Jump to content

புளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக")


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருடைய  உண்மை முகங்கள் இத்திரியால் அறியப்படும்

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 05:15, கிருபன் said:

மாற்றுக் கருத்துக்களை மதிப்பது எப்படி மதிக்கின்றார்கள் என்பதை யாழ் கள உரையாடல்களிலும், முகப்புத்தக உரையாடல்களிலும் சர்வசாதாரணமாகக் காணும்போதே ஆதாரம் காட்டு என்று கேட்கும் மருதரைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

புலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது தெரிந்தும் நீங்கள் அதைப் பற்றிக் கேட்பது புரியவில்லை.

"புலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள்"

உங்கள் எழுத்துக்கள் தரம்தாழ்ந்து போகிறது கொஞ்சம் கவலை தருகிறது 
மற்றவர்கள் என்ன எழுதினாலும் உங்கள் நிலை மாற்றாது தெளிவுடன் எழுதி வந்தவர் 
நீங்கள். இதை உங்களிடம் இருந்தே உண்மையில் நான் கற்றுக்கொண்டேன் என்றாலும் 
இப்போதும் உணர்ச்சி பொங்கி அள்ளிக்கொட்டி கொள்கிறேன். கொஞ்சம் தனிமனித தாக்குதலில் 
அதிக கவனம் எடுக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் மிக தெளிவாக மேலே எழுதினேன் என்று எண்ணுகிறேன் ஏதாவது விளங்கா விடின் தயவு செய்து என்ன விளங்கவில்லை என்று எழுதினால் திருத்தி எழுத முயற்சி செய்கிறேன். 

மேலே குவாட் பணியாது உண்மையில் சுத்தமாக புரியவில்லை கொக்குபோல ஒற்றைக்காலில் நின்றுகொண்டு 
விளம்பரம் தேட தம்மை முன்நாள்கள் என்று அடையாளம் கொண்டோரின் வாந்திகளை தேடி தேடி இணைப்பவரே நீங்கள்தானே  இங்கு அள்ளிக்கொட்ட பார்த்து கேள்விகள் கேட்க தொடங்க சிலர் ஓடிப்போனார்கள் இப்போ யாரும் கேள்வி கேட்க்க முடியாது ஒழிந்திருந்துகொண்டு சாத்திரம் பார்க்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இதை கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

கொஞ்சம் தனிமனித தாக்குதலில் 
அதிக கவனம் எடுக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் மிக தெளிவாக மேலே எழுதினேன் என்று எண்ணுகிறேன் ஏதாவது விளங்கா விடின் தயவு செய்து என்ன விளங்கவில்லை என்று எழுதினால் திருத்தி எழுத முயற்சி செய்கிறேன். 

மருதர், நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி எல்லாம் என்னால் எழுதமுடியாது. அதற்காக தனிமனித தாக்குதல் என்று சொல்வது எல்லாம் ஓவர். மற்றும்படி நீங்கள் மனம்போனபோக்கில் எழுதுவதில் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை விளங்க உண்மையில் நேரம் எடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 10:49, Kadancha said:

அவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள  வீதியின் பெயர் மாற்றப்பட்டது. 

நான் அறிந்ததே.

இதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.

கொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா? 

 

On 25/10/2020 at 11:42, Kadancha said:

மாத்தையாவை அடையாளம் காட்டியது, signal intelligence என்பதே நான் அறிந்தது.

கடஞ்சா சில விடயங்களை வாசித்துவிட்டு சென்றுவிட வேண்டும் 
நீங்கள் என்ன எழுதினாலும் வேதாள கதை என்றால் மீண்டும் முருங்கை மரத்தில் 
ஏறியே ஆகவேண்டும் வேதாளத்தை தவிர்த்து விக்கரமாதித்தனை எழுத முடியாது
அதி புரிந்துகொள்ள வேண்டும்.

கந்தன் கருணை என்பதை படுகொலை என்பத்துக்குள் கொண்டு வந்ததே புலிகள்தான் 
அவர்களின் கொள்கைப்பாட்டுக்கு எதிரான செயல் என்பதால்தான் அவ்வாறான நிலையே முதலில் 
உருவானது. கந்தன் கருணையில் இருந்தவர்கள் எல்லோரும் அவர்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நின்றபோது அவர்கள் கைதுசெய்து கொண்டு வைத்திருந்தவர்கள். யாரும் அப்பாவிகள் அங்கு இருக்கவில்லை ஆனாலும் அவர்களின் ஒரு தளபதி அவர்களது கொளகையின் பிரகாரம் தப்பு செய்ததாகவே புலிகளின் தலைமை கருதி அவருக்கு தண்டனை கொடுத்தது. 
இது புலிகளால் செய்யப்பட்ட ஒன்றே தவிர ... வேறு யாராலும் புலிகளுக்கு செய்யப்படவில்லை.
புலிகள் வேண்டுமென்றால் தூக்கி தாட்டுவிட்டு போயிருக்க முடியும் ... அவர்களுக்கு எதிராக நின்றவர்களைத்தான் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். 

