Jump to content

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு


Recommended Posts

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

Link to comment
Share on other sites

அடுத்த மாகாண சபை தேர்தல் வரை இப்படி நாடகங்களை காணலாம். பொருளாதாரம் பாதளத்தை நோக்கி போக இப்படிப்பட்ட நாடகங்கள் உதவி செய்யும்

Link to comment
Share on other sites

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nirmalan said:

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

சிங்கப்பூரைப்போல இலங்கை விரைவில் வளர்ந்துவிடும்
சும்மா இந்த இனப்பிரச்சனை சனப்பிரச்சனை
என்ற கதையெல்லாம் இருக்கக் கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 15:03, செண்பகம் said:

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

 

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

புத்தளத்தில் ஓர் தொலகட்டி உருவாகின்றதா?நெல்லி ரசம்.... பாதிரிமார்  திராட்சை தோட்டம்,இந்து சாமிமார் வாழைதோட்டம்,மெளலவிமார் பேரீட்சை பழதோட்டம்,......பிக்குமார் இனவாத தோட்டம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

 

புத்தளத்தில் ஓர் தொலகட்டி உருவாகின்றதா?நெல்லி ரசம்.... பாதிரிமார்  திராட்சை தோட்டம்,இந்து சாமிமார் வாழைதோட்டம்,மெளலவிமார் பேரீட்சை பழதோட்டம்,......பிக்குமார் இனவாத தோட்டம்..

எல்லா தோட்டங்களும் சேர்ந்து பணத்தோட்டம் வரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 23:24, nirmalan said:

அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய  உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர். 

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

வக்சீன் கண்டுபிடிக்காமல் விமானம் ஏறாதீங்க நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மார்த்தாண்டன் said:

வக்சீன் கண்டுபிடிக்காமல் விமானம் ஏறாதீங்க நண்பா

சிறிலங்காவில் வக்சீன் நம்ம கோத்தா....அவர் இருக்க பயம் ஏன் ? 

5 hours ago, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

 கண்டபடி வாகனங்களில் திரியக்கூடாது....தேசியபாதுகாப்புக்கு கெடுதல் விளைவித்தீர்கள் என குற்றம் சாட்டுவோம்..

Link to comment
Share on other sites

On 23/9/2020 at 10:01, குமாரசாமி said:

எப்பிடியான மாறுபட்ட சிந்தனைகள் என்பதை நாலு வரிகளில் சொல்ல முடியுமா?

பிறகு என்னை  கேள்வியெல்லாம் கேக்கிறன் எண்டு அங்கை போட்டுக்குடுக்கிறேல்லை டிசம்பர் மாதம் சிலோனுக்கு நான் போய் திரும்பவேணும். 

எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை.

வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன்.

கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை.

அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அங்கஜன் இராமநாதன் சிறிது நாள் ஆடிய ஆட்டத்தினை கோத்தபாய எப்படி அடக்கினார் என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.

இதுவே மகிந்த அரச தலைவராக இருந்து இருந்தால் அங்கஜனின் ஆட்டத்தினை கண்டு கொள்ளளாமல் விட்டு விடுவதோடு, டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையே மோதல் போக்கினை தொடர அனுமதித்தும் இருப்பார்.

இங்கே நான் கோத்தபாய புராணம் படிப்பதாக யாரும் தவறாக கருத வேண்டாம். தற்போதைய அரசியல் நிலவரத்தினையும் ஊடக நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.

கோத்தபாயவும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறுவாரா என்பதனை காலம்தான் பதில் கூற வேண்டும். அதுவரைக்கும் நடப்பதனை கண்டு கொள்ள வேண்டியதுதான்.

கோத்தபாய மிகவும் மோசமான இனத் துவேசம் பிடித்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. கோத்தபாயவின் காலத்தில் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்காலத்தில் சந்திக்க போகின்றனர் என்பது மட்டும் உண்மை. 

