Jump to content

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு


Recommended Posts

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு

 

 
 
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியால் தேவாலயத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்..... தப்பி ஓடி விடுவார் என்று, பலத்த பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளதா?

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளையான்..... தப்பி ஓடி விடுவார் என்று, பலத்த பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளதா?

இல்லை இல்லை மகிந்தா கண்டால் ஏதும் விபரீதமாகிவிடுமே என்பதால் ஒரு முன்னேற்பாடு.

6c6eb41d-a714-4267-a8bb-a5ae0bb017fa1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்ரை ரெக்னிக்கை யூஸ்பண்ணி சசிகலா தமிழ்நாட்டு முதலமைச்சராய் இருக்கேலாதோ மக்காள்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் இப்ப இல்லை ,அதிக வாக்குகளை வேறு வாங்கியவர் என்று சொல்லுகிறார்கள் பிறகு ஏன் பலத்த பாதுகாப்பு...சுமத்திரனுக்கும் அதிரக்டிபடை பாதுகாப்பு ,,பிள்ளையானுக்கும் அதிரடிபடை பாதுகாப்பு ....ஒன்றுமே புரியல்ல  

Link to comment
Share on other sites

பிள்ளையானுக்காக வீதியில் காத்திருந்து வாழ்த்து மழை பொழிந்து வரவேற்ற மக்கள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்புத் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மயிலங்கரச்சை வாழ் மக்களால் இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நாவலடி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பு தலைவர் பதவி வெற்றிடத்திற்கான நியமனக் கடிதம் பிரதமரால் பிள்ளையானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சென்ற வேளை இந்த நியமனம் கிடைத்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டவேளை, மயிலங்கரச்சையில் ஒன்று கூடி காத்திருந்த மக்களால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

https://www.ibctamil.com/srilanka/80/151309?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2020 at 20:05, nunavilan said:

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

யாரிடமிருந்து பாதுகாப்பு? யாரால் இவருக்கு ஆபத்து வரப்போகிறது?  புரியவில்லையே? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.