Jump to content

தமிழரசு, முன்னணி, கொள்கை(?)யளவில் இணக்கம்.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, முன்னணி, கொள்கை(?)யளவில் இணக்கம்.?

samakaalam-5-scaled.jpg

தமிழ்த் தேசியம் குறித்தும்,புலிகளின் தியாகங்களைப் பற்றியும் வாய்  ஓயாமல் பேசிவரும் தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் முன்னாள் போராளிகளின் அரசியல் அந்தஸ்து பற்றியவிடயத்தில் மட்டும் ஒத்த கருத்துடன் உள்ளன.தங்களது நிலையை மேம்படுத்த முன்னாள் போராளிகள் ஏணியாக இருக்கவேண்டும் என்பது இரு கட்சியினரதும் முதலாவது நிலைப்பாடு.இரண்டாவது தங்கள் தேவைக்கு முன்னாள் போராளிகள் பயன்படவேண்டும்; உழைக்க வேண்டும்;  அதுவும் செருப்புப்போலத் தேயத் தயாராக இருக்கவேண்டும். அவ்வளவுதான். அதாவது காலைப்பாதுகாப்பது மட்டுமே செருப்பின் வேலை. அந்த வேலை முடிந்ததும் வாயிலிலேயே நிற்கவேண்டும். கால் பூசை அறைக்குள் போகும். ஆனால் செருப்பு போகமுடியாது. அதைப்போலவே முன்னாள் போராளிகள் தமது தகுதியை உணர்ந்து வெளியிலேயே நிற்கவேண்டும். குறிப்பாக `வீட்டுக்குள் `  போகமுடியாது. ஒருநாடு இருதேசம் என முழக்கமிடுகிறது தமிழ்த் தேசிய முன்னணி. இதில் எந்தச்  தேசத்தில் முன்னணியின் தலைவருக்கு சொத்து அதிகம் உள்ளது எனக் கேட்டால் பதில் சொல்லமாட்டார்கள்.

வடகிழக்கு தமிழரின் தாயகம் என்பார்கள். ஆனால் தேசியப்பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் வரும்போது கிழக்கைக் கணக்கில் எடுக்கமாட்டார்கள். அவர்களது கட்சியிலேயே சில முன்னாள்  போராளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள். இவர்களுக்கு நிதி மூலமான புலம்பெயர் தமிழர்களும் இதனை வலியுறுத்த மாட்டார்கள். பட்டை  நாமம் மட்டுமே முன்னாள் போராளிகளுக்கு. இந்த லட்சணத்தில் திலீபன் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவன் எனப் படம் காட்ட முயற்சிப்பார்கள். தேசியத் தலைவர் கஜேந்திரகுமார்; இப்போதைய திலீபன் எனப்படுபவர் கஜேந்திரன்;  தற்போதைய மில்லர் எனப்படுபவர் சட்டத்தரணி சுகாஷ் என நிறுவ தலைகீழாக நிற்கும் இவர்களிடம் தேசியப்பட்டியல் என்று வரும்போது மட்டும் கட்சியில் முன்னாள் போராளிகள் இருப்பது ஞாபகம் வரவில்லையா? என யாரும் கேள்வி எழுப்பினால் பதில் கிடைக்காது. இது போல தேசியப்பட்டியல் உறுப்பினராவதற்கு தகுதியுள்ள எவராவது கிழக்கு மாகாணத்தில் இல்லையா எனக் கேட்டால் மௌனமே பதிலாகக் கிடைக்கும்.

இப்போது கஜேந்திரன் அம்பாறைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டாராம். எந்தப் பாதுகாப்பும் இன்றி அங்கு சென்று வந்தார் என்று புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர் அவரது முகநூல் ரசிகர்கள். நாற்பது ஆயிரம் படையினரும் சவப்பெட்டியில்தான் வருவார்கள் என்று வீறாப்புப்  பேசிவிட்டு இறுதி யுத்த காலத்தில் ஐரோப்பாவுக்குச் சென்ற இவர் எந்த முகத்தோடு அரச படையினரின் பாதுகாப்போடு திரிய முடியும். கேட்டால் தேசியத் தலைவரால் தனக்கு மட்டும் காதோடு காதாக இரகசியமாகச் சொன்ன விடயங்களை செயற்படுத்தத்தான் வெளிநாடு சென்றேன் என்று சொல்லத் தயங்கமாட்டார். அந்த இரகசியத்தினுள் எந்தக்காலத்திலும் புலிகள் எவரையும் பாராளுமன்றத்தினுள் அனுமதித்து விடாதீர்கள்  என்றும் சொன்னதும் அடங்குமென சொல்லவும் கூச்சப்படமாட்டார். இவரது தலைவர் கஜேந்திரகுமாரோ இளைஞர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்தது வறுமையே எனக் குறிப்பிட்டவர். வறுமை காரணமாக போராடியவர்களுக்கு தேசியப் பட்டியல் எம்பி பதவி ஏன் என நினைக்கலாம்.

