Jump to content

சீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான்.

``உறவுகளே’’

சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு?

கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ மேடைகளில் பகுத்தறிவு, தமிழின உணர்வு, ஈழ ஆதரவு, சாதி மறுப்பு ஆகியவற்றைப் பேசக்கூடிய பேச்சாளராக அரசியல் உலகத்துக்கு அறிமுகமானார் சீமான்.

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான். திராவிடக் கட்சிகளின்மீது அதிருப்தியில் இருந்தவர்கள், 2009-க்குப் பிறகு ஈழ ஆதரவு அரசியலைப் பேசிய இளைஞர்கள் என இருதரப்பினரையும் தன் பேச்சால் கவர்ந்தார் சீமான்.

2012-ல் வெளியிடப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி ஆவணம்’, தமிழ்பேசும் சாதிகள்தான் தமிழர்கள் என்று வரையறுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர், மலைவாழ் மக்கள், உருது பேசும் முஸ்லிம்கள் எனப் பலரையும் தமிழர் அடையாளத்திலிருந்து தள்ளிவைத்தது, ‘கன்னடரான பெரியார் தமிழர்களின் விரோதி’ என்று நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்தது, ‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்’, ‘சிங்களர்களால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, எங்கள் ஆட்சியில் ஐம்பதாயிரம் பேரைக் கொண்ட சிறப்புக் காவல் படை அமைப்போம்’ என்றெல்லாம் அவ்வப்போது அதிரடிக்கருத்துகளை அள்ளிவிடுவது, பகுத்தறிவு பேசிய சீமான் திடீரென்று ‘வீரத்தமிழர் முன்னணி’யை ஆரம்பித்து, ‘முப்பாட்டன் முருக’னுக்குக் காவடி தூக்கியது என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியது ‘நாம் தமிழர்.’

சீமான்
 
சீமான்

இவையெல்லாம்கூட கொள்கை அடிப்படையில் சீமானிடம் ஏற்பட்ட மாற்றங்கள். ஆனால் சீமான் தன் பிம்பத்துக்குத் தானே குழி தோண்டியது, ஈழம் - பிரபாகரன் சந்திப்பு குறித்த பேச்சுகளின்போதுதான். ‘அண்ணன் என்னை ஆமைக்கறி சாப்பிடச் சொன்னார்’, ‘பிரபாகரன் நாற்பதாயிரம் டன் உள்ள ஆஸ்திரேலிய அரிசிக்கப்பலை சுட்டுப்பழகப் பயிற்சி கொடுத்தார்’, ‘பிரபாகரன் நான் சாப்பிடும்போது என்னென்ன சாப்பிடுகிறேன் என்று குறிப்பெழுத ஒருவரை நியமித்தார்’, ‘பொட்டு அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லியை உடைத்துப்பார்த்தால் உள்ளே கறி இருந்தது’ என்றெல்லாம் அவர் பேசிய பேச்சுகள் சீமானைக் கேலிப்பொருளாக்கின. 30 ஆண்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்தை ‘தமிழீழ முனியாண்டி விலாஸ்’-ஆக சீமான் மாற்றுகிறார் என்று குற்றச்சாட்டுகள் வலுத்தன. ‘சீமான் தன்னை மட்டுமல்ல, பிரபாகரனையும் சேர்த்து கேலிப்பொருளாக மாற்றுகிறார்’ என்று ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்தன. ‘`சீமான் பொய் சொல்கிறார். அவர் பிரபாகரனைச் சந்தித்ததே எட்டே நிமிடங்கள்தான்” என்றார் வைகோ. கொளத்தூர்மணியும்் சீமானின் ‘தமிழீழ சமையல் சாதம், ஆமைக்கறி பிரமாதம்’ பேச்சுகளை மறுத்தார். இதனாலேயே சீமான் கடும் கண்டனங்களும் கிண்டல்களுக்கும் ஆளானார். சரி, இப்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய கல்யாணசுந்தரமும் ராஜிவ்காந்தியும் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்?

