Jump to content

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் இன்னும் ஓர் இடம் காட்டப்படுகிறது குப்பைகள் கழிவுகளை நீர் நிலையோரம் கொட்டி சென்றுள்ளதையும் அதனை அண்டி  மக்கள் வாழ்வதையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை பார்க்க... அதிர்ச்சியாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

காணொளியை பார்க்க... அதிர்ச்சியாக உள்ளது.

நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்  😂

இந்த, உலகத்தில்தான்... இருக்கின்றேன் கபிதன்.
மயிலிட்டியை... சேர்ந்த, முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்...
மாவை சேனாதிராசா... இவர்களுக்காக, அக்கறை காட்டியிருந்தால்...
இவர்களின்  துன்பமும் நீங்கியிருக்கும், 
மாவையும்.... மீண்டும் பாராளுமன்றம் போயிருப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்

அபிவிருத்தி தாறோம் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்கிறார்களே.யுத்தம் முடிந்து இப்படி எத்தனை எம் இனம் அலைந்து கொண்டிருக்கிறது.அபிவிருத்தியும் இல்லை அரசியல் தீர்வும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் காவலரண் அகற்று அரசியல் செய்தவர்கள்.. இப்போ அபிவிருத்தி அரசியல் என்று கொண்டு மக்களை ஏமாற்றி வாக்கைப் பறித்துவிட்டு.. தங்கள் அலுவலை மட்டும் பார்த்துக் கொள்கின்றனர்.

தெற்கில் இருந்து வந்த பவதாரணி மேடத்துக்கு என்னாச்சு.. அங்கஜன் சார்பில் வாக்குக் கேட்டார்.. வந்தார் வாக்குறுதி தந்தார் போனார் என்றாகிவிட்டது.

ஆனால்.. யாழ் ஊடகங்களும்.. சில சிங்கள சார்ப்பு ஊடகங்களும்.. இதோ அம்மணியின் புகழ் ஓங்குகிறது.. வெற்றி நிச்சயம் என்றார்கள். அம்மணியும்.. வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளை வாங்கிட்டு.. போனதுதான் போக்கு. 

மற்றவரை மீன்பிடிக்குள் அமுக்கி விட்டாங்கள். அவரும் பெரிய அமைச்சுக்கு ஆசைப்பட்டது தான் மிச்சம். 

சிங்களவன் தெளிவாக இருக்கிறான் தமிழ் அடிவருடிகளை எங்க வைக்கனும்.. தமிழர்களை எங்க வைக்கனும் என்று. நாம் தான் இன்னும் சிங்கள எஜமான விசுவாசத்தைக் காட்டி ஏதாவது பிச்சை கிடைக்குமா என்று இலவு காக்கிறோம். 

இதை விடக் கஸ்டம்.. புங்குடுதீவில் உள்ள கிராமங்கள். மக்கள் மிகுந்த ஏழ்மையில்.. வீதி ஓர வியாபாரம் செய்து பிழைக்கின்றனர். ஆனால்.. சிங்களக் கடற்படைக்கு மட்டும் சொகுசு வாழிடங்களும்.. வசதிகளும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா புங்குடுதீவுக்கு உதவி திட்டங்கள் போய் கொண்டு தான் இருக்கிறது..ஆனால் பணம்  சேகரிப்பவர்கள் ஒழுங்காக மக்களை கவனிக்கும் பணியில் இல்லை போல் உள்ளது..பசுமை புரட்சி என்று சும்மா மரங்களை நட்டும் கால் நடைகளுக்கு பயன் படுத்துவதிலுமே நிக்கிறார்கள்.மக்கள் அன்றாடம் வாழ்வாதாரம் இல்லாது சாகும் போது பசுமைப் புரட்சி தேவையா.எல்லாம் தங்கள் பெயர் நிலைக்கக வேண்டும் என்பதற்காகவே..தோட்ட வைக்க ஊக்கு விக்கிறார்களாம் அதில வேறு போட்டி நிகழ்ச்சி..கேட்டால் 'நீ" குடுத்தியா என்ற கேள்வி வேறு வருகிறது..உண்மையா இல்லயா புங்குடுதீவு மக்கள் வந்து உணமையை சொல்லுங்கள்...எப்படி எல்லாம் வெளி நாடுகளிலிருந்து பணம் அங்கு போகிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, யாயினி said:

