Jump to content

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

பிரித்தானியா கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால்  "இப்போது இரண்டாவது அலைகளைக் காண்கிறது" எனவும் "நாட்டில் இதைப் பார்ப்பது தவிர்க்க முடியாது." எனவும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக ஜோன்சன் இறுக்கமான சமூக இடைவெளி விதிகள் அவசியமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

spacer.png

பிரித்தானியாவில் புதிய  மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று 385,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41,732 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/90248

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் நாலாம் கிழமையில் இருந்து நொவம்பர் 2ம் கிழமைக்குள் கடுமையான பாதிப்பு வரும் என்று சொல்லினம்...ஒரு நாளைக்கு 200 பேர் வரையும் சாவார்களாம் 😟 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2020 at 02:45, கிருபன் said:

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

இங்கேயும் பாடசாலைகள் ஆரம்பமாகிவிட்டன.ஆஸ்பத்திரிகளுக்கும் கூடப்பேர் வருகிறார்களாம்.
பாடசாலைகள் பூட்டுப்படுகுதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

ஒக்டோபர் நாலாம் கிழமையில் இருந்து நொவம்பர் 2ம் கிழமைக்குள் கடுமையான பாதிப்பு வரும் என்று சொல்லினம்...ஒரு நாளைக்கு 200 பேர் வரையும் சாவார்களாம் 😟 
 

இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்😟

எடுத்த ரெஸ்ற் இரண்டுதரம் நெகரிவ் ஆகிவிட்டது. பொசிற்றிவ் ஆனாலும் உயிர் பத்திரமாக இருந்தால்போதும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்😟

எடுத்த ரெஸ்ற் இரண்டுதரம் நெகரிவ் ஆகிவிட்டது. பொசிற்றிவ் ஆனாலும் உயிர் பத்திரமாக இருந்தால்போதும்!

பயப்படாதீங்க..

ஏப்ரல் மாதம் இருந்த கொரோனாவின் பலம், ஒவ்வொரு மனித உடலுக்குள்ளயும் போய், பிறப்பொருள் எதிரிகளிடம் அடிவாங்கி.... குறைந்து போய் உள்ளது. 

இப்போது பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள்.... வயதானவர்கள்... மிகவும் பலவீனமானவர்கள்.

தமிழகத்தில், அவசரப்பட்டு லொக்டவுன் செய்து விட்டார்கள் போல் தெரிகிறது. இப்பொது தான் உச்சத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை நாமும் அகப்படச் சாத்தியம் அதிகம் 

Link to comment
Share on other sites

17 hours ago, Nathamuni said:

பயப்படாதீங்க..

ஏப்ரல் மாதம் இருந்த கொரோனாவின் பலம், ஒவ்வொரு மனித உடலுக்குள்ளயும் போய், பிறப்பொருள் எதிரிகளிடம் அடிவாங்கி.... குறைந்து போய் உள்ளது. 

இப்போது பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள்.... வயதானவர்கள்... மிகவும் பலவீனமானவர்கள்.

 

இங்கு கனடாவில் அப்படி இல்லை. இப்ப பாதிக்கப்படுகின்றவர்களில் 67 வீதமானவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். 

12 minutes ago, வல்வை சகாறா said:

இம்முறை நாமும் அகப்படச் சாத்தியம் அதிகம் 

ஒருக்கால் எனக்கு வந்து தொலைச்சால் (தொலைந்தால்) என்ன என்று இருக்கு இப்ப.... தப்பினால் மீண்டும் தொற்றுவதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவாம். தப்பாட்டில், சங்கு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இங்கு கனடாவில் அப்படி இல்லை. இப்ப பாதிக்கப்படுகின்றவர்களில் 67 வீதமானவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். 

ஒருக்கால் எனக்கு வந்து தொலைச்சால் (தொலைந்தால்) என்ன என்று இருக்கு இப்ப.... தப்பினால் மீண்டும் தொற்றுவதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவாம். தப்பாட்டில், சங்கு தான்.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்

நானும் வருத்தம் வந்து போன பெறாமகனிடம்  சொன்னேன்

சித்தப்பா இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்

அந்தளவுக்கு முறிமுறி  என்று முறித்து போட்டுத்தான்  விடும்  என்றான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை கொரோனா பரவலுக்கு யாரும் அஞ்சுவதாக தெரியவில்லையே பள்ளி பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு பள்ளிக் போகிறார்கள் வருகிறார்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கொடுக்கபடும் அப்போயினமன்ற் பெரும் பாலும் இரத்தாகவில்லை..இப்படித் தானே நாட்கள் போகிறது..கொரோனாவா ,சாதரண தடிமல் காச்சலா என்று தெரிந்து கொள்ள முடியாதவாறும் தொற்றுக்கள் வரக் சாத்தியங்கள் இருக்கிறது என்கிறார்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே, மிக அவதானமாக இருங்கள்:

