலங்கை அரசும் இதனுள் ஒளிந்து கொண்டு ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தமிழரின்உரிமைகளின் குரல்வளையை அறுத்தெறிய முனைகின்றது.
ஆனால் இவற்றுக்கு எதிராக நாமும் எதிர்வினைகளை ஆற்றமுடியும். அது ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்ட ஒரு இனம் ஒட்டு மொத்தமுமாக ஓரணியில் இணைந்து போராடும் போது அல்லது பேரினவாத அரசிற்கு எதிராக எதிர்வினையாற்றும் சூழ்நிலைகளை எமது மக்கள் துணிந்து தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் போது  ICCPRஇன் 19ஆம் 20ஆம் பிரிவுகள் வலுவற்றதாகி அது ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் தற்காக்கும் உரிமை  எனும் தார்மீக உரிமையாக ஐக்கிய நாடுகளின் 2005 ம் ஆண்டு உலக கூட்டொருமை மாநாட்டு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. .

தமிழ் மக்கள் மேலும் மேலும் வலுவிழந்து தாங்கள் அரசியல் பலம் அரசியல் தலைமை அற்றவர்களாக சென்றுள்ளோம் என ஆத்திரமடைகின்றர்.

அரசியல்வாதிகள் மக்களின் உரிமைகள் பற்றிச் சிந்திக்கும் நேரங்களைவிட தங்களின் அடுத்த அரசியல் இருப்பும் அரசியல் எதிர்காலமும் பற்றியே சிந்திக்கின்றனர். இதனால் வெறுப்பும் கொதிப்பும் அடைந்துள்ள தமிழ் இளையோர் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கலாம் எனமுன்வந்துள்ளனர் என்றே திலீபனின் நினைவுநாள் நிகழ்ச்சி நிரல்கள் உணர்த்துகின்றது.

இலங்கை அரசின் இவ்வாறான திட்டமிட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் இறுக்கமாக இருக்கப்போகின்றது. அது தாயகத்தில் தமிழ் மக்கள் அமைப்புரீதியாக மேற்கொள்ள முனையும் அனைத்து நிகழ்வுகளையும் ‘மக்களாட்சிச்சட்டம்’ எனும் போர்வையில் அடக்கு முறைகளை கடினப்படுத்தவே செய்யும்.

இவ்வாறான சூழலில் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உலகின்பார்வைக்குத் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அது எவ்வாறெனின் தாயகத்தில் இடம்பெறும் மாவீரர் நினைவு நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் இந்த இளைஞர்களுடன் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளவேண்டும். அதே சம நேரங்களில் ஒவ்வொரு ஈழக்குடிமகனின் வீட்டுமுற்றத்திலும் நினைவுத் தீபங்கள் நினைவு அலங்காரங்கள் பதாகைகள் போன்றவற்றை அடையாளப்படுத்தி நினைவேந்தல் நினைவுகளை துணிந்து செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் அரசிற்கு தங்களின் எதிர்ப்பையும் விடுதலைக்காய் உயிர் நீத்த தியாகிகளுக்கு எமது வணக்கத்தையும் செலுத்தமுடியும்.
இதனால் அடக்குமுறை சட்டத்தால் தனி நபரையோ குழுக்களையோ நோக்கி பிரயோகித்து தடுக்கப்பட்ட செயலை ஒரு இனமே செய்தது என்று ஒடுக்குமுறை சிங்கள அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ வாதாடவோ முடியாமல் போகின்றது. அதே நேரத்தில் எமது சாத்வீகமான அரசியல் போராட்டம் சர்வதேசத் தீர்வொன்றை நோக்கி நகர்த்தப்படும்.

உண்மையில் ஐ.நா என்பது கூட்டுச்சூத்திரமாக சில மனிதநேயமானவார்த்தைகளைப் பிரயோகிக்கின்றது. அவைகள் வறிய நாடுகளை தங்களுக்குள் பிரித்து பங்கு போட்டுக்கொள்கின்றன. அவைகளின் தேவைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நோக்கம் ஒன்றாகவே எப்போதும் இருக்கும்.

