Jump to content

பிள்ளையானுக்கு புதிய பதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தன் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ‍இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இந்த பதவியை பொறுப்பேற்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது விளக்கமறியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/90467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பினை பார்த்து, நானும் ஏதோ, சிறை அதிகாரி ஆகிட்டாரோ எண்டு எட்டிப் பார்த்தேன். 😎

Link to comment
Share on other sites

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நேசன் said:

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நேசன் said:

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

அந்தளவுக்கு வெளியிலிருந்து தமிழர்களின் அரசியலை முன்னெடுத்த கூத்தாடி  அப்புக்காத்துமார் செயல்பட்டிருக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் புதிய நியமனத்துக்கு ஏறாவூர் நகர சபையில் பாராட்டு

 

meet-11.jpg
சிறையிலிருந்தும் மக்கள் மனதை வென்ற மக்களின் தலைவனுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமானதே என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் அடிப்படையில் செப்டெம்பர் மாதத்திற்கான அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நகர சபையின் கேட்போர் கூடத்தில் அந்நகர சபையின் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, நகர சபையின் நானாவித நிகழ்ச்சி நிரலுடன் உறுப்பினர்களுக்கான சிறப்புரை இடம்பெற்றபோது, நகர சபைத் தலைவர் உட்பட அச்சபையின் முஸ்லிம் தமிழ் உறுப்பினர்கள் கட்சிபேதமின்றி பிள்ளையான், (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதை வரவேற்று உரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய சுபைர், கடந்த பொதுத் தேர்தலின்போது பிள்ளையான் எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் அதிகப்படியான வாக்குளால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் தலைவனாக திகழ்கின்றார்.

அத்தகைய ஒருவர், கிழக்கு மாகாண சபையை முதலமைச்சராக அலங்கரித்தபோது, அவர் இந்த மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் இனவாதம் கடந்து செயற்பட்டார்.

முதலமைச்சர் காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்கள் உள்ளங்களிலே அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது.

இனவாதத்தை மதவாதத்தைத் தூண்டி அரசியல் செய்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே, இனவாதமற்ற ஒருவர் அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது.

பிள்ளையான் யுத்தத்தின் கொடூரங்களை நன்கு அறிந்தவர். ஆகையினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்திப் பணிகளிலும் இனவாதம் கடந்து அவர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குச் சேவையாற்றுவார் என்று நம்புகின்றேன்” என்றார்.
 

http://www.battinews.com/2020/09/blog-post_798.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மீது வெற்றி மீது வந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் மகிந்தாவை சேரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த எஜமான ஒட்டுக்குழுத் தமிழர்கள்.. 

புலிகள் காலத்தில் சிங்கள அரசில் முக்கிய அமைச்சுப் பதவிகள் கேட்டார்கள்..

இப்ப எல்லாம்.. அவன் கொடுக்கிற மாவட்ட அபிவிருத்தி சபை.. பிரதித் தலைவர் பதவியோடு அடங்கிவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் மீன்பிடியோடு கட்டுப்பட்டுவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பிரபாகரனிடம்.. கேட்டவை என்னவோ.. தலைவருக்கு நிகரான தலைவன் பதவி... தகுதி...

என்னமா நிறமாறுதுகள்.. இதுகள். இதுகளால மக்களுக்கு ஒரு அபிவிருத்தி என்பது நிகழும்..?! கனவு காண்பது அவரவர் உரிமை. ஆனால்.. அது நிஜமாகாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள பெளத்த எஜமான ஒட்டுக்குழுத் தமிழர்கள்.. 

புலிகள் காலத்தில் சிங்கள அரசில் முக்கிய அமைச்சுப் பதவிகள் கேட்டார்கள்..

இப்ப எல்லாம்.. அவன் கொடுக்கிற மாவட்ட அபிவிருத்தி சபை.. பிரதித் தலைவர் பதவியோடு அடங்கிவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் மீன்பிடியோடு கட்டுப்பட்டுவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பிரபாகரனிடம்.. கேட்டவை என்னவோ.. தலைவருக்கு நிகரான தலைவன் பதவி... தகுதி...

என்னமா நிறமாறுதுகள்.. இதுகள். இதுகளால மக்களுக்கு ஒரு அபிவிருத்தி என்பது நிகழும்..?! கனவு காண்பது அவரவர் உரிமை. ஆனால்.. அது நிஜமாகாது. 

நாங்கள் லட்சுமனன் வாரிசுகள் ,கம்பரின் இலட்சியவாதிகள் செருப்பையும் வைச்சு மகிழ்ச்சியடைவோமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

 

43 minutes ago, குமாரசாமி said:

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

சம்பந்தர் அய்யா, வந்த முதல்வர் பதவியையும் அவயளுக்கு நல்லெண்ணத்தில, கொடுக்க, சாணீல தோய்த்த பூவை காதில சொருகிப்போட்டு தங்கட அலுவல் பார்த்தது மட்டுமல்ல, வெடியள போட்டு சனத்தையும் கொனறா, கொதி வரும் தானே.