மாத்தையாவின் விடயம் தெரிந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும் 
அரைகுறைகள் அலட்டுவதை தவிர்த்து வேறு  ஒன்று செய்ய முடியாது. ஆகவே அதை ஒரு பொருட்டாக  
எடுக்கவே தேவை இல்லை. விவாதம் என்பது உங்கள் கருத்தில் என்ன இருக்கிறது என்பதை வாசித்து விளங்கி செய்வது. கருத்து திணிப்பை செய்யும் இடத்தில் நீங்கள் என்ன எழுதினாலும்  மீண்டும் வேதாளத்தை  முருங்கையில்  ஏற்ற முஐடியுமே தவிர வேறு ஒன்றும் நடக்க போவதில்லை .... நேரம் செலவழித்து திரும்ப திரும்ப  எழுத முடியும் அவ்வளவுதான்.   

(நெடுந்தீவு குமுதினி படகை  மறித்து சிங்கள காடைகள் எல்லோரையும் வெட்டினார்கள் அநேகர் எனது உறவினர்கள்  (அப்போது  5 செத்தவீட்டுக்கு ட்ராக்ட்டரில் சென்றது இப்போதும் ஞாபகம்) இதுக்கு பழிவாங்க  திருகோணமலை தளபதி புலேந்திரன் அவர்கள் இன்னும் 17 போராளிகளுடன் ஓர் சிங்கள கிராமத்திற்குள்  புகுந்து பலரை சுட்டு கொன்றார்கள். அதுக்காகத்தான் புலேந்திரன் அவர்கள் திருகோணமலை மாவட்ட தளபதி  என்ற பதவியை பறித்தார்கள் மீதி பேர்கள் 6 மாதம் சமையல் மட்டும் செய்வது என்று தண்டிக்க பட்டார்கள்) 

3 minutes ago, கிருபன் said:

மருதர், நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி எல்லாம் என்னால் எழுதமுடியாது. அதற்காக தனிமனித தாக்குதல் என்று சொல்வது எல்லாம் ஓவர். மற்றும்படி நீங்கள் மனம்போனபோக்கில் எழுதுவதில் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை விளங்க உண்மையில் நேரம் எடுக்கும்.

அப்படி எழுதுபவர் இல்லை நீங்கள் என்றுதானே நானே எழுதி இருக்கிறேன் 
ஆனால் திடீரென இப்போ அப்படிதான் எழுதுகிறீர்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை 
உங்கள் நிலையில் இருந்து தரம்தாழ்ந்து நீங்கள் எழுதுவது இல்லை இப்போ சொல்லவரும் கருத்துக்களே 
புரியாமல் இருக்கிறது தனிமனித தாக்குதலில் அதிகம் கவனம் கொள்கிறீர்களோ என்று சந்தேகம் வருகிறது அதனால்தான். காரணம் நான் வாசிக்கும்போது அப்படி யோசிக்கிறேன் ஒரு வேளை என்னை தாக்கி எழுத்துவத்துக்காக இப்படி எழுதி இருக்கிறாரோ? என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

கனபேருடைய  உண்மை முகங்கள் இத்திரியால் அறியப்படும்

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்து இன்றைய தேதியில் கூட அவர்கள் தமிழினத்திற்கு சார்பானவர்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 12:05, பெருமாள் said:

உங்களைப்பற்றியும் யாரும்  தப்பு தப்பாய் யாரும் வந்து சொன்னால் உடனே மூளையை முழம் காலுக்குள் வைத்துக்கொண்டு நம்பும் ஆள் கிடையாது தீர  விசாரிக்கனும்  என்ற அறிவாவவது இல்லையா ?

அமீர் கொலையை நீங்கள் இங்கே விசாரித்த மாதிரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 11:49, Kadancha said:

அவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள  வீதியின் பெயர் மாற்றப்பட்டது. 

நான் அறிந்ததே.

இதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.

கொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா? 

கடஞ்சா, இயக்கத்தில் வரவு செலவுக்கணக்கில் ஒரு பூச்சியத்தை மாறிப் போட்டவனையே திருவையாறு தும்புத் தொழிற்சாலையில் போட்டு முறித்தெடுத்த உதாரணங்கள் பல! திருமணம் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் களவாகக் காதல் செய்தோர் காணாமல் போயிருக்கின்றனர். 

ஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கடஞ்சா, இயக்கத்தில் வரவு செலவுக்கணக்கில் ஒரு பூச்சியத்தை மாறிப் போட்டவனையே திருவையாறு தும்புத் தொழிற்சாலையில் போட்டு முறித்தெடுத்த உதாரணங்கள் பல! திருமணம் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் களவாகக் காதல் செய்தோர் காணாமல் போயிருக்கின்றனர். 

ஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா?

வெளியில் இருந்துகொண்டு மற்றைய இயக்கத்தில் நடந்த விடயங்களையும் ஆதரமில்லா கட்டுக்கதைகளையும் போட்டு  குழப்பி யடிப்பதில்  உங்களுக்கு நிகர் நீங்களே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

வெளியில் இருந்துகொண்டு மற்றைய இயக்கத்தில் நடந்த விடயங்களையும் ஆதரமில்லா கட்டுக்கதைகளையும் போட்டு  குழப்பி யடிப்பதில்  உங்களுக்கு நிகர் நீங்களே .

இந்த திரியே ஒரு புளட் உறுப்பினர் தனது சொந்த அனுபவத்தை 
எழுதும் திரி இதுக்குள் புலியை கொண்டுவந்ததே அரைகுறைகளை வைத்து 
அவிப்பதுக்குத்தான். வேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும் 
வேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.
இதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு  தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது 
வாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

இந்த திரியே ஒரு புளட் உறுப்பினர் தனது சொந்த அனுபவத்தை 
எழுதும் திரி இதுக்குள் புலியை கொண்டுவந்ததே அரைகுறைகளை வைத்து 
அவிப்பதுக்குத்தான். வேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும் 
வேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.
இதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு  தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது 
வாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான். 

அவங்கள் யரோ செய்த கொடுமையெல்லாம் தங்களின் புலி எதிர்ப்பு புராணத்துக்கு புலி செய்தது என்று நிறுவ முற்படுவது கால கொடுமை. 

அதைவிட தனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் புலி அராஜகம் பண்ணினார்கள் என்று வேறை பம்மாத்து கதைகள் . இவர்களின் கண்ணுக்கு புலி செய்த ஆயிரம் நல்ல விடயங்கள் தெரியாது அவற்றில் கூட பழுது தேடிக்கொண்டு இருக்கும் சைக்கோ மனிதர்கள்.

அர்யுன்  கூட புலி எதிர்ப்பை ஒரு மட்டுக்குள் வைத்து இருந்தார் காரணம் அவரும் ஒரு போராளி அவருக்கு  தெரியும் நடைமுறை சிக்கல்  இதுகள் ஏன்னென்றால் சுடுதண்ணி பாக்கை காலில் கட்டிவிட்டு துள்ளுதுகள் .

யாழில் கிருபன் இணைத்த  அய்யரின் தொடரில் அவரின் கருத்துக்களை  பார்த்தால் விளங்கும் .

24 minutes ago, Maruthankerny said:

வேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும் 
வேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.
இதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு  தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது 
வாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான். 

அவர்கள் களைத்து விட்டார்கள் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா?

உணர்வு இருக்கும் வரையும் தண்டனை ஒருவரை வருத்தி கொடுக்கலாம்.

இறந்த பின்?

ஆனால், அவர் தடுப்பில் வைக்கப்பட்டு, விடுவித்த பின்னும் எல்லா விதமான உரிமைகளும், குப்பி கூட, புலிகளுடன் இணைவதற்கு முதல் தொடர்பில் உள்ளவர் போல நடத்தப்படார்.

இது அவரை உடனடியாக கொன்று இருந்தால் நடந்திருக்காது. அவர் அவமானம் அனுபவித்ததை நீங்கள் நேரே கண்டு இருந்தால் அவர் உயிர் விட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இருக்க கூடும். ஏறத்தாழ நடைப்பிணம். அதுவும் ஏற்கனவே இவர் இப்படி இருந்து இப்படி வந்தவர் என்று, ஏற்கனவே தெரிந்தவர்கள் மத்தியில் இருபது.

ஆனால், வில்லத்த அவர் விரும்பவில்லை. தன் கடைசி மூச்சு கூட இயக்கதுக்கே என்றார். அப்படியே மாவீரர் ஆனர். தண்தன்னை தொடர்கிறது, புலிகள் முற்றாக செயல் இழந்து இருந்தும்.

ஜஸ்டின் மற்றும் இங்கு உள்ள எல்லோருக்கும் சொல்கிறேன், அப்படியான நிலை தனி மனித வாழ்க்கையில் கூட வரக் கூடாது. அரிச்சந்திரன் அரசனுக்கு வந்து அவன் தன் நாடு விட்டு அவன் யார் என்று தெரியாமல் இருந்ததால் சமாளிக்க கூடியதாக இருந்தது என்றே அந்த நேரத்தில் அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

சாதாரணமாக இறப்பு கூட சில வேளைகளில் சிறப்பு உரிமையாக மாறிவிடும். மாத்தையா இதை கேட்டதாக, தான் துரோகியாக இறக்க கூடாது என்றும், பிரபாகரன் அதை ஏறப்படுதக்கூடிய மனநிலையில் இருந்தும், பிரபாகரன் அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்தேன்.

