Jump to content

கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும்


Recommended Posts

கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும்

  • Thomas uylland Eriksen, பேராசிரியர், சமூக மானிடவியல் துறை
    தமிழாக்கம்: ரூபன் சிவராஜா

ன்று நாம் முகம் கொடுக்கும் நிகழ்வு எம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கின்ற மிகப் பாரதூரமான உலகளாவிய நிகழ்வு என்பதைத் தாமதமாகவேனும் பெரும்பான்மையினர் உணரத் தலைப்படடுள்ளனர். குறைந்தபட்சம் ஐரோப்பாவில் அது உணரப்பட்டுள்ளது. நாம் செய்வதறியாது தடுமாறிய இந்த நிலையை ‘நெருக்கடி’ எனும் சொற்பிரயோகத்தினூடாகக் குறிப்பிடுவது ஒரு வகையில் குறைமதிப்பீடாகும். இந்தப் பூமியில் நாம் ஏழரை பில்லியனுக்கு மேலுள்ளோம். அம்மக்களில் இதனால் பாதிக்கப்படாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் (மே, 2020) கோவிட்-19 இன் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 300 000ஐ தாண்டியிருந்தது. கடைகளை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நடமாட்ட சுதந்திரம் கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டது. பெரு வணிக நிறுவனங்கள் திவாலாவாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. சிறுவணிக நிறுவனங்கள் காணாமற்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக் கடன் மீள்செலுத்தல் தாமதமாகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை. உலகின் தெற்கிலுள்ள (global south) நிரந்தர தொழிலற்ற தொழிலாளர்கள் மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர். மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒன்று அல்லது இரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

கை குலுக்குதல் இனி இல்லை. நட்பு ரீதியான கட்டியணைப்பு இனி இல்லை. கண்ணுக்குப் புலப்படாத- அதேவேளை ஒருவரோடொருவர் எம்மைப் பிணைக்கும் உற்பத்திச் சங்கிலி, விநியோகம், தொடர்பாடல் ஆகிய பல பில்லியன் இழைகளுடனான உலகளாவிய அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை இப்பொழுதுதான் பலரும் முதன்முறையாக தெளிவாக (அல்லது மங்கலாக) அறிந்து கொள்கின்றனர்.

நம்பிக்கைகளும் நெருக்கடிகளும்

நெருக்கடிகளின் போதே, ஒரு சமூகத்தினுடைய கூட்டிசைவு – அது நம்பிக்கை அல்லது பயத்தின் அடிப்படையிலிருந்தாலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவது பொதுவாக நிகழக்கூடியது. தொடர் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் சமூகங்களில் ஒப்பீட்டளவில் நம்பிக்கை குறைவாகவே இருக்கும்

நம்பிக்கை தொடர்பான எண்ணிக்கை சார் கணக்கெடுப்புகளில் (quantitative surveys) நோர்டிக் நாடுகள், உச்சத்திற்கு அருகில் அல்லது மேலாக இருந்துவந்துள்ளன. வைரஸ் பரம்பல் காரணமாக அவசரகால நடைமுறை அமுல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நெருக்கடியின் விளைவாக ‘நோர்டிக் நம்பிக்கை’ எந்த அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்ற கேள்விளை நாம் கேட்கத் தொடங்கலாம்.

இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, அமைதி பொருந்திய உலகின் வடக்கு மூலையில் (corner of the Global North) பெரும் திரள்மையப்பட்ட நம்பிக்கை நிலவுகின்றது. ஆனால் இந்த விலைமதிப்பற்ற வளத்தினைக் கட்டியெழுப்புவதற்கு நீண்ட ஆயுளின் காலங்கள் தேவை. அழிப்பதற்கு நொடிப்பொழுதுகள் போதுமானவை. இங்கே மக்கள் இந்நிலையை எதிர்கொள்ள முன்தயாரிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் இதனையொத்த ஒரு வீழ்ச்சியையும் நிச்சயமற்ற தன்மையையும் தூரத்திற்கூட அனுபவித்ததில்லை.

உண்மையில் பன்முகப்பட்ட, குறிப்பாக பெருகிவரும் அதி-பன்முகப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை தொடர்பான கேள்விகள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் சமூக பொறியியலாளர்கள் மத்தியில் சில ஆண்டுகளாக இருந்துவருகின்றன. இந்த விடயத்தில் உலகளாவிய வடக்கிற்குள் முக்கிய வேறுபாடுகள் உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன: ஸ்கன்டிநேவிய மக்கள் பொதுவாக பிறமனிதர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேவேளை அமெரிக்கர்கள் பொதுவாக அவ்வாறில்லை.

