Jump to content

கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.


Recommended Posts

கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.

     by : Litharsan

Selvam-Adaikkalanathan.jpg

கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சியையே மேற்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தேசியத் தலைவருடையது. அந்த உருவாக்கத்தில்தான் நாம் எல்லோரும் பயணித்தோம். அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகவே உள்ளது.

இவ்வாறு கூட்டமைப்பின் ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் போன்ற உறுப்பினர்கள் உயிரைக் கொடுத்த வரலாறு உள்ளது. இவ்வாறு பல நெருக்குதல் சூழ்நிலைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. ஆனால், இந்த வரலாறுகளை மக்களுக்கு நாம் சொல்வதில்லை.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகள் அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்தது என்று சொல்கிறார்கள். ஆனால், கடந்த அரசாங்கத்தில் அரசியல் சாசன திருத்தங்கள் சம்பந்தமாக நிறைய விடயங்கள் நடந்தன.

அது நடைமுறைக்கு வராதபோதும், அது சம்பந்தமான எழுத்து மூலமான நகல் ஐ.நா. வரைக்கும் சாட்சி சொல்லக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும், புத்த பிக்குகளாக இருந்தாலும் யாருமே இனப் பிரச்சிகைக்குத் தீர்வைத் தரமாட்டர்கள் என்ற வரலாற்றை எழுத்துமூலமாக நாம் பெற்றுள்ளோம். இதனை நாம் சர்வதேசத்துக்கு சாட்சிபகிர முடியும்.

எனவே, நாம் முண்டுகொடுக்கவில்லை. எமது அரசியல் நடவடிக்கைகள் வெல்லப்பட வேண்டும் என்பதற்காக சில விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். இவ்வாறு ஆதரவு தெரிவிக்கும்போது கம்பரெலிய போன்ற பல விடயங்களும் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோல, இன்றைக்கு உள்ளதுபோல் அப்போது இராணுவ சோதனைச் சாவடிகள் இருக்கவில்லை. முக்கியமாக ஜனநாயக வழியில் போராடிய தியாகி திலீபனுடைய அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடையுத்தரவு போடுகின்றன.

அதைப்போல, கடந்த ஆண்டுகளில் எழுச்சியாக மாவீரர் துயிலுமில்லங்களில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளை இம்முறை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையுள்ளது.

மேலும், கடந்த அரசாங்கத்தில் பல போராட்டங்கள் நடந்தன. இப்போது போராட்டங்கள் நடந்தால் எந்தப் பிரிவுகளில் என்ன பிரச்சினை வரும் என்று தெரியாது.

ஆகவே, கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இராஜதந்திர நகர்வை செய்ததே தவிர யாருக்கும் முண்டுகொடுக்கவில்லை.

இதேவேளை, நாம் மக்களைக் குறைசொல்ல முடியாது, ஏனென்றால் கூட்டமைப்புக்குள்ளே சண்டை, விடுதலைப் போராட்டத்தை சிலர் ஆதரிக்காத போக்கு போன்றவை கூட்டமைப்பு மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு இன்னொரு காரணம், கூட்டமைப்பின் நகர்வுகளை நேரடியாக நாம் மக்களுக்குச் சொல்லவில்லை.

என்றாலும், ஒரு சிலதைத் தவிர கூட்டமைப்புக்கு கிடைக்காத ஆசனங்கள் தேசியத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே கிடைத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/கடந்த-அரசாங்கத்துக்கு-மு/

Link to comment
Share on other sites

இரண்டு கோடி ஏன் கொடுக்கப்பட்டது ஏன வாங்கப்பட்து என விளக்கம் சொன்னால் நல்லாய் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக சிறந்த ராய தந்திரி..👍

IMG-20200918-155753.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🐃எருமை மாடு, ஏரோப்பிளேன் ✈️   ஓடினது... என்று சொல்வானாம்.

Link to comment
Share on other sites

On 18/9/2020 at 18:34, தமிழ் சிறி said:

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🐃எருமை மாடு, ஏரோப்பிளேன் ✈️   ஓடினது... என்று சொல்வானாம்.

