Jump to content

காணி ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க கோரிக்கை!


Recommended Posts

காணி  ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க கோரிக்கை!

காணி ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க கோரிக்கை!

 

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத் தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சினை காணப்படுகிறது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளே அதிகமாகவுள்ளது.

அத்துடன் பல வருடங்களாக இருக்கின்றவர்களுக்கு அந்த காணிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவே ஜனாதிபதி “செழிப்பின் பார்வை” என்ற செயற்றிட்டத்தின் ஊடாக மக்கள் வீடுகள் கட்டியிருந்தாலும் சரி விவசாய காணிகள் மற்றும் தோட்டக் காணிகளானாலும் சரி மக்களின் பாவனையில் நீண்டகாலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்களை இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை எமது அலுவலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதுடன் காணி ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர் ஊடாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் என்ற முறையில் எங்களுக்கும் பாரிய பொறுப்புள்ளதால் மாவட்ட அரசாங்க அதிபர்களை தொடர்பு கொண்டு மிக விரைவாக கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்தி விண்ணப்பங்களை பெறுமாறு தெரிவித்துள்ளேன்.

மக்கள் 30 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை பெற்று நிரப்பி பிரதேச செயலகங்களில் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். மக்களுக்கான சேவைகள் விரைவாக சென்றடைந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் எண்ணமாக இருக்கின்றது.

அத்துடன் வவுனியாவில் வீடமைப்பு திட்டங்களை பெற்றவர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். கிராமங்களுக்கு செல்ல முடியாதுள்ளது. அவர்கள் மிகவும் கஸ்டத்தில் இருக்கின்றார்கள்.

அவர்கள் வீடு கட்டமுடியாத நிலையில் தான் இவ்வாறான அரச உதவியை பெறுகின்றனர். அவ்வாறு உதவியை பெற்று நடுத்தெருவில் நிற்கும் நிலை மக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவற்றை மிக வரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுராதவை வட மாகாணத்திற்கு அழைத்து இந்நிலைமைகளை காண்பித்திருந்தோம். எனவே, மக்களுக்கு துரிதமாக இவ்வேலைத் திட்டத்தினை செயற்படுத்தும் வேலைத்திட்டத்தில் இவை நடைபெற்று வருகின்றது.

அதேபோன்று தென்னை, பனை அபிவிருத்தி வேலைகளை அதிகளவில் நாம் இந்த பகுதிகளில் பாரிய அளவில் செய்ய வேண்டியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அதிகளவான பனைகள் உள்ளது. ஆனால் அதனை மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாத நிலையில் சரியான திட்டம் இன்றி இருப்பதால் அதன் பெறுமதியை மக்களுக்க உணர்த்துவதற்காக பயற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் தென்னையை இப்பகுதியில் ஊக்குவிப்பதற்காக அதற்குரிய இராஜாங்க அமைச்சரை இப்பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.

இதேவேளை, கல்வி அமைச்சரை சந்தித்து கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் தினத்தை வவுனியாவில் நடத்துமாறு கோரியுள்ளோம்.

அத்துடன் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த அரசாங்கத்தாலும் இது தொடர்பான முயற்சி எடுக்கப்பட்டாலும் அது ஏதோ ஒரு காரணத்தால் தாமதமடைந்து செல்கின்றது.

ஏனைய இடங்களில் ஒரே இரவில் பல்கலைக்கழகங்களாக மாற்றமடையும் பொது இங்கு மட்டும் ஆவணங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் வவுனியா மாவட்டத்திற்கான பல்கலைக்கழகம் மிக விரைவாக வரவேண்டும். அப்போது எமது நகரமும் வளர்ச்சி அடையும்.

அதேபோல் வவுனியா மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகரசபைகளாக்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே, அவற்றை மிக விரைவில் மாநகர சபைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதனோடு நல்ல நகர திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியுமுள்ளது. வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களின் நகரங்களும் ஏனைய நகரங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கி காணப்படுகின்றது.

வவுனியாவில் நகரச திட்டமிடலில் பல நல்ல திட்டங்கள் இருந்தது. குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகத்தினை மாற்றுவது வைத்தியசாலையை விஸ்தரிப்பது என பல திட்டங்கள் இருந்த போதிலும் அவற்றை குழப்பும் விதமாக வேறு திட்டங்களை திணித்துள்ளார்கள். எனினும் இவற்றை சீர் செய்து 5 வருங்டகளில் நிறைவேற்றுவோம் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

-வவுனியா தீபன்-

http://athavannews.com/பொதுமக்கள்-முறைப்பாட்டு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.