1. வைரசின் வீரியமும் தொற்றும் வீதமும் குறைந்திருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

2. மரணவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணங்கள்: மிக அதிகமாக இளம் வயதினர் தொற்றுக்காளாவதும், மருத்துவர்கள் நோயை மரணம் வரை செல்ல விடாமல் காக்கும் வழிகளை இப்போது அறிந்திருப்பதும்.

3. இதய நோய், நீரிழிவு, அதிக உடற்பருமன், உயர் குருதி அழுத்தம், சிறு நீரகப் பாதிப்பு, இந்த நோய்கள் இருப்போர் இளம் வயதினராக இருந்தாலும் கடும் நோயும் மரணமும் சாத்தியம். 

  இந்த நோய்கள் தமக்கு இருப்பதாக அறியாமலே தொற்றுக்காளாகி தமிழ் இளைஞர்கள் சிலர் ஐரோப்பாவில் இறந்திருக்கின்றனர். எனவே இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உறவுகளே, மிக அவதானமாக இருங்கள்:

1. வைரசின் வீரியமும் தொற்றும் வீதமும் குறைந்திருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

2. மரணவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணங்கள்: மிக அதிகமாக இளம் வயதினர் தொற்றுக்காளாவதும், மருத்துவர்கள் நோயை மரணம் வரை செல்ல விடாமல் காக்கும் வழிகளை இப்போது அறிந்திருப்பதும்.

3. இதய நோய், நீரிழிவு, அதிக உடற்பருமன், உயர் குருதி அழுத்தம், சிறு நீரகப் பாதிப்பு, இந்த நோய்கள் இருப்போர் இளம் வயதினராக இருந்தாலும் கடும் நோயும் மரணமும் சாத்தியம். 

  இந்த நோய்கள் தமக்கு இருப்பதாக அறியாமலே தொற்றுக்காளாகி தமிழ் இளைஞர்கள் சிலர் ஐரோப்பாவில் இறந்திருக்கின்றனர். எனவே இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

நன்றி அண்ணா,

யூன் மாதம் முதலே இத்தாலியில் ஒரு மருத்துவர், இன்னும் அங்கும் இங்குமாக சிலர் உதிரிகளாக இப்படி கொவிட் 19 வீரியம் குறைந்ததாக சொனாலும் அதை அதிக பெரும்படியான மருத்துவர்கள் “இன்னும் இல்லை” என்றே சொல்கிறார்கள்.

வைரஸ் அதிகம் வீரியமாக இருந்தால், பலரை கொன்று, “விருந்தாளிகள்” இல்லாமல் போனால் அதுவும் அழிய நேரிடும். எனவே, வைரசானது விகாரம் அடைந்து, வீரியத்தை குறைத்து, விருந்தாளிகளை கொல்லாமல் நீடித்து வாழ முயலும்.

இது தியரி. ஆனால் கொவிட் 19 இப்படி விகாரம் அடைகிறது என்பது இதுவரை தியரி மட்டுமே.

 யூகேயில் முன்பு ஆஸ்பத்திரி போனோரை மட்டுமே டெஸ்ட் எடுத்தார்கள். ஆகவே 6000 பொசிடிவ் வந்த நாளில் 1000 பேர் இறந்தார்கள். ஆனால் இப்போ பரவலாக டெஸ்ட் நடப்பதால் -4000 பொசிடிவ் வரும் போதும் சாவு அதிகமில்லை. ஆனா நவம்பர் மத்தியில் நாளுக்கு 200 சாவு வரலாம் என பயப்படுகிறார்கள்.

ஆகவே வந்தால் பரவாயில்லை என்ற விளையாட்டு வேண்டாம். போதியளவு பாதுகாப்பை எடுங்கள்.

சமூக இடவெளியை பேணுவதால்- “வைரஸ் லோட்” ஐ குறைக்கு முடியும். 

தொற்றுள்ளவர் தொடர்பு வந்தாலும் - வைரல் லோட் குறைவு என்றால் அதிக பாதிப்பில் இருந்து தப்பலாம்.