தமிழரசுக்கட்சியின் நிலை இன்னும் மோசம். தற்போது  செயலர் பதவிக்கு புதியவரை நியமிக்கவேண்டியுள்ளது. கனடா வரவு குகதாசனை நியமித்தால் தொடர்ச்சியாக நிதி கனடாவிலிருந்து கிடைக்கலாம்  என நினைப்பார்கள். தேசியப்பட்டியல் நியமன விவகாரத்தில் இவரது பெயரை சுமந்திரனும் சிறீதரனும் கட்சித் தலைமையிடம் குறிப்பிட்டனர். தலைமை வடக்கிலிருப்பதால் செயலர் பதவி கிழக்குக்கே வழங்கப்படவேண்டும் என்றவகையில் குகதாசனை நியமிக்க வேண்டுமென்ற  கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டிருப்பதாக சில தகவல்கள் உண்டு. தனக்கே செயலர் பதவி வழங்க வேண்டும் என்பது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் நிலைப்பாடு. தனக்கான  கூடுதல் தகமையாக தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டமையைக் கருதுகிறார் போல் உள்ளது. மேலும் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போது ஜனாவை எந்தக்காலத்திலும் கட்சியினுள் உள்வாங்கக்கூடாது என்று கரிகாலன் வலியுறுத்தியமை அரியநேந்திரனுக்கு சந்தேகமறத்தெரியும். அந்தச் சந்திப்பு தொடர்பான விடயங்களில் இவர் செய்தியாளராகக்  கலந்துகொண்டிருந்தார். அவ்வாறிருந்தும் சாணக்கியனை வீழ்த்த வேண்டுமென்று கிழக்கின் சுவிஸ் குமார் போன்று செயற்பட்ட ஜனாவை ஆதரித்தார். வித்தியாவின் சம்பவத்தில் நேரடியாக சுவிஸ் குமார் கலந்து கொள்ளவில்லைத்தான் ஆனால்; அந்த விடயத்தில் அவருக்கு உள்ள பங்கை கருத்திற்கொண்டே நீதிமன்றம் தண்டனை விதித்தது.

ஆரையம்பதியில் விஜி என்ற உயர்தர வகுப்பு மாணவியை (அனுஷ்சியா நல்லதம்பி வின்சென்ட் மகளிர்  கல்லூரி) கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குப்படுத்தியபின் நிர்வாணமாக நடத்திச்சென்று கொலைசெய்து ஆற்றில் வீசிய குழுவை வழி நடத்தியவர் ஜனா. நேரடியாகப் பங்குபற்றவில்லையென்றாலும் அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டித்தாரா? அதுவும் இல்லையே. இதே ஊரில் மலர் என்ற கர்ப்பிணிப் பெண்ணை “வயித்துக்குள்ள புலிக்குட்டியா இருக்குது ?” எனக்கேட்டு சுட்டுக்கொன்றவர் ஜனாவின் தம்பி டெலோ மாமா.  இவர்கள் ஏற்கெனவே மலரின் தந்தை தம்பிராஜா, வங்கி ஊழியரான குருகுலசிங்கம் என்ற அண்ணன் அகியோரைக் கொன்றவர்கள். இந்தப்பட்டியல் மிக நீண்டது. தான் செய்வது தப்பு என்பதை தெரிந்துகொண்டே ஜனாவை ஆதரித்தவருக்கு செயலர் பதவியை  வழங்கப்போகிறதா  தமிழரசுக்கட்சி.

