Jump to content

இராணுவ பின்னணியை கொண்டவரிடம் நிறைவேற்று அதிகாரம் சென்றால் பாரிய ஆபத்து - ராஜித்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(செ.தேன்மொழி)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரம், இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று இடம்பெற்றது. 

இதன்போது கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தமட்டில் அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலில் முன்னேறி வந்தவர்.  நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள இவர் மக்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தை கொண்டு செயற்படுபவர். 

இந்நிலையில் எவ்வாறு மக்களின் விருப்பத்தை வெற்றிக் கொள்வது , எந்த சந்தர்ப்பத்தில் மக்கள் நாட்டின் தலைமைத்துவத்தின் மீது வெறுப்புக் கொள்வார்கள் என்ற விடயங்கள் தொடர்பில் நன்கு அறிந்துக் கொண்டுள்ளவர். 

அதனால், இவருக்கு இத்தகைய அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றால் , அதில் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் , ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் கையில் கிடைக்கப் பெற்றால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கூறமுடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/90135

Link to comment
Share on other sites

தெரிந்துதானே சிங்களவர்கள் ஆட்சியை கையில் கொடுத்துள்ளார்கள், இனி நாடு இந்தியாவிடமா சீனாவிடமா என் சில வருடங்களில் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, செண்பகம் said:

தெரிந்துதானே சிங்களவர்கள் ஆட்சியை கையில் கொடுத்துள்ளார்கள், இனி நாடு இந்தியாவிடமா சீனாவிடமா என் சில வருடங்களில் தெரியும் 

இதில் என்ன சந்தேகம் சீனாவிடம் தான்

Link to comment
Share on other sites

உங்களுக்கு கிடைத்த 4வருடங்களை பயன்படுத்தி நேர்மையாக வேலை செய்திருந்தால் இந்த இழி நிலை மீண்டும் வந்திருக்குமா? ஊழல் அற்ற ஆட்சி நடத்தி; ராஜபக்‌ஷக்கள் மீது ஒழுங்கான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இப்ப முழு குடும்பமும் உள்ளுக்க இருந்திருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Dash said:

ராஜபக்‌ஷக்கள் மீது ஒழுங்கான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இப்ப முழு குடும்பமும் உள்ளுக்க இருந்திருக்கும்.

 

இவர்கள் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டதால்,  அவர்களை விட இவர்களே கூடிய ஊழல் வாதிகள் அதனாற்தான் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என மக்கள் நினைத்து,  தெரியாத தேவதையை விட தெரிந்த வேதாளமே சிறந்ததென  தெரிந்து விட்டிருக்கிறார்கள். கொஞ்சம் பொறுங்கள், லபோ... லபோ என்று வாயிலும், வயித்திலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.