Jump to content

சீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான்.

``உறவுகளே’’

சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?

கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ மேடைகளில் பகுத்தறிவு, தமிழின உணர்வு, ஈழ ஆதரவு, சாதி மறுப்பு ஆகியவற்றைப் பேசக்கூடிய பேச்சாளராக அரசியல் உலகத்துக்கு அறிமுகமானார் சீமான்.

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான். திராவிடக் கட்சிகளின்மீது அதிருப்தியில் இருந்தவர்கள், 2009-க்குப் பிறகு ஈழ ஆதரவு அரசியலைப் பேசிய இளைஞர்கள் என இருதரப்பினரையும் தன் பேச்சால் கவர்ந்தார் சீமான்.

2012-ல் வெளியிடப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி ஆவணம்’, தமிழ்பேசும் சாதிகள்தான் தமிழர்கள் என்று வரையறுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர், மலைவாழ் மக்கள், உருது பேசும் முஸ்லிம்கள் எனப் பலரையும் தமிழர் அடையாளத்திலிருந்து தள்ளிவைத்தது, ‘கன்னடரான பெரியார் தமிழர்களின் விரோதி’ என்று நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்தது, ‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்’, ‘சிங்களர்களால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, எங்கள் ஆட்சியில் ஐம்பதாயிரம் பேரைக் கொண்ட சிறப்புக் காவல் படை அமைப்போம்’ என்றெல்லாம் அவ்வப்போது அதிரடிக்கருத்துகளை அள்ளிவிடுவது, பகுத்தறிவு பேசிய சீமான் திடீரென்று ‘வீரத்தமிழர் முன்னணி’யை ஆரம்பித்து, ‘முப்பாட்டன் முருக’னுக்குக் காவடி தூக்கியது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியது ‘நாம் தமிழர்.’

சீமான்
 
சீமான்

இவையெல்லாம்கூட கொள்கை அடிப்படையில் சீமானிடம் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால் சீமான் தன் பிம்பத்துக்குத் தானே குழி தோண்டியது, ஈழம் - பிரபாகரன் சந்திப்பு குறித்த பேச்சுகளின்போதுதான். ‘அண்ணன் என்னை ஆமைக்கறி சாப்பிடச் சொன்னார்’, ‘பிரபாகரன் நாற்பதாயிரம் டன் உள்ள ஆஸ்திரேலிய அரிசிக்கப்பலை சுட்டுப்பழகப் பயிற்சி கொடுத்தார்’, ‘பிரபாகரன் நான் சாப்பிடும்போது என்னென்ன சாப்பிடுகிறேன் என்று குறிப்பெழுத ஒருவரை நியமித்தார்’, ‘பொட்டு அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லியை உடைத்துப்பார்த்தால் உள்ளே கறி இருந்தது’ என்றெல்லாம் அவர் பேசிய பேச்சுகள் சீமானைக் கேலிப்பொருளாக்கின. 30 ஆண்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்தை ‘தமிழீழ முனியாண்டி விலாஸ்’-ஆக சீமான் மாற்றுகிறார் என்று குற்றச்சாட்டுகள் வலுத்தன. ‘சீமான் தன்னை மட்டுமல்ல, பிரபாகரனையும் சேர்த்து கேலிப்பொருளாக மாற்றுகிறார்’ என்று ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்தன. ‘`சீமான் பொய் சொல்கிறார். அவர் பிரபாகரனைச் சந்தித்ததே எட்டே நிமிடங்கள்தான்” என்றார் வைகோ. கொளத்தூர்மணியும்் சீமானின் ‘தமிழீழ சமையல் சாதம், ஆமைக்கறி பிரமாதம்’ பேச்சுகளை மறுத்தார். இதனாலேயே சீமான் கடும் கண்டனங்களும் கிண்டல்களுக்கும் ஆளானார். சரி, இப்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாணசுந்தரமும் ராஜிவ்காந்தியும் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்?