ஆனால் நம்பிக்கையின் இரண்டு முதன்மை வடிவங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்: நீங்கள் ஒரு யாராவது ஒரு நபரை அல்லது நபரல்லாத ஏதாவதொன்றை நம்பலாம். பிற மனிதர்களை நம்புகின்ற ஒரு சமூகத்தில் நீங்கள் வாழலாம், ஆனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இதன் தலைகீழ் நிலையும் சாத்தியம்: அதாவது நீங்கள் அரசாங்கத்தை நம்புபவராக இருக்கக்கூடும். ஆனால் அயலிலுள்ள சக மனிதர்களை நம்பாதவராக இருக்கக்கூடும். அப்படியாயின் உண்மையில் நீங்கள் சமூகவெளியைப் பகிர்ந்து கொள்ளும் சந்தேகத்திற்கிடமான மனிதர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அரசாங்கத்தில் தங்கியுள்ளீர்கள்.

நெருக்கடிகள் மற்றும் காலகங்களின் போது இந்த இரண்டு வகையான நம்பிக்கைகளும் சோதனைக்கு உட்படுகின்றன. உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் கொரோனா வைரசின் கட்டற்ற பரம்பலைத் தடுப்பதற்கு ஒப்பிடக்கூடியவாறான பல கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமுல்படுத்தின. சில தடவைகள் துப்பாக்கி முனையிலும் சில தடவைகள் தயவான அறிவுறுத்தல்கள் மூலமும் செய்தன.

நோர்வேயின் எதிர்வினை

ஏனைய நாடுகள் சார்ந்த ஒரு பக்கவாட்டுப் பார்வையுடன் நோர்வே மீது பார்வையைச் செலுத்துவோம். கோவிட் – 19 இற்கு எதிராக நோர்வே விரைந்து கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது (வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தல் உட்பட கல்வி நிறுவனங்களை மூடியது வரை). தற்போது தொற்றுத்தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்படியாக மீள்திறப்பு நடைபெறுகிறது.

பின்லாந்த், டென்மார்க், சுவீடன் போன்ற ஏனைய நோர்டிக் நாடுகளுடன் ஒப்பிடுகையில் நோர்வேயில் இறப்பு வீதம் மிகக் குறைவு என்பதோடு பதிவு செய்யப்பட்ட தொற்று எண்ணிக்கையிலும் இரண்டாவது மிகக் குறைந்த நிலையிலும் உள்ளது. எப்படியிருப்பினும் கடைப்பிடித்த மூலோபாயம் வெற்றியளித்ததா என்பதை நெருக்கடியின் முடியும் சூழலில் மட்டுமே கண்டறிய முடியும்

‘தன்னார்வப் பொதுப்பணி’ (dugnad) என்பது நோர்வே தேசியப் பண்பாட்டின் தனிச்சிறப்பான அம்சமாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. உண்மையில் இது சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியின் (Nitimen) நேயர் வாக்கெடுப்பில் “தேசியச் சொல்” என்று பெயரிடப்பட்டது. தன்னார்வப் பொதுப்பணி என்பது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவர்களின் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு, அவர்களின் பங்கேற்பினைக் கோருகின்ற ஊதியம் பெறாத, கூட்டுணர்வை, கூட்டுச்செயற்பாட்டைக் குறிக்கிறது.