நினைவில் கொள்ளுங்கள். ஸ்பானிய காய்ச்சலில்(100 வருடம் முன்பு) 1ம் அலையில் இறந்தவரை விட 2ம் அலையில் இறந்தவர் அதிகம்.

சமூக இடவெளியை பேணுங்கள். 

1ம் அலையில் இருந்த அதே அவதானத்தை எடுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்😟

எடுத்த ரெஸ்ற் இரண்டுதரம் நெகரிவ் ஆகிவிட்டது. பொசிற்றிவ் ஆனாலும் உயிர் பத்திரமாக இருந்தால்போதும்!

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 

அக்கு உங்கடை பேரை சொன்னாலே கொரனோ தெறிச்சு  ஓடும் என்பது எங்களுக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

இலங்கை, நியூசிலாந்து போல நாங்களும் வெளிநாட்டு போக்குவரத்தை மார்ச் முதல்வாரமே அடிச்சு நூத்திருக்க வேணும்.

10% பொருளாதாரம் படுக்கும் என்று பயந்து இப்ப 100% பொருளாதாரமும் அடி வாங்குது.

9 minutes ago, ரதி said:

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 

அக்காச்சி,

கருணா வைரஸ் பீடிச்ச ஆக்களுக்கு, கொரோனா வைரஸ் தொத்தாதாம்🤣

நோ டென்சன். ஜஸ்ட் ஜோக்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

சொறிலங்காவின் கதையை நம்ப முடியாது கொர்னோவில்  இறந்தவரையும் எலிக்காய்ச்சலில் செத்தது போல் காட்டி விடுவார்கள் கோத்தா பதவியேற்ற நேரம் அவருக்கு சனி ஏறினது போல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 

மார்ச்-ஜூன் மட்டும் வெளியே நடக்கமட்டும் போனேன். ஜுலை-ஆகஸ்ட் ஒவ்வொரு வார இறுதியும் பல இடங்களுக்கும் போய் வந்ததால் செக் பண்ண சந்தர்ப்பம் வந்தது. இந்தமாதம் சமூக இடைவெளியை அதிகம் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் இன்னமும் வேலைக்கு போகவில்லை😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

பலருக்கு கசப்பான தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி அண்ணா,

யூன் மாதம் முதலே இத்தாலியில் ஒரு மருத்துவர், இன்னும் அங்கும் இங்குமாக சிலர் உதிரிகளாக இப்படி கொவிட் 19 வீரியம் குறைந்ததாக சொனாலும் அதை அதிக பெரும்படியான மருத்துவர்கள் “இன்னும் இல்லை” என்றே சொல்கிறார்கள்.

வைரஸ் அதிகம் வீரியமாக இருந்தால், பலரை கொன்று, “விருந்தாளிகள்” இல்லாமல் போனால் அதுவும் அழிய நேரிடும். எனவே, வைரசானது விகாரம் அடைந்து, வீரியத்தை குறைத்து, விருந்தாளிகளை கொல்லாமல் நீடித்து வாழ முயலும்.

இது தியரி. ஆனால் கொவிட் 19 இப்படி விகாரம் அடைகிறது என்பது இதுவரை தியரி மட்டுமே.

 யூகேயில் முன்பு ஆஸ்பத்திரி போனோரை மட்டுமே டெஸ்ட் எடுத்தார்கள். ஆகவே 6000 பொசிடிவ் வந்த நாளில் 1000 பேர் இறந்தார்கள். ஆனால் இப்போ பரவலாக டெஸ்ட் நடப்பதால் -4000 பொசிடிவ் வரும் போதும் சாவு அதிகமில்லை. ஆனா நவம்பர் மத்தியில் நாளுக்கு 200 சாவு வரலாம் என பயப்படுகிறார்கள்.

ஆகவே வந்தால் பரவாயில்லை என்ற விளையாட்டு வேண்டாம். போதியளவு பாதுகாப்பை எடுங்கள்.

சமூக இடவெளியை பேணுவதால்- “வைரஸ் லோட்” ஐ குறைக்கு முடியும். 

தொற்றுள்ளவர் தொடர்பு வந்தாலும் - வைரல் லோட் குறைவு என்றால் அதிக பாதிப்பில் இருந்து தப்பலாம்.

நினைவில் கொள்ளுங்கள். ஸ்பானிய காய்ச்சலில்(100 வருடம் முன்பு) 1ம் அலையில் இறந்தவரை விட 2ம் அலையில் இறந்தவர் அதிகம்.