அண்ணா புங்குடுதீவுக்கு உதவி திட்டங்கள் போய் கொண்டு தான் இருக்கிறது..ஆனால் பணம்  சேகரிப்பவர்கள் ஒழுங்காக மக்களை கவனிக்கும் பணியில் இல்லை போல் உள்ளது..பசுமை புரட்சி என்று சும்மா மரங்களை நட்டும் கால் நடைகளுக்கு பயன் படுத்துவதிலுமே நிக்கிறார்கள்.மக்கள் அன்றாடம் வாழ்வாதாரம் இல்லாது சாகும் போது பசுமைப் புரட்சி தேவையா.எல்லாம் தங்கள் பெயர் நிலைக்கக வேண்டும் என்பதற்காகவே..தோட்ட வைக்க ஊக்கு விக்கிறார்களாம் அதில வேறு போட்டி நிகழ்ச்சி..கேட்டால் 'நீ" குடுத்தியா என்ற கேள்வி வேறு வருகிறது..உண்மையா இல்லயா புங்குடுதீவு மக்கள் வந்து உணமையை சொல்லுங்கள்...எப்படி எல்லாம் வெளி நாடுகளிலிருந்து பணம் அங்கு போகிறது..

நான் நேரடியாக பார்த்த அளவில்.. சில பிரபல்ய கோவில்கள் நல்ல வளர்ச்சி கண்டிருக்குது. மிச்சம் சிங்களக் கடற்படை தான் சொகுசாக உள்ளது. நுழைவாயிலில் இருந்து துறை வரைக்கும்.. கடற்படை கண்காணிப்பு தான். இந்த புங்குடுதீவுக்குள்.. நடந்த அத்தனை படுகொலைகளுக்கும்... கடற்படை பங்களிப்பு.. ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடந்திருக்க முடியாது. காரணம்.. நுழைவாயிலியே சிங்கள மொழி வரவேற்புப் பலகையோடு உயர் நிலை காவலரண்கள் அமைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது கடற்படை.

மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகள்.. சரியான திட்டங்களின் ஊடாக மக்களுக்கு நிரந்தர வருவாய் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை.. இதனால்.. மக்களில் அநேகர்.. தொடர்ந்து வறுமையில் தான் இருக்கின்றனர். 

அதுபோக.. தென்னிலங்கை உல்லாசப் பயணிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால்.. அழகிய புங்குடுதீவு கண்டற்காடு கடற்கரைகள்.. பிளாஸ்டிக் மாசுகளால்.. பீடிக்கப்பட்டிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. பிளாஸ்டிக் கழிவுகள்.. கடலில் கலக்கும் அளவுக்கு பரந்து கிடக்கிறது. 

அது புங்குடுதீவுக்கு மட்டுமான ஆபத்தல்ல.. மொத்த பூமிக்குமான ஆபத்து ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதேபோல் இன்னும் ஓர் இடம் காட்டப்படுகிறது குப்பைகள் கழிவுகளை நீர் நிலையோரம் கொட்டி சென்றுள்ளதையும் அதனை அண்டி  மக்கள் வாழ்வதையும்

நீங்கள் வாக்கு போட்டு கொழும்புக்கு அனுப்பினவையை ஒண்டும் கேக்கேலாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த கிராமத்திற்கு உதவி செய்ய யாழினூடு நோர்வே அமைப்பிற்கு உதவி செய்யப் போகின்றேன். அவர்கள் இவர்களின் முதலீட்டிற்கு உதவினால் நன்று. நான்  குறைந்தது USD 500 அனுப்பலாமென்றிருக்கின்றேன் வரும் வாரம்.

நீங்களும் நினைத்தால் இம்மக்களின் வருமானத்திற்கு அடிப்படை முதலீடு செய்து கொடுக்கலாம்.