அந்த கொதீல, மகிந்த சார்பு ஆளுக்கு போட்டிருக்கலாம்.

அடுத்த தவணை வழக்கில, அரச தரப்பு புரக்கிராசியார்.... வெள்ளி பார்க்க, பிள்ளையான் கேசே முந்திய அரசாங்கம் சோடித்து போட்டது எண்டு, பிணையில வருவார் அல்லது வழக்கு நிக்காமல் தள்ளுப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதுவது மீண்டும் எம்மைப் பிரதேச ரீதியாகப் பிரித்துப் பேசுவதற்குக் காரணமாகிவிடும். ஏனென்றால், பிள்ளையான் பற்றியோ, கருணா பற்றியோ பேசுவதென்பது நூலிழையில் நடப்பது போன்றது. அவர்களின் செயற்பாடு மீதான விமர்சனம் பிரதேசவாத கண்ணோட்டத்தில் பார்க்கபடலாம் என்பதோடு, கிழக்கின் அபிவிருத்திக்குக் குறுக்கே வடக்கு மக்களால் முன்வைக்கப்படும் எதிர்ப்பு அல்லது விமர்சனம் என்றும் பார்க்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகவே, இதுபற்றிப் பேசாமல் கடந்துபோவதுதான் உகந்தது.

இன்று பிள்ளையானுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவென்பது உண்மையிலேயே அவர்மீதான விருப்பினாலன்றி, கூட்டமைப்பின் இன்றுவரையான செயற்பாடுகளுக்கான எதிர்ப்பாக, முஸ்லீம்களின் அத்துமீறல்களுக்கான எதிர்ப்பாக பார்க்கப்படுகிறதென்பதே இங்கு கருத்தெழுதும் அக்னி மற்றும் தனியின் கருத்துக்களிலிருந்து காண முடிகிறது. அவர்களுக்கு பிள்ளையானையும், கருணாவையும் விட்டால் வேறு தெரிவுகள் இருந்திருக்குமா என்றால், இல்லையென்பதே உண்மை. 

ஆனால், இவர்கள் தெந்தமிழீழத் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இன்றைய நிலையின் விளைவுகளை இனிவரும் காலங்களில்த்தான் பார்க்கமுடியும். தமிழர் நலன் சார்ந்து இவர்கள் செயற்பட விழைந்தாலும்கூட சிங்களப் பேரினவாதம் அவர்களை ஒரு வரையறையின்கீழ்த்தான் வைத்திருக்க முயலும் என்பதுதான் எனது எண்ணம்.

அவர்களைப்பொறுத்தவரையில் இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

ஆகவே இதுபற்றி மீண்டும் மீண்டும் பேசி எமக்குள் கசப்புணர்வுகளை வளர்ப்பதைக் காட்டிலும் நடப்பதைப் பார்க்கலாம். நடப்பவை நல்லதாக நடந்தால் நண்மையே, அப்படியில்லையென்றால் இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்திலிருந்து இனிவரும் தேர்தல்களை அவர்கள் எதிர்கொள்வார்கள். அவ்வளவுதான். இதைத்தவிர தென் தமிழீழ மக்களுக்கு சிங்களப் பேரினவாதத்தையோ அல்லது அதன் கருவிகளையோ  ஆதரிக்கவேண்டிய வேறு தேவையிருப்பதாக நான் நம்பவில்லை. 

............................................................................................................................................................

இது அக்னியினால் இன்னொரு பதிவில் கேட்கப்பட்டது, ஆனால் அதற்கும் இக்கருத்திற்கு சிறிது தொடர்பிருப்பதால் இதனை இங்கே பதிகிறேன்.

கேள்வி இதுதான் : கருணாவின் மேல் முன்வைக்கப்படும் விமர்சனத்தின் ஒரு சிறு வீதத்தைத் தன்னும் கே பி யின் மீது தமிழ்த் தேசியவாதிகள் ஏன் முன்வைப்பதில்லை? அவர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணமா? 

சிந்திக்கவேண்டிய கேள்வி. தமிழரின் ஆயுத விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் கருணாவின் பங்கிற்கு நிகரானது கே பி யின் பங்கு என்பது நான் கேள்விப்பட்டது. இதனை மறுப்பவர்கள் இருக்கலாம். கருணாவின் பிரிவினால் ஏற்பட்ட கிழக்கு மாகாணப் போராளிகளின் வெளிநடப்பு மற்றும் கிழக்கு மாகாண நில இழப்பு போன்றவையும், ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணியில் கருணா குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடு, புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மீதான தாக்குதல்கள், போரின் புலிகளுக்கெதிரான ராணுவத்தின் உத்திகள் ஆகியவற்றில் கருணா குழுவின் பங்கும் கணிசமானவை. 

