Jump to content

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் – அ.மயூரன்

 

இந்த உலகமானது மனித சிந்தனைகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள் , சித்தாந்தங்கள் , வேதாந்தங்கள், தத்துவங்கள் , இலக்கியங்கள் ஆகியவற்றைப் பெரும் குவியல்ககளாகக் கொண்ட கருத்துலகமாகும்.

இக்கருத்துக்களுக்கு இருப்பும், உறுதியான பொருளியல் வாழ்வுமுண்டு. இக்கருத்துக்கள் மனிதப் பண்பாட்டிலிருந்து பிறக்கின்றன. மக்கள் சமூகத்தின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற சக்திகளாயும், இயங்கு போக்குமுண்டு. இந்தவகையிற்தான் தமிழ்ச் சமூகத்தில் திலீபன் என்ற ஒரு தனி மனிதனுடைய தீர்க்கமான கருத்துக்களும், இலட்சியமும் தமிழ்ச்சமூக ஆழ்மனக் கருத்துக்களாக நிலைத்திருப்பதை இன்று அவதானிக்க முடிகிறது.

மனித வரலாற்றின் வாழ்வியல் போக்கில் பல நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நிகழும், சில நிகழ்வுகளின் நினைவுகளும் அதன் வலிகளும் சமூகவியலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

அத்தகைய ஆழமான தாக்கங்கள் அச்சமூகத்தின் ஆழ்மனதில் நிலைபெற்று, அவை பின்பு நம்பிக்கைகள் , ஐதீகங்கள், ஆன்மீகமாக நிலைத்து விடுகின்றன. தமிழிலே ‘‘நம்பிக்கை தான் வாழ்க்கை” என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த நம்பிக்கை மனித நடத்தைகள் ஒவ்வொன்றிலும் ஆழமாக இருக்கின்றபோது மனித செயற்பாடுகள் வெற்றிகரமான பாதையில் வேகமாக முன்னெடுக்கப்படும்.
ஒருவர் பற்றிய ஆழமான பக்தி, விசுவாசம், நம்பிக்கைகள், கடவுள் ஆன்மீகம், என்ற பரப்புக்குள் வைத்து ஒரு சமூகத்தின் பொது மனப்பாங்கு ஆகிறது.

இத்தகைய ஈழமக்களின் ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் என்பதை திலீபனின் தியாக வேள்வி நடந்த நாட்களில் நிகழ்கின்ற சம்பவங்கள் கடந்த 33 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையான தமிழ் மக்கள் எழுச்சிகள், எதிர்பாராத சாதக நிகழ்வுகள் நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இந்த வாரம் தமிழ் ஊகச் செய்திகளை பாருங்கள்,

திலீபத்தின் தியாகம் கனதியானது பிளந்து கிடந்த தமிழரசியல் சக்திகளை ஓர்முனையில் கூர்மையாக்கி நிறுத்தியிருக்கின்றது.

பாராளுமன்றிலும் இளங்கலைஞர் அரங்கிலும் நாளை மறுதினம் செல்வச்சந்நிதியிலுமென பலதரப்பினரையும்ஒருமைப்படுத்தி வலிமைப்படுத்தவுள்ளது.

கயேந்திரகுமாருக்காக சுமந்திரன் பாராளுமன்றில் எழுந்து நின்றார் என்றால் அது கயேந்திரகுமார் மீது கொண்ட அன்பாலல்ல திலீபத்தின் தியாகத்தின் பெறுமதியை உணர்ந்ததால்.

மாவையர் தலைமையில் இளங்கலைஞர் அரங்கில் எல்லோரும் கூடினார்கள்கள் என்றால் காரணம் திலீபத்தின் தியாகம்தான்.

இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்படுத்தி நிறுத்தியிருப்பதும் உலகின் உன்னதமான திலீபத்தின் உயிர்த்தியாகம்தான்.
சந்நிதியில் மாவை தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் உண்ணாவிரதம்!