ஒரு சிலர் தங்களுக்குள்ள பலத்தால் பங்கை கொஞ்சம் பெரிதாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த ஏனையோர் பெரும்பங்கை அனுபவிப்பவருக்கு எதிராக ஒன்று சேர்கின்றனர். இதனால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் நாடுகளுக்கு சிலவேளை அனுகூலமாகக்கூட அமைந்து விடுகின்றது. இந்த சூட்சுமத்தின் அடிப்படையிலேயே எமது இனப் பிரச்சனைகளையும் இப்போது பார்க்கப்படவேண்டும்.

ஈழப்போராட்டம் உக்கிரமடைந்திருந்த காலத்தில் தமிழ் மக்களும் அவர்களது தலைமைகளும் இலங்கை அரசின் மனித உரிமைகள்பற்றிப் பேசியபோதெல்லாம் அவர்களுக்கு அது செவிடன் காதில் ஊதியசங்காகவே இருந்தது. அதே நேரத்தில் தங்கள் காதுகளை இறுக்கப் பொத்திக்கொண்டு அந்த நாடுகள் குண்டுகளை அள்ளிக் கொடுத்துக் கொல்லும்படி கட்டளையிட்டன.

கொல்லப்படுபவர்களை பயங்கரவாதிகளென கூட்டுச்சேர்ந்து முத்திரை குத்தினர். காரணம் இலங்கை மீது யார் காலணியாதிக்கத்தை தக்க வைப்பது என்பதில் கொண்ட சுயநலமும் அதனால் இலங்கைக்குத் தங்களை ஆபத்பாண்டவர்களாகப் போட்டி போட்டுக் கொண்டு காட்ட முனையும் நிலையுமாகும்.

தற்போது இலங்கை சீனாவின் காலணியாதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு அதன் பின்னணியில் சீனாகட்டியெழுப்பியுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுக இராசதானியின் பின்னர். இந்தப் பங்குதாரர்களுக்கெல்லாம் சீனாவின் மீதான வெறுப்பு இலங்கையின் உச்சந்தலையில் கொள்ளி வைப்பதுவரை வந்து நிற்கின்றது.

அதனால் இப்போது அவர்கள் எமது இனப்பிரச்சனையில் கூடிய கவனம்செலுத்தவும் ஒடுக்கு முறைகளுக்குள்ளான தமிழ் மக்களின் சார்பாக குரல் கொடுத்து உள்நுழைய முயற்சிக்கின்றனர்.

எமது மக்களால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட போராட்டங்கள் அல்லது எழுச்சி நிகழ்வுகள் யாவும் சிங்கள அரசால் எவ்வாறு திட்டமிட்டு தடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இது பற்றிய கடந்தகால அனுபவங்களை கருத்திலெடுக்காது இப்போது உள்ள சூழ்நிலைகளில் வெற்றிகரமாக ஒரு நிகழ்வை நடாத்துவது கடினமாகவே இருக்கும்.

ஏனெனில் எமது சுதந்திர விடுதலைப் போராட்ட உணர்வுகளை மக்களிடம் இருந்து இல்லாமல் செய்வதே எதிரியின் திட்டமாகும். இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அரசியல் வாதிகளும் இளைஞர்களோடு கைகோர்த்து நிற்பதுடன் ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் தலையாய கடமையாக உணரவேண்டும்.

திலீபனின் போராட்டம் தடுக்கப்பட்டாலும் வெற்றியடைந்தாலும் இப்போதைய சூழலில் வெற்றி நமக்கே. ஆனால் ஒவ்வொரு போராட்டமும் சர்வதேசத்தின் கவனத்தைப்பெறவேண்டும்.

சுதந்திரமாக ஒரு போராட்டத்தைத் தொடர்வது என்பது பேரினவாத சிங்கள அரசிடம் எடுபடாது. போராட்டத்தை அடக்குவதற்கு சவுக்கடி வைத்தியமே சிறந்தது என கோத்தபாயவும் அவரது முப்படைகளும் பலமாக நம்புகின்றனர்.

இது தற்போதய உலக ஒழுங்கின் மாற்றத்தில் எமக்கு சாதகமானது. ஒருநாட்டின் நிலைமையை அந்த அரசு தனது மக்களை எவ்வாறு பார்க்கிறது என்பதையே சர்வதேசம் உற்றுப்பார்க்கும்.