வழக்கமான தன்னார்வப் பணிகள் பெற்றோர்களால் முன்னெடுக்கப்படும் முன்பள்ளிகளின் உட்கட்டுமான பராமரிப்பு மற்றும் சிறிய திருத்தவேலைகளைக் குறிக்கின்றன. இவை வழமையாக சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படுவன. அத்தோடு பிள்ளைகள் அங்கத்துவம் வகிக்கும் விளையாட்டுக் குழுக்கள் அல்லது இசை அணிவகுப்புக் குழுக்களுக்கான வருமான ஈட்டல் செயற்பாடுகளுக்குள் அடங்கக்கூடிய பயன்படுத்திய பொருட்களின் விற்பனை, சிற்றுண்டிச் சாலை நடாத்துவதில் பங்களித்தல், குடியிருப்புகளின் பொதுப்பகுதிகளைத் துப்புரவாக்கி அழகுபடுத்துதல் போன்றன பொதுவான தன்னார்வப் பணிகள் எனும் வரையறைக்கு உட்பட்ட செயற்பாடுகளாகும். நிச்சயமாக இதனையொத்த நடைமுறைகள் உலகின் வேறெந்தப் பகுதிகளிலும் காணக்கூடியவை. ஆனால் நோர்வேஜியர்களைப் பொறுத்தவரை, தன்னார்வப்பணி என்பது மொழிபெயர்ப்பதற்குக் கடினமான ஒரு உள்ளூர் சொல் என்பதற்கு அப்பால், ஒரு வகையில் சமத்துவவாதத்தின் குறியீடாகவும், புராதனமாக பிணைப்பினைக் கொண்ட ஒருமைப்பாட்டின் குறியீடாகவுத் உள்ளது.

இந்த இலைதுளிர் காலம், அரசியல்வாதிகள் தத்தமது தேர்தல் தொகுதிகளை அணிதிரட்டுவதற்காக ‘தேசிய தன்னார்வப் பொதுப்பணி’ என்ற சொல்லாடலைத் திரும்பத்திரும்ப பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லாடல், தேசமாகச் சிந்தித்து தனித்துவம்மிக்க தனிநபராக நடந்துகொள்வதைப் பரிந்துரைக்கின்றது. – அதாவது தனிநபர்களின் கூட்டுணர்வு மற்றும் கூட்டுணர்வாகச் சிந்திக்கும் தனிநபர். மானிடவியலாளர் டுழரளை னுரஅழவெ, பேரிடர்களிலிருந்து வெளிவர முனையும் நவீன தேசத்தை இப்படியாகச் சித்தரித்தார்.

உண்மையில் இந்தச் சொல்லாட்சி மிகைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டதாகவும் தலைவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதற்காக, தமது வழமையான வழிமுறைகளிலிருந்து வெளியேறுகின்றனர். இது நிறுவனங்கள் மற்றும் அரசு மீதான நம்பிக்கை மற்ற நாடுகளை விட நோர்வேயில் ஆழ வேரூன்றியுள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு சில மேலோட்டமான உதாரணங்கள் மூலம் இந்த விடயத்தை விளக்க முடியும். ஏப்ரல் ஆரம்பத்தில், மக்களின் நடமாட்டத்தைக் கண்டறியும் திறன்பேசிச் செயலி புதிதாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் 1.4 மில்லியன் நோர்வேஜியர்கள் (மொத்தச் சனத்தொகை 5.5 மில்லியன்) தன்னியல்பாக அந்தச் செயலியை தமது திறன்பேசிகளில் தரவிறக்கியிருந்தனர். அந்தச் செயலி மூலம் சேகரிக்கப்படும் இலத்திரனியல் தகவல்களை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தாது என்பதோடு, ஏனைய அனைத்துப் பொறுப்புமிக்க குடிமக்கள் போல தேசிய சிரமதானத்திற்குப் பங்களிக்கின்ற சமிக்ஞை இதன் மூலம் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் செயலியைத் தரவிறக்கிய அனைவரும் அதனைச் செயற்படுத்தியுள்ளனர் என்று அர்த்தமில்லை.

ஒரு மாதத்திற்கு முன்னர், நகரத்திற்கு வெளியேயுள்ள தனியார் ஓய்வுக் குடில்களுக்கும் ஏனைய பொது ஓய்வுக்குடில்களுக்கும் சென்று தங்குவதற்கு அரசாங்கம் தற்காலிகத் தடைவிதித்திருந்தது. ஒரு நாட்டின் மத்தியதர வர்க்கத்தின் பெரும்பகுதி இந்தக் காலப்பகுதியில் ஒரு சமய உள்ளுணர்வோடு ஒரேஞ் பழங்களைச் சுவைப்பதற்கும் நீள்தூரப் பனிச்சறுக்கலுக்காககாகவும் தமது மலைக்குடில்களில் ஈஸ்ரர் காலத்தைக் கழிப்பது வழமை. இத்தகைய சூழலில் ஓய்வுக்குடில் தடை என்பது நுண்ணுணர்வற்ற சர்வாதிகார அரசாங்கத்திடமிருந்து வந்த ஆத்திரமூட்டுகின்றதும் அவமானப்படுத்துகின்றதுமான அறிவித்தலாகப் பார்க்கப்பட்டிருக்கக்கூடியது.