உங்களுக்கு அவர் உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருந்தால் நீதியானதாக இருக்கலாம். அது கூட ஓர் குறிப்பிட்ட நேரம் வரையில் தானே அவரை தாக்கும். அல்லது ஹிட்லர் Jews க்கு செய்த மாதிரி செய்வது பொருத்தம் என்றால், jews க்கு செய்தவர்கள் விளக்கத்தின் பின் உடனடியாக சுட்டே கொல்லப்பட்டனர்.

தண்டனையின் வலிது என்பது இடம், பொருள், காலம், உட்படுபவரின் நிலை என்று பலதை கருத்தில் எது செய்தவரை பலமாக தாகும் என்று கொடுப்பது. ஆனால், இது திட்டமிட்டு கொடுக்கப்பட்டு இருக்காது என்பதே என் கணிப்பு.

இங்கே சொல்வது என் தனிப்பட்ட அனுபவத்தையும் உள்ளடக்கியது (அரிச்சந்திர பந்தி), தண்டனை அல்லாத சூழ்நிலையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலில் சொன்னது, புலிகள் நியாயாதிகத்தையும், இயற்கை நீதியையும், அவர்களை அறியாமலே,  கடுமையாக எடுத்துக் கொண்டனர் அவர்கள் நடத்தையில்.

மற்றது, விட்ட தவறுகள் அவற்றோடு கட்டி வைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kadancha said:

உணர்வு இருக்கும் வரையும் தண்டனை ஒருவரை வருத்தி கொடுக்கலாம்.

இறந்த பின்?

ஆனால், அவர் தடுப்பில் வைக்கப்பட்டு, விடுவித்த பின்னும் எல்லா விதமான உரிமைகளும், குப்பி கூட, புலிகளுடன் இணைவதற்கு முதல் தொடர்பில் உள்ளவர் போல நடத்தப்படார்.

இது அவரை உடனடியாக கொன்று இருந்தால் நடந்திருக்காது. அவர் அவமானம் அனுபவித்ததை நீங்கள் நேரே கண்டு இருந்தால் அவர் உயிர் விட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இருக்க கூடும். ஏறத்தாழ நடைப்பிணம். அதுவும் ஏற்கனவே இவர் இப்படி இருந்து இப்படி வந்தவர் என்று, ஏற்கனவே தெரிந்தவர்கள் மத்தியில் இருபது.

ஆனால், வில்லத்த அவர் விரும்பவில்லை. தன் கடைசி மூச்சு கூட இயக்கதுக்கே என்றார். அப்படியே மாவீரர் ஆனர். தண்தன்னை தொடர்கிறது, புலிகள் முற்றாக செயல் இழந்து இருந்தும்.

ஜஸ்டின் மற்றும் இங்கு உள்ள எல்லோருக்கும் சொல்கிறேன், அப்படியான நிலை தனி மனித வாழ்க்கையில் கூட வரக் கூடாது. அரிச்சந்திரன் அரசனுக்கு வந்து அவன் தன் நாடு விட்டு அவன் யார் என்று தெரியாமல் இருந்ததால் சமாளிக்க கூடியதாக இருந்தது என்றே அந்த நேரத்தில் அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

சாதாரணமாக இறப்பு கூட சில வேளைகளில் சிறப்பு உரிமையாக மாறிவிடும். மாத்தையா இதை கேட்டதாக, தான் துரோகியாக இறக்க கூடாது என்றும், பிரபாகரன் அதை ஏறப்படுதக்கூடிய மனநிலையில் இருந்தும், பிரபாகரன் அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்தேன்.

உங்களுக்கு அவர் உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருந்தால் நீதியானதாக இருக்கலாம். அது கூட ஓர் குறிப்பிட்ட நேரம் வரையில் தானே அவரை தாக்கும். அல்லது ஹிட்லர் Jews க்கு செய்த மாதிரி செய்வது பொருத்தம் என்றால், jews க்கு செய்தவர்கள் விளக்கத்தின் பின் உடனடியாக சுட்டே கொல்லப்பட்டனர்.

தண்டனையின் வலிது என்பது இடம், பொருள், காலம், உட்படுபவரின் நிலை என்று பலதை கருத்தில் எது செய்தவரை பலமாக தாகும் என்று கொடுப்பது. ஆனால், இது திட்டமிட்டு கொடுக்கப்பட்டு இருக்காது என்பதே என் கணிப்பு.

இங்கே சொல்வது என் தனிப்பட்ட அனுபவத்தையும் உள்ளடக்கியது (அரிச்சந்திர பந்தி), தண்டனை அல்லாத சூழ்நிலையில்.