வவுனியாவில் இருந்து நல்லூர் வரை தியாகதீபம் திலீபன் நினைவாக நடைபயணத்திற்கான ஏற்பாடு

தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமையை எதிர்த்து எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் பூரண கர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

யாழில் கூடிய தமிழ்த் தேசிய அணிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் நேற்று மாலை கலந்துரையாடியிருந்தன.
தியாகி திலீபன் நினைவேந்தல் தடையினால் தமிழ் தேசிய கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம்…

நினைவேந்தல் தடையை எதிர்த்து 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்; 28ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக கதவடைப்பு!

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் தீர்மானத்திற்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

தமிழ்தேசிய அரசியல் பரப்பில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் கூடி ஒருமித்த அழைப்பாக தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இச்செய்திகளுக்கு பின்னால் உள்ள பொதுமனப்பாங்கு—

இதனை திலீபனின் ஆத்மாவின் அமானுஷ்ய சக்தியால் நிகழ்வதாக சாதாரண மக்கள் வலுவாக நம்புகின்ற நிலை தோன்றியிருக்கிறது. இதனை ஆழமாக உற்றுநோக்கி ஆராய்ந்தால் பெருமளவு உண்மை பொதிந்து கிடக்கிறது.

அதற்கான காரணங்களை சமூகவியல் சார்ந்து , உளவியல் சார்ந்து ஆராய்ந்த போது திலீபனை தமிழ் மக்கள் எந்தளவு தூரம் ஆழமாக நேசித்தார்கள் என்பதும் அந்த நேசிப்பு அவன் மரணத்தின் பின்னால் தீவிர பக்தியாக மாறி இருப்பதையும், இந்த அளவுகடந்த பக்தியின் வெளிப்பாடு தான் திலீபனின் தியாக நாட்களில் மக்களின் ஆழமான விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அந்த நாட்களில் அடிமனத் தூண்டல்களாக எழுந்து ஒருமித்த கருத்துக்களை தோற்றுவிக்கின்றன.

இங்கே பல்வேறு கருத்துடையவர்கள் அந்தக் காலத்தில் அவர்களுடைய கருத்துக்களில் மாற்றங்கள் செய்வதை அவதானிக்க முடிகிறது. இவையெல்லாம் தமிழ் சமூகத்தின் ஆழ்மன விருப்பங்கள் வழிபாடுகளாக மாறுவதைச் சமூகவியலாளர்கள் நோக்குகின்றனர். எனவே இத்தகைய பக்திக்கும் நேசிப்பிற்கும் உட்பட்டு இருக்கும் ஒரு மனிதனின் இலட்சியங்களை மக்கள் நிச்சயமாக காவிச் செல்வார்கள்.

எனவே அத்தகைய நாட்களில் நடைமுறையில் அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்கள் இந்த சமூகவியல் உண்மைகனைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் இன்றைய காலச் சூழலுக்கு பொருத்தமான வெகுஜன போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக வெறும் ஒன்றுகூடல்களையும் அஞ்சலியையும் செய்திவிட்டு காலம் கடத்தாமல் செயற்பாட்டு அணிகளை உருவாக்க வேண்டும். காலம் தாமதிக்காது உடனடியாக மக்களை களத்தில் இறக்கி செயற்பாட்டில் ஈடுபடவேண்டும். “அவ்வப்போது ஏற்படுகின்ற வாய்ப்புக்களை கையாளுகின்ற கலைதான் அரசியல்” எனவே இருக்கின்ற வாய்ப்புக்களை சரிவர கையாண்டு இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். சிறிய வாய்ப்புக்களையும் தவறவிடாமல் தமிழ் அரசியல் தலைமைகள் அவற்றைக் கையாளவேண்டும்.

இன்றைய அரசியல் சூழலில் தமிழ் தலைமைகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் திடீர் ஒற்றுமை , பரஸ்பர ஒத்துழைப்பு இவையெல்லாம் கால தாமதத்தின் பின் நிகழ்ந்தாலும் இதனையே இப்போது சரிவர கையாள வேண்டும். இத்தகைய மனநிலை தேர்தல் காலங்களில் ஏற்பட்டிருந்தால் சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு துணை போகின்ற அங்கஜன் போன்ற உதிரிகள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

ஆயினும் கடந்த காலங்களை நினைத்து ஏங்குவதைவிட எதிர்காலத்தில் எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் ஒருங்கிணைந்து திலீபனின் முதல் இரண்டு முக்கிய கோரிக்கைகளான

1)திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்தல் ,

2)தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.