இருப்பினும் எதிர்வினைகள் மிகுந்த புரிதலை வெளிப்படுத்தின. 80 வீதத்திற்கு மேலான மக்கள் தடையை ஏற்றுக்கொண்டதாக கணிப்பு ஒன்று கூறியது. அதேவேளை மிகச் சொற்பமான தொகையினரே தடையைத் தீவிரமாக எதிர்த்தனர்.

கொரோனா வைரசினால் ஏற்பட்ட தன்னார்வக் கூட்டுணர்வின் இசைவுச்சூழல் உச்சத்திலிருப்பதை வேறு புறநிலைகளில் வைத்தும் அவதானிக்கலாம். உதாரணமாக மார்ச் இறுதியிலிருந்து ஓட்டப்பயிற்சி தொடர்பான சர்ச்சை ஊடகத்தளங்களில் முக்கிய இடம்பிடித்தது. உடற்பயிற்சி நிலையங்கள், மற்றும் ஏனைய பொது இடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓட்டம் (ஜொக்கிங்) என்பது அர்த்தமுள்ளதும் ஆரோக்கியமானதுமான பொழுதுபோக்கு என்பது ஒரு பார்வை. தவிர நடை

அமைதியாக நடை பாதைகளில் செல்பவர்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் குழந்தைகளோடு செல்வபர்கள், குறுகிய பாதைகளின் பாதசாரிகள் மீது வேர்வை, மூச்சுத் துளிகளை உமிழ்ந்து செல்கின்ற பொறுப்பற்றவர்களாக நடைபாதைகளில் ஜொக்கிங்கில் ஈடுபடுபவர்கள் உள்ளனர் என்ற எதிர்ப்பார்வையும் காணப்படுகின்றது. இரண்டாவது பார்வை சமத்துவத்தின் பாற்பட்டது. சலுகைகள் மற்றும் பாரட்ச நடவடிக்கைகளை நிராகரிக்கிறது.

தனிப்பட்ட தொடர்பு வலையமைப்புகள் மற்றெங்கிலும்விட நோர்வேயில் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்ற போதிலும், குறிப்பாக தொழிற்சந்தை, பொருளாதாரத் தளங்களில் அவற்றின் முக்கியத்துவம் குறைவானது. அத்தோடு ஊழல் பற்றிய பார்வை சார்ந்த சர்வதேச ஆய்வுகள் நோர்வேஜியர்கள் அதனை மிகக்குறைவு என நம்புவதாகக் கூறுகின்றது.

தன்னார்வப் பொதுப்பணி எனும் கருத்தியல் பற்றியும் அதன் மீதான அதீத நம்பிக்கையின் அளவீடு பற்றியும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். அது மனிதர்களுக்கிடையிலான பொதுமைப்படுத்தப்பட்ட நம்பிக்கையையும் தனிப்பட்ட உறவுத்தொடர்பற்ற அதிகார நிறுவனங்கள் மீதான நம்பிக்கைக்கும் பொருந்தும்.

நோர்வேஜியர்களின் சுய புரிதல் சார்ந்த விடயத்தைக் குறிக்கின்ற, கவர்ச்சிகரம் குறைந்த ஒரு அம்சத்தினைச் சுட்டிக்காட்டுவதன் மூலம்; இரண்டையும் புரிந்து கொள்ளலாம். அது துயவெநடழஎநnஇ வாந டுயற ழக துயவெந. இது நோர்டிக் நாடுகளின் சமத்துவம் பற்றிய புரிதலுக்கு அடிப்படையாகக் கருதப்படும் ஒரு இலக்கியப் படைப்பில் இடம்பெற்ற அம்சம். யுமளநட ளுயனெநஅழளந (1899 – 1965) எனும் டெனிஸ்-நோர்வேஜிய எழுத்தாளரின் 1933 இல் வெளிவந்த நையாண்டி நாவலான A Fugitive Crosses u;is Tracks (En flyktning krysser sitt spor) இல் இடம்பெற்றிருந்தது. அதில் பத்துக் கட்டளைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும் அடிப்படையில் அது மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதும் உரிமை எவருக்கும் இல்லை என்று அது கூறுகின்றது. Law of Jante இற்குள் ஸ்கன்டிநேவிய தேசியப் பண்புகளின் குறைபாடாகப் பரவலாகக் கருதப்படும் பொறாமை, சமூக அங்கீகாரம் மிக்க நடத்தைகள், மற்றும் சிறுமைத்தன முன்தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இருப்பினும், மாறுபட்ட வெளிச்சத்தில் புரிந்துகொள்ளப்பட்டாலும், Law of Jante also சுயநல ஆசைகளைப் பின்பற்றுவதைவிடவும், மக்களை மறைமுகமாக கூட்டுணர்வை வெளிப்படுத்தவும் அதற்காக செயற்படவும் வழிகோலுகிறது.