2-3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கிராமத்தை யாழ் கள உறவுகள் தெரிவு செய்யும் கிராமத்தை தத்தெடுத்து நிலையான முதலீட்டை செய்வதின் மூலம் முன்னேற்றலாம் உறவுகள் நினைத்தால். 

Link to comment
Share on other sites

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும்  சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர்  பொன்.இராமநாதன் ஆகும். 

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது 'வேளாளருக்கும் தனவந்தருக்கும்' மட்டுமே வாக்குரிமை  வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று  சாட்சியம்  சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான். 

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது    
ஜி.ஜி பொன்னம்பலம்  சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர்   சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள். 

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும  மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து 'சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்' என்று அரச கரும  மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று   காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள்  ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற  தலைமைகளேயாகும்.  

1947ல்  பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான். 

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி  என்றும் 'அடங்கா தமிழன்' என்கின்ற 'பெருமைமிகு' அடைமொழியாலும்   போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த  மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.  

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது 'கண்ட கண்டவர்களுக்கு' கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது  சொந்த லன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும்  அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது. 

 

படித்ததில் கடித்தது

சிங்கவளனுக்கு கற்றுக்கொடுத்ததே நம்மவன்தான். சிங்களவனுக்கு தமிழர் சிறுபான்மை தமிழர்க்கு ஏழைகள் சிறுபான்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ellam Theringjavar said:

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும்  சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர்  பொன்.இராமநாதன் ஆகும். 

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது 'வேளாளருக்கும் தனவந்தருக்கும்' மட்டுமே வாக்குரிமை  வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று  சாட்சியம்  சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான். 

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது    
ஜி.ஜி பொன்னம்பலம்  சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர்   சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள். 

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும  மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து 'சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்' என்று அரச கரும  மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று   காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள்  ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற  தலைமைகளேயாகும்.  

1947ல்  பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான். 

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி  என்றும் 'அடங்கா தமிழன்' என்கின்ற 'பெருமைமிகு' அடைமொழியாலும்   போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த  மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.  

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது 'கண்ட கண்டவர்களுக்கு' கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது  சொந்த லன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும்  அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது. 

 

படித்ததில் கடித்தது

சிங்கவளனுக்கு கற்றுக்கொடுத்ததே நம்மவன்தான். சிங்களவனுக்கு தமிழர் சிறுபான்மை தமிழர்க்கு ஏழைகள் சிறுபான்மை.

எ.த, சில விடயங்கள் முதல் முதலாக கேள்விப் படுகின்றேன். இந்த செய்தியின் உண்மைத்தன்மை அறிய ஆவல்.

இனவெறி பேசும் சரத் வீரசேகர, பிரபாகரன் வெள்ளாளர் எனவும் சாதி வெறியர் என்பதாக சிங்களத்தில் பேசிவந்தார்.

அவர் சிங்களத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்.

ஒருவர் சிங்கள மொழியில், பொய் பேசாதே, புரிந்து பேசு, என்று பிரபாகரன் பின்னனி குறித்தும், இயக்கத்தில் சாதியம் இருக்கவில்லை என்றும் பேச அடங்கிவிட்டார்.

ஆனாலும் வெள்ளாளர் குறித்து அண்மையில் கூட பாராளுமன்றில் கருத்து சொல்லியிருந்தார்.

ஆகவே இந்த செய்தி கூட அந்த நோக்கத்தின் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

நான் இந்த கிராமத்திற்கு உதவி செய்ய யாழினூடு நோர்வே அமைப்பிற்கு உதவி செய்யப் போகின்றேன். அவர்கள் இவர்களின் முதலீட்டிற்கு உதவினால் நன்று. நான்  குறைந்தது USD 500 அனுப்பலாமென்றிருக்கின்றேன் வரும் வாரம்.

நீங்களும் நினைத்தால் இம்மக்களின் வருமானத்திற்கு அடிப்படை முதலீடு செய்து கொடுக்கலாம்.

