Jump to content

பதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


Recommended Posts

பதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 

தமிழ் மக்களின் உாிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிாிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூற தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிக்கும் ஒரு செயற்பாடு என தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

எனவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அக் கட்சிகள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

குறித்த கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,

 

https://www.ibctamil.com/srilanka/80/150826?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

நினைவேந்தல் தடைக்கு எதிரான அணிதிரள்வுக்கு விக்னேஸ்வரன் ஆதரவு!

cv-vickneswaran.png?189db0&189db0

 

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

“ஜனநாயகம் மற்றும் மனிதநேய பண்புகளுக்கு கிஞ்சித்தும் இடமளிக்காமல் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி எவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நான் வரவேற்கின்றேன். இத்தகைய செயற்பாடுகள் இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமானவை.

இத்தகைய செயற்பாடுகள் அரசியல் கட்சிகளை மட்டுமன்றி ஏனைய பொது அமைப்புக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி அரசியல் சாராத வகையில் முன்னெடுக்கப்படுவதே பொருத்தமானதாகவும் நிலையானதாகவும் அமையும்.

இவ்வாறான போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காகவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. கடந்த காலங்களில் இத்தகைய பல்வேறு செயற்பாடுகளை தமிழ் மக்கள் பேரவை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு அல்ல. ஆகவே, மாவை சேனாதிராசா அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் முன்னெடுப்புக்களை தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவையில் அவரும் இணைந்து அதன் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை நான் வகிப்பது பொருத்தமானது அல்ல. ஏனைய அரசியல் கட்சிகள் இதில் இணைவதற்கும் பேரவையின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கும் இது தடையாக அமையும்.

இதனால், பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நான் பல தடவைகள் கோரிக்கை விடுதிருந்தும் பேரவையின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தொடர்ந்தும் அந்த பதவியை வகித்து வந்தேன்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றங்களின் கீழ் தமிழரசு கட்சி மற்றும் ஏனைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் பேரவையில் இணைந்து மாபெரும் வெகுஜன கட்டமைப்பாக பேரவையை கட்டிய எழுப்பி அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வழி ஏற்படுத்தும் வகையில் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்று தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளேன். இதனை பேரவைக்கு அறிவித்துள்ளேன்.

தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகள் பேரவையில் அங்கம் வகித்து அதன் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும். தனிப்பட்ட ரீதியில் நான் என்னாலான சகல ஒத்துழைப்பையும் பேரவைக்கு வழங்குவேன்.

இதேவேளை, ஏற்கனவே மாவை சேனாதிராசா மேற்கொண்டுள்ள வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அடுத்த வாரம் முன்னெடுக்கவிருக்கும் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது முழுமையான ஆதரவை வழங்கும்.

இந்த போராட்டத்தை நடத்துவதற்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி இந்த போராட்ட ஏற்பாடுகள் நடைபெறுவதே பொருத்தமானது. நடைபெறவிருக்கும் இந்த போராட்டம் எல்லா தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொதுஜன அமைப்புக்களும் உள்வாங்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இந்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களையும் உள்வாங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.” – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/நினைவேந்தல்-தடைக்கு-எதிர/

Link to comment
Share on other sites

தமிழ் கட்சிகளை ஒன்றாக இணைக்கும் முயற்சிகள் மகிழ்ச்சி தருகிறது. அதேநேரம் சிங்கள அரசுபோடும் எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டுபவர்களை உள்ளடக்கிய கட்சிகளும் இணைய முயன்றால் அவற்றிடம் ஒரு அவதானம் எப்போதும் இருக்கவேண்டும். 

 ‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”. 

பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும். பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.