Jump to content

தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி வேறு பிரிவினரிடம் ஒப்படைப்பு


Recommended Posts

தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி வேறு பிரிவினரிடம் ஒப்படைப்பு

தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி வேறு பிரிவினரிடம் ஒப்படைப்பு

 

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டிற்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரியை மேலதிக விசாரணைகளுக்காக கோயம்புத்தூர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதீப் குமார பண்டார எனும் குறித்த பொலிஸ் அதிகாரி அண்மையில் இராமநாதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் கொஸ்கொட தாராக தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியே இந்த சம்பவம் தொடர்பிலிம் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அண்மையில் சபுகஸ்கந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 23 கிலோ கிராம் ஹெரோயின் குறித்த நபரினால் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்காக தகவல் சேகரிக்க சென்றாரா அல்லது போதை பொருளா....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.