Jump to content

உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாம் தமிழர் செய்தியா கிடக்குதே... என்று புலம்பியவர்களுக்காக.... ஒரு திமுக செய்தி ஒன்று.

உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு

பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வயசானாலும் அழகும் இளமையும் மாறலையை என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வரும் அப்படித்தான் சாவல் பூண்டி ஊரைச்சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவருக்கு 67 வயதில் காதல் வந்துள்ளது. அவருக்கு மனைவி மகன்கள் இருந்தாலும் தனது பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு எங்கே யாருடன் எப்படி காதல் வந்தது என்று பார்க்கலாம்.

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

சுந்தரேசன் பல ஆண்டுகளாக திமுகவில் நிர்வாகியாகவும் இருக்கிறார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார். சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராகவும் ஆறுமுறை பதவி வகித்திருக்கும் இவர் ஏ.வ.வேலுவின் தீவிர விசுவாசி சாவல் பூண்டி சங்கப்பலகை என்ற அமைப்பின் சார்பில் பேச்சாளர்களையும் உருவாக்கி வருகிறார் சுந்தரேசன். அவரிடம் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதான அபிதா என்ற பெண் அறிமுகமானார். பேச்சாளராக அறிமுகமான அபிதா உடன் நெருக்கமானார் சுந்தரேசன். இந்த நெருக்கம் காதலாக மாறியது. மூன்று ஆண்டுகள் காதலித்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே மனைவி, மகள், மகன்கள் உள்ள நிலையில் தன்னை விட 40 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றிதான் பலரும் பேசி வருகின்றனர்.

காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/thiruvannamalai/tiruvannamalai-dmk-executive-who-romantically-married-granddaughter-age-girl-398403.html

Link to comment
Share on other sites

சில பேருக்கு வயித்தெரிச்சல். சுந்தரேசன்- அபிதா தம்பதிகளுக்கு, திருமண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இதுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு..??!

திருமணம் என்பது அவரவர் விருப்பத் தெரிவு. இதில வெளியார் வயித்தெரிச்சலை கொட்டுவதை நிறுத்திவிட்டு.. வாழ்த்துவிட்டுச் செல்வதே சிறப்பு. மிச்சத்தை சம்பந்தப்பட்ட இருவரும் பார்த்துக் கொள்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, zuma said:

சில பேருக்கு வயித்தெரிச்சல். சுந்தரேசன்- அபிதா தம்பதிகளுக்கு, திருமண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள். 

அப்ப, அய்யா... நீங்கள்...கன்போம்ட்.... திமுக தான்.... 😁

Just now, nedukkalapoovan said:

அதுசரி.. இதுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு..??!

திருமணம் என்பது அவரவர் விருப்பத் தெரிவு. இதில வெளியார் வயித்தெரிச்சலை கொட்டுவதை நிறுத்திவிட்டு.. வாழ்த்துவிட்டுச் செல்வதே சிறப்பு. மிச்சத்தை சம்பந்தப்பட்ட இருவரும் பார்த்துக் கொள்வார்கள். 

அதில பிழை இல்லை நெடுக்கர்.... ஒரே நாம் தமிழர் அரசியல் எண்டது தான் சிலரது மண்டையிடி....

அதாலை.... திமுக நிர்வாகி பத்தின செய்தி...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அப்ப, அய்யா... நீங்கள்...கன்போம்ட்.... திமுக தான்.... 😁

அதில பிழை இல்லை நெடுக்கர்.... ஒரே நாம் தமிழர் அரசியல் எண்டது தான் சிலரது மண்டையிடி....

அதாலை.... திமுக நிர்வாகி பத்தின செய்தி...

 

ஒரு ஆர்வக் கோளாறில்.. கொரானா பகுதிக்குள் தவறுதலாக ஒட்டிவிட்டீர்கள்.

மற்றும்படி.. செய்தி இணைத்தது தவறல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

ஒரு ஆர்வக் கோளாறில்.. கொரானா பகுதிக்குள் தவறுதலாக ஒட்டிவிட்டீர்கள்.