‘தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் வசூலிக்கப்பட்ட நிதிக்கு முறையான கணக்குவழக்குகள் இல்லை. ‘மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது’ என்று மேடையில் பேசிவிட்டு சீமான் மது அருந்துகிறார், புகைபிடிக்கிறார். நாங்கள் போன் செய்தால் சீமான் எடுப்பதில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பதில் அனுப்புவதில்லை.’ இதற்கு சீமானின் பதில்கள் என்ன? `அவர்கள் என் மனதைப் புண்படுத்தியதால்தான் நான் போனை எடுப்பதில்லை. அவர்கள் கட்சியை வளர்க்கவில்லை, அவர்களைத்தான் வளர்த்துக்கொண்டார்கள். ஃபேஸ்புக்கில் எனக்கு எதிராகப் போடப்படும் பதிவுகளை அவர்கள் தடுப்பதில்லை.’

மொத்தச்சண்டையே ‘சிகரெட் குடிக்கிறார், ஃபேஸ்புக் பதிவு, போனை எடுக்கவில்லை’ என்கிற தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாக இருக்கின்றனவே தவிர, கொள்கைரீதியிலான பிரச்னைகளாகத் தெரியவில்லை. ``சீமானிசத்தை ஏற்கமாட்டோம் என்கிறார்கள்’’ - இது சீமானின் ஆதங்கம். “நாங்கள் பிரபாகரனிசத்தைத்தான் ஏற்போம்’’ - இது கல்யாணசுந்தரத்தின் பதில்.

சீமான்
 
சீமான்

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளே ‘பிரபாகரனிசம்’ என்று எதையும் முன்வைத்ததில்லை. சமூகத்தின் பிரச்னைகளுக்கான காரணங்கள், அதன் இயங்குநிலை, தீர்வுகள் குறித்த தத்துவப்பார்வைகளே ‘இயம்’ என்று அழைக்கப்படுகின்றன. மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என்பவை இந்த அடிப்படையிலானவைதான். தத்துவத்தைச் செயல்படுத்துபவர்கள், போராளிகள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்கள் பெயரால் சேகுவேராயிசம், காஸ்ட்ரோயிசம், நல்லகண்ணுயிசம் என்றெல்லாம் அழைக்கப்படுவதில்லை. எனவே, ‘சீமானிசமா, பிரபாகரனிசமா’ சண்டைகளில் எந்த அர்த்தமும் இல்லை.

மேடைகளில் சீமானின் உடல்மொழியிலேயே பேசும் கணிசமான இளைஞர்களைச் சீமான் உருவாக்கியிருக்கிறார்.சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, கொசுபேட் அடிப்பதைப்போல சட்டென்று கைகளை உள்வாங்கி, மைக் உள்ள மேஜையில் அடித்து உரத்த குரலெழுப்பிப் பேசுவது, ஜெபக்கூட்டத்தின் ரிதத்தில் அமைந்த ஏற்ற, இறக்கப் பேச்சுகள் என்று அப்படியே டிட்டோ சீமான்கள். ஆனால் அவர்களுக்கான எதிர்காலப் பாதைதான் என்ன?

‘பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தவர் போட்டி’ ‘கூட்டணி இல்லை’, ‘மகளிருக்கு 50 சதவிகித இடங்கள்’ ஆகிய சீமானின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவை. ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் 1969-ல் இருந்து இங்கே பெரிய கட்சிகள்கூட கூட்டணி வைத்தே வெற்றிபெற்றிருக்கின்றன. (2014 ‘மோடியா, லேடியா’ நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது மட்டும் விதிவிலக்கு) நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி அதிகரிக்கிறது, சில இடங்களில் மூன்றாம் மற்றும் நான்காமிடம் கிடைக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போதாது. ஒவ்வொரு தேர்தலிலும் செலவழித்து, பணமிழந்து அதன்பின் ஒதுங்கிப்போகிற நாம் தமிழர் தம்பிகள் எத்தனையோ பேர்!

