Jump to content

டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?!


Recommended Posts

டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?!

செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்துதான் தனிப்பெரும் நிறுவனங்களாக இந்த டெக் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன என்கிறது ஆஸ்திரேலிய அரசு.

கூகுள், ஃபேஸ்புக் தங்கள் சேவைகளில் இடம்பெறும் செய்திகளுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்தும் வகையில் புதிய வரையறைகளைக் கொண்டு வர ஆஸ்திரேலியா அரசு திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்தக் கொள்கைக்கு டெக் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. டெக் உலகில் சில வாரங்களாகவே இந்தப் பஞ்சாயத்துதான் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

சரி, சமூக வலைத்தளங்கள் ஏன் செய்தி நிறுவனங்களுக்குப் பணம் தர வேண்டும் எனத் தெரிவிக்கிறது ஆஸ்திரேலியா?
கூகுள் | Google
 
கூகுள் | Google Patrick Semansky

அனைத்து துறைகளையும் போலச் செய்தி நிறுவனங்களும் முழுவதுமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நன்றாகக் கவனித்தால் டெக் நிறுவனங்களும் செய்தி நிறுவனங்களும் தொழில்முறைப் போட்டியாளர்கள்தான்‌. இரண்டு துறைக்குமே விளம்பர வருமானம்தான் முதன்மையானதாக இருக்கிறது. செய்தி நிறுவனங்களின் செய்திகள் இல்லாமல் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களால் பெருமளவில் பயனர்களைக் கவர முடியாது. அப்படி செய்தி நிறுவனங்களின் செய்திகளைக் கொண்டு பயனர்களை ஈர்க்கும் டெக் நிறுவனங்கள் அதனைக் கொண்டு விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றன. இப்போது ஆஸ்திரேலியாவின் மொத்த விளம்பர வருமானத்தில் 47 சதவிகிதத்தைக் கூகுளும், 21 சதவிகிதத்தை ஃபேஸ்புக்கும் தட்டிச் செல்கின்றன. அதனால் செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்து தனிப்பெரும் நிறுவனங்களாக வளர்ந்துள்ள இந்த டெக் நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையைச் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலியா அரசு டெக் நிறுவனங்களை நிர்ப்பந்திக்கிறது

 

இந்த விஷயத்தில் டெக் நிறுவனங்களின் வாதமும் ஏற்றுக் கொள்ளும் படியாகத்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியா மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் மூலம்தான் செய்தி நிறுவனங்கள் வழங்கும் செய்திகளைப் படிக்கின்றனர். எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களை மீண்டும் செய்தி நிறுவனங்களின் தளத்திற்கே திரும்ப அனுப்புகிறோம். இது ஒரு கொடுத்தல் வாங்குதல் கணக்குதான். எங்களால்தான் செய்தி நிறுவனங்கள் பல பேரைச் சென்றடைய முடிகிறது, அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிகிறது என்கின்றன டெக் நிறுவனங்கள்.

Facebook
 
Facebook

பயனர்களின் தகவல்களை அலசி அவர்களது குணநலன்களைப் புரிந்து குறிப்பிட்ட பயனர்களுக்குக் குறிப்பிட்ட செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டி பெரும்பான்மையான வருமானத்தை ஈட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், செய்தி நிறுவனங்களுக்கு வரும் விளம்பரங்கள் குறைகின்றன. இதன் மூலம் செய்தியாளர்களின் வேலையும் பறிபோகிறது என்கின்றன‌ செய்தி நிறுவனங்கள்.

டெக் நிறுவனங்கள் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?

எத்தனை சதவிகித தொகை செலுத்த வேண்டும் என்றோ யாருக்கெல்லாம் செலுத்த வேண்டும் என்றோ இன்னும் எதுவும் கூறப்படவில்லை. செய்தி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்துச் செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்யலாம் என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மட்டும் 4.3 பில்லியன் டாலர்களை விளம்பர வருமானமாக ஈட்டியுள்ளது கூகுள்.

Facebook
 
Facebook Pixabay

இந்த விவகாரத்தில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு என்ன?

கூகுள், ஃபேஸ்புக்... இந்த இரு நிறுவனங்களும் ஆஸ்திரேலியா அரசின் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த மாட்டோம் என மறுப்பு தெரிவிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆஸ்திரேலியாவில் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்வது மற்ற நாடுகளிலும் இதைப் போன்ற நடைமுறையைக் கொண்டு வருவதற்கான முதற்படியாக இருக்கக்கூடும் என நினைக்கின்றன இந்த நிறுவனங்கள். ஃபேஸ்புக், இப்படி ஒரு சட்டம் வந்தால் தங்கள் தளத்தில் செய்திகள் பதிவிடுவதையே மொத்தமாக நிறுத்திவிடுவோம் என அதன் தரப்பில் தெரிவித்திருக்கிறது. இது செய்தி நிறுவனங்களுக்குப் பெரிய இழப்பாக இருக்கும்.

இப்படி இரண்டு தரப்புமே ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பவை என்பதால் இதில் சுமூகமான முடிவை எடுக்கும் முயற்சியில் தற்போது இருக்கிறது ஆஸ்திரேலியா அரசு.

https://www.vikatan.com/technology/tech-news/news-media-v-social-media-australias-new-law-and-its-effects

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.