நோர்வேஜிய இலக்கியத்தில், Law of Jante வினை மிகப் பிரபலமாக மீறிய படைப்பு இப்சனின் பேர் கிந்த். அந்தப் பாத்திரம் இப்போதைய தனிமைப்படுத்தல் விதிமுநைகளைப் பின்பற்ற விரும்பியிருக்காது. அத்தோடு ஆபத்து நிறைந்த வயதுப்பிரிவினரை வைரசிலிருந்து பாதுகாப்பதற்குரிய எவ்வித அக்கறையையும் செலுத்தியிருக்க மாட்டாது.

மார்ச் 12 பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கூட்டு நடவடிக்கை அனைவரிடமிருந்தும் அர்ப்பணிப்பினைக் கோரியிருந்தது. இதன் முதன்மை அழுத்தம் தீவிர கடமைகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்தும் வகையானதல்ல. மாறாக கட்டியணைத்தல், அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கடமையாக அறிவுறுத்தப்பட்டது. பெற்றோர்கள் தமது பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு இப்படிச் சொன்னார்கள்: உங்களுக்காக அல்ல. உங்கள் தாத்தா, பாட்டிகளைக் கருத்திற்கொண்டு நீங்கள் வெளியில் சென்று உங்கள் நண்பர்களுடன் களித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சொல்ல நேர்ந்தது.

நோர்வேஜியர்களின் நம்பிக்கையின் அடிப்படை என்ன?

முடிவாக நான்கு சாத்தியமான விளக்கங்களைப் பட்டியலிடுகிறேன். நோர்வே மீதான உயர்ந்த நம்பிக்கையும் நாட்டின் வலுவையும் கொண்டு, அச்சுறுத்துவதற்கு மாறாக வேண்டுகோளின் ஊடாக இந்தப் பேரிடர் காலத்தில் அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய முறையில் மக்களை அணிதிரட்டவும் டுயற ழக துயவெநவின் நேர்மறையான அம்சங்களின் பயன்பாடு ஏதுவாக அமைந்துள்ளது.

முதலாவது சமூக இடைவெளி என்பது தற்காலிகம். புரதமரை அறிந்த ஒருவரை அறிந்த இன்னெருவரைப் பலருக்குத் தெரிந்திருக்கும். உயர்மட்டத்திற்கும் அடிமட்டத்திற்குமிடையிலான இடைவெளி வெகுசில நீக்கல்களால் ஆனது. இது ஆளுபவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்குமிடையிலான குறுகிய இடைவெளியைக் குறிக்கின்றது. இதன் ஒரு விளைவு என்பது வலுவானதொரு கூட்டு அடையாளம்.

இரண்டாவது, மற்றைய மேற்கைரோப்பிய நாடுகளைவிடத் தாமதமாக நோர்வே நகரமயமாக்கமடைந்தது. கிராமப்புற விழுமியங்களான ஒருங்கிணைவு, சமத்துவம் போன்றன இன்றும் நீடிக்கின்றன. ஆகையினால் கடைகளுக்குள் மக்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவிடத்து ஒருவரையொருவர் கடிந்துகொள்கின்ற நிலையில், அந்நியர்களுக்கிடையிலான சமூகக் கட்டுப்பாடு என்பது விளைவுத்தாக்கம் மிக்கது

மூன்றாவது, மக்கட்தொகை ஒப்பீட்டளவில் சிறியது. இதனுடன் முதல் இரண்டு விடயங்களுடன் இணைந்து, தவிர்க்க முடியாமல் அதிகளவில் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. இதனால் பரஸ்பரம் உருவக அயலவர்களாக மாறுகிறோம்.