கடஞ்சா, நீண்ட, அக்கறையான பதிலுக்கு நன்றி!

(மேலே நான் திரியை திசை திருப்புவதாக "சட்டம் ஒழுங்கில் அக்கறை கொண்ட" யாழ் உறுப்பினர்கள் விசில் ஊத ஆரம்பித்து விட்டனர்! 😊)

உங்கள் விளக்கங்கள் புலிகளின் கொலைகளை (அல்லது சகோதரப் படுகொலைகளுக்கு கொடுத்த தண்டனைகளை) வித்தியாசமான ஒளியில் காட்டுகின்றன. பிற்காலத்தில் அவர்கள் ஏக இயக்கமாக வந்து இறுதி வரை போராடியதால் retrospective ஆக இந்த நியாயங்கள் இப்போது பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். ஆனால், நான் காலத்தை நீக்கி விட்டு காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க விரும்புகிறேன். அந்தப் பார்வையின் படி, புலிகளின் தமிழமைப்புகள் மீதான வன்முறைகளுக்கும் ஏனைய இயக்கங்களின் வன்முறைகளுக்கும் வேறுபாடுகள் இல்லை எனக் கருதுகிறேன். இந்தக் கருத்தை மாற்றும் எந்த புதிய தகவலையும் நான் இங்கே பெறவில்லை! 

நீங்கள் குறிப்பிட்ட தண்டனையைப் பொறுத்த வரை, புலிகளால் பல்வேறு இயக்க விதி மீறல்களுக்காக வழங்கப் பட்ட தண்டனைகளோடு ஒப்பிடுகையில் இந்த கந்தன் கருணை நிகழ்விற்கான தண்டனையின் கடுமை என்ன என்று மட்டுமே நான் சுட்டிக் காட்டினேன். இது புலிகள் எப்படி சகோதரப் படுகொலையைப் பார்த்தனர் என்று அளவிட உதவியது. மேலும், சில உதாரணங்கள் இருக்கின்றன, சந்தர்ப்பம் வரும் போது சுட்டிக் காட்டுவேன்!

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அவங்கள் யரோ செய்த கொடுமையெல்லாம் தங்களின் புலி எதிர்ப்பு புராணத்துக்கு புலி செய்தது என்று நிறுவ முற்படுவது கால கொடுமை. 

 

இந்த  தொடரை எழுதிக்கொண்டு இருக்கும் புளட் உறுப்பினரே 
1984 களிலேயே தமக்கு புலி வெறுப்பை உண்டாக்க என்ன என்ன செய்தார்கள் என்று எழுதுகிறார் 
சகோதர படுகொலையை யார் தொடக்கினார் எவ்வாறு தொடக்கினார் என்று அவர் எழுதுகிறார்.

இதுக்குள் புலியை கொண்டுவந்து தங்கள் அரைவேக்காட்டு தனங்களை அவிக்க வேண்டும் 
என்பதை தாண்டி இதில் எழுத என்ன இருக்கிறது? 

இதில் எங்காவது புலிகள் வந்து எங்களை கொன்றார்கள் சகோதர படுகொலை செய்தார்கள் என்று 
எழுதி இருக்கிறதா?  எல்லாவற்றுக்கும் நாமே பிள்ளையார் சுழி போட்டோம் என்று அவனே எழுதுகிறான்.
சும்மா தெருவில போறவனுக்கு குடையுது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

retrospective

என்பதுக்கு "சுயபரிசோதனை " என்ற அழகான தமிழ் இருக்க இங்கு ஏன் தேவையில்லாமல் ஆங்கிலம் ?

5 hours ago, Justin said:

நீங்கள் குறிப்பிட்ட தண்டனையைப் பொறுத்த வரை, புலிகளால் பல்வேறு இயக்க விதி மீறல்களுக்காக வழங்கப் பட்ட தண்டனைகளோடு ஒப்பிடுகையில் இந்த கந்தன் கருணை நிகழ்விற்கான தண்டனையின் கடுமை என்ன என்று மட்டுமே நான் சுட்டிக் காட்டினேன். இது புலிகள் எப்படி சகோதரப் படுகொலையைப் பார்த்தனர் என்று அளவிட உதவியது. மேலும், சில உதாரணங்கள் இருக்கின்றன, சந்தர்ப்பம் வரும் போது சுட்டிக் காட்டுவேன்!

சுழிபுரம் படுகொலைகளை நீங்கள்  எப்படி பார்க்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

என்பதுக்கு "சுயபரிசோதனை " என்ற அழகான தமிழ் இருக்க இங்கு ஏன் தேவையில்லாமல் ஆங்கிலம் ?

சுழிபுரம் படுகொலைகளை நீங்கள்  எப்படி பார்க்கிறீர்கள் ?

retrospective என்பதற்கு அர்த்தம் எனக்குத் தெரிந்த தமிழில் "பின்னோக்கி". சுய பரிசோதனை என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு அழகான ஆங்கில அர்த்தம் introspective.  

