Jump to content

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த அமைச்சர் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த அமைச்சர் !

தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தங்கொட்டுவையிலுள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (18) தேங்காய்களை பறித்துள்ளார்.

spacer.png

இவ்வாறு தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்த இராஜாங்க அமைச்சர், தென்னை மரத்தில் இருந்தபடியே ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்கு தேங்காயின் தேவை அதிகமாக காணப்படுவதே நாட்டில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணமாகும்.

வருடத்தில் 2.8 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதில் 700 மில்லியன் தேங்காய்களை தொழிற்சாலைகள் கொள்வனவு செய்கின்றன. 

1.8 மில்லியன் தேங்காய்களையே நுகர்வோர் கொள்வனவு செய்கின்றனர்.

எனவேதான் தென்னை மரக் கன்றுகளை அதிகளவில் நடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

தேங்காயின் விலை எவ்வளவுதான் அதிகரித்துக் காணப்பட்டாலும் அதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

வரக்காப்பொல மெனிக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த உபுல் குமார என்பவர் தயாரித்த குறித்த தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தியே  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்தார்.

குறித்த உபகரணத்தை பயன்படுத்தி ஆண்கள் மாத்திரமின்றி, பெண்களும் மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்க (அறுவடை) கூடிய வகையில் அந்த உபகரணம் அமைக்கப்பட்டுள்ளது. 

அடுத்த சில மாதங்களில் குறித்த உபகரணம் சந்தையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

 

https://www.virakesari.lk/article/90233

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.......!   👍

Link to comment
Share on other sites

தேங்காய் விலையை மட்டுப்படுத்த புதிய திட்டம்

சடுதியாக விலை உயர்ந்து வரும் தேங்காய்கான விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதனால் தேங்காய் விலையை மட்டுபடுத்த முடியாதென்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையிலும் ஆராயப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/தஙக-ய-வலய-மடடபபடதத-பதய-தடடம/175-255611

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வருடத்தில் 2.8 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதில் 700 மில்லியன் தேங்காய்களை தொழிற்சாலைகள் கொள்வனவு செய்கின்றன. 

என்ன கணக்கு இடிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

என்ன கணக்கு இடிக்குது.


இடிக்குதுதான்!

To get the message across to people about the coconut shortage, Sri Lankan Minister of State for Coconut Arundika Fernando climbed a coconut tree and said the country was facing a shortage of 700 million coconuts due to high demand for local industry and domestic consumption.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

என்ன கணக்கு இடிக்குது.

கணக்கை கணக்க யோசிக்கப்படாது வணங்காமுடி & கிருபன் ஜி ..... 2.8 மில்லியனை பில்லியன் என்று வாசியுங்கள். எங்கேயும் இடிக்காது.....!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

கணக்கை கணக்க யோசிக்கப்படாது வணங்காமுடி & கிருபன் ஜி ..... 2.8 மில்லியனை பில்லியன் என்று வாசியுங்கள். எங்கேயும் இடிக்காது.....!  😎

பில்லியன்தான் சரியாம்!

தென்னை மரத்தில் ஏறிய இலங்கை அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ

19 செப்டெம்பர் 2020
sri lanak coconut
 

இலங்கையில் வழமையாக நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களை தாண்டி வித்தியாசமான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இலங்கை ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நடத்தியிருந்தார். 

புத்தளம் - தங்கொட்டுவை பகுதியில் தென்னை மரமொன்றின் மீதேறி இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. 

தென்னை, பனை, கித்துல் ராஜாங்க அமைச்சர் என்ற விதத்திலேயே, அருந்திக்க பெர்ணான்டோ இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.

உலக சந்தையில் தென்னை மற்றும் அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. 

இலங்கையிலும் தென்னை மற்றும் அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அருந்திக்க பெர்ணான்டோ கூறியுள்ளார். 

தங்கொட்டுவை பகுதியிலுள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரமொன்றின் மீதேறி, அருந்திக்க பெர்ணான்டோ தேங்காய்கள் சிலவற்றை பறித்துள்ளார். 

இதையடுத்து, குறித்த மரத்திலிருந்து அவர் ஊடக சந்திப்பை நடத்தினார். 

தென்னை மரமொன்றிற்கு ஏறும் ஒருவருக்கு 100 இலங்கை ரூபாய் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேங்காய் பறித்தல் மற்றும் தென்னங் கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு தற்போது பணியாளர்களை தேடிக்கொள்வது கூடி கடினமான விடயம் என அவர் கூறியுள்ளார். 

குறிப்பாக தென்னங் கல்லு உற்பத்தி செய்வோர் இலங்கையில் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மரத்தில் ஏறுவதற்கும், இரு மரங்களுக்கு இடையில் கயிற்றின் உதவியுடன் செல்வதற்கும் காணப்படுகின்ற அச்ச நிலைமையும் இந்த தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார். 