சமூக இடவெளியை பேணுங்கள். 

1ம் அலையில் இருந்த அதே அவதானத்தை எடுங்கள்.

 

எல்லாம் சரி... உந்த பிள்ளைகள் பள்ளிக்கு போய் வருறது தான் சிக்கும். ஆனாலும் வீட்டிலை வைத்திருகவும் ஏலாது.

சம்மர் சோதனை இல்லாமல் பெரிய தலைவலியா போட்டுது....

வெளிநாட்டு மாணவர் வராததால, அந்த இடத்தை குடுத்து பெரிய பிரச்சணை வராம தாலிச்சாச்சு.

என்ன கோதாரியள் வரப்போகுதோ தெரியவில்லை.

இதுக்குள, கடைக்காரர் கொஞ்சப் பேர்.... இன்னும் காசு வரும் போலைகிடக்கு. வாங்கிக்கொண்டு கடையை இழுத்து பூட்டிப் போட்டு போலாம் எண்டு ஜடியா போடுகினம். 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2020 at 22:19, கிருபன் said:

இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்

கபசுரக் குடிநீர் இந்தியாவில் இருந்து எடுப்பித்து குடியுங்கள் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கபசுரக் குடிநீர் இந்தியாவில் இருந்து எடுப்பித்து குடியுங்கள் 😄

அப்ப  அங்கு கொரனோ  தாண்டவமாடுதே ? எப்படி ?

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பலருக்கு கசப்பான தகவல்.

முதலில் தமிழனாக இருக்கப்பாருங்கள் எது கசப்பு  இனிப்பு என்பது தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

எந்த நாட்டிலை உண்மையான தரவு கொடுக்கப்படுகின்றது?

சும்மா நடந்து போய் தடக்குப்பட்டு விழுந்து செத்தவனும் கொரோனாவாலை செத்தான் எண்ட  கணக்கிலைதான் வருது கண்டியளோ.

ஆனால் சீனாவும் சிலோனும் புகுந்து விளையாடுறது இந்த விசயத்திலைதான் கண்டியளோ..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எந்த நாட்டிலை உண்மையான தரவு கொடுக்கப்படுகின்றது?

சும்மா நடந்து போய் தடக்குப்பட்டு விழுந்து செத்தவனும் கொரோனாவாலை செத்தான் எண்ட  கணக்கிலைதான் வருது கண்டியளோ.

ஆனால் சீனாவும் சிலோனும் புகுந்து விளையாடுறது இந்த விசயத்திலைதான் கண்டியளோ..:grin:

அண்ணை, விவாதத்திற்காகச் சொல்லவில்லை, ஆனால் பிழையான இணையத்தளங்களைப் பார்க்கிறீர்கள் போல தெரியுது! இறக்கும் மிகப் பெரும்பாலானோரில் வைரஸ் சோதனை செய்து தான் மரண அத்தாட்சிப் பத்திரத்தில் போடுகிறார்கள். சோதனை  செய்ய முடியவில்லையென்றால் குணங்குறிகளைப் பார்த்து "கொரனாவுடன் தொடர்பான" என்று போடுகிறார்கள். ஆனால் இந்த கொரனாவுடன் தொடர்பான என்ற எண்ணிக்கை மிக மிகக் குறைவு! பட்டி தொட்டியெல்லாம் கொரனா ரெஸ்ற் கிடைக்கிறது இப்போது.

விளையாட்டில்லை அண்ணை, தயவு செய்து கவனமாக இருங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உறவுகளே, மிக அவதானமாக இருங்கள்:

1. வைரசின் வீரியமும் தொற்றும் வீதமும் குறைந்திருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

2. மரணவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணங்கள்: மிக அதிகமாக இளம் வயதினர் தொற்றுக்காளாவதும், மருத்துவர்கள் நோயை மரணம் வரை செல்ல விடாமல் காக்கும் வழிகளை இப்போது அறிந்திருப்பதும்.

3. இதய நோய், நீரிழிவு, அதிக உடற்பருமன், உயர் குருதி அழுத்தம், சிறு நீரகப் பாதிப்பு, இந்த நோய்கள் இருப்போர் இளம் வயதினராக இருந்தாலும் கடும் நோயும் மரணமும் சாத்தியம். 