சில நேரங்களில் உடனே தமிழ் அர்த்தம் தெரியாவிட்டால் கருத்தை தெளிவாக முன்வைக்கும் நோக்கில் ஆங்கிலச் சொல்லைப் பாவிப்பேன், அதை யாழ் விதிகளும் தடுப்பதில்லை என நினைக்கிறேன். உங்களுக்கு இது வேறு மாதிரி விளங்குகிறது என்பதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை! 😊

சுழிபுரம் படுகொலையும் படுகொலை தான், இதில் சந்தேகமென்ன? இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை "காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம்! எனக்கல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பிற்காலத்தில் அவர்கள் ஏக இயக்கமாக வந்து இறுதி வரை போராடியதால் retrospective ஆக இந்த நியாயங்கள் இப்போது பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். ஆனால், நான் காலத்தை நீக்கி விட்டு காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க விரும்புகிறேன்.

முதலாவது, எனது உவத்தலை, காய்தல்  புகுத்தாமலும், அப்படி சமூக அளவில்  உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள்.

எனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல.

நீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது.

காலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்திர காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவங்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன். 

உ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள்  கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.  

இன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது.

மறுவளமாக,  எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத  குறிப்பரை முடிவை பாதிக்கிறது.        

ஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.  

எல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதரப் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர்  கேள்வியும் இருக்கிறது.

ஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில்,  கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய  இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.        

இதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அதன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும். 
  
பிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும்.

மேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று  புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம்  அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.       

இதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில்,  legal frame work உம், due process உம், redress process  உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ  கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.      

மாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹல  அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இல்லா விட்டாலும்,   வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.  

இவை வெளிப்படடையானவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

முதலாவது, எனது உவத்தலை, காய்தல்  புகுத்தாமலும், அப்படி சமூக அளவில்  உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள்.

எனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல.

நீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது.

காலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்திர காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவங்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன். 

உ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள்  கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.  

இன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது.

மறுவளமாக,  எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத  குறிப்பரை முடிவை பாதிக்கிறது.        

ஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.  

எல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதரப் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர்  கேள்வியும் இருக்கிறது.

ஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில்,  கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய  இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.        

இதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அதன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும். 
  
பிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும்.

மேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று  புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம்  அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.       

இதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில்,  legal frame work உம், due process உம், redress process  உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ  கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.      

மாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹல  அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இல்லா விட்டாலும்,   வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.  

இவை வெளிப்படடையானவை.

"இவை வெளிப்படடையானவை."

வெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது 
அதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா?
என்பதில்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கிறது 

என்ற மாதிரிதான் ஊருக்குள் பேசிக்கிறாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

வெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது 
அதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா?

ஏற்றுக் கொள்வதோ இல்லையோ, ஜஸ்டின் கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவளிப்பவர் என்று மதம் பற்றிய திரிகளில் தெரிகிறது. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவரா இல்லையா என்பதை தவிர்ப்போம். 

கிறிஸ்தவ மதம் பழைய ஏற்பாடு  (old testament), புதிய ஏற்பாடு  (new testament) இல் இருந்து கோட்பாட்டுகளை பெறுகிறது.

இதில் old testament மிகவும் வன்முறையானது கடவுளை பொறுத்தவரையில்.  முக்கியமாக, The Law of Moses கொண்டுவரப்பட்ட பின்பே கடவுளின் கோபம், வன்முறை என்பது கடவுலால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள், சட்டதிற்கு வெளியில் உள்ள மக்கள்  மீதும் ஏவப்படுகிறது.

ஆ னால், இரு ஏற்பாடுகளில் (testaments)  இல் இருக்கும் கடவுளும் ஒன்று, வேறு வேறானதல்ல.  

மறுவளமாக, கடவுளும், விதிகள் (Law of Moses) வைத்தே வன்முறையை ஏவுகிறார். எனவே, ஏதோ ஓர் நியாயாதிக்கம் அடிப்படையாக  கொண்டது.

கடவுலால் ஏவப்பட்ட வன்முறையின்  நியாயாதிக்கத்தில் கூட கால குறிப்பரை உள்ளது. இப்பொது, புதிய ஏற்பாடு ஓர் மறுசீரமைப்பாகவே பார்க்கப்படுகிறது. 

அதாவது, கடவுளும், காலம், அனுபவம், பொதுவான மக்களின் உவத்தல், காய்தல்  என்பதால்  நியாயாதிக்கத்தில் ஏற்றப்படும் மாற்றங்களில் இருந்து பொதுவாக விதிவிலக்காக இருக்க முடியவில்லை. 