‘சம்யக்சம்போதி’ பரிபூரண போதி நிலை அடைந்தவர் என கூறப்படும். கெளதமரின் உண்மையான வாழ்வுநெறி மனம், ஆசை, பகைமை நெறி என்பவற்றுக்கு அப்பாற்பட்டது. இப்போது அந்த மதத்தை பின்பற்றும் சிங்கள ஆட்சி பீடங்களும் தேரர்களும் மேற்கொள்ளும் இனப்பாகுபாடு மற்றும் தீவிர இனத்துவேசம் என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது. இதனைதொங்கிக்கொண்டிருக்கும் புத்த தர்மக்கோட்பாடுகளில் இருந்து வெளியேறி புறம்போக்குத்தனமான தேரவாத பெளத்த சர்வாதிகாரத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றனர் பெரும்பான்மை சிங்களவர்.

இதன் விளைவு இலங்கையில் இரு தேசங்கள் உருவாவதற்கே வழிவகைசெய்யும். யுத்தத்தால் சாதிக்க முடியாததை இலங்கை அரசின் இவ்வாறானநிலைப்பாடுகள் பன்னாட்டு ஆதரவுடன் கூடிய ஒரு தேசத்தை உருவாக்கும். இதற்கான தொடக்கத்தினையே 33 வருடங்களுக்கு முன்னர் தியாகி திலீபன் அவர்களும் மாவீரர்களும் தங்களது உயிர்களை ஈகம் செய்து எமது மக்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்ததன் மூலம் செய்துள்ளனர்.

இதனை சரியாக உணர்ந்து கொண்டு எமது இளையோர்களுடன் அனைத்து மக்களும் அரசியல்வாதிகளும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும்.

அழ.இனியவன்

http://www.ilakku.org/world-understand-thileepan-sacrifice/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திலீபன் நினைவுகள்-‘இந்தியாவின் உண்மை முகம் வெளிப்பட்ட நாள்’

photo6.jpg

 

உண்ணா நோன்பின் ஒன்பதாம் நாளில் திலீபன் நினைவுகள் அவர் தோழன் ராஜனின் மனப்பதிவுகளில் இருந்து…

இன்று ஒன்பதாம் நாள், திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய தூதுவருக்கு கிடைத்த சந்தர்ப்பம். அவரின் அணுகுமுறை பிடிவாத குணம். ஆணவ இயல்புகளால் அமைதியாக வாழ வேண்டிய இனம் இன்றுவரை அமைதி இழந்து வாழ்கிறது. பாதிக்கப்பட்ட இனத்தின் பக்கம் சார்ந்து முடிவு எடுக்க வேண்டிய ஐந்து அதிகாரிகள் எங்கள் பக்கம் தலைவருடன் சேர்த்து ஐந்து பேர் பேசினார்கள். ஆனால் தூதுவர் டிக்சிற் எழுத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று தருவதற்கு தயாராக இருக்கவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் பெரும் போராட்டங்களை நடாத்தினார்கள். மன்னாரில் பிற்காலத்தில் மாணவர் அமைப்பிற்கு பொறுப்பாவிருந்த மரிசால் அப்பாவின் தமையனார் அமைதிப்படையால் மறியல் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒன்பதாம் நாள் இந்திய தூதுவர் டிக்சிற் அவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அப்பாவி பொது மகன் கொலையுடன் முடிந்தது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத நாள்.

இன்றைய ஒன்பதாம் நாளில் எமது நண்பர்களுடன் வேறுபாடு காட்டாது தீலிபன் பழகியதும் அந்த நண்பர்களான மதி, ரமேஷ், செல்வம், விக்கினா( வேறொரு தாக்குதலில் வீரமரணம்) முரளி ஆகியோரின் நினைவுகளுடன் ரெலி இயக்க ஜெகனுடன் நட்பு கொண்டு எம்முடன் இணைக்க மேற்கொண்ட முயற்சிகளையும் அதன் பின் நடந்த சம்பவங்களையும் நினைத்து பார்க்கிறேன்.