முன்னாள் எம்பியான சிறிநேசனை செயலர் ஆக்கவேண்டுமெனவும் ஒரு அணி செயல்படுவதுபோல் உள்ளது. யார் செயலராக வந்தாலும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரனை  எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. மேலும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ராலின் ஞானம், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன், பூபாலரெத்தினம் சீவகன், போன்றோர் தமிழரசுக்கட்சிக்கு எதிராக கிழக்கின் தேசியம் என்று கூறிக்கொண்டு செயற்படுவர். இவர்களை ஒருங்கிணைக்க பசில் முயற்சிக்கலாம். கிழக்குக்குத் தமிழ் முதலமைச்சர் என்ற கோசம் இவர்களை ஒருங்கிணைக்கும் எனத் தெரிகிறது. ஆனால் தமிழரசுக்கட்சி இப்போதும் தீண்டத்தகாதவர்களாக புலிகளை நோக்குகிறது. (இதில் கட் சியின் துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் போன்ற ஒரு சிலர் விதி விலக்கு) தந்தை செல்வா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரை பயணித்த வரலாறு பாசி என்று தமிழ் இளைஞர் பேரவை காலத்திலும் பின்னர் யோகன் பாதர் என ஆயுதப்போராட்டத்திலும் அழைக்கப்பட்ட பாலிப்போடி சின்னத்துரைக்கு உண்டு. தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த காலத்தில் காசி ஆனந்தன் அண்ணாவின் சகோதரன் சிவஜெயம் (பின்னாளில் மேஜர் சந்திரன்) கிராமம் கிராமமாக துவிச்சக்கர வண்டிகளில் சென்று தமிழ்த் தேசியத்துக்காக கடுமையாக உழைத்தவர். இவர் வடக்கிலும் சகல மாவட்டங்களுக்கும் காசி ஆனந்தன் அண்ணாவுடன் சேர்ந்து விடுதலைப் பணியாற்றியவர். தந்தை செல்வா மட்டுமல்லாது அவருக்கும் அடுத்த நிலையிலிருந்த அமிர்தலிங்கம் போன்றோருடனும் பழகியவர். மாவையும் இவருடைய பங்கை நிராகரிக்க மாட்டார் .மட்டக்களப்பிலிருந்து (ஏன் கிழக்கு மாகாணத்தில் என்று கூடச் சொல்லலாம்) புலிகளில் இணைந்து கொண்ட முதற் போராளி இவர்தான். கருணா உட்பட அன்றைய போராளிகளை இயக்கத்துக்குள் உள்வாங்கியவர். இவர் போட்ட அடித்தளத்திலேயே வடக்கிலிருந்து சென்ற போராளிகளும் இணைந்து போராட்டத்தை வளர்க்க முடிந்தது. இவர் கட்சிச்  செயலாளரானால் கிழக்கின் தேசியம் என்ற கருத்து அடிபட்டு தமிழ்த் தேசியம் வலுப்பெறும். நீண்ட கால அனுபவம் அடிமட்ட தொண்டர்களை எப்படியும் உற்சாகத்துடன் பயணிக்க வைக்கும்.

முன்னாள் போராளிகள் அவர்களது குடும்பத்தினர் போன்றோர் இடைக்காலத்தில் எந்தப் பாதையில் பயணித்திருந்தாலும் இனி தமிழ்த் தேசியத்தை பலப்படுத்த முன்வருவர். இவருக்கு எதிராக கருணாவோ ,பிள்ளையனோ எந்தக் குற்றமும் சாட்டமுடியாது. கிழக்குத்  தேசியம் பேசுவோரின் நிலையும் அவ்வாறுதான் அமையும்.இந்த யதார்த்தத்தை தமிழரசுக் கட் சி உணருமா? கடந்த ஆண்டு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவரை அழைத்துக் கலந்துரையாடியதாகத் தெரிகிறது. இதனை அறிந்ததும் சில முக்கிய பிரமுகர்கள் என்ன இருந்தாலும் இவரை அரசியலுக்குள் வரவிடக்கூடாது என தங்களுக்குள் உடன்பாடு செய்துகொண்டதாகத் தெரிகிறது. தந்தை செல்வாவுடன் பழகியவரையே தனது இளமைக்காலம் முழுவதையும் தமிழ்த் தேசியத்துக்காக அர்ப்பணித்தவரையே, புறந்தள்ளிவிட்டு ஓய்வூதியம்   பெற்ற பின் அரசியலுக்குள் வந்தவர்களைக்கொண்டு எந்த  ஆணியை புடுங்கப்போகிறது தமிழரசுக்கட்சி? உண்மையாகத் தமிழ்த் தேசியத்தை நேசிப்போர் கவனிக்கவேண்டிய விடயம் இது.

– தயாளன்

https://thamilkural.net/thesathinkural/views/71024/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.