‘தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் வசூலிக்கப்பட்ட நிதிக்கு முறையான கணக்குவழக்குகள் இல்லை. ‘மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது’ என்று மேடையில் பேசிவிட்டு சீமான் மது அருந்துகிறார், புகைபிடிக்கிறார். நாங்கள் போன் செய்தால் சீமான் எடுப்பதில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் அனுப்புவதில்லை.’ இதற்கு சீமானின் பதில்கள் என்ன? `அவர்கள் என் மனதைப் புண்படுத்தியதால்தான் நான் போனை எடுப்பதில்லை. அவர்கள் கட்சியை வளர்க்கவில்லை, அவர்களைத்தான் வளர்த்துக்கொண்டார்கள். ஃபேஸ்புக்கில் எனக்கு எதிராகப் போடப்படும் பதிவுகளை அவர்கள் தடுப்பதில்லை.’

மொத்தச்சண்டையே ‘சிகரெட் குடிக்கிறார், ஃபேஸ்புக் பதிவு, போனை எடுக்கவில்லை’ என்கிற தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாக இருக்கின்றனவே தவிர, கொள்கைரீதியிலான பிரச்னைகளாகத் தெரியவில்லை. ``சீமானிசத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள்’’ - இது சீமானின் ஆதங்கம். “நாங்கள் பிரபாகரனிசத்தைத்தான் ஏற்போம்’’ - இது கல்யாணசுந்தரத்தின் பதில்.

சீமான்
 
சீமான்

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளே ‘பிரபாகரனிசம்’ என்று எதையும் முன்வைத்ததில்லை. சமூகத்தின் பிரச்னைகளுக்கான காரணங்கள், அதன் இயங்குநிலை, தீர்வுகள் குறித்த தத்துவப்பார்வைகளே ‘இயம்’ என்று அழைக்கப்படுகின்றன. மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என்பவை இந்த அடிப்படையிலானவைதான். தத்துவத்தைச் செயல்படுத்துபவர்கள், போராளிகள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பெயரால் சேகுவேராயிசம், காஸ்ட்ரோயிசம், நல்லகண்ணுயிசம் என்றெல்லாம் அழைக்கப்படுவதில்லை. எனவே, ‘சீமானிசமா, பிரபாகரனிசமா’ சண்டைகளில் எந்த அர்த்தமும் இல்லை.

மேடைகளில் சீமானின் உடல்மொழியிலேயே பேசும் கணிசமான இளைஞர்களைச் சீமான் உருவாக்கியிருக்கிறார்.சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, கொசுபேட் அடிப்பதைப்போல சட்டென்று கைகளை உள்வாங்கி, மைக் உள்ள மேஜையில் அடித்து உரத்த குரலெழுப்பிப் பேசுவது, ஜெபக்கூட்டத்தின் ரிதத்தில் அமைந்த ஏற்ற, இறக்கப் பேச்சுகள் என்று அப்படியே டிட்டோ சீமான்கள். ஆனால் அவர்களுக்கான எதிர்காலப் பாதைதான் என்ன?

‘பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தவர் போட்டி’ ‘கூட்டணி இல்லை’, ‘மகளிருக்கு 50 சதவிகித இடங்கள்’ ஆகிய சீமானின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவை. ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் 1969-ல் இருந்து இங்கே பெரிய கட்சிகள்கூட கூட்டணி வைத்தே வெற்றிபெற்றிருக்கின்றன. (2014 ‘மோடியா, லேடியா’ நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது மட்டும் விதிவிலக்கு) நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி அதிகரிக்கிறது, சில இடங்களில் மூன்றாம் மற்றும் நான்காமிடம் கிடைக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போதாது. ஒவ்வொரு தேர்தலிலும் செலவழித்து, பணமிழந்து அதன்பின் ஒதுங்கிப்போகிற நாம் தமிழர் தம்பிகள் எத்தனையோ பேர்!

தேர்தல் அரசியலிலும் நடைமுறை எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. லட்சியவாதத்திலும் சாத்தியமற்ற, நம்ப முடியாத பேச்சுகளால் கிண்டலுக்கு ஆளாகும் நிலை. தன்னை நம்பிவந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் நம்பிக்கைக்கும் எதிர்காலத்துக்கும் சீமானிடம் என்ன தீர்வுகள் இருக்கின்றன? ஒதுங்கிப்போன உறவுகளுக்கு உள்ளூர இந்தக் கேள்விகள் இருந்திருக்கும்.