அன்றைய காலகட்டத்தில் 40ற்கும் மேற்பட்ட இயக்கங்கள். எங்களுடன் இருந்தவர்கள் ரெலி இயக்கம்  எமது அமைப்புடன் இணைந்து செயற்பட உடன் பட்டிருந்ததால் ரெலி இயக்கத்திற்கும் எங்களிற்கும் ஒரு புரிந்துணர்வு இருந்தது. இதனை விட திலீபனும் ரெலி இயக்கத் தலைவர் ஜெகனும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் கூடிய பலமாக இருந்தது.

அன்றைய காலத்தில் பொலிஸ் நிலையங்கள் இருந்தன. பொலிஸார் ஜீப் வண்டிகளில் ரோந்து செல்வார்கள். இவர்களின் கண்களில் மண் தூவிவிட்டு தான் எங்கள் கிராமங்களின் குச்சு ஒழுங்கைகளிற்குள் விடுதலைப் போராட்டம் வளர்க்கப்பட்டது.

இந்த வேளையில் யாழ் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி ஒன்றை கோட்டை முனியப்பர் கோவில் வளைவில் லொறியால் அடித்து பிரட்டி ஒரு இயந்திர துப்பாக்கியை ஜெகனும் தோழர்களும் எடுத்து விட்டார்கள். தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது. அடுத்த நாள் பேப்பரில் தலைப்பு செய்தியாக இருந்தது.

எங்கள் நண்பர்கள் வீரர்களாக உலா வந்தார்கள். எடுக்கப்பட்ட துப்பாக்கிக்கு குண்டுகள் இல்லை மகசீன் இல்லை. ஜெகன் உட்பட ஒருவருக்கும் துப்பாக்கியை இயக்கவும் தெரியாது. அன்று மாலை நண்பன் முரளி துப்பாக்கியை சாக்கால் சுற்றி என்னிடம் காட்டினான். நான் தொட்டுப் பார்க்க நினைத்த துப்பாக்கி எங்கள் ஊர் நண்பர்கள் கையில் அதுவும் எதிரியுடன் இரத்தம் சிந்தாது துப்பாக்கியும் எடுத்தது, மிக்க மகிழ்ச்சியில் எல்லோரும் இருந்தோம். முரளி என்னிடம் எங்கு ஒளித்து வைக்கிறது என்று கேட்டான். இறுதியில் பனையோலையால் அடைக்கப்பட்ட வேலிதான் தஞ்சம் தந்தது.

எங்களுடன் இருந்த நண்பர்களும் ஜெகன் தலைமையில் லொறியால் அடித்து பொலிஸ் ஜீப்பில் இருந்து துப்பாக்கி எடுத்து விட்டார்கள். நாங்களும் ஏதாவது செய்து துப்பாக்கி எடுத்து தீலிபனுக்கு காட்டுவோம் என்று நினைத்து, தவம், நான், குரு, சுபாஸ், துரை, நகுலேஸ் எல்லோரும் திட்டம் தீட்டுகிறோம். மானிப்பாய் சந்தையடியில் இருக்கும் மக்கள் வங்கியில் உள்ள காவலாளியிடம் உள்ள துப்பாக்கியை பறிப்பது என்று முடிவெடுத்தோம்.

குரு ஐயா ரெக்கி பார்த்து சொன்னார். பகல் பதினொருமணியளவில் சுபாஸ், நவம் உள் புகுந்து துப்பாக்கியை பறிப்பது இருவர் வங்கியில் நிற்கும் மக்களை உத்தியோகத்தரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்று. ஆனால் அன்று குரு ஐயா கூறியது போல் துப்பாக்கியுடன் காவலாளி இல்லை. சுவரில் மாட்டியிருந்த ஜே ஆர் படத்தை கழட்டி வீதியில் போட்டு உடைத்து வந்தோம்.

அடுத்த நாள் திலீபன் கேள்விப்பட்டு, அனைவருக்கும் அம்மன் கோவிலடியில் விக்ரர் அண்ணா உதவியுடன் எங்களிற்கு விசாரணை பாராட்டு கிடைக்கும் என்று நம்பிய எங்களிற்கு தலையில் இடி விழுந்தது. ஆளுக்கு 500 தோப்புப் கரணம். இரண்டு நாள்  நொண்டி நடந்தது தான் கண்ட மிச்சம். அப்பாடா இந்தளவில் ஆவது தப்பிவிட்டோம். இதற்கும் காரணம் திலீபனின் பொறுமை அமைதி.