நான்காவது,அரசுக்கும் குடிமக்களுக்குமிடையிலான இணைவாக்கம் என்பது வலுவானதும், பெரும்பாலும் ஒத்திசைவும் கொண்டதுமாகும். அதாவது அவர்களுக்குத் தேவையான சேவைகளை அரசாங்கம் வழங்கும், மேலும் தேவையேற்படின் காவல்துறை உதவிக்கு வரும் போன்ற பொதுவானதொரு பார்வை நோர்வேஜியர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலை செயின்ட் நூயிசில் உள்ள ஆபிரிக்க அமெரிக்கருக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள சுயாதீன சிந்தனையாளர் ஒருவருக்கோ பொருந்தாது.

இது சமூக ஒத்திசைவு மற்றும் கூட்டுணர்வினை உருவாக்குகின்றது. ஆனால் சமத்துவமின்மைக்கு மறைப்பிடுகிறது. மேலும் இதுவொரு சமூகக் கட்டுப்பாட்டு வடிவத்திற்கு வித்திடுகிறது. சமூகக் கட்டுப்பாடு என்பது இசைவாக்கத்திற்கான வலுவான அழுத்தம், விழிப்புணர்வுக்கான போக்குகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதோடு, எல்லை ரோந்துகள், முறைசாரா தடைகள், அதனோடு மேலும் முக்கியமாக இன ரீதியான அந்நியப்படுத்தல்கள், ஏனைய சிறுபான்மையினரை விலக்கிவைத்தல் போன்றவற்றிற்கும் இட்டுச்செல்லும்.

தற்போதைய விவாதம் என்னவெனில், நடைபாதையில் தள்ளுவண்டிகளில் இளம்தாய்மார்களைக் கடந்து வியர்வையைப் பறக்கவிடுவதும், மூச்சுவாங்க ஓடுவதும் பொருத்தப்பாடானதா? அல்லது அயலவர்கள் தம்மைமறந்து முஷ்டியில் இருமுவதாலோ, அல்லது கைகுலுக்க முனைவதாலோ அவர் தவறானவராகப் பார்க்கப்படுவாரா என்பதாகும். இது சிறியளவு செயல்வெளியைக் கொண்ட சாத்தியமான தகவலறிந்த அல்லது பெரும்பான்மையினரின் விழுமியங்களுக்கு இணக்கமில்லாத நெகிழ்வுத்தன்மைகளைக் கொண்ட சமூகத்தைகக் குறிக்கின்றது.

‘பெரியண்ணா’ துண்டுவிரலைக்கூட உயர்த்தத் தேiயில்லாத, அதேவேளை சிறிய சகோதர சகோதரிகள் நெறிமுறைக் கட்டமைப்பின் எல்லைகளை உறுதியாகவும் கூர்மையாகவும் பேணுகின்ற சமூதாயத்தை நோக்கி, ளுயனெநஅழளந பரிந்துரைத்த டுயற ழக துயவெநவின் மூல வடிவத்துக்கு முழுவட்டத்தையும் நாங்கள் நகர்த்தியுள்ளோம்.

Thomas uylland Eriksen: ஒஸ்லோ பல்கலைக்கழகம் சமூக மானிடவியல் துறை பேராசிரியர். சர்வதேச கல்வியாளர்கள் மத்தியில் அறியப்பட்ட, நோர்வேயின் முதன்மையான கருத்தாளர்களில் ஒருவர். தனது ஆய்வு மற்றும் அறிவூட்டல் செயற்பாடுகளுக்கான ‘கல்வியாளர் விருதினை’ 2019இல் பெற்றவர். உலகமயமாக்கல், தேசியவாதம், அடையாளம், சமூக அறிவியல், இனத்துவம், சூழலியல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மட்டுமல்லாது அவற்றை வெகுமக்கள் மத்தியில் எடுத்துச்சென்று அறிவூட்டுவதிலும் காத்திரமான பங்கினை ஆற்றிவருபவர்.

இந்தக் கட்டுரை 15 May 2020 , https://www.coronatimes.net/norway-covid-19-nordic-trust/ தளத்தில் வெளிவந்தது. அவருடைய புத்தகங்கள்:
Globalization: The Key Concepts (2006/2014), 
Overheating (2016)
Boomtown (2018).

 

http://thinakkural.lk/article/70694

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.