இதனை எதிர் கொள்வதற்கான யதார்த்த அரசியலை புலம்பெயர் சமூகத்தினராகிய நாம் வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முட்டாள்த்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வீர வசனங்கள் பேசுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது. 

கோத்தபாய மிகவும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்தவர்களை தெரிவு செய்து காய் நகர்த்துகின்றார். எம்மால் இன்று வரை இந்தியாவுடனான நட்புறவை புதுப்பிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய சிங்களவர்களுக்கு என்ன செய்கிறார் என்பதையும் அதை அங்கிருக்கும் தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கீழவரும் முகநூல் பதிவையும் இடப்பட்ட comments ஐயும் பாருங்கள் மக்களே 🤪

 

உடனே உங்கள் வீரத்தை என்னில் காட்டாதீங்க. கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nirmalan said:

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக மிகவும் கவலையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

தயவு செய்து உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள்.

அப்படியாரும் அணுகாமல் இல்லை. ஆனால் அவர்களின் மீண்டும் ஒரு மென்மையான வன்முறை நிபந்தனைக்கு தயார் இல்லையால் அவை முறிந்துபோனது என்று.

அவர்கள்(இந்தியா) தங்களுக்கு என்ன தேவை என்பதை எங்களை வைச்சு செய்யட்டும் ஆனால் எங்களுக்கு என்ன தேவை என்பதில் பாதியாவது செய்து காட்டி நம்பிக்கையை ஊட்டச்சொல்லுங்க.

பழைய விட்டுப்போன சந்திப்புக்களை தொடர தயாராக தமிழர் தரப்பு காத்திருப்பதாகவும் சொல்லுங்க.🙏🏻

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய அவர்கள் நாட்டின் ஜனாதிபதி என்ற  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவத்தினர்  தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளைத் துடைத்து, தான்  ஒரு நல்ல மனிதர் என்பதை உலகிற்கு காட்டி,  
சிங்கள அரசுகள் தமிழர்களுக்குச்  செய்த எல்லாப்பிழைகளையும்
சரியானது என்று நிரூபிக்க முயல்வது அவருடைய  அண்மைய செயற்பாடுகளில் இருந்து தெரிகின்றது

Link to comment
Share on other sites

1 hour ago, முதல்வன் said:

கோத்தபாய சிங்களவர்களுக்கு என்ன செய்கிறார் என்பதையும் அதை அங்கிருக்கும் தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கீழவரும் முகநூல் பதிவையும் இடப்பட்ட comments ஐயும் பாருங்கள் மக்களே 🤪

🤣🤣🤣

 சிலவற்றை வாசித்துப் பார்த்தேன்

>பல தமிழர்கள் அவரை பாராட்டுகின்றனர்
>பலர் இலங்கையை தம் தாய் நாடு என்று பாசத்துடன் அழைக்கின்றனர்
> அனேகமாக எல்லாரும் தமிழ் அரச அதிகாரிகளை கடுமையாக குறை கூறுகின்றனர்
> பலர் தம் இடங்களுக்கு வந்து பார்க்க அழைக்கின்றனர்

Quote

கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 


தமக்கு தாமே வைத்த குண்டு என்றுதான் நான் நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

அனேகமாக எல்லாரும் தமிழ் அரச அதிகாரிகளை கடுமையாக குறை கூறுகின்றனர்
> பலர் தம் இடங்களுக்கு வந்து பார்க்க அழைக்கின்றனர்

உண்மைதான் சிங்களவன் எங்களுக்கு செய்யும் அநியாயங்களுக்குள் தமிழர்கள் குறிப்பாக அரச அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் தமிழர்களாக இருந்துகொண்டு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களும், செல்வாக்குகளும், பாராமுகமும் எம் மக்களுக்கு சில வேளைகளில் சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கவைக்கின்றன.

கோத்தபாய செய்வது போல எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம் செய்து குறைகளை வெளிப்படுத்தலாம்.