தேர்தல் அரசியலிலும் நடைமுறை எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. லட்சியவாதத்திலும் சாத்தியமற்ற, நம்ப முடியாத பேச்சுகளால் கிண்டலுக்கு ஆளாகும் நிலை. தன்னை நம்பிவந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் நம்பிக்கைக்கும் எதிர்காலத்துக்கும் சீமானிடம் என்ன தீர்வுகள் இருக்கின்றன? ஒதுங்கிப்போன உறவுகளுக்கு உள்ளூர இந்தக் கேள்விகள் இருந்திருக்கும்.

நன்றி
விகடன்
https://www.vikatan.com/government-and-politics/politics/naam-tamilar-katchi-inter-party-issue-seemanism-vs-prabhakaranism

 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Justin said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!😎

உங்கடை கருத்தை வையுங்க தனிப்பட்ட தாக்குதலை செய்யாதீங்க நீங்க செய்வது உங்களுக்கே தெரியும் நல்லது இல்லை என்று ........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உங்கடை கருத்தை வையுங்க தனிப்பட்ட தாக்குதலை செய்யாதீங்க நீங்க செய்வது உங்களுக்கே தெரியும் நல்லது இல்லை என்று ........................

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

அவர் எழுதிய வசனத்தை இடைவெளி விடாது வாசித்து விளங்கிக்கொள்ளுங்கள்.    💐 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

பிழம்பர் தீனி போட்டா நீங்க ஏன் திங்க போறீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிசம் - சீமானிசம் இரண்டும் யாதெனில் ? | முனைவர். செந்தில்நாதன் | Tamizham

பிரபாகரன் என்ற பெருந்தலைவர் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களை சிங்கள இனவெறி தொடுத்த தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றிய இறைவனாக எங்கள் தலைவர் பிரபாகரனின் மக்கள் காப்பு அணுகுமுறை பிரபாகரனிசம்.

அந்த மாபெரும் தலைவனை பின்தொடர்ந்து தமிழ் நிலத்தில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான அரசியல் போரை தொடுத்து வரும் நாம்தமிழர் கட்சியை உருவாக்கி கொள்கையை வகுத்து வரும் அண்ணன் சீமான் அவர்களின் கொள்கை சீமானிசம்.

பிரபாகரனிசம் என்பது ஆலமரம் சீமனிசம் என்பது அதன் விழுது 

பிரபாகரனிசம் என்பது சூரியன் சீமனிசம் என்பது சூரியனில் இருந்து ஒளிபெறும் நிலவு.

 

https://yarl.com/forum3/topic/195447-நாம்-தமிழர்-அரசியல்-பாகம்-2/page/96/

இனி கதைப்பவர்கள் மேலே உள்ள காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு கருத்திடவும்.. அல்லது எல்லோரும் அரைகுறை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அங்க திரி தொய்யும் போதெல்லாம், பிழம்பார் இங்கால இன்னொன்றைப் பத்த வைப்பார், கலிபோர்னியாக் காட்டுத் தீ போல!  #

இதில் எங்கே தனிபட்ட தாக்குதல் உள்ளது?🤔

கண்டு கொள்ளாதையுங்கோ! அது பெருமாளுக்கு மட்டும் தெரியும் ஒரு தோற்றம், இப்ப உங்களுக்குத் தெரியாது!

(இங்க கன பேருக்கு பிழம்பர் யாரெண்டு தெரியாது, அது தான் நான் அவரைத் தாக்குகிறேன் என தவறாக நினைக்கக் காரணம்!)

