Jump to content

அங்கேயும் அதே கதை தான்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சார கமிட்டி.. கர்நாடகாவிலும் கலக குரல்.. தென்னிந்தியர் புறக்கணிப்பு.. குமாரசாமி கொந்தளிப்பு

பெங்களூரு: நாட்டில் 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்தை கண்டறிவதற்கு 16 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் கமிட்டியில் கன்னடர் அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழிகளில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. பெண் உறுப்பினரும் ஒருவர் கூட இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சகம் 12000 ஆண்டுகளுக்கும் முந்தைய நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கண்டறிவதற்கு என்று 16 பேர் கமிட்டியை நியமனம் செய்துள்ளது. நாட்டின் துவக்க காலத்தில் இருந்த பண்பாடு மற்றும் இதன் பரிணாம வளர்ச்சியை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு இந்தக் கமிட்டி ஆய்வு செய்யும்.

ஆட்சேபம் இந்தக் கமிட்டிக்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ''இந்தக் கமிட்டியில் ஒருவர் கூட கன்னடர் இல்லை. திராவிட பண்பாடு தெரிந்த தென்னிந்தியர்களும் ஒருவர் கூட இந்தக் கமிட்டியில் இடம் பெறவில்லை.

ஒருதலைப்பட்சம் கன்னடிகர் ஒருவர் கூட இல்லாமல் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒருதலைப்பட்சமானதாக இருக்கும். தென்னிந்தியர்களை ஒதுக்கி வைத்து, ஒட்டுமொத்த நாட்டின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் படிப்பது குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க முடியும்?

பெண் இல்லை நமது நாட்டை நம் தாயுடனும் புனிதமான பசுவுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் நாம். ஒரு பெண் கூட கமிட்டியில் இடம் பெறாமல் எவ்வாறு இந்தக் கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும்.

மறுசீரமைப்பு ஆய்வின் குறிக்கோள் குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்தக் கமிட்டி முழுக்க முழுக்க கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் பாரபட்சம் கொண்டதாக இருக்கிறது. இந்தக் கமிட்டியில் வடஇந்தியர்கள் தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். ஆய்வுக் குழுவை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிட கலாச்சாரம் இவரது ட்வீட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து பதிவு செய்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் பழமையானது திராவிட கலாச்சாரம். பாரபட்சமாக இந்தக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் கமிட்டியை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தென்னிந்தியர்களுக்கான எச்சரிக்கை மணி இது என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் 16 உறுப்பினர்களைக் கொண்ட கலாச்சார நிபுணர்குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய கலாச்சார - சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித், டாக்டர் ஆர்.எல்.பிஷ்த், டாக்டர் பி.ஆர்.மணி, பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, பேராசிரியர் மக்கன்லால், டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஷவ, நீதிபதி முகுந்த்காந்த் சர்மா, பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, பேராசிரியர் ஆர்.சி.சர்மா, பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டாக்டர் பல்ராம்சுக்லா, பேராசிரியர் ஆஷாத் கௌசிக், பண்டிட் எம்.ஆர்.சர்மா, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவைகளின் இரண்டு பிரதிநிதிகள் ஆகியோர்களை இக்குழுவின் உறுப்பினர்களாகவும் நடுவண் அரசு அறிவித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/no-kannadigas-or-south-indians-in-the-committee-to-study-12000-years-indian-culture/articlecontent-pf487727-397928.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பிரகலாத்சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித், டாக்டர் ஆர்.எல்.பிஷ்த், டாக்டர் பி.ஆர்.மணி, பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, பேராசிரியர் மக்கன்லால், டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஷவ, நீதிபதி முகுந்த்காந்த் சர்மா, பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, பேராசிரியர் ஆர்.சி.சர்மா, பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டாக்டர் பல்ராம்சுக்லா, பேராசிரியர் ஆஷாத் கௌசிக், பண்டிட் எம்.ஆர்.சர்மா

மேலிருந்து வரிசை கிரமமாக ,

படேல் , தீட்சித், சுக்லா, பாண்டே, லால் , சர்மா , மிஸ்ரா ,சாஸ்திரி ,கோஸிக், பண்டிட் .. ஆரிய தூண்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

கலாச்சார கமிட்டி.. கர்நாடகாவிலும் கலக குரல்.. தென்னிந்தியர் புறக்கணிப்பு.. குமாரசாமி கொந்தளிப்பு

பெங்களூரு: நாட்டில் 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்தை கண்டறிவதற்கு 16 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் கமிட்டியில் கன்னடர் அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழிகளில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. பெண் உறுப்பினரும் ஒருவர் கூட இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இலங்கையிலும், இந்தியாவிலும்.. மிக வேகமாக, 
சரித்திரங்களை  அழிக்கும் வேலையை  ஆரம்பித்துள்ளார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.