மற்றும்படி.. செய்தி இணைத்தது தவறல்ல. 

மேலே தவறான பகுதிக்குள் வந்துவிட்டத என்று சொல்லி, நிர்வாக உதவி கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

மேலே தவறான பகுதிக்குள் வந்துவிட்டத என்று சொல்லி, நிர்வாக உதவி கேட்டுள்ளேன்.

மாற்றி விட்டாச்சு.... ஆனால் இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

மாற்றி விட்டாச்சு.... ஆனால் இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

சட்டபூர்வமான தல்ல என்பதே உண்மை. மணைவி.... மகள்... மகன்கள் ....

சரி, நீஙகள் சொல்வதை கவனத்தில் எடுக்கிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

திருமணம் சொக்கத்தில் நிர்ச்சயிக்கப்படுகின்றது.
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள். 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனக்கு இன்னும் வயசு இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SKB திருமண நாள் வாழ்த்துக்கள் பாடல் புல்லங்குடி - YouTube

பதினாறும் பெற்று... பெரு வாழ்வு வாழ, இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

யௌவன வாழ்வில் செங்கனி மாது

சந்தோசம் கொண்டாடும் போது

உலகம் யாவும் அழகில் ஆடும்

உள்ளந்தோறும் கலைகள் கூடும்

ஒய்யார வண்ணங்கள் பாடும் - இளமை

டாடாட....... டடாட...... டாடா.....

 

ஒரு முறைதான் வரும் கதை பல கூறும்

உல்லாசப் புதுமைகள் காட்டும்இளமை

ஒய்யார வண்ணங்கள் பாடும் இளமை

டாடாட....... டடாட...... டாடா.....


வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

20 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப எனக்கு இன்னும் வயசு இருக்கு.

நானும்  இப்படித்தான்  நினைச்சன்

யாழிலயும் தம்பிமார்  உட்பட எந்த  எதிர்ப்பும்  வராது என்று தெரியுது???😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியனந்த சுவாமிகள் திருவண்ணாமலையின்ர புகழ இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்ல .. 👍 இது உப்பு சப்பில்லா கேஸ் .. விடுங்கப்பா

.."பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.."..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வின் வின் சிட்டிவேஷன் 

அடுத்தவரும் 5 வருடமும் பெண்ணுக்கு சாதகமானது 
(அதனாலதான் சில வயது குறைந்த பெண்கள் இதுக்குள் நுழைகிறார்கள்)

5 வருடம் கடந்து மரணம் வரை மாப்பிள்ளைக்கு சாதகமானது 
(5 வருடத்துக்கு பின்பும் அந்த பெண் உறவை பேணுவார் என்று எண்ணி எடுக்கும் ஒரு ரிஸ்க். அல்லது 5 வருடத்துக்குளேயே அனுபவித்து முடிக்கவேண்டும் எனும் மனோ நிலையில் சமூக சொந்த குடும்ப உறவுகளை எதிர்த்தும் ஆண்கள் நுழைகிறார்கள்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

Tiruvannamalai DMK executive who romantically married granddaughter age girl

திருமணம் சொக்கத்தில் நிர்ச்சயிக்கப்படுகின்றது.
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள். 💐

கு.ச. வெக்கையில புழுங்குகிற மாதிரி பகல் கனவு கண்டனான். 😜

2 hours ago, தமிழ் சிறி said:

SKB திருமண நாள் வாழ்த்துக்கள் பாடல் புல்லங்குடி - YouTube

பதினாறும் பெற்று... பெரு வாழ்வு வாழ, இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.  💐

வாழ்த்துவது சரிதான். அதென்ன பதினாறும் பெற்று ... 🤔

நக்கலோ.. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கு.ச. வெக்கையில புழுங்குகிற மாதிரி பகல் கனவு கண்டனான். 😜