Link to comment
Share on other sites

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ஈழவிடுதலை பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி பகிர்ந்த விடயம். போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது அடியே அடியே சந்திரிகா என்று அறிவுமதி எழுதிய பாடல் பிரபாகரனின் மேற்பார்வைக்கு சென்றபோது என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண் அல்லவா இப்படி அவமதித்து எழுத கூடாது என்று பாடலை நிராகரித்து விட்டாராம். அறிவுமதி பிறகு பாடலை மாற்றி எழுதியதாக கூறினார்.

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு. தொலைக்காட்சி விவாதங்களில் கூட சக கருத்தாளர்களுடன் ஒருமையில் அசிங்கமாக பேசி தொலைக்காட்சி நெறியாளரால் கண்டிக்கப்பட்ட  நபர் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கட்டுரையில் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டவில்லை. கம்யூனிசம் என்ற ஒரு குடையின் கீழ் ரஷ்யாவைக் கொண்டு வந்த பிறகு, சில தலைவர்கள் தங்களை மையப் படுத்திய சித்தாந்தங்களை லெனினிசம், ஸ்ராலினிசம், ட்ரோக்கியிசம் என்று நடைமுறைப்படுத்தினர் அல்லது ஊக்குவித்தனர். அதுவே கம்யூனிசம் கெட்ட பெயரெடுக்க முதல் காரணம். ரஷ்யாவின் வரலாற்றைப் பார்த்தால் ஸ்ராலினிசத்திற்குப் பின்னர், "குருஷேவிசம்" என்ற ஒன்றை நிகிரா குருஷேவ் அறிமுகம் செய்ய முயலவில்லை! வரலாற்றியலாளர்கள் குருஷேவிசம் என்று குறிப்பிடுவது "ஸ்ராலினிசத்திலிருந்து விலகிச் செல்லும் dismantling Stalinism என்பதைத் தான்" . இதனால் தான் இந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவினால் நேட்டோவுடன் தாக்குப் பிடித்து கம்யூனிசத்தை வேறு பல நாடுகளிலும் பரப்பவும் முடிந்தது.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது தான்: ஒரு தனிமனித வழிபாட்டை அடிப்படையாக் கொண்ட சமூக இயக்கம் ஒரு நாளும் நன்மையில் முடியாது! முட்டையையெல்லாம் ஒரே பாத்திரத்தில் வைத்து விட்டு, பாத்திரம் சுக்கு நூறாய்ச் சிதறிய பிறகு முதல் சதுரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ஈழவிடுதலை பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி பகிர்ந்த விடயம். போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது அடியே அடியே சந்திரிகா என்று அறிவுமதி எழுதிய பாடல் பிரபாகரனின் மேற்பார்வைக்கு சென்றபோது என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண் அல்லவா இப்படி அவமதித்து எழுத கூடாது என்று பாடலை நிராகரித்து விட்டாராம். அறிவுமதி பிறகு பாடலை மாற்றி எழுதியதாக கூறினார்.

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு. தொலைக்காட்சி விவாதங்களில் கூட சக கருத்தாளர்களுடன் ஒருமையில் அசிங்கமாக பேசி தொலைக்காட்சி நெறியாளரால் கண்டிக்கப்பட்ட  நபர் சீமான்.

சீமான் பேசிய அந்த பேச்சை கேட்டீர்களா???

நான்  முழுமையாக கேட்டேன்

அவர் தலைவரை உயர்த்தித்தான்  பேசுகிறார்

ஆனால்  நான்  அவரளவுக்கு நல்லவனல்ல  என்கிறார்

இத  சாதாரணமாக யாரும் சொல்வது தான்...

நானும்  சொல்வேன்

நான் தலைவரது இடத்தில்  இருந்திருந்தால்

அரைவாசி  சிங்களவரையாவது  அழித்திருப்பேன்   நாட்டைப்பிடித்திருப்பேன் என்று.

அந்தளவுக்கு பலமும் வளமும் தலைவரிடமிருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

சீமான் பேசிய அந்த பேச்சை கேட்டீர்களா???