நன்றி
விகடன்
https://www.vikatan.com/government-and-politics/politics/naam-tamilar-katchi-inter-party-issue-seemanism-vs-prabhakaranism

 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Justin said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!😎

உங்கடை கருத்தை வையுங்க தனிப்பட்ட தாக்குதலை செய்யாதீங்க நீங்க செய்வது உங்களுக்கே தெரியும் நல்லது இல்லை என்று ........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உங்கடை கருத்தை வையுங்க தனிப்பட்ட தாக்குதலை செய்யாதீங்க நீங்க செய்வது உங்களுக்கே தெரியும் நல்லது இல்லை என்று ........................

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

அவர் எழுதிய வசனத்தை இடைவெளி விடாது வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள்.    💐 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

பிழம்பர் தீனி போட்டா நீங்க ஏன் திங்க போறீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிசம் - சீமானிசம் இரண்டும் யாதெனில் ? | முனைவர். செந்தில்நாதன் | Tamizham

பிரபாகரன் என்ற பெருந்தலைவர் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களை சிங்கள இனவெறி தொடுத்த தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றிய இறைவனாக எங்கள் தலைவர் பிரபாகரனின் மக்கள் காப்பு அணுகுமுறை பிரபாகரனிசம்.

அந்த மாபெரும் தலைவனை பின்தொடர்ந்து தமிழ் நிலத்தில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போரை தொடுத்து வரும் நாம்தமிழர் கட்சியை உருவாக்கி கொள்கையை வகுத்து வரும் அண்ணன் சீமான் அவர்களின் கொள்கை சீமானிசம்.

பிரபாகரனிசம் என்பது ஆலமரம் சீமனிசம் என்பது அதன் விழுது 

பிரபாகரனிசம் என்பது சூரியன் சீமனிசம் என்பது சூரியனில் இருந்து ஒளிபெறும் நிலவு.

 

https://yarl.com/forum3/topic/195447-நாம்-தமிழர்-அரசியல்-பாகம்-2/page/96/

இனி கதைப்பவர்கள் மேலே உள்ள காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு கருத்திடவும்.. அல்லது எல்லோரும் அரைகுறை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

கண்டு கொள்ளாதையுங்கோ! அது பெருமாளுக்கு மட்டும் தெரியும் ஒரு தோற்றம், இப்ப உங்களுக்குத் தெரியாது!

(இங்க கன பேருக்கு பிழம்பர் யாரெண்டு தெரியாது, அது தான் நான் அவரைத் தாக்குகிறேன் என தவறாக நினைக்கக் காரணம்!)

Link to comment
Share on other sites

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ஈழவிடுதலை பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி பகிர்ந்த விடயம். போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது அடியே அடியே சந்திரிகா என்று அறிவுமதி எழுதிய பாடல் பிரபாகரனின் மேற்பார்வைக்கு சென்றபோது என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண் அல்லவா இப்படி அவமதித்து எழுத கூடாது என்று பாடலை நிராகரித்து விட்டாராம். அறிவுமதி பிறகு பாடலை மாற்றி எழுதியதாக கூறினார்.

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு. தொலைக்காட்சி விவாதங்களில் கூட சக கருத்தாளர்களுடன் ஒருமையில் அசிங்கமாக பேசி தொலைக்காட்சி நெறியாளரால் கண்டிக்கப்பட்ட  நபர் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கட்டுரையில் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டவில்லை. கம்யூனிசம் என்ற ஒரு குடையின் கீழ் ரஷ்யாவைக் கொண்டு வந்த பிறகு, சில தலைவர்கள் தங்களை மையப் படுத்திய சித்தாந்தங்களை லெனினிசம், ஸ்ராலினிசம், ட்ரோக்கியிசம் என்று நடைமுறைப்படுத்தினர் அல்லது ஊக்குவித்தனர். அதுவே கம்யூனிசம் கெட்ட பெயரெடுக்க முதல் காரணம். ரஷ்யாவின் வரலாற்றைப் பார்த்தால் ஸ்ராலினிசத்திற்குப் பின்னர், "குருஷேவிசம்" என்ற ஒன்றை நிகிரா குருஷேவ் அறிமுகம் செய்ய முயலவில்லை! வரலாற்றியலாளர்கள் குருஷேவிசம் என்று குறிப்பிடுவது "ஸ்ராலினிசத்திலிருந்து விலகிச் செல்லும் dismantling Stalinism என்பதைத் தான்" . இதனால் தான் இந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவினால் நேட்டோவுடன் தாக்குப் பிடித்து கம்யூனிசத்தை வேறு பல நாடுகளிலும் பரப்பவும் முடிந்தது.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது தான்: ஒரு தனிமனித வழிபாட்டை அடிப்படையாக் கொண்ட சமூக இயக்கம் ஒரு நாளும் நன்மையில் முடியாது! முட்டையையெல்லாம் ஒரே பாத்திரத்தில் வைத்து விட்டு, பாத்திரம் சுக்கு நூறாய்ச் சிதறிய பிறகு முதல் சதுரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ஈழவிடுதலை பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி பகிர்ந்த விடயம். போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது அடியே அடியே சந்திரிகா என்று அறிவுமதி எழுதிய பாடல் பிரபாகரனின் மேற்பார்வைக்கு சென்றபோது என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண் அல்லவா இப்படி அவமதித்து எழுத கூடாது என்று பாடலை நிராகரித்து விட்டாராம். அறிவுமதி பிறகு பாடலை மாற்றி எழுதியதாக கூறினார்.