ஜஸ்டின் சொல்வது படி, பழைய   ஏற்பாட்டில்   (old testament)  இருக்கும் அதே கடவுளை, புதிய ஏற்பாட்டில் இருக்கும் கடவுளின் வடிவத்தின் வழியாக பின்னோட்டமாக பார்க்க கூடாது என்பது ஒன்று. கடவுளே உவத்தல்  காய்தலுக்கு உட்பட்டவராக இருக்கும் போது, மக்கள் இருக்க கூடாது என்பது மற்றது.   

இதில் ஜஸ்டினின் கருத்து என்ன?     

இதுவும் முதல்  பதிவில் சேர்க்க வேண்டும் என்னு நினைத்திருந்தேன், ஆனால்  மறந்து விட்டேன்.

இதுவும் முதல்  பதிவில் சேர்க்க வேண்டும் என்னு நினைத்திருந்தேன், ஆனால்  மறந்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 11)

torture.jpg

 

சித்திரவதையால் மயங்கினேன். சிறுநீரோ இரத்தமாகவே சென்றது...

இரண்டாம் நாள் பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன? ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை? எங்களை புதைக்கப்போறாங்களா? சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா? இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர்தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.

எம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும் வாமதேவனும் வழமை போல எமது முகாமிற்குசென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்களிடம் விசாரித்து, அவர்களை கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர்.

இதனால் அந்த முகாமை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன்ற் என்ற பெயரில் "பீ" முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்ற தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை ஒரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள் எனக்கு தெரியவில்லை.

அவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர் வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும் தமது உயிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள் பல அடாவடித்தனங்களுக்கு துணை போனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள்.

இவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர் உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற தோழர் எனக்கு நீண்ட காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்ரரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர். ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர் வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள்..! 

உண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காது சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர் இன்று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.

இரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் மற்றும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதானஇராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் பற்றிய கருசனை அற்ற, தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இன்று பாரிய துயர் கொண்டதாகவிருக்கிறது .

அவர்கள் அறுவரும் வந்து இறங்கியதும், மிகுந்த சத்தத்துடன் "வாங்கடா வெளியாலை" என்று கத்தினர். உள்ளுக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையாள் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் "வாங்கோடா வெளியாலை" என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம் போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் ஒருவர் ஒருவராக வெளியில் வர வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் "கீழே படுங்கடா.." "கிறவ்லிங் செய்யடா.." என்று சத்தம் போட்டபடி இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஓங்கி ஒரு அடி வீழ்ந்தது. "ஐயோ அம்மா" என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான்.

நாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை காவலுக்கு போட்டிருந்தனர். அவர்களும் சுற்றி இருக்க எமக்கு "பூஜை" ஆரம்பமாகியது.

ஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்துக் களைப்பாறிய பின் வந்து அடித்தனர்.

என்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வாமதேவன். இவர்கள் இருவரும் "என்னடா, நீ பெரியய்யாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி" என்று சொல்லி ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள்.

நானுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்ரனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு அடிகளுக்குத் தப்பித்து ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்குகாரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்தது தான். ஆனால் எம்மளவுக்கு இல்லை.

அடுத்து சோசலிசம் சிறி. அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணிநேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை.

மற்றவர்களை பார்த்தபோது, அன்ரனியின்தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கிக் கொண்டு எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்றவர்கள் இருவர் என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர். எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது. 

இரவு அடிக்கும் போது காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று பலர்பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு, எந்த வகையில், அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையால் அரைமயக்க நிலையிலுமே கழிந்தது. எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக எமது கல்வி, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரச எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதைச் சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக்கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலை வெறி இராணுவமா? இல்லை! இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட இவர்கள் எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்!

தொடரும்

 

http://poovaraasu.blogspot.com/2020/11/11.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 21:16, கிருபன் said:

புளாட் வதை முகாமில் நான் - சீலன் ("வெல்வோம்-அதற்காக" - பகுதி 11)

torture.jpg

 

சித்திரவதையால் மயங்கினேன். சிறுநீரோ இரத்தமாகவே சென்றது...

இரண்டாம் நாள் பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன? ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை? எங்களை புதைக்கப்போறாங்களா? சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா? இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர்தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.

எம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும் வாமதேவனும் வழமை போல எமது முகாமிற்குசென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்களிடம் விசாரித்து, அவர்களை கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர்.

இதனால் அந்த முகாமை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன்ற் என்ற பெயரில் "பீ" முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்ற தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை ஒரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள் எனக்கு தெரியவில்லை.

அவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர் வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும் தமது உயிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள் பல அடாவடித்தனங்களுக்கு துணை போனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள்.

இவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர் உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற தோழர் எனக்கு நீண்ட காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்ரரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர். ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர் வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள்..! 

உண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காது சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர் இன்று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.

இரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் மற்றும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதானஇராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் பற்றிய கருசனை அற்ற, தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இன்று பாரிய துயர் கொண்டதாகவிருக்கிறது .

அவர்கள் அறுவரும் வந்து இறங்கியதும், மிகுந்த சத்தத்துடன் "வாங்கடா வெளியாலை" என்று கத்தினர். உள்ளுக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையாள் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் "வாங்கோடா வெளியாலை" என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம் போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் ஒருவர் ஒருவராக வெளியில் வர வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் "கீழே படுங்கடா.." "கிறவ்லிங் செய்யடா.." என்று சத்தம் போட்டபடி இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஓங்கி ஒரு அடி வீழ்ந்தது. "ஐயோ அம்மா" என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான்.

நாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை காவலுக்கு போட்டிருந்தனர். அவர்களும் சுற்றி இருக்க எமக்கு "பூஜை" ஆரம்பமாகியது.

ஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்துக் களைப்பாறிய பின் வந்து அடித்தனர்.

என்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வாமதேவன். இவர்கள் இருவரும் "என்னடா, நீ பெரியய்யாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி" என்று சொல்லி ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள்.

நானுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்ரனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு அடிகளுக்குத் தப்பித்து ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்குகாரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்தது தான். ஆனால் எம்மளவுக்கு இல்லை.

அடுத்து சோசலிசம் சிறி. அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணிநேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை.

மற்றவர்களை பார்த்தபோது, அன்ரனியின்தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கிக் கொண்டு எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்றவர்கள் இருவர் என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர். எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது. 

இரவு அடிக்கும் போது காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று பலர்பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு, எந்த வகையில், அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையால் அரைமயக்க நிலையிலுமே கழிந்தது. எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக எமது கல்வி, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரச எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதைச் சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக்கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலை வெறி இராணுவமா? இல்லை! இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட இவர்கள் எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்!

தொடரும்

 

http://poovaraasu.blogspot.com/2020/11/11.html

இதை படிக்கும்போது இவர்களை தடை செய்தது நியாயமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

இதை படிக்கும்போது இவர்களை தடை செய்தது நியாயமே .

புலிகள் ஒழுங்காக இருந்து இருந்தால் 
ஏன் அவர்கள் சக போராளிகளை இப்படி சித்திரவதை செய்ய போகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

புளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது

ஏன் உங்க அண்ணன் எழுதுவதுக்கு யார் தடை ?

இவ்வளவு நாளும் புலிகளை விமரிசித்தது  ட்ரெயினிங் போய்  செய்ய முடியாமல் ஓடி வந்ததுகளும் .செட்டி இருக்கும்வரை பிரபாகரனை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்து செட்டியை துரோகியாக்கிய அய்யரும்  கப்பலில் இந்தப்பக்கத்தால் ஏறி அடுத்த பக்கத்தால் இறங்கி கப்பல் கதைகள் அடிப்பவர்களின்  கதையும் தானே பார்த்தநீங்கள் உண்க அண்ணனை  கதை எழுத சொல்லுங்க பார்ப்பம் .

ஆனால் நீங்க விரும்பியமாதிரி எழுதமாட்டார் என்று தெரியும் .😄

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

புளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது

 

1 hour ago, பெருமாள் said:

ஏன் உங்க அண்ணன் எழுதுவதுக்கு யார் தடை ?

இவ்வளவு நாளும் புலிகளை விமரிசித்தது  ட்ரெயினிங் போய்  செய்ய முடியாமல் ஓடி வந்ததுகளும் .செட்டி இருக்கும்வரை பிரபாகரனை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்து செட்டியை துரோகியாக்கிய அய்யரும்  கப்பலில் இந்தப்பக்கத்தால் ஏறி அடுத்த பக்கத்தால் இறங்கி கப்பல் கதைகள் அடிப்பவர்களின்  கதையும் தானே பார்த்தநீங்கள் உண்க அண்ணனை  கதை எழுத சொல்லுங்க பார்ப்பம் .

ஆனால் நீங்க விரும்பியமாதிரி எழுதமாட்டார் என்று தெரியும் .😄

ஏற்கனவே புலிகள் அமைப்பில் நடைபெற்ற பல வெளியே தெரியாத பல விடயங்களை/   சாத்திரி என்ற புலி போராளி  வழங்கிய பேட்டியில் விரிவாக கூறி உள்ளார். அது இந்த யாழ் களத்திலயே பதிவில் உள்ளது.  நியாயத்திற்கு மீறிய கொலைகள் என்று பார்த்தால் இயக்க வேறுபாடு இன்றி எங்கும் நடைபெற்று தான் உள்ளது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.