Jump to content

"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

hindia-issue.png   loan-hindi-1600693466.jpg

"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" என கூறிய வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளமாகும். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் சொந்த நிலம் மற்றும் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார்.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், "Do u know Hindi" (உனக்கு ஹிந்தி தெரியுமா?) என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் "I dont know Hindi, but I know Tamil and English" (எனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் தமிழும், ஆங்கிலமும் தெரியும்) என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வட இந்திய வங்கி மேலாளரோ, "I am from Maharashtra, I know Hindi. Language problem" (நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன், எனக்கு ஹிந்தி தெரியும், மொழி பிரச்சினை) என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவனத்தை காண்பித்து, இதே வங்கி கிளையில்தான் கணக்கு வைத்துள்ளேன் என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்துள்ளார். 

இதனால் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த மருத்துவர், மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்ட்டஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால், கடன் கிடையாது என மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் வருத்ததுடன் தெரிவித்தார்.

நியூஸ்7

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • ராசவன்னியன் changed the title to "ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்
  • கருத்துக்கள உறவுகள்

119710468_3389736094453821_7507458530625069952_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=MPpDpiw9N1QAX_gJ8Qs&_nc_ht=scontent-frt3-2.xx&oh=379f8b4ec2ef1ef09a4db34845d1fb9b&oe=5F8F4E78

 

119572333_3351610081620183_7076288439152808800_n.jpg?_nc_cat=108&_nc_sid=dbeb18&_nc_ohc=ZWab35hhUFUAX_q1meh&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c2281cc011f872fdc89ef060d36b117e&oe=5F8DF248

 

119979797_350211302765321_5708619371700895215_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=Tb_LAAu0k7MAX980Lsx&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b2f594f7d2507de8e7984ff7c32de361&oe=5F8F62E7

Edited by தமிழ் சிறி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், எனக்குத் தெரிகிறது...
உங்கள் நாட்டு... இணைய வழங்கியில், சில கட்டுப்பாடுகள் இருக்கலாம் என கருதுகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன், எனக்குத் தெரிகிறது...
உங்கள் நாட்டு... இணைய வழங்கியில், சில கட்டுப்பாடுகள் இருக்கலாம் என கருதுகின்றேன். :)

அது நாட்டு கட்டுப்பாடு இல்லை, அலுவலக கட்டுப்பாடு..! 😜

ப்ராக்சி செர்வர் முகவரியை மாற்றினால் படங்கள் தெரிகின்றன. :)

21 minutes ago, தமிழ் சிறி said:

119979797_350211302765321_5708619371700895215_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=Tb_LAAu0k7MAX980Lsx&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b2f594f7d2507de8e7984ff7c32de361&oe=5F8F62E7

 

இதுவே சிறந்த வழி..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

அது நாட்டு கட்டுப்பாடு இல்லை, அலுவலக கட்டுப்பாடு..! 😜

ப்ராக்சி செர்வர் முகவரியை மாற்றினால் படங்கள் தெரிகின்றன. :)

வேலைக்குப் போனால்... வேலையை செய்ய வேணும்.
அதை விட்டிட்டு... கொம்புயூட்டரை, நோண்டிக்  கொண்டிருந்தால்...
ஷேக்குக்கு...  கோவம் வரும் தானே....    :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

வேலைக்குப் போனால்... வேலையை செய்ய வேணும்.
அதை வீட்டிடு... கொம்புயூட்டரை, நோண்டிக்  கொண்டிருந்தால்...
ஷேக்குக்கு...  கோவம் வரும் தானே....    :grin:

நான்கு மாதமாக கடும் வேலைப் பளு..

கோடை காலம், இரண்டு நாட்களுக்கு முன் முடிந்து இப்பொழுது வசந்த காலம்..!

இன்று கடும் புகை மூட்டமாக இங்கே இருக்கிறது.. மனசும் லேசாக பறக்கிறது..!!🥰

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

நான்கு மாதமாக கடும் வேலைப் பளு..

கோடை காலம், இரண்டு நாட்களுக்கு முன் முடிந்து இப்பொழுது வசந்த காலம்..!

இன்று கடும் புகை மூட்டமாக இங்கே இருக்கிறது.. மனசும் லேசாக பறக்கிறது..!!🥰

எங்களுக்கு... இன்றிலிருந்து, இலையுதிர் காலம் ஆரம்பிக்கன்றது.
குளிர் வரப்  போகுது என்பதற்கான முன்னோட்டம்.
இனி... ஜக்கெற், தொப்பி, கையுறை என்று மெல்ல மெல்ல மாட்டிக் கொள்ள வேணும். 🥶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வங்கிக்கு மதுரையில் நடந்த கூத்து..

 

EigG4hpU4AAhPpq?format=jpg&name=900x900

 

Edited by ராசவன்னியன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

அந்த வங்கிக்கு மதுரையில் நடந்த கூத்து..

மதுரையில் மட்டும் அல்ல தமிழ்நாடு முழுக்க இருக்கும் அந்த வங்கியின் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்படணும் .

Link to comment
Share on other sites

22 minutes ago, ராசவன்னியன் said:

அந்த வங்கிக்கு மதுரையில் நடந்த கூத்து..

 

EigG4hpU4AAhPpq?format=jpg&name=900x900

 

நாங்கள் சிங்கள 'சிறீ' அழிப்புப் போராட்டம் நடாத்தி தமிழ் காவல்துறை அதிகாரியிடம் உதை வாங்கிய காலம் ஞாபகத்திற்கு வருகிறது.🤔

தமிழகத்தில் தமிழ் காவல்துறையினரும் கழுதைப்பால் குடிப்பதாகக் கேள்வி. 😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும். 