பின்பு நாங்கள் குரு ஐயாவை பகிடி பண்ணுவோம். அவன் தும்புதடியோடு நின்றதை பார்த்துவிட்டு துவக்கு என்று சொல்லிவிட்டியள் என்று, இந்த பகிடிகளையும் கேட்டு திலீபன் சிரித்ததும், ஒன்றாய் இருந்து. அம்மன் கோவிலடியில் எல்லோரும் வட்டமாக சோறு கறி குழைத்து சாப்பிட்டதும் நல்லூரின் வீதியில் இருந்த உண்ணா நோன்பு மேடையில் இருந்து என் நினைவுகளாக ஓடியது.

களவோடை அம்மன் கோவில் மடைப் பள்ளியில், திலீபனுடன் ஜெகன் சந்தித்து கதைத்து, அன்றிருந்து குரு என்ற நண்பர் உதவியுடன் திலீபன் மன்னார் தளபதி விக்டர் அண்ணாவையும் ஜெகனையும் கூட்டிவந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி எப்படி இயக்குவது என்று பயிற்ச்சி கொடுக்கப்பட்டதும், நான், நவம், சுபாஸ், காவல் காத்து நின்றதும் நினைவுகளாக ஓடியது.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரும், பொலிசாரும் திரிந்த காலம். அத்துடன் பயிற்சி பெற்ற போராளிகள் இந்தியாவிலிருந்து வந்து கொண்டிருந்த காலம். ஜெகன் தான் ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்திவிட்டு, அதிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு எமது அமைப்பில் இணைவது என்ற இரகசிய இணக்கப்பாட்டை திலீபனும் ஜெகனும் ஏற்படுத்தி கொண்டனர். அதற்காக அவருக்கு விக்டர் அண்ணா மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன. புரிந்துணர்வு அடிப்படையில் திலீபன் இவற்றை மேற்கொண்டிருந்தார்.

இதே நேரம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அருகில் இந்தியாவிலிருந்து வந்த ஞானம் என்ற போராளியின் தலைமையில் ஒரு முகாம் அமைக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் வட்டுக்கோட்டையிலிருந்து கடற்படையினர் தண்ணீர் எடுத்துக் கொண்டு கோட்டைக்குச் செல்வார்கள். அதேபோல காரைநகரிலிருந்தும் கடற்படையினர் கோட்டைக்குச் செல்வார்கள். அதனால் அங்கே ஒரு கண்ணிவெடித் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஜெகன் கண்ணிவெடியைப் புதைத்து வைத்து விட்டு காவலிருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் அதிகாலையில் முகாமைச் சுற்றிய வீதிகளில் நோட்டமிடுவதற்காக இரண்டு போராளிகளை அனுப்புவது வழக்கம். ஜெகன் கண்ணிவெடி வைத்திருந்த இடத்திற்கு அருகில் இவர்கள் சென்றதும், சந்தேகமடைந்த ஜெகனின் நண்பர்கள், அவ்விடத்தில் நிற்காது அகன்று செல்லுமாறு கூறியதையடுத்து, இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஜெகனின் நண்பர்கள் அவர்களை அடித்து துரத்தி விட்டிருந்தனர். அவர்கள் முகாமிற்கு வந்து முகாம் பொறுப்பாளராக இருந்த ஞானம் என்பவரிடம் சொல்ல, அவர் துப்பாக்கியுடன் சென்று ஜெகனின் நண்பர்களை அடித்ததால் கைகலப்பு ஏற்பட்டது.

அதே சமயம் ஜெகன் ஜீப்பில் அவ்விடத்திற்கு வந்த போது, ஞானம் ஜெகனை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், ஜெகன் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். ஜெகன் திட்டமிட்ட தாக்குதலின் இரகசியம் கருதி சில தகவல்களை வெளியில் சொல்லாத காரணத்தினால் ஞானத்திற்கு ஜெகன் பற்றிய தகவல் தெரியவில்லை.

