Jump to content

பிள்ளையானுக்கு புதிய பதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தன் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ‍இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இந்த பதவியை பொறுப்பேற்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது விளக்கமறியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/90467

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பினை பார்த்து, நானும் ஏதோ, சிறை அதிகாரி ஆகிட்டாரோ எண்டு எட்டிப் பார்த்தேன். 😎

Link to comment
Share on other sites

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நேசன் said:

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நேசன் said:

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

அந்தளவுக்கு வெளியிலிருந்து தமிழர்களின் அரசியலை முன்னெடுத்த கூத்தாடி  அப்புக்காத்துமார் செயல்பட்டிருக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் புதிய நியமனத்துக்கு ஏறாவூர் நகர சபையில் பாராட்டு

 

meet-11.jpg
சிறையிலிருந்தும் மக்கள் மனதை வென்ற மக்களின் தலைவனுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமானதே என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் அடிப்படையில் செப்டெம்பர் மாதத்திற்கான அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நகர சபையின் கேட்போர் கூடத்தில் அந்நகர சபையின் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, நகர சபையின் நானாவித நிகழ்ச்சி நிரலுடன் உறுப்பினர்களுக்கான சிறப்புரை இடம்பெற்றபோது, நகர சபைத் தலைவர் உட்பட அச்சபையின் முஸ்லிம் தமிழ் உறுப்பினர்கள் கட்சிபேதமின்றி பிள்ளையான், (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதை வரவேற்று உரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய சுபைர், கடந்த பொதுத் தேர்தலின்போது பிள்ளையான் எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் அதிகப்படியான வாக்குளால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் தலைவனாக திகழ்கின்றார்.

அத்தகைய ஒருவர், கிழக்கு மாகாண சபையை முதலமைச்சராக அலங்கரித்தபோது, அவர் இந்த மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் இனவாதம் கடந்து செயற்பட்டார்.

முதலமைச்சர் காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்கள் உள்ளங்களிலே அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது.

இனவாதத்தை மதவாதத்தைத் தூண்டி அரசியல் செய்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே, இனவாதமற்ற ஒருவர் அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது.

பிள்ளையான் யுத்தத்தின் கொடூரங்களை நன்கு அறிந்தவர். ஆகையினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்திப் பணிகளிலும் இனவாதம் கடந்து அவர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குச் சேவையாற்றுவார் என்று நம்புகின்றேன்” என்றார்.
 

http://www.battinews.com/2020/09/blog-post_798.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மீது வெற்றி மீது வந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் மகிந்தாவை சேரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த எஜமான ஒட்டுக்குழுத் தமிழர்கள்.. 

புலிகள் காலத்தில் சிங்கள அரசில் முக்கிய அமைச்சுப் பதவிகள் கேட்டார்கள்..

இப்ப எல்லாம்.. அவன் கொடுக்கிற மாவட்ட அபிவிருத்தி சபை.. பிரதித் தலைவர் பதவியோடு அடங்கிவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் மீன்பிடியோடு கட்டுப்பட்டுவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பிரபாகரனிடம்.. கேட்டவை என்னவோ.. தலைவருக்கு நிகரான தலைவன் பதவி... தகுதி...

என்னமா நிறமாறுதுகள்.. இதுகள். இதுகளால மக்களுக்கு ஒரு அபிவிருத்தி என்பது நிகழும்..?! கனவு காண்பது அவரவர் உரிமை. ஆனால்.. அது நிஜமாகாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள பெளத்த எஜமான ஒட்டுக்குழுத் தமிழர்கள்.. 

புலிகள் காலத்தில் சிங்கள அரசில் முக்கிய அமைச்சுப் பதவிகள் கேட்டார்கள்..

இப்ப எல்லாம்.. அவன் கொடுக்கிற மாவட்ட அபிவிருத்தி சபை.. பிரதித் தலைவர் பதவியோடு அடங்கிவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் மீன்பிடியோடு கட்டுப்பட்டுவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பிரபாகரனிடம்.. கேட்டவை என்னவோ.. தலைவருக்கு நிகரான தலைவன் பதவி... தகுதி...

என்னமா நிறமாறுதுகள்.. இதுகள். இதுகளால மக்களுக்கு ஒரு அபிவிருத்தி என்பது நிகழும்..?! கனவு காண்பது அவரவர் உரிமை. ஆனால்.. அது நிஜமாகாது. 

நாங்கள் லட்சுமனன் வாரிசுகள் ,கம்பரின் இலட்சியவாதிகள் செருப்பையும் வைச்சு மகிழ்ச்சியடைவோமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

 

43 minutes ago, குமாரசாமி said:

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

சம்பந்தர் அய்யா, வந்த முதல்வர் பதவியையும் அவயளுக்கு நல்லெண்ணத்தில, கொடுக்க, சாணீல தோய்த்த பூவை காதில சொருகிப்போட்டு தங்கட அலுவல் பார்த்தது மட்டுமல்ல, வெடியள போட்டு சனத்தையும் கொனறா, கொதி வரும் தானே.