எந்த சட்ட வரையரையில் குறிப்பிடப்பட்டுள்ளது..?images?q=tbn:ANd9GcRfHeCOjFIDgxNAnhm8gK1aEUpWFh78uO6e-Q&usqp=CAU

Update:

இந்தி சர்ச்சை: கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் பணியிடமாற்றம்..!

Eig2cjgVkAAvZ1V?format=jpg&name=small

Eig58ILVoAE7S_k?format=jpg&name=small

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தி தெரியாதா? லோன் இல்லை": வங்கி மேலாளர் பணியிடமாற்றம்!

97195.jpg

பாலசுப்பிரமணியன்

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை பணியிட மாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளன. இதையடுத்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயணன் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi?” என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I don’t know Hindi, but I know Tamil and English” என ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார். “I am from Maharashtra, I know Hindi. Language problem” என தெரிவித்துள்ளார் மேலாளர்.

மருத்துவர் மீண்டும் தனது ஆவணத்தை காண்பித்து, "நான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது" என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல், "கடன் கொடுக்க இயலாது" என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவர் வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியை திணிக்கும் வங்கியின் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் "அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சி மண்டல அலுவலகம் விசாரணைக்கு அழைத்தது. அங்கும் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றதால் அவரை பணியிடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய தலைமுறை

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

"இந்தி தெரியாதா? லோன் இல்லை": வங்கி மேலாளர் பணியிடமாற்றம்!

97195.jpg

பாலசுப்பிரமணியன்

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை பணியிட மாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளன. இதையடுத்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயணன் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi?” என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I don’t know Hindi, but I know Tamil and English” என ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார். “I am from Maharashtra, I know Hindi. Language problem” என தெரிவித்துள்ளார் மேலாளர்.

மருத்துவர் மீண்டும் தனது ஆவணத்தை காண்பித்து, "நான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது" என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல், "கடன் கொடுக்க இயலாது" என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவர் வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியை திணிக்கும் வங்கியின் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் "அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சி மண்டல அலுவலகம் விசாரணைக்கு அழைத்தது. அங்கும் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றதால் அவரை பணியிடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய தலைமுறை

இலங்கையில் இந்த சிங்கள கிரந்தம் இன்னும் விடவில்லை. பெரும்பாலும், தமிழ் மக்கள் சண்டை பிடிக்காமல் போயிருந்தால், அப்படி நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலங்கையில் இந்த சிங்கள கிரந்தம் இன்னும் விடவில்லை. பெரும்பாலும், தமிழ் மக்கள் சண்டை பிடிக்காமல் போயிருந்தால், அப்படி நடந்திருக்கலாம்.

கிரந்தம் விடவில்லை என்றால், தமிழர்கள் விரும்பி படிக்கிறார்களா..? என்ன சொல்ல வருகிறீர்களென புரியவில்லையே..? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

கிரந்தம் விடவில்லை என்றால், தமிழர்கள் விரும்பி படிக்கிறார்களா..? என்ன சொல்ல வருகிறீர்களென புரியவில்லையே..? 🤔

இலங்கையில் இந்த சிங்கள மொழி தெரியாதா என்ற  கிரந்தம் இன்னும் இல்லை.

இருந்தாலும் பெருன்பான்மையர் மொழி என்ற பெருமை உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இலங்கையில் இந்த சிங்கள மொழி தெரியாதா என்ற  கிரந்தம் இன்னும் இல்லை.

இருந்தாலும் பெருன்பான்மையர் மொழி என்ற பெருமை உண்டு.

பெருமையா..?

ஒருவேளை தமிழ் ஈழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்ற எல்லைக்கோடு இல்லை. அதனால் இந்த பிரச்சினையே இல்லையென எண்ணுகிறேன். விதியே என்று ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டிய நிலையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

பெருமையா..?

ஒருவேளை தமிழ் ஈழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்ற எல்லைக்கோடு இல்லை. அதனால் இந்த பிரச்சினையே இல்லையென எண்ணுகிறேன். விதியே என்று ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டிய நிலையாக இருக்கும்.

இல்லை.... இன்று இலங்கையில் இவ்வளவு பிரச்சணைகளுக்கு மத்தியிலும், அரச வேலையானால், இரு மொழிகளும் கட்டாயம் என்று இருப்பதால்.... அந்த நிலை.

முன்னர் சிங்களம் மட்டுமே என்று இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இல்லை.... இன்று இலங்கையில் இவ்வளவு பிரச்சணைகளுக்கு மத்தியிலும், அரச வேலையானால், இரு மொழிகளும் கட்டாயம் என்று இருப்பதால்.... அந்த நிலை.

முன்னர் சிங்களம் மட்டுமே என்று இருந்தது.

ரொம்ப நல்லது..

இங்கே சட்டப்படி இந்தி தமிழ் நாட்டுக்கு பொருந்தாது என "இந்திய அலுவல் மொழி 1976 விதிகள்" இருந்தும் திணிப்பு இருக்கிறது.

 

Test.png

அலுவக மொழி விதி 1976

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் மாஸ்க் அணிந்து, வங்கியை விட்டு வெளியேறுபவர்தான் அந்த கிளை மேலாளர்..விஷால் நாராயணன் காம்ளே.

 

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.