Jump to content

விக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்? - யதீந்திரா

தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு அரசியல் தலைவராக விக்கினேஸ்வரன் தெரிகின்றார். வழமையாக ஊடகங்கள் மத்தியில் அடிக்கடி பேசப்பட்ட சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் சற்று பின்னுக்கு சென்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து சுமந்திரன் அதிகமாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு வேளை தான் அதிகம் பேசியதால்தான் தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் அகப்படவேண்டியேற்பட்டது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம் – அல்லது, இப்போது பேசுவதற்கு எதுமில்லையென்றும் சுமந்திரன் கருதியிருக்கலாம். ஏனெனில் சுமந்திரனின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சுமந்திரனின் தோல்வியென்பது அடிப்படையில் சம்பந்தனின் தோல்வி. எனவே இந்த தோல்வியிலிருந்து எழுவதற்கு, ஏனையவர்கள் தோல்வியடையும் வரையில் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பை தவறென்று கூறி வெற்றிபெற்றிருக்கும் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் கூட்டமைப்பின் இடத்திற்கு வரும்வரையில் அமைதி காப்பது நல்லதென்றும் சுமந்திரன் எண்ணியிருக்கலாம். சுமந்திரன் ஒரு வேளை அவ்வாறு கருதியிருந்தால் அவரது நம்பிக்கை நிச்சயம் வீண் போகப் போவதில்லை. ஏனெனில் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் வியூகங்களை எதிர்கொள்வதற்கான தமிழ் ஆற்றல் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. எண்ணிக்கையில் சிறுபாண்மையினரின் உதவியை எதிர்பார்க்காத ஒரு அரசாங்கம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் என்னதான் பேசினாலும் அது பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தப் போவதில்லை. இந்த இடத்தில்தான் – விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? அவரது அரசியல் பாதையெது? என்னும் கேள்விகள் எழுகின்றன.

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய போது, அவர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கும் இன்று அவர் வந்து நிற்கும் இடத்திற்குமிடையிலுள்ள வேறுபாடானது, மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு. இதனை அவரால் ஒரு போதுமே நிராகரிக்க முடியாது. அரசியலில் நண்பர்கள் எதிரிகளாவதும் – எதிரிகள் நண்பர்களாவதும் மிகவும் சாதாரணமான விடயம். இன்று விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்தவர்கள் விக்கினேஸ்வரனோடு இல்லை. விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வருகின்ற போது, அவரை எதிர்த்தவர்கள் அவரோடு நிற்கின்றனர். இதனையும் அவரால் மறுக்க முடியாது. எதிர்காலத்தில் வெளியில் நிற்கும் இன்னும் பலரும் விக்கினேஸ்வரனை நோக்கி வரக் கூடும். அதாவது, விக்கினேஸ்வரனோடு இணைந்திருந்தால் தேர்தலில் வெல்ல முடியுமென்னும் நம்பிக்கை ஏற்பட்டால் பலர் விக்கினேஸ்வரனை நோக்கி நிச்சயம் வருவர். இன்று பலரும் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்புவது, செல்வநாயகத்தின் மீதான பற்றுதலாலோ அல்லது சம்பந்தன் மீதான பற்றுதலாலோ அல்ல. மாறாக, தமிழரசு கட்சியுடன் இணைந்திருந்தால்தான், உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறமுடியுமென்னும் நம்பிக்கை இருப்பதால்தான் பலரும் அங்கு செல்கின்றனர். 2009இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது வெறுமனே தேர்தலில் போட்டியிடுவதற்கான நல்ல கட்சிகளை தேடும் அரசியலாகவே சுருங்கிப்போனது. இதனை எவ்வாறு மாற்றியமைப்பது? இதனை மாற்றியமைக்கக் கூடிய தலைவர் யார்? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரையில் பதிலில்லை.

இன்றைய நிலையில் தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஒரேயொரு தெரிவு தேர்தல் அரசியல்தான். அதற்கப்பால் மக்கள் இயக்கங்களை கட்டியெழுப்ப வேண்டுமென்று சிலர் அவ்வப்போது கூடிய போதும், அந்த முயற்சிகள் அனைத்தும் கூடிக் கலைவதாகவே முடிந்திருக்கின்றது. இதுவரையில், வடக்கில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் அனைத்துமே வெறும் கூடிக் கலைதல்களாகவே இருந்திருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டுதான், இன்றைய நிலையில் தேர்தல் அரசியலை தவிர வேறொரு தெரிவு தமிழ் மக்களுக்கு முன்னால் இல்லையென்று இந்தக் கட்டுரை வாதிடுகின்றது. தேர்தல் அரசியல் ஒன்றுதான் தமிழர்களிடம் இருக்கின்ற நிலையில், அதனை எவ்வாறு உச்சளவில் பயன்படுத்திக் கொள்வது,? அதற்கான பொறிமுறை என்ன? தமிழ்த் தேசிய அரசியல் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் பிடிக்குள் விழுந்ததைத் தொடர்ந்து, தமிழ் மிதவாத அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக அதன் வீரியத்தை இழுந்துவிட்டது.