அன்றும் சரி இன்றும் சரி பயம் தான் சரியாக வழிநடத்துகிறது. உணர்வோ தேசியமோ இரண்டாம் பட்சம் தான். அல்லது மிக சொற்பம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nirmalan said:

எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை.

வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன்.

கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை.

அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அங்கஜன் இராமநாதன் சிறிது நாள் ஆடிய ஆட்டத்தினை கோத்தபாய எப்படி அடக்கினார் என்பதே இதற்கு சிறந்த உதாரணம்.

இதுவே மகிந்த அரச தலைவராக இருந்து இருந்தால் அங்கஜனின் ஆட்டத்தினை கண்டு கொள்ளளாமல் விட்டு விடுவதோடு, டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையே மோதல் போக்கினை தொடர அனுமதித்தும் இருப்பார்.

இங்கே நான் கோத்தபாய புராணம் படிப்பதாக யாரும் தவறாக கருத வேண்டாம். தற்போதைய அரசியல் நிலவரத்தினையும் ஊடக நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.

கோத்தபாயவும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறுவாரா என்பதனை காலம்தான் பதில் கூற வேண்டும். அதுவரைக்கும் நடப்பதனை கண்டு கொள்ள வேண்டியதுதான்.

கோத்தபாய மிகவும் மோசமான இனத் துவேசம் பிடித்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. கோத்தபாயவின் காலத்தில் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்காலத்தில் சந்திக்க போகின்றனர் என்பது மட்டும் உண்மை. 

இதனை எதிர் கொள்வதற்கான யதார்த்த அரசியலை புலம்பெயர் சமூகத்தினராகிய நாம் வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முட்டாள்த்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வீர வசனங்கள் பேசுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது. 

கோத்தபாய மிகவும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்தவர்களை தெரிவு செய்து காய் நகர்த்துகின்றார். எம்மால் இன்று வரை இந்தியாவுடனான நட்புறவை புதுப்பிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

 

நீங்கள் இந்திய  அனுதாபியா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முதல்வன் said:

உடனே உங்கள் வீரத்தை என்னில் காட்டாதீங்க.

🤣

7 hours ago, நிழலி said:
Quote

கோத்தபாய  2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன். 


தமக்கு தாமே வைத்த குண்டு என்றுதான் நான் நினைக்கின்றேன். 

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nirmalan said:



ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. 

 

இஞ்ச பாருங்கோ நிர்மலன், 

என்னைப் பொருற்தவர தமிழற்ற நிலம இனி மீழுறதுக்கு வாய்ப்பே இல்ல எண்டுதான் நினைக்கிறன். ஏனெண்டா எங்களட்ட சனத் தொகையும் இல்ல, பொருளாதார வசதியும் இல்ல, களைச்சுப்போனோம். இதுக்கு மேலால எங்களட்ட ஒற்றுமை இல்ல. கிழக்குத் தமிழன் வடக்குத் தமிழன் வேண்டாம் எண்டு சொல்லுறான். வடக்கிலுள்ள சில புல்லுருவிகளோ இருக்கிற கொஞ்ச நெஞ்சத் தமிழரையும் சமயத்தால பிரிக்க நிக்கினம். திரும்பவும் சாதிப் பிரச்சன தொடங்குது. இப்பிடி எல்லாப் பிரச்சனையும் ஒண்டா வந்து நிக்கேக்க நான் ஏன் இந்தியன்ர பிரச்சனயப் பற்றி நினைக்கோணும். 