நான்  முழுமையாக கேட்டேன்

அவர் தலைவரை உயர்த்தித்தான்  பேசுகிறார்

ஆனால்  நான்  அவரளவுக்கு நல்லவனல்ல  என்கிறார்

இத  சாதாரணமாக யாரும் சொல்வது தான்...

நானும்  சொல்வேன்

நான் தலைவரது இடத்தில்  இருந்திருந்தால்

அரைவாசி  சிங்களவரையாவது  அழித்திருப்பேன்   நாட்டைப்பிடித்திருப்பேன் என்று.

அந்தளவுக்கு பலமும் வளமும் தலைவரிடமிருந்தது

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! அவ்வாறான நிதானம் பேச்சில் கூட இல்லாதவரைச் சுற்றி ஈழத்தின் தமிழ் தேசிய அரசியலை பின்னுவதைத் தான் நான் எதிர்க்கிறேன். "சீமானிசத்தில்"  இருந்து ஈழவருக்கு ஒரு நன்மையும் வராது! சீமானுக்கு நன்மை வரலாம், நமக்கு வராது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

இப்படியான பிரபாகரனையும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன்  என்று மேடையில் கீழ்தரமாக பேசிய சீமான் என்ற இனவெறி மனிதனையும் ஒப்பிடுவதே தவறு.

சரியாக சொன்னீர்கள்.
நேற்று யாழ்கள கருத்தாளர்  இப்படி பேசும் இனவெறி சீமானை நாடுகளில் உள்ள பசுமைவாத கட்சிகளோடு ஒப்பிட்டதும் கவலையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! அவ்வாறான நிதானம் பேச்சில் கூட இல்லாதவரைச் சுற்றி ஈழத்தின் தமிழ் தேசிய அரசியலை பின்னுவதைத் தான் நான் எதிர்க்கிறேன். "சீமானிசத்தில்"  இருந்து ஈழவருக்கு ஒரு நன்மையும் வராது! சீமானுக்கு நன்மை வரலாம், நமக்கு வராது! 

உங்களது கருத்தை 

பார்வையை ஏற்றுக்கொள்கின்றேன்

ஆனால்  மேடைப்பேச்சுக்களில்

அதிலும்   தமிழக அரசியல்  மேடைகளில்  பேசப்படுபவை எதையும்

நான் வேத  வாக்காக

அல்லது நடைமுறைக்கு உகந்ததாக

அல்லது செயற்பாடுடையதாக எடுத்துக்கொள்வதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடீயோவின் முன்னும், பின்னும் வெட்டி சொல்ல வந்த கருத்தினை மடை மாத்தி..... இந்த கபடம் இன்னும் முடியவில்லை.

🤦‍♂️😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்ஸிசம்.. லெனினிசம்.. ரஷ்சியாவை தாண்டி.. எல்லாம் பேசப்படும் போது..போற்றப்படும் போது.. பிரபாகரனிசம்.. சீமானிசம்.. ஏன் பேசப்படக் கூடாது.. போற்றப்படக் கூடாது.

பிரபாகரனிசம்.. சீமானிசத்தின் கருவறை.. தாய் என்பது தான் யதார்த்தம். அதை யாரும் நிராகரிக்கவில்லை.

பிரபாகரனிசம்.. இருப்பதால்.. சீமானிசம்.. பிறப்பெடுக்கவே கூடாது என்றால்..

மார்க்ஸிசம்.. இருப்பதால்.. லெனினிசம்..பிறந்தே இருக்கக் கூடாது என்று வாதம் வைத்தால்.... என்னாகும்.. ??!

வாதம் வைச்சாலும்.. இசங்கள் பிறப்பெடுப்பது மக்களின் உரிமை மீட்பில் இருந்து உருவெடுக்கிறது. அந்தத் தேவையை உருவாக்கும் வரை.. இசங்கள் பிறந்து கொண்டே இருக்கும்.