நான் நிஜத்திலையே அனுபவிச்சவன்யா......😎
உந்த விசயத்திலை நான் கனவெல்லாம் காணுற பழக்கம் என்னட்டை இல்லை ஐய்யா......எடுத்தால் மொட்டை வைச்சால் குடுமி 😂

1 hour ago, Kapithan said:

வாழ்த்துவது சரிதான். அதென்ன பதினாறும் பெற்று ... 🤔

நக்கலோ.. 😡

 கபிதன்  நிற்க.....✋🏽
பதினாறு எண்டால் பிள்ளையள் மற்ற அதுதான்.....அதை நான் என்னெண்டு இதிலை வைச்சு சொல்லுறது...😶

அவர் சும்மா ஒரு பேச்சு துணைக்கு இன்னொரு துணையை தேடி வைச்சிருக்கிறார்....அவ்வளவுதான் கக்கக போ...😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

நிழலி நியாயஸ்தன் ஆனால்.....

சீமான் விஜயலச்சுமி சம்பந்தப்பட்ட செய்தியை கிருபன் இணைத்த போது தடுத்திருக்க வேண்டும்.
திரைப்பட சீமான் அரசியல் சீமான் என்பதற்கு அப்பால் ஒரு தனிமனிதனை நான்கு சுவருக்குள் நடந்த விடயங்களை ஒரு பாலியல் ஒளிப்பதிவு போல் பிரசுரித்தவரின் செய்திகளை இணைக்க எப்படி அனுமதித்தீர்கள்?

உங்களுக்கு பிடித்ததோ எங்களுக்கு பிடித்ததோ என்ற பேதம் இல்லாமல் சீமான் இன்று தமிழ்நாட்டு/இந்திய அரசியலில் பேசு பொருளாகி விட்டார். இனி வரும் காலங்கள் நல்லதோ கெட்டதோ முடிவு செய்யும்.

இன்னும் வரும்..

மன்னிக்கவும் நிழலி! இன்னுமொரு கருத்தை உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்.நீங்கள்  பல கருத்துக்களை அனுமதித்து சில கருத்துக்களை அகற்றுவதன் மூலம் பல தவறுகளை இழைக்க முயல்கின்றீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.யாழ்களம் எமது களம். தமிழர்களின் களம். அந்த உரிமையுடன் மட்டுமே நான் உங்களுக்கு என் அனுபவத்தில் சொல்கிறேன்.

தடுமாறலும் தளம்பலும் நமக்குள் வேண்டாம். நமது பயணத்தின் இலக்கு ஒன்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

மாற்றி விட்டாச்சு.... ஆனால் இந்த செய்தி தேவைதானா என்ற கேள்வி நிர்வாகத்துக்குள் இருக்கின்றது. ஏனெனில் தனிப்பட்ட இருவரின் சட்ட ரீதியிலான உறவு சம்பந்தமான விடயம் செய்தி ஆக்கப்படுவதே தவறு முதலில்.

விட்டா புதிதுபுதிதாக எல்லாம் கண்டுபிடிப்பீங்களோ...  😂

பில் கிளின்ரன் எண்டாச் செய்தி லோவ லெவலில உள்ள ஆட்களெண்டா அது செய்தியில்ல.. ☹️

அம்மாடி....உது என்ன புதுசாக்கிடக்கு 😜

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நிழலி நியாயஸ்தன் ஆனால்.....

சீமான் விஜயலச்சுமி சம்பந்தப்பட்ட செய்தியை கிருபன் இணைத்த போது தடுத்திருக்க வேண்டும்.
திரைப்பட சீமான் அரசியல் சீமான் என்பதற்கு அப்பால் ஒரு தனிமனிதனை நான்கு சுவருக்குள் நடந்த விடயங்களை ஒரு பாலியல் ஒளிப்பதிவு போல் பிரசுரித்தவரின் செய்திகளை இணைக்க எப்படி அனுமதித்தீர்கள்?

 

நல்ல கேள்வி.