வடிவாப் பாருங்கோ.. இனப்பிரச்சனய ஆயுதப் போரா மாத்தினது இந்தியா. தமிழன் ஒற்றுமையா இருந்தா தன்ர சொல்லக் கேட்கமாட்டான் எண்டு கனக்கக் குழுக்கள உண்டாக்கி அவங்கள அடிபட வச்சது இந்தியா. கடசியிலபோராட்டத்த தன்ர ஆமிய இறக்கி அழிச்சதும் இந்தியா. இப்ப எனன மயி....கு(😡) எங்களட்ட திரும்ப வருகினம். தன்ர தேவைக்கு எங்கள ஆயுதம் தூக்க வச்சவங்க பிறகு தங்கட தேவைக்கு எங்கள அழிச்சவங்க இப்ப இலங்க சீனாட்டப்  போனவுடன திரும்பவும் எங்கட்ட வருகினம் ? இருக்கிற மிச்ச சொச்ச சனத்தையும் அழிக்கிறதுக்கா 😡 அவனுக்குத் தேவையெண்டா அவன சிங்களவனோட முண்டச் சொல்லுங்கோ. 😏

இந்திய கொள்கை வகுப்பாரிட்டச் பிரபாகரன்ர படத்தக் கழுவிக் குடிக்கச் சொல்லுங்கோ. அப்பயாவது நேர்மை, பற்றுறுதி, மானம் ரோசம் கொஞ்சமாவது வருகுதா எண்டு பார்ப்போம். உங்கட ஊடக நண்பரைச் சொல்லுங்கோ கொஞ்சம் உப்புப் போட்டுச் சாப்பிடச் சொல்லி. அப்பத்தான் தன்ர இனத்துக்கு விசுவாசமா இருக்கிறதுக்கு மான ரோசம் கொஞ்சமாவது வரும் எண்டு

சிங்களவன் எனக்கு எதிரி, ஆனா இந்தியன் எனக்குத் துரோகி. 

சாட்சிக்காறன் காலில விழுவதைவிட சண்டைக்காறன் காலில விழுவதற்கு நான் ரெடி. 😡

(ஆக்கபூர்வமான வாதத்திற்கு ஆயத்தமாக உள்ளேன். ஆனால் எமது மக்களின் மேல் பழி போடுவதை முதலில் நிறுத்த வேண்டும்)

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

உங்கழுக்கு என்னதான் பிரச்சனை.

ஆக்கபூர்வமாக ஒரு திரி போக விரும்பினாலும் எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்குச் சகுனப்பிழையா அமைய வேணும் என்கின்ற நிலைப்பாட்டில் திரியைக் குழப்ப நினைக்கிறீர்கள். ☹️

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2020 at 21:36, விளங்க நினைப்பவன் said:

🤣

கோத்தபாய தனக்கு தானே தான் குண்டு வைத்து கொண்டார் இது பற்றிய முழு விபரம் பெருமாளை கேட்டால் சொல்வார்.

அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு சிங்கள விசுவாசமாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு சிங்கள விசுவாசமாக்கும் .

சரத் பொன்சேகா அப்படி  கூறியுள்ளாரே, கோத்தாத்தான் குண்டு வைத்து நாடகமாடியது என்று.   

கோத்தபாயா சிங்களவரினால் மட்டும் தெரிவு செய்யப்பட்டவராமே. அவரது அபிவிருத்தி, எழுச்சி எல்லாம் அவர்களுக்கே.

On 24/9/2020 at 20:55, nirmalan said:

இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார்.

ஒரு கள்ளனாற்தான் இன்னொரு கள்ளனை பிடிக்கமுடியும். இவர் செய்த ஊழலையும், கொலை, கொள்ளைகளையும் யார் விசாரித்து தண்டனை குடுப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2020 at 06:03, செண்பகம் said:

நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் அவசரமாக மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், புத்தளம் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி, அவற்றுக்கும் தீர்வினையும் பெற்றுக்கொடுத்தார்.

அத்தோடு, மதுரங்குளி பாலசோலை முதல் தலுவ வரை பயணித்த ஜனாதிபதி, வீதியின் இருபுறமும் கூடியிருந்த மூவின மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு 10 ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையையும் பாராட்டினார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இதேவேளை, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய தொழிநுட்பக் கட்டடத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

எங்கையடாப்பா சமூக இடைவெளி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.