Jump to content

இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் 10 ஆயிரம் பேரை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் 10 ஆயிரம் பேரை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு!

இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் உட்பட 10 ஆயிரம் பேரை சீனா உளவுப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து உலக நாடுகள் சீனா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், சீனா உளவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பட்டியலின்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி, இந்திய தலைமை நீதிபதி பாப்டே, இராணுவத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 10 ஆயிரம் முக்கிய அதிகாரிகளை சீன உளவுப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு குறித்த விடயம் என்பதால் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்த விசாரணை நடவடிக்கைகளை தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரை நடத்துமாறு கூறப்பட்டுள்ளதுடன், விசாரணை அறிக்கையை 30 நாட்களுக்குள் சமர்பிக்குமாறும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இந்தியாவின்-முக்கிய-அதிக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.