90களுக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் தமிழ் அரசியல் சென்ற பின்னர், மிதவாத அரசியல் கட்சிகள் என தனித்து பார்ப்பதற்கான ஒரு அரசியல் சூழலே தமிழர்கள் மத்தியில் இருந்திருக்கவில்லை. தவிர, விடுதலைப் புலிகள் இயக்கம் மிதவாதிகள் என்று சொல்லப்பட்டவர்களை எப்போதுமே நம்பியதுமில்லை. இதற்கு கூட்டமைப்பின் உருவாக்கவே ஒரு சிறந்த உதாரணம். கூட்டமைப்பை வன்னி வழிநடத்திய போதும், கூட்டமைப்பு சுயாதீனமானதொரு அமைப்பாக இயங்குவதை புலிகளின் தலைமை ஒருபோதுமே விரும்பியிருக்கவில்லை. அதே வேளை கூட்டமைப்பிற்கு சர்வதேச அரங்கில் அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கவும் அவர்கள் முயற்சிக்கவில்லை. அன்று கூட்டமைப்பிலிருந்த அனைத்து கட்சிகளும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே கூட்டமைப்பில் இருந்தனர். அவ்வாறிருந்த போதும், ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பை புலிகள் உள்வாங்கவில்லை. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் என்னும் அடிப்படையில், சம்பந்தனுக்கு பேச்சுவார்த்தை மேசையில் ஒரு இடத்தை கொடுத்திருக்க முடியும். ஆனாலும் விடுதலைப் புலிகள் அதனை செய்யவில்லை. ஏன்? ஏனென்றால் விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் கூட்டமைப்பை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தினார்களேயன்றி, கூட்டமைப்பிற்கு ஒரு தனித்துவமான அங்கீகாரத்தை கொடுக்க புலிகள் விரும்பியிருக்கவில்லை. விடயங்களை தொகுத்து நோக்கும் போது, இவ்வாறாதொரு முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது. இந்த விடயங்களை தொகுத்து நோக்கும் போது – இன்று தேர்தல் அரசியலுக்காக விடுதலைப் புலிகளை பயன்படுத்த நினைப்பது முற்றிலும் பிழைப்புவாதமாகும். விடுதலைப் புலிகள் வேறு – தேர்தல் அரசியல் வேறு.

2009இற்கு பின்னரான தேர்தல் அரசியல் என்பது மீண்டும் மிதவாத அரசியலை தமிழ்ச் சூழலில் பலப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. யுத்தத்தின் விளைவுகளும் அதே வேளை எதிர்காலத்தை நோக்கி பார்வைiயும் முன்வைத்து புதியதொரு மிதவாத அரசியலை கட்டியெழுப்பியிருக்க முடியும். மேலும் வெளியிலிருப்பவர்களை ஒன்றுபடுத்தி தமிழர்களின் ஐனநாயக பலத்தை பெருப்பித்திருக்க முடியும். இந்த பலத்தை கொண்டு ஐனநாயக ரீதியில் முன்னோக்கி பயணிப்பதற்கான திட்டங்களை வகுத்திருக்க முடியும். யுத்தத்திற்கு ஆதரவளித்த நாடுகளை நோக்கி ஓருமித்து கைநீட்டியிருக்க முடியும். யுத்த அழிவுகளிலிருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு உங்களுக்குண்டு என்பதை ஒரு பிரச்சாரமாக முன்வைத்திருக்கலாம். புலம்பெயர் சமூத்துடன் ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு. 2009இற்கு பின்னர் தமிழரின் ஐனநாயக பலத்தை மேலும் மேலும் திரட்சிபெறச் செய்வதற்கு பதிலாக, அதனை மேலும் மேலும் சிதைப்பதற்கான முயற்சிகளே நடந்தன. இதன் விளைவாகவே இன்று தேர்தல் அரசியல் தளத்திலும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் தமிழ்த் தேசியத்தை பிரநிதித்துவப்படுத்தி பல கூறுகளாக சமூகம் பிளவுற்றிருக்கின்றது. இவ்வாறனதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரன் தனியொருவராக நாடாளுமன்றம் சென்றிருக்கின்றார். தனது பேச்சுக்களால் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றார். சிங்கள அடிப்படைவாத தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார். ஆனால் இது மட்டும்தானா விக்கினேஸ்வரனின் பணி?