அந்த கொதீல, மகிந்த சார்பு ஆளுக்கு போட்டிருக்கலாம்.

அடுத்த தவணை வழக்கில, அரச தரப்பு புரக்கிராசியார்.... வெள்ளி பார்க்க, பிள்ளையான் கேசே முந்திய அரசாங்கம் சோடித்து போட்டது எண்டு, பிணையில வருவார் அல்லது வழக்கு நிக்காமல் தள்ளுப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதுவது மீண்டும் எம்மைப் பிரதேச ரீதியாகப் பிரித்துப் பேசுவதற்குக் காரணமாகிவிடும். ஏனென்றால், பிள்ளையான் பற்றியோ, கருணா பற்றியோ பேசுவதென்பது நூலிழையில் நடப்பது போன்றது. அவர்களின் செயற்பாடு மீதான விமர்சனம் பிரதேசவாத கண்ணோட்டத்தில் பார்க்கபடலாம் என்பதோடு, கிழக்கின் அபிவிருத்திக்குக் குறுக்கே வடக்கு மக்களால் முன்வைக்கப்படும் எதிர்ப்பு அல்லது விமர்சனம் என்றும் பார்க்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகவே, இதுபற்றிப் பேசாமல் கடந்துபோவதுதான் உகந்தது.

இன்று பிள்ளையானுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவென்பது உண்மையிலேயே அவர்மீதான விருப்பினாலன்றி, கூட்டமைப்பின் இன்றுவரையான செயற்பாடுகளுக்கான எதிர்ப்பாக, முஸ்லீம்களின் அத்துமீறல்களுக்கான எதிர்ப்பாக பார்க்கப்படுகிறதென்பதே இங்கு கருத்தெழுதும் அக்னி மற்றும் தனியின் கருத்துக்களிலிருந்து காண முடிகிறது. அவர்களுக்கு பிள்ளையானையும், கருணாவையும் விட்டால் வேறு தெரிவுகள் இருந்திருக்குமா என்றால், இல்லையென்பதே உண்மை. 

ஆனால், இவர்கள் தெந்தமிழீழத் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இன்றைய நிலையின் விளைவுகளை இனிவரும் காலங்களில்த்தான் பார்க்கமுடியும். தமிழர் நலன் சார்ந்து இவர்கள் செயற்பட விழைந்தாலும்கூட சிங்களப் பேரினவாதம் அவர்களை ஒரு வரையறையின்கீழ்த்தான் வைத்திருக்க முயலும் என்பதுதான் எனது எண்ணம்.

அவர்களைப்பொறுத்தவரையில் இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

ஆகவே இதுபற்றி மீண்டும் மீண்டும் பேசி எமக்குள் கசப்புணர்வுகளை வளர்ப்பதைக் காட்டிலும் நடப்பதைப் பார்க்கலாம். நடப்பவை நல்லதாக நடந்தால் நண்மையே, அப்படியில்லையென்றால் இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்திலிருந்து இனிவரும் தேர்தல்களை அவர்கள் எதிர்கொள்வார்கள். அவ்வளவுதான். இதைத்தவிர தென் தமிழீழ மக்களுக்கு சிங்களப் பேரினவாதத்தையோ அல்லது அதன் கருவிகளையோ  ஆதரிக்கவேண்டிய வேறு தேவையிருப்பதாக நான் நம்பவில்லை. 

............................................................................................................................................................

இது அக்னியினால் இன்னொரு பதிவில் கேட்கப்பட்டது, ஆனால் அதற்கும் இக்கருத்திற்கு சிறிது தொடர்பிருப்பதால் இதனை இங்கே பதிகிறேன்.

கேள்வி இதுதான் : கருணாவின் மேல் முன்வைக்கப்படும் விமர்சனத்தின் ஒரு சிறு வீதத்தைத் தன்னும் கே பி யின் மீது தமிழ்த் தேசியவாதிகள் ஏன் முன்வைப்பதில்லை? அவர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணமா? 

சிந்திக்கவேண்டிய கேள்வி. தமிழரின் ஆயுத விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் கருணாவின் பங்கிற்கு நிகரானது கே பி யின் பங்கு என்பது நான் கேள்விப்பட்டது. இதனை மறுப்பவர்கள் இருக்கலாம். கருணாவின் பிரிவினால் ஏற்பட்ட கிழக்கு மாகாணப் போராளிகளின் வெளிநடப்பு மற்றும் கிழக்கு மாகாண நில இழப்பு போன்றவையும், ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணியில் கருணா குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடு, புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மீதான தாக்குதல்கள், போரின் புலிகளுக்கெதிரான ராணுவத்தின் உத்திகள் ஆகியவற்றில் கருணா குழுவின் பங்கும் கணிசமானவை. 