சீமானிசம்.. பிரபாகரனிசத்தை முறியடிக்கும்.. பின் தள்ளும்.. தோற்கடிக்கும்.. மழுங்கடிக்கும் என்று பசப்புக் காட்டுபவர்கள் போக.. இரண்டும் தனித்துவப் பண்புகளை கொண்ட தெற்காசிய புதிய இசங்கள் என்பது என்னவோ.. யதார்த்தமாகிறது. 

பிரபாகரனிசம்.. ஆயுதத்தால் சாதிக்க நினைத்ததை.. அது அந்தக் காலத்தில் சாத்தியாமவும் இருந்தது..

சீமானிசம்.. அறிவாயுதத்தால்.. சாதிக்க நினைக்கிறது.. இது இந்தக் காலத்தில் சாத்தியமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சரியாக சொன்னீர்கள்.
நேற்று யாழ்கள கருத்தாளர்  இப்படி பேசும் இனவெறி சீமானை நாடுகளில் உள்ள பசுமைவாத கட்சிகளோடு ஒப்பிட்டதும் கவலையானது.

சிறிலங்காவில் நடக்கும் இன  அத்துமீறலுக்கு வராத கவலை...
திலீபனின் நினைவஞ்சலி நிகழ்வு தடைக்கு வராத கவலை...
காணாமல் போனோர் பிரச்சனை முடிவுக்கு வரவில்லையே என வராத கவலை...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு விசாரணை இல்லையே என்று வராத கவலை...
தமிழர் விவசாயங்கள் மழுங்கடிக்கப்படுகின்றதே என நினைத்து வராத கவலை...

என் நிலம்
என் உரிமை
என் மக்களுக்கு முதலிடம்
என் தமிழுக்கு முதலிடம்
விவசாயத்திற்கு முதலிடம்
மழை நீரை சேமிப்போம்
இயற்கையை பாது காப்போம்
குளங்களை தூர் வார்வோம்
காட்டில் வாழும் மிருகங்கள் பறவைகளை பாதுகாப்போம்
தொழில்கல்விகளை ஊக்கப்படுத்துவோம் என்று சொல்லும் சீமான் இனவெறியன். அதை நினைக்க தங்களுக்கு கவலை கவலையாய் வருகின்றது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 19:47, பிழம்பு said:

2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான்.

``உறவுகளே’’

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 15:31, Justin said:

பிரபாகரன் நிதானமாக இல்லாமல் சீமான் போல செய்திருந்தால் தமிழருக்கு அழிவு விரைவாகவே வந்திருக்கும்! 

இந்த ஒரு விசயத்தினை மட்டும் விவாதிக்க ஆவல்..

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் வன்னி பெருநிலத்தில் சிங்களத்தினை துடைத்து எறிந்த புலிகளை தடுக்காமல் வவுனியாவினை பிடித்திருக்கலாம். 

அல்லது ஆனையிறவு தாக்குதலுடன், யாழ்பாணத்தினை விடுவித்திருக்கலாம்.

சிங்களத்தின் மனபலம் சிதைந்த நிலையில், பெரு வெற்றி அடைந்திருக்கலாம். உண்மையிலேயே, இந்தியா வரக்கூடும் என்று தயங்கிய படியால், நிதானம் தான் அழிவில் முடிந்தது.

மேலும் சமாதானம் என்று நிதானித்த காலத்தில் தான், அழிவுக்கான நிகழ்ச்சி நிரலே எதிரியினால் போடப்பட்டது.

ஒரு யுத்த தலைவன் நிதானிப்பது தவறு.... வரலாறில் பல உதாரணங்கள் உள்ளன.

30 ஆண்டுகால போராட்டம் நீண்ட ஒரு காலம். அதிலே வெற்றி அடைந்தபின் நிதானித்திருக்க்க வேண்டும். மாறாக இடையில் நிதானித்ததே, கருணா உட்பட இழப்புகளுக்கும், பின்னர் வந்த பேரழிவுகளுக்கும் காரணம்.  