இன்றைய சூழலில் விக்கினேஸ்வரன் எவ்வாறானதொரு தலைமைத்துவத்தை கொடுக்க முடியும்? உண்மையில் இன்று தமிழ் மக்களுக்கு தேவையானது ஒரு தமிழ்த் தேசிய மிதவாத தலைமையாகும். அதாவது, உள்நாட்டு நிலைமைகளை எதிர்கொள்ளவும் அதே வேளை, பிராந்திய சர்வதேச நிலைமைகளை எதிர்கொள்ளுவதற்கு ஏற்றவாறானதொரு தலைமையே தமிழ் மக்களுக்கும் தேவையானது. அவ்வாறானதொரு தலைவருக்கான வெற்றிடம்தான் இங்கு காணப்படுகின்றது. ஒரு வேளை விக்கினேஸ்வரனால் அவ்வாறானதொரு தலைமைத்துவததை வழங்க முடியாது போனாலும் கூட, அதற்கான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையாவது அவர் மேற்கொள்ளலாம். இன்று தமிழர்களின் தேர்தல் அரசியலானது, முற்றிலும் சுயநல அரசியலால் விழுங்கப்பட்டிருக்கின்றது.

 

தேர்தல் அரசியலை ஒழுங்குபடுத்தும் ஒரு பணியை விக்கினேஸ்வரன் அறிமுகம் செய்யலாம். அது ஒரு முன்னுதாரனமான நடவடிக்கையாக நோக்கப்படலாம். அதாவது, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் எவரையுமே மாகாண சபைத் தேர்தலில் நிறுத்துவதில்லை என்னும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவரலாம். அத்துடன், மாகாண சபையில் 25-50 வரையானவர்கள் மட்டுமே போட்டியிடலாம். அவ்வாறானவர்களுக்கே முன்னுரிமை என அறிவிக்கலாம். இதன் மூலம் இளைய தலைமுறையினரை அரசியலுக்குள் கொண்டுவரலாம். அவர்கள் மத்தியிலிருந்து இரண்டாம் மட்ட தலைவர்களை இனம்காணலாம். இன்று ஆளுமைமிக்க தலைவர்களுக்கு பஞ்சமுள்ள ஒரு சமூகமாகவே தமிழர் சமூகம் காட்சியளிக்கின்றது. ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததாக பெருமைகொள்ளும் சமூகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆளுமையான நபர்கள் இல்லாமலிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம். பழையவர்கள் தாங்கள் சாகும் வரையில் பதவியிலிருக்க வேண்டுமென்று எண்ணுவதே பிரதான காரணம். இப்படிப்பட்ட ஒரு பதவி மோக அரசியலுக்கு முற்றுப்புள்ளியிட வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால், இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து ஒருபோதுமே தலைவர்கள் உருவாக மாட்டார்கள்.

தமிழ்ச் சூழலில் விக்கினேஸ்வரன் ஒரு அரசியல் அடையாளமாக தெரிந்தாலும் கூட, ஸ்தாபன ரீதியில் விக்கினேஸ்வரன் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றார். அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியில்லாமை அவரை பின்தொடரும் ஒரு பலவீனமாகும். இந்த பலவீனத்திலிருந்து அவர் எவ்வாறு மீண்டெழப் போகின்றார்? தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் இருப்பதாகச் சொல்லப்படும் கூட்டணி மிகவும் பலவீனமாக இருக்கின்றது. எவரும் எதையும் பேசலாம் என்னும் நிலைமையே அங்கு காணப்படுகின்றது. கூட்டமைப்பிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்பட்டது. கூட்டமைப்பிற்கான மாற்று என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை கூறிக்கொண்டாலும் கூட, அவ்வாறானதொரு மாற்றுக்கான எந்தவொரு கட்டமைப்பும் அங்கில்லை. திலீபன் விவகாரத்தில் சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கை அதனை தெளிவாகவே காண்பிக்கின்றது. நீதிமன்றத்தின் தடையை மீறினால் கைதுசெய்யப்படுவோம் என்பதை தெரிந்தே தமிழ் சினிமாப்பாணியில் விடயங்களை கையாள முற்படுவதானது தவறானதொரு அரசியல் அணுகுமுறையாகும். தீலிபன் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உயிர் நீத்தவர். அவரை நினைவு கூர்வதற்கான உரிமை மறுக்கப்பட்டால், அதனை எதிர்ப்பதற்கு திலீபனைப் போன்றே உண்ணாவிரதமிருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு அர்ப்பணிப்பிற்கு எவரும் தயாராக இல்லை. விக்கினேஸ்வரன் முன்னுதாரனம்மிக்க தலைமைத்துவம் ஒன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த விடயங்கள் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது. விக்கினேஸ்வரனின் தலைமைத்துவம் பலரையும் போல் சாதாரணமான ஒன்றாகிவிடக் கூடாது. விக்கினேஸ்வரன் தனது ஆற்றல் உறைந்திருக்கும் ஒவ்வொரு இடங்களையும் கண்டடையும் போது, தனனால் எவ்வாறானதொரு தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை நிச்சயம் உணர முடியும்.

 

http://www.samakalam.com/செய்திகள்/விக்கினேஸ்வரன்-வழங்க-வேண/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.