  இந்த நோய்கள் தமக்கு இருப்பதாக அறியாமலே தொற்றுக்காளாகி தமிழ் இளைஞர்கள் சிலர் ஐரோப்பாவில் இறந்திருக்கின்றனர். எனவே இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

 

42 minutes ago, Justin said:

அண்ணை, விவாதத்திற்காகச் சொல்லவில்லை, ஆனால் பிழையான இணையத்தளங்களைப் பார்க்கிறீர்கள் போல தெரியுது! இறக்கும் மிகப் பெரும்பாலானோரில் வைரஸ் சோதனை செய்து தான் மரண அத்தாட்சிப் பத்திரத்தில் போடுகிறார்கள். சோதனை  செய்ய முடியவில்லையென்றால் குணங்குறிகளைப் பார்த்து "கொரனாவுடன் தொடர்பான" என்று போடுகிறார்கள். ஆனால் இந்த கொரனாவுடன் தொடர்பான என்ற எண்ணிக்கை மிக மிகக் குறைவு! பட்டி தொட்டியெல்லாம் கொரனா ரெஸ்ற் கிடைக்கிறது இப்போது.

விளையாட்டில்லை அண்ணை, தயவு செய்து கவனமாக இருங்கள்! 

செய்திகள் பொய்யென்று சொல்லவில்லை. ஒரு சில தரவுகள் பொய்யென்று சொல்கிறார்கள். அதனால்தான் பல நாடுகளில் கொரோனா சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றதாகவும் சொல்கின்றார்கள்.

அத்துடன் என் மீதான ஆலோசனைக்கு மிக்க மிக்க நன்றி.:)

ஜஸ்ரின்! உங்களிடம் ஒரு கேள்வி?
கொரோனா என்பது உருவாக்கப்பட்டதா? இல்லையேல் இயற்கையானதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

எல்லாம் சரி... உந்த பிள்ளைகள் பள்ளிக்கு போய் வருறது தான் சிக்கும். ஆனாலும் வீட்டிலை வைத்திருகவும் ஏலாது.

சம்மர் சோதனை இல்லாமல் பெரிய தலைவலியா போட்டுது....

வெளிநாட்டு மாணவர் வராததால, அந்த இடத்தை குடுத்து பெரிய பிரச்சணை வராம தாலிச்சாச்சு.

என்ன கோதாரியள் வரப்போகுதோ தெரியவில்லை.

இதுக்குள, கடைக்காரர் கொஞ்சப் பேர்.... இன்னும் காசு வரும் போலைகிடக்கு. வாங்கிக்கொண்டு கடையை இழுத்து பூட்டிப் போட்டு போலாம் எண்டு ஜடியா போடுகினம். 😋

பிரைமறி ஸ்கூல்கள் கொஞ்சம் நெகிழ்வுதன்மை காட்டீனம்.

20 நாளுக்கு பிறகும் போகாட்டி ஸ்கூல் கவுன்சுலுக்கு அறிவிக்க வேணுமாம். ஆனால் கவின்சில் home schooling வேணுமெண்டா செய்யுங்கள் எண்டீனம். 

பாப்பம். நாங்கள் குழப்பாத படிப்பே? பாதி நாள் பங்கறுக்கதானே. பிறகு நாங்களும் எதையோ படிச்சி கிழிச்சி குப்பை கொட்டுறம்தானே🤣

15 hours ago, குமாரசாமி said:

 

செய்திகள் பொய்யென்று சொல்லவில்லை. ஒரு சில தரவுகள் பொய்யென்று சொல்கிறார்கள். அதனால்தான் பல நாடுகளில் கொரோனா சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றதாகவும் சொல்கின்றார்கள்.

அத்துடன் என் மீதான ஆலோசனைக்கு மிக்க மிக்க நன்றி.:)

ஜஸ்ரின்! உங்களிடம் ஒரு கேள்வி?
கொரோனா என்பது உருவாக்கப்பட்டதா? இல்லையேல் இயற்கையானதா?

இயற்கையாக எமக்கு வரும் பல சின்ன சின்ன உபாதைகளும் ஒரு வகை கொரோனா வைரஸ்தான்.

முந்தி பரவிய மேர்ஸ், சார்சும் கூட.

இப்படி ஒருவகை கொரோனாவை எடுத்து, அல்லது இயற்கையில் தோன்றிய இன்னொருவகையை எடுத்து அதை ஒரு உயிரியல் ஆயுதமாக அல்லது மருந்தாக மாற்றும் முயற்சியில் இருந்த போது, அது லீக்காகி விட்டது என்பதே என் ஊகம்.

ஊகம் மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.