கேட்டுக்கெண்டிருப்பது கேணயர்கள் தானே அல்லது இவர்களை நம்பி பாராளுமன்றம் இந்த முறை அனுப்பியிருப்பார்களா? இன்னும் பல தமிழ் மக்கள் விழித்தெழ இருக்கு. இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் தமிழ் தேசிய பொது அரசியலுக்கு. அதற்கு இப்பவே வித்திட்டால் 10 வருடங்களுக்கு பிறகாவது நல்ல முன்னேறமிருக்கும்

Link to comment
Share on other sites

இராஜதந்திரமே நடந்தது. நிச்சயமாக. அவர்கள் மிக இராஜதந்திரமாக நடந்துகொண்டார்கள் . அவர்கள் மிக கச்சிதமாக தமிழர் வாழ்வில் நிரந்தரமான தீர்வுக்கு எதையும் செய்யாமல் தம்மை சர்வதேசத்தில் இருந்து காப்பாற்ற ஆகக்குறைந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பை காட்டினார்கள். இல்லாவிடில் ஆட்சி மாறின அடுத்தகணமே எல்லாம் தலைக்கீழாக மாறியிருக்கமாட்டாது. அவர்களது கட்சிகாரர்களே இன்று விடாமல் இனத்துவேசத்தை கக்குகிறார்கள். 

உங்கள் இராஜதந்திரம் அவ்வளவு உறுதியானது என்றால் ஒரு தூதரகமாவது இந்த விடயத்தில் தமது நிலைப்படடை உங்கள் சார்பில் அரசுக்கு சொல்லியுள்ளார்களா ? நீங்கள் மீண்டும் ஆனந்தசங்கரி மாதிரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி, அதில எல்லாரும் கையெழுத்து போடுற படம் எடுத்து எங்களுக்கு காட்ட வேண்டிய அளவுக்கு உங்களது காற்றிலே போன இராஜதந்திரம்!

நேர்மையோடு உங்களை வலுப்படுத்த பாடுபட்டவர்களை பட்டம்  சூட்டி புறம்தள்ளிவிட்டு நீங்கள் அவர்கள் வெட்டிய குழியில் விழுந்ததுதான் மிச்சம். ஓரிருவர் சேர்த்து உங்களுக்கு ஆமா போடுபவர்களையும் வைத்து கொண்டு விடயங்களை நகத்தினீர்கள். தீர்மானகளையும் அதன் விளைவுகளையும் சமகாலத்தில் ஆராய்ந்து எமது நகர்வுகளில் மாற்றம் செய்ய மறுத்தீர்கள். பலருடன் கலந்தாலோசித்து  கருத்துக்களை உள்வாங்கி திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த கூடிய கட்டமைப்புகளை கட்சிக்குள் உருவாக்க மறுத்தீர்கள் அல்லது அவை செயல் வடிவம் பெறாமல் தடை போடுவதில் காலத்தை வீணாக்கினீர்கள். இன்றும், இவ்வளவு நடந்தபின்னும் பலவற்றை சுயபரிசோதனை செய்யவிடாமல் நியாயப்படுத்துவதில் மிக மும்மரமாக உள்ளீர்கள். இதே பாணியில் தான் நீங்கள் பயணிப்பீர்கள் என்று அடம் பிடித்தால் விளைவுகளும் அப்படித்தான் இருக்கும். இன்று எவ்வாறு பலஸ்தீன விவகாரம் நீத்து போயுள்ளதோ அதே விளைவு அடுத்த பத்தாண்டுக்குள் தமிழருக்கு நடந்துவிடும். அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது 😉😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுகள நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது 😉😉

இன்னும் ஒரு வருடம் கொஞ்சம் இருக்கும்.

Link to comment
Share on other sites

இவர் எல்லாம் பிழைப்புக்காக அரசியல் செய்பவர். இதை விடடால் வாழ வேறு வலி இல்லை. அல்லது இதை விடடால் செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மக்கள் விழித்தெழும் வரைக்கும் இவர்களது காட்டில் மழைதான். மக்கள் உசார் மடையர்களாக இருக்கும்வரையும், கேணையர்களாக இருக்கும்வரைக்கும் இதே கதைதான். வன்னி மக்கள் எப்போது விழித்தெழுவார்களோ அப்பபோதுதான் இவர்களுக்கு ஆப்பு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொன்னதுபோல கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத அறிவிலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

இவர்கள் களையப்படவேண்டும். 

அதேதான் இந்த முதியவர்கள் அனைவரும் களையப்பட்டால்  கட்சி உருப்பட வாய்ப்புள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.