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு. தொலைக்காட்சி விவாதங்களில் கூட சக கருத்தாளர்களுடன் ஒருமையில் அசிங்கமாக பேசி தொலைக்காட்சி நெறியாளரால் கண்டிக்கப்பட்ட  நபர் சீமான்.

சீமான் பேசிய அந்த பேச்சை கேட்டீர்களா???

நான்  முழுமையாக கேட்டேன்

அவர் தலைவரை உயர்த்தித்தான்  பேசுகிறார்

ஆனால்  நான்  அவரளவுக்கு நல்லவனல்ல  என்கிறார்

இத  சாதாரணமாக யாரும் சொல்வது தான்...

நானும்  சொல்வேன்

நான் தலைவரது இடத்தில்  இருந்திருந்தால்

அரைவாசி  சிங்களவரையாவது  அழித்திருப்பேன்   நாட்டைப்பிடித்திருப்பேன் என்று.

அந்தளவுக்கு பலமும் வளமும் தலைவரிடமிருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

சீமான் பேசிய அந்த பேச்சை கேட்டீர்களா???

நான்  முழுமையாக கேட்டேன்

அவர் தலைவரை உயர்த்தித்தான்  பேசுகிறார்

ஆனால்  நான்  அவரளவுக்கு நல்லவனல்ல  என்கிறார்

இத  சாதாரணமாக யாரும் சொல்வது தான்...

நானும்  சொல்வேன்

நான் தலைவரது இடத்தில்  இருந்திருந்தால்

அரைவாசி  சிங்களவரையாவது  அழித்திருப்பேன்   நாட்டைப்பிடித்திருப்பேன் என்று.

அந்தளவுக்கு பலமும் வளமும் தலைவரிடமிருந்தது

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! அவ்வாறான நிதானம் பேச்சில் கூட இல்லாதவரைச் சுற்றி ஈழத்தின் தமிழ் தேசிய அரசியலை பின்னுவதைத் தான் நான் எதிர்க்கிறேன். "சீமானிசத்தில்"  இருந்து ஈழவருக்கு ஒரு நன்மையும் வராது! சீமானுக்கு நன்மை வரலாம், நமக்கு வராது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு.

சரியாக சொன்னீர்கள்.
நேற்று யாழ்கள கருத்தாளர்  இப்படி பேசும் இனவெறி சீமானை நாடுகளில் உள்ள பசுமைவாத கட்சிகளோடு ஒப்பிட்டதும் கவலையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! அவ்வாறான நிதானம் பேச்சில் கூட இல்லாதவரைச் சுற்றி ஈழத்தின் தமிழ் தேசிய அரசியலை பின்னுவதைத் தான் நான் எதிர்க்கிறேன். "சீமானிசத்தில்"  இருந்து ஈழவருக்கு ஒரு நன்மையும் வராது! சீமானுக்கு நன்மை வரலாம், நமக்கு வராது! 

உங்களது கருத்தை 

பார்வையை ஏற்றுக்கொள்கின்றேன்

ஆனால்  மேடைப்பேச்சுக்களில்

அதிலும்   தமிழக அரசியல்  மேடைகளில்  பேசப்படுபவை எதையும்

நான் வேத  வாக்காக

அல்லது நடைமுறைக்கு உகந்ததாக

அல்லது செயற்பாடுடையதாக எடுத்துக்கொள்வதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடீயோவின் முன்னும், பின்னும் வெட்டி சொல்ல வந்த கருத்தினை மடை மாத்தி..... இந்த கபடம் இன்னும் முடியவில்லை.