அவ்வாறே, போரின் இறுதிக்கட்டத்தில் கே பி யினால் அனுப்பப்பட்ட வெற்றுக் கப்பல்கள், 2003 முதல் ராணுவ புலநாய்வுத்துறையினருடனான கே பி யின் நெருக்கம், யுத்தத்தின் பின்னரான காலத்தில் மகிந்த - கோத்தா ஆகியோருடன் கே பி யின் நெருக்கம், புலம்பெயர் தமிழர்களின் வியர்வையாலும், உழைப்பினாலும் சேர்க்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் கே பி யினால் மகிந்தவுக்கு வாரிக் கொடுக்கப்பட்டது போன்றவை கூட போராட்டத்தின்போதும், பின்னரும் தமிழர்களுக்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியே இருந்தன. 

ஆனால், கருணவின் துரோகம் பற்றிப் பேசுமளவிற்கு நாம் கே பி பற்றிப் பேசுவதில்லை. அதற்காக  கே பி வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே இது அடக்கி வாசிக்கப்படுவதாக நினைக்கவில்லை. மாறாக, அவர் செய்த துரோகம் பற்றி மக்கள் வெளிப்படையாக அறியமுடியாவண்ணமும், அவர் சரணடைந்த காலத்தில் நடந்த நாடகங்கள் பற்றிய செய்திகளை இலங்கை - மலேசிய அரசுகள் மறைத்துவிட்டதாலும், அவர் இறுதிவரை தொடர்பிலிருந்தவர்கள் இன்று உயிருடன் இல்லாமலிருப்பதும் அவரின் துரோகம் முள்ளிவாய்க்காலுடன் மறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நடந்தவை எல்லாம் கே பி யை இலங்கையரசு மிகவும் லாவகமாகக் கைதுசெய்தது எனும் வீரப்பிரதாப நாடகமும், அந்த நாடகத்தில் கே பி ஆடிய ஆட்டமும்தான்.

கே பி யின் துரோகத்தனத்திற்கும் கருணாவின் துரோகத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், கருணா செய்த துரோகம் வெளிப்படையானது. எல்லாராலும் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. கே பி யின் துரோகம் இறுதிவரைக்கும் வெளித்தெரியாவண்ணம் செய்யப்பட்டு, இறுதி யுத்த அவலத்தில் மறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்விரண்டு துரோகங்களாலுமே தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். இதில் வடக்கென்றும், கிழக்கென்றும் வேறுபாடில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

வாழ்த்துகள் யார் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்  

யாரோ ஒருவர் குற்ற யாருக்கோ அரிசி கிடைக்கும் இதில் கிடைப்பவற்றை பெற்றுகொள்கிறவர்கள் பசியாறட்டுமே

குறிப்பு ,:எனக்கு ஒரு பருக்கை கூட கிடைக்கப்போவதிவில்லை 

5 hours ago, ரஞ்சித் said:

அவர்களைப்பொறுத்தவரையில் இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம் இடையே யுத்த சோர்வில் கிழக்கு தமிழ் மக்கள்.

சாதாரண நிறை மப்பு தூசணப்பிக்கர் சுமணதேரரை அடக்க முடியாது என்ற நிலையில், மகிந்தா ஆதரவு பிரதிநிதித்துவம் நல்லது. காற்றுள்ள போதே தூற்றினால் நல்லதே.

கிழக்கின் அதாவுல்லாவின் திமிர், மனோவுடனான ரிவி நேர்காணலில் தெரிந்தது. அந்த மனநிலையுடனே தமிழரை பார்த்திருக்கிறார்கள். ஈஸ்டர்க்கு பின் நிலைமை மாறியுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு ,:எனக்கு ஒரு பருக்கை கூட கிடைக்கப்போவதிவில்லை 

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

எவருக்கும் கிடைக்கப்போவதில்லை

சரியான கூற்று. பிள்ளையானும் அமலும் வெண்டது பிரதேசவாதம் என்றால் டக்லசும், அங்கயனும் வென்றது என்ன முடக்குவாதமாமா? 

2004-2020 வரை தமிழ் தேசியட்துக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு போட்ட மக்கள், இப்போ மட்டும் ஏன் பிரதேசவாதம் பாக்கிரார்கள்?

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழப்பு, கொஞ்சமேனும் அபிவிருத்தி வராதா என்ற அங்கலாய்பு மட்டுமே காரணங்கள். ஆனால் இங்கேயும் ஏமாறத்தான் போகிரார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எவருக்கும் கிடைக்கப்போவதில்லை

சரியான கூற்று. பிள்ளையானும் அமலும் வெண்டது பிரதேசவாதம் என்றால் டக்லசும், அங்கயனும் வென்றது என்ன முடக்குவாதமாமா? 