அவ்வாறே, போரின் இறுதிக்கட்டத்தில் கே பி யினால் அனுப்பப்பட்ட வெற்றுக் கப்பல்கள், 2003 முதல் ராணுவ புலநாய்வுத்துறையினருடனான கே பி யின் நெருக்கம், யுத்தத்தின் பின்னரான காலத்தில் மகிந்த - கோத்தா ஆகியோருடன் கே பி யின் நெருக்கம், புலம்பெயர் தமிழர்களின் வியர்வையாலும், உழைப்பினாலும் சேர்க்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் கே பி யினால் மகிந்தவுக்கு வாரிக் கொடுக்கப்பட்டது போன்றவை கூட போராட்டத்தின்போதும், பின்னரும் தமிழர்களுக்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியே இருந்தன. 

ஆனால், கருணவின் துரோகம் பற்றிப் பேசுமளவிற்கு நாம் கே பி பற்றிப் பேசுவதில்லை. அதற்காக  கே பி வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே இது அடக்கி வாசிக்கப்படுவதாக நினைக்கவில்லை. மாறாக, அவர் செய்த துரோகம் பற்றி மக்கள் வெளிப்படையாக அறியமுடியாவண்ணமும், அவர் சரணடைந்த காலத்தில் நடந்த நாடகங்கள் பற்றிய செய்திகளை இலங்கை - மலேசிய அரசுகள் மறைத்துவிட்டதாலும், அவர் இறுதிவரை தொடர்பிலிருந்தவர்கள் இன்று உயிருடன் இல்லாமலிருப்பதும் அவரின் துரோகம் முள்ளிவாய்க்காலுடன் மறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நடந்தவை எல்லாம் கே பி யை இலங்கையரசு மிகவும் லாவகமாகக் கைதுசெய்தது எனும் வீரப்பிரதாப நாடகமும், அந்த நாடகத்தில் கே பி ஆடிய ஆட்டமும்தான்.

கே பி யின் துரோகத்தனத்திற்கும் கருணாவின் துரோகத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், கருணா செய்த துரோகம் வெளிப்படையானது. எல்லாராலும் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. கே பி யின் துரோகம் இறுதிவரைக்கும் வெளித்தெரியாவண்ணம் செய்யப்பட்டு, இறுதி யுத்த அவலத்தில் மறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்விரண்டு துரோகங்களாலுமே தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். இதில் வடக்கென்றும், கிழக்கென்றும் வேறுபாடில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

வாழ்த்துகள் யார் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்  

யாரோ ஒருவர் குற்ற யாருக்கோ அரிசி கிடைக்கும் இதில் கிடைப்பவற்றை பெற்றுகொள்கிறவர்கள் பசியாறட்டுமே

குறிப்பு ,:எனக்கு ஒரு பருக்கை கூட கிடைக்கப்போவதிவில்லை 

5 hours ago, ரஞ்சித் said:

அவர்களைப்பொறுத்தவரையில் இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம் இடையே யுத்த சோர்வில் கிழக்கு தமிழ் மக்கள்.

சாதாரண நிறை மப்பு தூசணப்பிக்கர் சுமணதேரரை அடக்க முடியாது என்ற நிலையில், மகிந்தா ஆதரவு பிரதிநிதித்துவம் நல்லது. காற்றுள்ள போதே தூற்றினால் நல்லதே.

கிழக்கின் அதாவுல்லாவின் திமிர், மனோவுடனான ரிவி நேர்காணலில் தெரிந்தது. அந்த மனநிலையுடனே தமிழரை பார்த்திருக்கிறார்கள். ஈஸ்டர்க்கு பின் நிலைமை மாறியுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு ,:எனக்கு ஒரு பருக்கை கூட கிடைக்கப்போவதிவில்லை 

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

எவருக்கும் கிடைக்கப்போவதில்லை

சரியான கூற்று. பிள்ளையானும் அமலும் வெண்டது பிரதேசவாதம் என்றால் டக்லசும், அங்கயனும் வென்றது என்ன முடக்குவாதமாமா? 

2004-2020 வரை தமிழ் தேசியட்துக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு போட்ட மக்கள், இப்போ மட்டும் ஏன் பிரதேசவாதம் பாக்கிரார்கள்?

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழப்பு, கொஞ்சமேனும் அபிவிருத்தி வராதா என்ற அங்கலாய்பு மட்டுமே காரணங்கள். ஆனால் இங்கேயும் ஏமாறத்தான் போகிரார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எவருக்கும் கிடைக்கப்போவதில்லை

சரியான கூற்று. பிள்ளையானும் அமலும் வெண்டது பிரதேசவாதம் என்றால் டக்லசும், அங்கயனும் வென்றது என்ன முடக்குவாதமாமா? 