🤦‍♂️😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்ஸிசம்.. லெனினிசம்.. ரஷ்சியாவை தாண்டி.. எல்லாம் பேசப்படும் போது..போற்றப்படும் போது.. பிரபாகரனிசம்.. சீமானிசம்.. ஏன் பேசப்படக் கூடாது.. போற்றப்படக் கூடாது.

பிரபாகரனிசம்.. சீமானிசத்தின் கருவறை.. தாய் என்பது தான் யதார்த்தம். அதை யாரும் நிராகரிக்கவில்லை.

பிரபாகரனிசம்.. இருப்பதால்.. சீமானிசம்.. பிறப்பெடுக்கவே கூடாது என்றால்..

மார்க்ஸிசம்.. இருப்பதால்.. லெனினிசம்..பிறந்தே இருக்கக் கூடாது என்று வாதம் வைத்தால்.... என்னாகும்.. ??!

வாதம் வைச்சாலும்.. இசங்கள் பிறப்பெடுப்பது மக்களின் உரிமை மீட்பில் இருந்து உருவெடுக்கிறது. அந்தத் தேவையை உருவாக்கும் வரை.. இசங்கள் பிறந்து கொண்டே இருக்கும்.

சீமானிசம்.. பிரபாகரனிசத்தை முறியடிக்கும்.. பின் தள்ளும்.. தோற்கடிக்கும்.. மழுங்கடிக்கும் என்று பசப்புக் காட்டுபவர்கள் போக.. இரண்டும் தனித்துவப் பண்புகளை கொண்ட தெற்காசிய புதிய இசங்கள் என்பது என்னவோ.. யதார்த்தமாகிறது. 

பிரபாகரனிசம்.. ஆயுதத்தால் சாதிக்க நினைத்ததை.. அது அந்தக் காலத்தில் சாத்தியாமவும் இருந்தது..

சீமானிசம்.. அறிவாயுதத்தால்.. சாதிக்க நினைக்கிறது.. இது இந்தக் காலத்தில் சாத்தியமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சரியாக சொன்னீர்கள்.
நேற்று யாழ்கள கருத்தாளர்  இப்படி பேசும் இனவெறி சீமானை நாடுகளில் உள்ள பசுமைவாத கட்சிகளோடு ஒப்பிட்டதும் கவலையானது.

சிறிலங்காவில் நடக்கும் இன  அத்துமீறலுக்கு வராத கவலை...
திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வு தடைக்கு வராத கவலை...
காணாமல் போனோர் பிரச்சனை முடிவுக்கு வரவில்லையே என வராத கவலை...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு விசாரணை இல்லையே என்று வராத கவலை...
தமிழர் விவசாயங்கள் மழுங்கடிக்கப்படுகின்றதே என நினைத்து வராத கவலை...

என் நிலம்
என் உரிமை
என் மக்களுக்கு முதலிடம்
என் தமிழுக்கு முதலிடம்
விவசாயத்திற்கு முதலிடம்
மழை நீரை சேமிப்போம்
இயற்கையை பாது காப்போம்
குளங்களை தூர் வார்வோம்
காட்டில் வாழும் மிருகங்கள் பறவைகளை பாதுகாப்போம்
தொழில்கல்விகளை ஊக்கப்படுத்துவோம் என்று சொல்லும் சீமான் இனவெறியன். அதை நினைக்க தங்களுக்கு கவலை கவலையாய் வருகின்றது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 19:47, பிழம்பு said:

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான்.

``உறவுகளே’’

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 15:31, Justin said:

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! 

இந்த ஒரு விசயத்தினை மட்டும் விவாதிக்க ஆவல்..

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் வன்னி பெருநிலத்தில் சிங்களத்தினை துடைத்து எறிந்த புலிகளை தடுக்காமல் வவுனியாவினை பிடித்திருக்கலாம். 

அல்லது ஆனையிறவு தாக்குதலுடன், யாழ்பாணத்தினை விடுவித்திருக்கலாம்.