என்ற இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி தாயக பரப்பெங்கும் தீவிரமான வெகுஜன போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வெகுஜன போராட்டங்கள் தாயகப் பரப்பையும் தாண்டி சர்வதேச கவனத்தை ஈர்க்க தக்க வகையில் சிங்களத்தின் தலைநகரிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்தகைய போராட்டங்கள் மூலம்தான் இன்று ஏற்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தின் சிதைவையும் சீரழிவையும் தடுக்க முடியும் இதனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலாவது தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் இதயசுத்தியுடன் செயற்படுவதே தியாக தீபம் திலீபனுக்குச் செலுத்தும் உயர்ந்தபட்ச அஞ்சலியாக அமையும்.

 

http://www.ilakku.org/ஆழமான-நேசிப்புக்குரிய-நா/

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபன் இன்னும் பசியோடு உள்ளான் | அப்பப்பா இப்படி ஒரு மன உறுதியா?

 

Link to comment
Share on other sites

ஐரோப்பாவில் தியாகி தீலீபனை உணர்வுடன் நினைவுகூறும் புலம்பெயர் தமிழர்கள்

ஐரோப்பாவின் பல இடங்களிலும் தியாகி திலீபனின் நினைவுகூறல் நிகழ்வுகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் உணர்வுடன் இன்று கலந்துகொண்டார்கள்.

கோவிட் 90 இறுக்கநிலை காரணமாக அந்தந்த நாடுகள் வித்திருந்த விதிகள் கட்டுப்பாடுகளை மதித்தபடி தமிழ் மக்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்கள்.

தமிழர் நல்லூரின் வீதியில் தியாக தீபம் தீலிபன் ஏற்றிய ” தீ “இன்றும் அணையாமல் யேர்மன் தலைநகர் பேர்லினில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

இன்று பிற்பகல் 18:00 குறித்த இடத்தில் வணக்க நிகழ்வும் நடைபெறும் என்று தெரிவிக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/europe/80/151241?ref=home-imp-flag

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனவுணர்வு மிக்க எதிரியின் அழுகுரல் : திலீபனின் நினைவை மறந்தவர்களா ஈழத்தமிழர்கள் ?. இந்த சிவா சின்னப்பொடியின் அழுகுரல் ஒரு தனிமனித அழுகுரல் இல்லை மாறாக இனத்தின் வலி.

இதுபோன்ற உணர்வுமிக்க காணொளி இருந்தால் எமக்கு அனுப்பி வைக்கவும்  

ஒரு ஏதிலியின் அழுகுரல் : நன்றி மறந்தவர்களா நீங்கள் ? : இந்த காணொளியில் முடிவில் உங்கள் கண்கள் அழும்

 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2020 at 18:10, உடையார் said:

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?

காலங்கள் தான் போன பின்னும் காயங்கள் ஆறவில்லை வேதனை தீரவில்லை.

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686
    • தப்பியோடியதற்காக கொடுக்கப்பட்டமேலதிக தண்டனையா? முட்டாள் பயலுக, எங்கே ஓடித்தப்ப நினைத்திருப்பார்கள்?
    • கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை! ”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உடனடியாக விசாரணையை முன்னெடுக்குமாறு” சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Mage Rata அமைப்பின் தலைவரான சஞ்சய மஹவத்தவினாலேயே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் “தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கறுப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த  முனைகின்றார்கள். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய  அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக “ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. அரசியல்வாதிகளின் பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகின்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது” என சஞ்சய மஹவத்த குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1378630
    • கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்! கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் நான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தனக்கும் பேராயர் சபைக்கும் வாய்மொழியாக வாக்குறுதியளித்ததாக கர்தினால் தேரர் இங்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதில்லை எனவும் எந்தவொரு அரசியல் தலைவரும் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1378652
    • சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ)    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.