இலங்கை மக்களின் பயன்பாட்டிற்காக வருடாந்தம் சுமார் 2.8 பில்லியனுக்கும் அதிகமான தேங்காய் உற்பத்தி இந்த நாட்டில் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், அந்த 700 மில்லியன் தொழில்துறையில் தட்டுப்பாடு காணப்படுவதாக கூறும் ராஜாங்க அமைச்சர், வருடாந்த பயன்பாட்டிற்காக 1.8 பில்லியன் தேங்காய்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

இதனால் தென்னை செய்கையை மேம்படுத்தி, பாரியளவிலான அந்நிய செலாவணியை நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். 

தேங்காய் விலையை குறைப்பதற்காக தற்போதைய சூழ்நிலையில், தற்காலிக தீர்வுகள் சிலவற்றை எடுக்க முயற்சித்து வருவதாகவும், தேங்காய் விலையை அதிகரிக்காதிருக்க எதிர்காலத்தில் நீண்ட கால திட்டமொன்றை வகுக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். 

இந்த நிலையில், தேங்காயின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், வெளிநாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்படாது என அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

அருந்திக்க பெர்ணான்டோ எவ்வாறு மரத்தில் ஏறினார்?

கேகாலை - வரகாபொல பகுதியிலுள்ள புதிய கண்டுபிடிப்பாளர் ஒருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட மரம் ஏறும் உபகரணமொன்றை பயன்படுத்தியே அருந்திக்க பெர்ணான்டோ தென்னை மரத்தில் ஏறினார். 

குறித்த உபகரணத்தை பயன்படுத்தி நாளொன்றிற்கு சுமார் 100 உயரமான தென்னை மரங்களில் ஏற முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். 

இந்த உபகரணத்தை பயன்படுத்தி மரமொன்றிற்கு ஏறுவதற்கு 100 ரூபாய் அறவிடப்படுமேயானால், நாளொன்றில் 10 ஆயிரம் ரூபாயை தனிநபர் ஒருவரினால் உழைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்த உபகரணமானது 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், அதனை மிக விரைவில் இலங்கை சந்தைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

தென்னை செய்கையாளர்களில் பதில்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தென்னை உற்பத்தி மற்றும் செய்கையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ஜயரத்ன ஜயசேகர தெரிவிக்கின்றார்.

தேங்காய் விற்பனையின் ஊடாக குறைந்த இலாபத்தை கூட பெற்றுகொள்ள முடியவில்லை என அவர் கூறினார்.

இலங்கையில் தேங்காய் செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்

 

https://www.bbc.com/tamil/sri-lanka-54219909

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி நீங்கள் சொல்வது சரி.

இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தகவலின்படி 2019 இல் இலங்கையின் மொத்த தேங்காய் உற்பத்தி அண்ணளவாக 3.1 பில்லியன் தேங்காய்கள். இதில் உள்ளூர் நுகர்வோர் தேவைகளுக்கு 1.8 பில்லியன் தேங்காய்கள் பயன்படுத்தியதுபோக மீதி பல்வேறு உற்பத்திப்பொருட்களுக்கும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்படுகிறது.

2018 இல் உற்பத்தி 2.6 பில்லியன்கள். 2017 இல் 2.5 பில்லியன் அதற்கு முதல் 2016 இல் 3.0 பில்லியன்கள். உலக தேங்காய் உற்பத்தியில் இலங்கை 5 ஆம் இடத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா....ஹா..... இப்படி ஏகப்பட்ட திறமைகள் என்னிடம் தேங்கிக் கிடக்கு.....போறவழியில அப்பப்ப இப்படி ஒன்றிரண்டை எடுத்து விடுவேன்......!   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் கூடாது எண்டு சனம் காட்டுக்கத்து கத்திக்கொண்டிருக்கு......இஞ்சை என்னடா எண்டால் மில்லியன்,பில்லியன்  கணக்கிலை தேங்காய் புடுங்கீனமாம்......
அது சரி புண்ணாக்கு,கலியாணவீட்டுக்கு கோலம் போட தேங்காய்ப்பூ வேணுமெல்லே...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

தென்னை மரமொன்றிற்கு ஏறும் ஒருவருக்கு 100 இலங்கை ரூபாய் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

8 hours ago, கிருபன் said:

குறிப்பாக தென்னங் கல்லு உற்பத்தி செய்வோர் இலங்கையில் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 

7 hours ago, குமாரசாமி said:

தேங்காய் கூடாது எண்டு சனம் காட்டுக்கத்து கத்திக்கொண்டிருக்கு......இஞ்சை என்னடா எண்டால் மில்லியன்,பில்லியன்  கணக்கிலை தேங்காய் புடுங்கீனமாம்......
அது சரி புண்ணாக்கு,கலியாணவீட்டுக்கு கோலம் போட தேங்காய்ப்பூ வேணுமெல்லே...😎

மரத்திற்கு 100 ரூபாய் கொடுத்தால் இலங்கை விலைவாசிப்படி கள்ளுக்கு கட்டுபடி ஆகுமா தோழர்.? 😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.