சிங்களத்தின் மனபலம் சிதைந்த நிலையில், பெரு வெற்றி அடைந்திருக்கலாம். உண்மையிலேயே, இந்தியா வரக்கூடும் என்று தயங்கிய படியால், நிதானம் தான் அழிவில் முடிந்தது.

மேலும் சமாதானம் என்று நிதானித்த காலத்தில் தான், அழிவுக்கான நிகழ்ச்சி நிரலே எதிரியினால் போடப்பட்டது.

ஒரு யுத்த தலைவன் நிதானிப்பது தவறு.... வரலாறில் பல உதாரணங்கள் உள்ளன.

30 ஆண்டுகால போராட்டம் நீண்ட ஒரு காலம். அதிலே வெற்றி அடைந்தபின் நிதானித்திருக்க்க வேண்டும். மாறாக இடையில் நிதானித்ததே, கருணா உட்பட இழப்புகளுக்கும், பின்னர் வந்த பேரழிவுகளுக்கும் காரணம்.  

அங்கு மட்டுமல்ல அரசியலும் தான்.

ரணில் விக்கிரமசிங்க என்கிற அரசியவாதி, மைத்திரியினை கிளப்பியபின்னர், நிதானிக்காமல் தானே போட்டி இட்டு இருந்தால், அவர் அரசியலே வேறாகி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

பலரது கருத்து மட்டுமல்ல உண்மையும் அதுதான்.

கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால்........

வேதம் புதிது திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு கருத்தை அருமையாக சொல்லியிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த ஒரு விசயத்தினை மட்டும் விவாதிக்க ஆவல்..

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் வன்னி பெருநிலத்தில் சிங்களத்தினை துடைத்து எறிந்த புலிகளை தடுக்காமல் வவுனியாவினை பிடித்திருக்கலாம். 

அல்லது ஆனையிறவு தாக்குதலுடன், யாழ்பாணத்தினை விடுவித்திருக்கலாம்.

இந்தியா வரக்கூடும் என்று தயங்கிய படியால், சிங்களத்தின் மனபலம் சிதைந்த நிலையில், பெரு வெற்றி அடைந்திருக்கலாம். உண்மையிலேயே, நிதானம் தான் அழிவில் முடிந்தது.

மேலும் சமாதானம் என்று நிதானித்த காலத்தில் தான், அழிவுக்கான நிகழ்ச்சி நிரலே எதிரியினால் போடப்பட்டது.

ஒரு யுத்த தலைவன் நிதானிப்பது தவறு.... வரலாறில் பல உதாரணங்கள் உள்ளன.

30 ஆண்டுகால போராட்டம் நீண்ட ஒரு காலம். அதிலே வெற்றி அடைந்தபின் நிதானித்திருக்க்க வேண்டும். மாறாக இடையில் நிதானித்ததே, கருணா உட்பட இழப்புகளுக்கும், பின்னர் வந்த பேரழிவுகளுக்கும் காரணம்.  

அங்கு மட்டுமல்ல அரசியலும் தான்.

ரணில் விக்கிரமசிங்க என்கிற அரசியவாதி, மைத்திரியினை கிளப்பியபின்னர், நிதானிக்காமல் தானே போட்டி இட்டு இருந்தால், அவர் அரசியலே வேறாகி இருக்கும். 

பிரபாகரன் நிதானித்தமைக்குக் காரணம் இருந்ததா? 

Link to comment
Share on other sites

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

காசா பணமா எடுத்து விடுங்க....

10 minutes ago, zuma said:

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

தலைவரைப்பற்றி இங்கேயே பலர் அவதூறு எழுப்பும் போது எங்க போனீங்க ராசா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால்........

வேதம் புதிது திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு கருத்தை அருமையாக சொல்லியிருப்பார்.

அந்த படம் தெரியாது.படத்தில் சொல்லபடுவதை எல்லாம் நம்பவது நல்லது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அந்த படம் தெரியாது.படத்தில் சொல்லபடுவதை எல்லாம் நம்பவது நல்லது இல்லை.

உதுக்கேன் பாரதிராஜாவிடம் போறியள்...

சண்டியணுக்கு சந்தீல தான் சாவு எண்ட பழமொழியின் மறுபக்கம்..... எந் நேரமும் அலேட் ஆக இருக்கவேண்டும், சண்டியண

நின்று, நிதானித்தால்.... சாவு, சந்தீல தான்.

இத விளங்க நினைப்பியள் எண்டு என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.