2-3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு கிராமத்தை யாழ் கள உறவுகள் தெரிவு செய்யும் கிராமத்தை தத்தெடுத்து நிலையான முதலீட்டை செய்வதின் மூலம் முன்னேற்றலாம் உறவுகள் நினைத்தால். 

உங்கள் அக்கறைக்கும் உதவிக்கும் மனம் நிறைந்த நன்நிகள் அண்ணா..கொடுக்கும் உதவிகள் உ;ண்மையாக பாதிக்கபட்ட மக்கள் கைகளுக்கு போய் சேர வேண்டும.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

நான் நேரடியாக பார்த்த அளவில்.. சில பிரபல்ய கோவில்கள் நல்ல வளர்ச்சி கண்டிருக்குது. மிச்சம் சிங்களக் கடற்படை தான் சொகுசாக உள்ளது. நுழைவாயிலில் இருந்து துறை வரைக்கும்.. கடற்படை கண்காணிப்பு தான். இந்த புங்குடுதீவுக்குள்.. நடந்த அத்தனை படுகொலைகளுக்கும்... கடற்படை பங்களிப்பு.. ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடந்திருக்க முடியாது. காரணம்.. நுழைவாயிலியே சிங்கள மொழி வரவேற்புப் பலகையோடு உயர் நிலை காவலரண்கள் அமைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது கடற்படை.

மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகள்.. சரியான திட்டங்களின் ஊடாக மக்களுக்கு நிரந்தர வருவாய் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை.. இதனால்.. மக்களில் அநேகர்.. தொடர்ந்து வறுமையில் தான் இருக்கின்றனர். 

அதுபோக.. தென்னிலங்கை உல்லாசப் பயணிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால்.. அழகிய புங்குடுதீவு கண்டற்காடு கடற்கரைகள்.. பிளாஸ்டிக் மாசுகளால்.. பீடிக்கப்பட்டிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. பிளாஸ்டிக் கழிவுகள்.. கடலில் கலக்கும் அளவுக்கு பரந்து கிடக்கிறது. 

அது புங்குடுதீவுக்கு மட்டுமான ஆபத்தல்ல.. மொத்த பூமிக்குமான ஆபத்து ஆகும். 

ஆம் சில ஆலயங்களுக்கு மித மிஞ்சிய வருமானங்கள் போய் சேர்கிறது..அனேகமாக அதுவும் வெளி நாடுகளிலிருக்கும் உறவுகளாலயே போய் கொண்டு இருக்கிறது..அங்கு ஒரு ஆலயத்திற்கு இந்தியாவிருக்கும் ஓரு பெயர் பெற்ற ஆலயம் போல் தூண்கள் அமைக்கிறதார்களாம் கொஞ்ச நஞ்ச காசு அல்ல ஒரு தூண் ஒரு லட்சத்திற்கு கிட்டவாக இருக்கிறது..எனது மிக நெருங்கிய ஒரு உறவினர் எல்லா இடமும் போய் பார்த்துட்டு வந்து சொன்னார்..இது வேணுமா............ இவற்றுக்கு செலவளிக்கும் பணத்தில் கால் பகுதியையாவது அந்த ஊர் வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களுக்கும் கொடுக்கலாம் அல்லவா..நான் பெரும்பாலும் எழுத விரும்புதில்லை..ஆனால் சில வற்றை எழுதித்தான்  ஆக வேண்டி இருக்கிறது.வெளி நாடுகளில் யாராவது இறந்தால் அவரக்ளது நினைவாக  வளைவுகள்..இப்படி எத்தனை தேவை அற்ற விடையங்கள் நடந்தேறிக் கொண்டு இருக்கிறது..சரியான மக்கள் எந்த ஒரு உதவித் திட்டங்களையும முன் நின்று செயல்படுத்துவதில்லை..பெரும்பாலும்; ஏதோ ஒரு விதத்தில் தேவை அற்ற  முன்னெடுப்புக்கள் நடந்தேறிக் கொண்டு இருக்கி;றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.