2004-2020 வரை தமிழ் தேசியட்துக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு போட்ட மக்கள், இப்போ மட்டும் ஏன் பிரதேசவாதம் பாக்கிரார்கள்?

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழப்பு, கொஞ்சமேனும் அபிவிருத்தி வராதா என்ற அங்கலாய்பு மட்டுமே காரணங்கள். ஆனால் இங்கேயும் ஏமாறத்தான் போகிரார்கள்.

ஏமாறத் தான் போறார்கள் இல்லை ஏமாற வேண்டும் என்பதே  உங்களது எதிர்பார்ப்பு.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏமாறத் தான் போறார்கள் இல்லை ஏமாற வேண்டும் என்பதே  உங்களது எதிர்பார்ப்பு.  

 

அக்காச்சிக்கு ஒரு பதிலப் போட்டன், அத நிர்வாக காக்கா கொண்டு பொயிட்டடு. 

எல்லாம் வரலாறு தந்த பட்டறிவு தான் அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அக்காச்சிக்கு ஒரு பதிலப் போட்டன், அத நிர்வாக காக்கா கொண்டு பொயிட்டடு. 

எல்லாம் வரலாறு தந்த பட்டறிவு தான் அக்கா 

எங்கை திருப்பி ஒருக்கால் போடுங்கோ பாப்பம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

கே பி யின் துரோகத்தனத்திற்கும் கருணாவின் துரோகத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், கருணா செய்த துரோகம் வெளிப்படையானது. எல்லாராலும் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. கே பி யின் துரோகம் இறுதிவரைக்கும் வெளித்தெரியாவண்ணம் செய்யப்பட்டு, இறுதி யுத்த அவலத்தில் மறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்விரண்டு துரோகங்களாலுமே தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். இதில் வடக்கென்றும், கிழக்கென்றும் வேறுபாடில்லை.

கே .பி. அரசியலில் ஈடுபடாமல் நல்ல பிள்ளைக்கு ஒதுங்கி இருப்பதும் அவரை யாரும் விமர்சிக்க முயலாமைக்கு காரணமாக இருக்கலாம்.

 

10 hours ago, ரஞ்சித் said:

இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

 எம்மை இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாதவன், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு எல்லாம் எமக்கு அளிக்கப்போறான் நம்பறோம். சலுகை ஹா... ஹா... எம்மிடம் உள்ளதை பறித்து அம்மணமாய் ஓட்டுவதற்கு கண்ணில் காட்டும் மிட்டாய்.

Link to comment
Share on other sites

கிழக்கின் விடிவெள்ளியே வாழ்த்துகள், இன்னும் நீர் எத்தனை கேடுகள் செய்தாலும், நீர்தான் எம் தலைவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

 

நன்றிகள், சொல்லப்படவேண்டிய செய்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நன்றிகள், சொல்லப்படவேண்டிய செய்தி!

நீங்கள் வெளிநாட்டிலிருந்து உசுப்பேத்திறியள் என்று சொல்லபோகினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

நீங்கள் வெளிநாட்டிலிருந்து உசுப்பேத்திறியள் என்று சொல்லபோகினம்

அண்ணை, ஆராச்சும் உந்த பிக்குவைக் கேள்வி கேட்கத்தானே வேணும்? அரச இயந்திரமும், பொலீஸும், ராணுவமும் இருக்கிற தைரியத்தில தானே உந்தப் பிக்கு தமிழனில கை வைக்குது? உதைக் கேட்கிறதே பிழையெண்டு சொன்னால் என்ன செய்யிறது? மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவு கொடுக்கிறதுக்காக, பிக்குவின்ர அடாவடித்தனத்தைச் சகித்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லையே? 

ஆனால் என்ன, இந்தப் பிக்குவைத் தட்டிக் கேட்கக் கூடாதெண்டு மகிந்தவோ கோத்தாவோ சொன்னால், அதைக் கேட்கவேண்டிய நிலையில இருக்கிறம் எண்டதுதான் வேதனை. உது மட்டக்களப்பில மட்டுமில்லை, முல்லைத்தீவு, மணலாறு, மாதகல், கீரிமலை எண்டு எல்லா இடத்திலையும் நடக்குது. எங்கட தலையெழுத்தண்ணை, என்ன செய்வம். இதை யோசிக்கேகுள்ள எனக்கு இந்தியனில  வாற கடுப்பிற்கு அளவில்லை. அவனில்லையெண்டால் எங்கள சிங்களவன் அழிச்சிருப்பானோ அல்லது எங்கட இடத்திலையே சிங்களவன் எங்களுக்கு அடிப்பானோ? எல்லாத்தையுமே கெடுத்துப்போட்டாங்களே அண்ணை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.