Jump to content

ஐ.நா. உள்விவகாரங்களில் தலையிடாது என உறுதியாக நம்புகிறோம்- சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka President angry at “irresponsible citizens” in fight against  COVID19 | EconomyNext

ஐ.நா. உள்விவகாரங்களில் தலையிடாது என உறுதியாக நம்புகிறோம்- சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை

நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான முக்கியத்துவத்தை ஐக்கியநாடுகள் சபை கொடுக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காணொளி தொடர்பாடல் மூலம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, “கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில மாதங்களுக்குள் பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகங்களைப் பாதித்துள்ளது.

கொரோனா சவாலை இலங்கையால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம்.

எங்கள் அணுகுமுறை இராணுவம், சுகாதாரம், தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் உள்ள பொதுத்துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் மீட்பு வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90வீதம் அதிகமாக உள்ளது. எங்களின் இந்த வெற்றிக்கு அடையாளப்படுத்தல், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிகப்பெரிய பலமாக இருந்தன.

இதேவேளை, நிலையான அபிவிருத்தி நோக்கின் அடிப்படையில் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை உறுதியளித்துள்ளது. வேளாண் அடிப்படையிலான உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவுவதற்கும் இறக்குமதிகள் மீதான ஓரளவு கட்டுப்பாடுகள் உட்பட இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் ஆரம்பித்த நடவடிக்கைகள் முக்கியம் பெறுகின்றன.

இதேவேளை, ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த நாடும் பிணைக் கைதிகளாக இல்லாதபோது, உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும் இடையிலான கூட்டாண்மை மிகச் சிறந்த முறையில் தொடர்கிறது என்பதை நம்புகிறேன்.

உலகம் ஒரு பொதுவான மற்றும் நிகரற்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் எங்களுக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபையானது மாநிலங்களின் இறையாண்மை, சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்பதுடன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இதேவேளை, நாங்கள் விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த மாபெரும் நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம்.

அந்தவகையில், அமைதி காக்கும் நடவடிக்கைகள் முதல் அதன் சிறப்பு அமைப்புக்களின் திட்டங்கள் வரை ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அத்துடன், நாங்கள் எங்கள் மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தனது 75ஆவது ஆண்டு நிறைவை 2020, செப்டம்பர் 21ஆம் திகதி உயர்மட்டக் கூட்டத்துடன் கொண்டாடுவதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் தீர்மானித்திருந்தன.

இதன்படி, ‘பன்முகத்தன்மைக்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல்’ என்ற அடிப்படையில், பொதுச் சபையின் 75 ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர், 180 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் தங்கள் பிரதிநிதித்துவங்களை அளித்த கூட்டத்தில் தொடக்க அறிக்கையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐ-நா-உள்விவகாரங்களில்-தல/

Link to comment
Share on other sites

நாடுகளின் உள்விவகாரங்களில் ஐ. நா. தலையிட்டமையால் உலகில் புதிய நாடுகள் தோன்றியுள்ளதை யாராவது இந்த இலங்கை சனாதிபதிக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

2030ஆம் ஆண்டு நிகழ்ச்

ஐயா பத்து வருடம் அசையாமல் இருக்க போகின்றார்  ஆசை யாரை விட்டது

Link to comment
Share on other sites

5 hours ago, putthan said:

ஐயா பத்து வருடம் அசையாமல் இருக்க போகின்றார்  ஆசை யாரை விட்டது

கட்சிக்குள் வெட்டுக்குத்து இல்லாத வரை 10 வருடம் சாத்தியமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரிஸ் ஜோன்சன் பதவிக்கு வந்த நாளில் இருந்து தலைவலி ஓயாத மாதிரியே, தலைவலி மகிந்தவுக்கு ஓயப்போவதில்லை. கோத்தா சும்மா வாயசைப்பு மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.