தங்கள் முகாமிருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தினால் தமக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று கருதியோ என்னவோ ஞானம் செய்த செயல் ஒரு துன்பியல் நடவடிக்கையாக மாறியது. அன்று தான் திலீபன் கண்கலங்கி அழுததை நான் பார்த்தேன்.

உடனே கிட்டண்ணா கோபம் கொண்டு, ஞானத்தை தண்டித்து அவரை வீட்டிற்கு அனுப்பி ஒரு சிறு பிரளயமே நடந்து விட்டது. பின்னர் ஞானம் பிறிதொரு சம்பவத்தில் சயனைட் அருந்தியதும், ஜெகனை  எங்கள் மாவீரர் பட்டியலில் இணைத்ததுடன், அவரின் வீரவணக்க சுவரொட்டிகளை ஒட்டி, ஏனைய அவரின் நண்பர்களை எமது இயக்கத்துடன் இணைத்து எம்மையும் ஜெகனின் தோழர்களையும் திலீபன் சமாதானம் செய்து வைத்ததும், அவரது நேர்மை பிறழாத அணுகுமுறைக்கு சான்றாக அமைந்தது.

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-9/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 09ம் நாள்

 

 

09th-day-with-Lieutenant-Colonel-Thilipan-scaled.jpg

 

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

ஆனால் இந்தக் குயில்…?

எம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..?

திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.

அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.

உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.

உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.

கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.

இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.

பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான்!

கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.

இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.

திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.

சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.

எங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.

திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

1. யாழ் பிரஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)
2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)
3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்
4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்
5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.

இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-

தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்
இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்
அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்
பிரிகேடியர் பெர்னான்டஸ்
இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்

விடுதலைப் புலிகளின் தரப்பில்:-

தலைவர். திரு. வே. பிரபாகரன்
பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).
திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)
திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)
திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..

எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.

இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.

ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.

– தியாக வேள்வி தொடரும்…

எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.

 

https://thesakkatru.com/09th-day-with-lieutenant-colonel-thilipan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் தியாக வேள்வி 10ம் நாள்

 

 

10th-day-with-Lieutenant-Colonel-Thilipan-scaled.jpg

பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப் போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.

ஆனால், இவர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும்.

அதை நான் என் வாழ்நாளில் முதல்முறையாக அனுபவிக்கிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருருமால், நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன்.

நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் – உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.

ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…. ஆதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?

இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நும்பிக்கையே அற்றுவிட்டது.இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.

அப்படியிருக்க……….. கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா?
திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்பது புரிந்துவிட்டது.
அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?
இரத்தமா?
அந்த “மனிதன்” இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?
ஏன்?
ஏன்?
அடுத்து வேறு ஓரு உருவம்!
அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…
ஏன்…….
ஏன்…..?

இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன…..

நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டது.

நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.
இரத்த அழுத்தம் -80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ….. அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா?

அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.

“நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…”

இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும்.

கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்மிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.

கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இதை என்றோ ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்……

இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து அவகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த ‘பண்டிதர்’.

இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழியிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் ” அன்பு”

இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.

இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்?

இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன.

நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.

‘திலீபன்’ என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்.” மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

– தியாக வேள்வி தொடரும்…

எழுத்துருவாக்கம்: கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன்.

https://thesakkatru.com/10th-day-with-lieutenant-colonel-thilipan/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நேசித்த தமிழரின் தேசத்தை உருவாக்க அணிதிரள்வோம்

 

தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாம் நாள் நினைவுகளுடன் திலீபனையும், தோழர்களையும் அவர்கள் நினைவுடன் எம்முன் உள்ள பணிகளையும் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள்,

பத்தாம் நாள் திலீபனை நாங்கள் தான் பார்க்க முடிந்தது. அவரால் எங்களைப் பார்க்க முடியாத நிலை, நினைக்க முடியாத நிலை. மேடையில் நிற்கவும் வேண்டும். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நின்றவர்களுக்கு தலை சுற்றுகிறதா? தலை இடிக்கிறதா? அல்லது தலையில் யாரும் பாரம் வைத்து விட்டார்களா? மனம் அழுகிறது.