அங்கு மட்டுமல்ல அரசியலும் தான்.

ரணில் விக்கிரமசிங்க என்கிற அரசியவாதி, மைத்திரியினை கிளப்பியபின்னர், நிதானிக்காமல் தானே போட்டி இட்டு இருந்தால், அவர் அரசியலே வேறாகி இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

பலரது கருத்து மட்டுமல்ல உண்மையும் அதுதான்.

கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால்........

வேதம் புதிது திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு கருத்தை அருமையாக சொல்லியிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த ஒரு விசயத்தினை மட்டும் விவாதிக்க ஆவல்..

பிரபாகரன் நிதானித்த தருணத்தினால் தான் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்பது பலரது கணிப்பு.

ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் வன்னி பெருநிலத்தில் சிங்களத்தினை துடைத்து எறிந்த புலிகளை தடுக்காமல் வவுனியாவினை பிடித்திருக்கலாம். 

அல்லது ஆனையிறவு தாக்குதலுடன், யாழ்பாணத்தினை விடுவித்திருக்கலாம்.

இந்தியா வரக்கூடும் என்று தயங்கிய படியால், சிங்களத்தின் மனபலம் சிதைந்த நிலையில், பெரு வெற்றி அடைந்திருக்கலாம். உண்மையிலேயே, நிதானம் தான் அழிவில் முடிந்தது.

மேலும் சமாதானம் என்று நிதானித்த காலத்தில் தான், அழிவுக்கான நிகழ்ச்சி நிரலே எதிரியினால் போடப்பட்டது.

ஒரு யுத்த தலைவன் நிதானிப்பது தவறு.... வரலாறில் பல உதாரணங்கள் உள்ளன.

30 ஆண்டுகால போராட்டம் நீண்ட ஒரு காலம். அதிலே வெற்றி அடைந்தபின் நிதானித்திருக்க்க வேண்டும். மாறாக இடையில் நிதானித்ததே, கருணா உட்பட இழப்புகளுக்கும், பின்னர் வந்த பேரழிவுகளுக்கும் காரணம்.  

அங்கு மட்டுமல்ல அரசியலும் தான்.

ரணில் விக்கிரமசிங்க என்கிற அரசியவாதி, மைத்திரியினை கிளப்பியபின்னர், நிதானிக்காமல் தானே போட்டி இட்டு இருந்தால், அவர் அரசியலே வேறாகி இருக்கும். 

பிரபாகரன் நிதானித்தமைக்குக் காரணம் இருந்ததா? 

Link to comment
Share on other sites

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

காசா பணமா எடுத்து விடுங்க....

10 minutes ago, zuma said:

தனி மனித ஓழுக்கத்தில்  தலைவரின்ர கால் தூசுக்கு கூட சீமான் ஓப்பாகாது. பகலில் மது ஓழிப்பு, மாதர் விடுதலை என்று போசுவதும், இரவில் புட்டியோடும் குட்டியோடும் இருப்பவர் தான் சீமான்.

தலைவரைப்பற்றி இங்கேயே பலர் அவதூறு எழுப்பும் போது எங்க போனீங்க ராசா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால்........

வேதம் புதிது திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு கருத்தை அருமையாக சொல்லியிருப்பார்.

அந்த படம் தெரியாது.படத்தில் சொல்லபடுவதை எல்லாம் நம்பவது நல்லது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அந்த படம் தெரியாது.படத்தில் சொல்லபடுவதை எல்லாம் நம்பவது நல்லது இல்லை.

உதுக்கேன் பாரதிராஜாவிடம் போறியள்...

சண்டியணுக்கு சந்தீல தான் சாவு எண்ட பழமொழியின் மறுபக்கம்..... எந் நேரமும் அலேட் ஆக இருக்கவேண்டும், சண்டியண

நின்று, நிதானித்தால்.... சாவு, சந்தீல தான்.

இத விளங்க நினைப்பியள் எண்டு என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.