2004-2020 வரை தமிழ் தேசியட்துக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு போட்ட மக்கள், இப்போ மட்டும் ஏன் பிரதேசவாதம் பாக்கிரார்கள்?

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழப்பு, கொஞ்சமேனும் அபிவிருத்தி வராதா என்ற அங்கலாய்பு மட்டுமே காரணங்கள். ஆனால் இங்கேயும் ஏமாறத்தான் போகிரார்கள்.

ஏமாறத் தான் போறார்கள் இல்லை ஏமாற வேண்டும் என்பதே  உங்களது எதிர்பார்ப்பு.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏமாறத் தான் போறார்கள் இல்லை ஏமாற வேண்டும் என்பதே  உங்களது எதிர்பார்ப்பு.  

 

அக்காச்சிக்கு ஒரு பதிலப் போட்டன், அத நிர்வாக காக்கா கொண்டு பொயிட்டடு. 

எல்லாம் வரலாறு தந்த பட்டறிவு தான் அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அக்காச்சிக்கு ஒரு பதிலப் போட்டன், அத நிர்வாக காக்கா கொண்டு பொயிட்டடு. 

எல்லாம் வரலாறு தந்த பட்டறிவு தான் அக்கா 

எங்கை திருப்பி ஒருக்கால் போடுங்கோ பாப்பம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

கே பி யின் துரோகத்தனத்திற்கும் கருணாவின் துரோகத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், கருணா செய்த துரோகம் வெளிப்படையானது. எல்லாராலும் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. கே பி யின் துரோகம் இறுதிவரைக்கும் வெளித்தெரியாவண்ணம் செய்யப்பட்டு, இறுதி யுத்த அவலத்தில் மறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்விரண்டு துரோகங்களாலுமே தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். இதில் வடக்கென்றும், கிழக்கென்றும் வேறுபாடில்லை.

கே .பி. அரசியலில் ஈடுபடாமல் நல்ல பிள்ளைக்கு ஒதுங்கி இருப்பதும் அவரை யாரும் விமர்சிக்க முயலாமைக்கு காரணமாக இருக்கலாம்.

 

10 hours ago, ரஞ்சித் said:

இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

 எம்மை இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாதவன், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு எல்லாம் எமக்கு அளிக்கப்போறான் நம்பறோம். சலுகை ஹா... ஹா... எம்மிடம் உள்ளதை பறித்து அம்மணமாய் ஓட்டுவதற்கு கண்ணில் காட்டும் மிட்டாய்.

Link to comment
Share on other sites

கிழக்கின் விடிவெள்ளியே வாழ்த்துகள், இன்னும் நீர் எத்தனை கேடுகள் செய்தாலும், நீர்தான் எம் தலைவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

 

நன்றிகள், சொல்லப்படவேண்டிய செய்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நன்றிகள், சொல்லப்படவேண்டிய செய்தி!

நீங்கள் வெளிநாட்டிலிருந்து உசுப்பேத்திறியள் என்று சொல்லபோகினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

நீங்கள் வெளிநாட்டிலிருந்து உசுப்பேத்திறியள் என்று சொல்லபோகினம்

அண்ணை, ஆராச்சும் உந்த பிக்குவைக் கேள்வி கேட்கத்தானே வேணும்? அரச இயந்திரமும், பொலீஸும், ராணுவமும் இருக்கிற தைரியத்தில தானே உந்தப் பிக்கு தமிழனில கை வைக்குது? உதைக் கேட்கிறதே பிழையெண்டு சொன்னால் என்ன செய்யிறது? மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவு கொடுக்கிறதுக்காக, பிக்குவின்ர அடாவடித்தனத்தைச் சகித்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லையே? 

ஆனால் என்ன, இந்தப் பிக்குவைத் தட்டிக் கேட்கக் கூடாதெண்டு மகிந்தவோ கோத்தாவோ சொன்னால், அதைக் கேட்கவேண்டிய நிலையில இருக்கிறம் எண்டதுதான் வேதனை. உது மட்டக்களப்பில மட்டுமில்லை, முல்லைத்தீவு, மணலாறு, மாதகல், கீரிமலை எண்டு எல்லா இடத்திலையும் நடக்குது. எங்கட தலையெழுத்தண்ணை, என்ன செய்வம். இதை யோசிக்கேகுள்ள எனக்கு இந்தியனில  வாற கடுப்பிற்கு அளவில்லை. அவனில்லையெண்டால் எங்கள சிங்களவன் அழிச்சிருப்பானோ அல்லது எங்கட இடத்திலையே சிங்களவன் எங்களுக்கு அடிப்பானோ? எல்லாத்தையுமே கெடுத்துப்போட்டாங்களே அண்ணை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.