கண்ணீரை காணவில்லை, உறுதியும், இனமான உணர்வும் மட்டுமே எஞ்சியிருக்க, உடல் உணர்வுகளும், செயற்பாடுகளும் மந்தமாகி எம்மில் இருந்து திலீபன் தூரமாகிப் போகிறான் என்பதும், இந்த தாங்க முடியாத துயரத்தையும், எம் எதிரே தோன்றவுள்ள நெருக்கடிமிக்க போராட்ட நாட்களையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

பத்தாம் நாள் அங்கு நின்ற இலட்சக்கணக்கான மக்கள் எல்லோரும் இந்திய அரசை நம்பி ஏமாந்து விட்டோம் என்ற உணர்வுடன் குழறி அழுதார்கள். திரு. டிக்சித் ஒன்பதாம் நாள் நேர்மையான முடிவு எடுத்திருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் கூட நடந்திருக்காது.

33 ஆண்டுகளிற்கு முன் இந்தியாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை உண்மையான சதுரங்க ஆட்ட வீரன் திலீபன் விளங்கித் தான் இந்த முடிவை எடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 1986 இல் லெப். கேணல் பைப் என்று அழைக்கப்படும் போராளி ( தற்போது வீரமரணம் அடைந்து விட்டார்) காயப்பட்டு சிறுப்பிட்டியில் உள்ள அவரின் சொந்த வீட்டில் இருக்கும் போது, இரவு திலீபன் வானில் அவரை பார்க்க சென்றிருந்தார். போகும் போது புன்னாலைக்கட்டுவன் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த என்னையும் அழைத்துச் செல்வார். அப்போது எனக்கு வான் ஓட பழக்கி விடுவார். முதன்முதல் எனக்கு மோட்டார் சைக்கிள் பழக்கியவர் மேஜர் அல்பேட். வான் ஓடப் பழக்கியவர் திலீபன். முதல் நாள் பைப் வீட்டிற்கு திரும்பும் ஒழுங்கை மதிலை உரசிக் கொண்டு வானை திருப்பி விட்டேன். ஆனால் திலீபனோ நான் பயப்பட்ட மாதிரி நடந்து கொள்ளாது, எனக்கு ஊக்கம் தருவது போல் கதைத்து வான் ஓடக் கற்றுத் தந்தார்.

பைப் வீட்டை போய் அவருடன் சதுரங்கம் விளையாடுவார். பைப்பின் அக்கா அம்மா உணவு பரிமாறுவார்கள். மாணவப் பருவத்தில் விளையாடத் தொடங்கிய சதுரங்க வீரன், சதுரங்க விளையாட்டை இறுதி வரை விளையாடி மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறான்.

1983 இலிருந்து என்னுடன் பழகிய திலீபன், எனக்கு தெரிந்து விடுதலைக்காய் சிந்திக்காமல் இருந்திருப்பாரானால், அது அவர் வயித்தில் ஒப்பிரேசன் செய்யும் போது மயக்கிய வேளை மட்டுமாகத் தானிருக்கும். அடுத்து உண்ணாவிரதம் இருக்கும் போது பத்தாம் நாள் முதலான கடைசி மூன்று நாட்களும் என்று தான் என்னால் கூறமுடியும். அப்படிப்பட்ட ஒரு நண்பனை இழந்து 33 வருடங்கள் ஆனாலும் அவனுடன் பழகிய நாட்கள், நடந்த சம்பவங்கள் எல்லாம் மறக்கப்படாமல் பதிவு செய்யப்படவேண்டிய, பாதுகாக்க வேண்டிய, எம்மிடம் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப் பட வேண்டியதும். அதற்காக நாம் எல்லோரும் உழைப்பதும் தான் திலீபன் மற்றும் மாவீரர்கள் எல்லோருக்கும் செய்யும் காணிக்கையாகவிருக்கும்.

