Jump to content

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு


Recommended Posts

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு

 

 
 
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியால் தேவாலயத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்..... தப்பி ஓடி விடுவார் என்று, பலத்த பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளதா?

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளையான்..... தப்பி ஓடி விடுவார் என்று, பலத்த பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளதா?

இல்லை இல்லை மகிந்தா கண்டால் ஏதும் விபரீதமாகிவிடுமே என்பதால் ஒரு முன்னேற்பாடு.

6c6eb41d-a714-4267-a8bb-a5ae0bb017fa1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்ரை ரெக்னிக்கை யூஸ்பண்ணி சசிகலா தமிழ்நாட்டு முதலமைச்சராய் இருக்கேலாதோ மக்காள்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் இப்ப இல்லை ,அதிக வாக்குகளை வேறு வாங்கியவர் என்று சொல்லுகிறார்கள் பிறகு ஏன் பலத்த பாதுகாப்பு...சுமத்திரனுக்கும் அதிரக்டிபடை பாதுகாப்பு ,,பிள்ளையானுக்கும் அதிரடிபடை பாதுகாப்பு ....ஒன்றுமே புரியல்ல  

Link to comment
Share on other sites

பிள்ளையானுக்காக வீதியில் காத்திருந்து வாழ்த்து மழை பொழிந்து வரவேற்ற மக்கள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்புத் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மயிலங்கரச்சை வாழ் மக்களால் இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நாவலடி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பு தலைவர் பதவி வெற்றிடத்திற்கான நியமனக் கடிதம் பிரதமரால் பிள்ளையானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சென்ற வேளை இந்த நியமனம் கிடைத்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டவேளை, மயிலங்கரச்சையில் ஒன்று கூடி காத்திருந்த மக்களால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

https://www.ibctamil.com/srilanka/80/151309?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2020 at 20:05, nunavilan said:

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

யாரிடமிருந்து பாதுகாப்பு? யாரால் இவருக்கு ஆபத்து வரப்போகிறது?  புரியவில்லையே? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.