இந்த வேளையில், திலீபன் மற்றும், கிட்டண்ணாவுடன் சேர்ந்து உழைத்த நண்பர்களும் நினைவுக்கு வந்து போகின்றார்கள் இதில் பலபேர் மாவீர்களாக இருக்கின்றார்கள் சில பேர் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களையும், அவர்கள் நாட்டின் விடுதலைக்காய் உழைத்த நாட்களையும் மறக்க முடியாது. யாராலும் மறைக்கவும் முடியாது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், இன்று வாழும் பல நண்பர்களுக்கும் தெரியும். காலத்தின் தேவை கருதி இந்த வரலாற்று பதிவில் பதிவிடுகிறேன்.

1993 இற்கு பின்னர் நிதர்சனம் நிறுவனத்திற்கு பொறுப்பாக புதிய போராளிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய சிந்தனையோடு நிர்வாகம் நடத்தத் தொடங்கினார்கள். அதில் ஒரு விடயமாக நிதர்சனம் தொலைக்காட்சியின் வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதி அண்ணையிடம் (தலைவரிடம்) காட்டினார்கள். எழுதியவர் பரதன் அண்ணாவின் பெயரை குறிப்பிடாது தவறுதலாக விட்டுவிட்டார். தலைவர் எழுதியவரை அழைத்து, தம்பி வரலாறுகளை உள்ளபடி எழுத வேண்டும். அதில் எழுதும் போது தவறுகள் விடக்கூடாது. பரதன் பெயர் வராமல் நிதர்சனம் வரலாறு இருக்க முடியாது என்று அறிவுறுத்திவிட்டு, எதிரியானலும் சரி, துரோகியானாலும் சரி, விலகியவர்களானாலும் சரி, அவரவர் அமைப்பில் இருந்து செய்த வேலைகளை வரலாறு என்று எழுதும் போது குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எங்கள் இயக்க வரலாறு என்பது அவரவர் தங்கள் வரலாற்றை எழுதும் போது தான் முழுமை பெறும் என்றும், அண்ணை புதுவை இரத்தினதுரை அவர்களுடன் கதைக்கும் போது ஒரு தடவை கூறியதாக புதுவை அண்ணா கூறினார்.

இந்த வேளையில் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். தலைவர்கள் நல்லவர்கள். ஆனால் தகவல்களை சில பேர் கற்பனையிலும், தவறுதலாகவும் தெரிவிப்பதால், தலைவர்கள் தவறான முடிவுகளை எடுத்ததும் உண்டு. அவர்களும் மனிதர்கள் தானே. உலகத்தில் யாரும் தவறே செய்யவில்லை என கூறினால், அது மிகைப்படுத்தலாகி விடும்.

விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லை என்றாகிய பின்பும், புலி எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தும், புலி ஆதரவு கருத்துக்களை முன்வைத்தும் தமிழ் தேசிய அரசியல் செய்வோர், தழினத்தின் தேசிய அரசியலின் இலக்கினில் ஏதாவது ஒன்றை தமிழ் மக்களிற்கு பெற்றுக் கொடுத்தார்களா?

70 ஆண்டுகளாகியும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் நடாத்திய போதும் எங்கள் உரிமைகளை நிலைநாட்ட முடியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இந்த போராட்டங்கள் இவ்வளவு காலமும், பெற்ற வெற்றிகள், எம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை விருத்தி, உலகின் சுயநல போக்கு பற்றிய புரிதல், இழந்த உயிர்கள், சொத்துக்கள், புலம்பெயர்ந்த வாழ்வின் இன்பங்கள், துயரங்கள், வளர்ச்சிகள் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக அமைந்தன.

இந்நிலையில் தமிழர் மீதான இன அழிப்பை நிறுத்த உலகம் ஏற்கும் மனித குலத்துக்கான, ஓர் தேசிய இனத்துக்கான நீதியை வலியுறுத்தி பெற நாம் என்ன செய்தோம்? செய்து கொண்டிருக்கின்றோம்? என்று நாம் செல்லும் பாதையை மீளாய்வு செய்து எம் பாதையையும் செப்பனிட்டு புதிய திறன் கொண்ட அணியாக பயணிக்க வேண்டியுள்ளது. திலீபன் விரும்பிய தமிழரின் சமதர்ம சோஷலிச தேசத்தை உருவாக்க அணிதிரள்வோம்.

 

http://www.ilakku.org/thileepan-hunger-strike-rajan-memorys-10/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.