கிருபன் இணைத்த போது அதை ரிப்போர்ட் செய்து எமக்கு அறியப்படுத்தினீர்களா? இந்த திரியை நிர்வாகத்தின் கவனத்துக்கு ஒருவர் உடனடியாக கொண்டு வந்து சரியான பிரிவுக்குள் நகர்த்த கேட்டு இருந்தார், அதனால் தான் உடனடியாக நகர்த்தி பதிலையும் வைத்து நகர முடிந்தது. 

உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Quote

சீமான் விஜயலச்சுமி சம்பந்தப்பட்ட செய்தியை கிருபன் இணைத்த போது தடுத்திருக்க வேண்டும்.
திரைப்பட சீமான் அரசியல் சீமான் என்பதற்கு அப்பால் ஒரு தனிமனிதனை நான்கு சுவருக்குள் நடந்த விடயங்களை ஒரு பாலியல் ஒளிப்பதிவு போல் பிரசுரித்தவரின் செய்திகளை இணைக்க எப்படி அனுமதித்தீர்கள்?

உதுதான் ஆட்டுக்கில மாட்டை விடுகின்றது என்றது.

Quote

 

மன்னிக்கவும் நிழலி! இன்னுமொரு கருத்தை உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்.நீங்கள்  பல கருத்துக்களை அனுமதித்து சில கருத்துக்களை அகற்றுவதன் மூலம் பல தவறுகளை இழைக்க முயல்கின்றீர்கள். கொஞ்சம் சிந்தியுங்கள்.யாழ்களம் எமது களம். தமிழர்களின் களம். அந்த உரிமையுடன் மட்டுமே நான் உங்களுக்கு என் அனுபவத்தில் சொல்கிறேன்.

தடுமாறலும் தளம்பலும் நமக்குள் வேண்டாம். நமது பயணத்தின் இலக்கு ஒன்றே.

 

நிழலி ஒரு பனங்காட்டு நரி, உந்த சல சலப்புகளுக்கு எல்லாம் மசியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

நல்ல கேள்வி.

கிருபன் இணைத்த போது அதை ரிப்போர்ட் செய்து எமக்கு அறியப்படுத்தினீர்களா? இந்த திரியை நிர்வாகத்தின் கவனத்துக்கு ஒருவர் உடனடியாக கொண்டு வந்து சரியான பிரிவுக்குள் நகர்த்த கேட்டு இருந்தார், அதனால் தான் உடனடியாக நகர்த்தி பதிலையும் வைத்து நகர முடிந்தது. 

உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி

இல்லை. 


 கிருபன் இணைத்த அந்த செய்திபற்றி கேட்கவும் மொட்டைக்கடுதாசி போடவும் தோன்றவில்லை. காரணம் செய்திகளும் கருத்துக்களும் எவருக்கும் சமம் என்றே நினைத்திருந்தேன்.
ஆனால் கிருபன் இணைத்த போது அதை ரிப்போர்ட் செய்து அறியப்படுத்தினீர்களா  எனும் போது தான் பல சந்தேகங்கள் முளைக்கின்றன.

விடுங்கள்  நிழலி!  தமிழர்கள் என்று வரும் போது நீங்களோ நாங்களோ தனிமனிதர்கள் இல்லை. நாங்கள் தமிழர்கள். இனியும் வேறுபாடுகளை எமக்குள் வைத்துக்கொண்டால் இனிவரும் எமது தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் ஆகிவிடுவோம்.

இன்னொரு வெளிப்படையான கருத்தில் சந்திக்கும் வரை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

உதுதான் ஆட்டுக்கில மாட்டை விடுகின்றது என்றது.

நிழலி ஒரு பனங்காட்டு நரி, உந்த சல சலப்புகளுக்கு எல்லாம் மசியாது.

18 பதிவுகளையோடை இந்தளவு 'நிதானமா' பேசுறியல் எண்டால்.... நீங்கள் பழம் திண்டு கொட்டை போட்ட ஆள் போலை தான் இருக்குது. 

******

இந்த மாப்பிளை தலையில், ஊர் உலகத்து டை எல்லாம் இருக்குது. 

மனமகிழ் சிரிப்பு அப்படியே கட்டுமரம் போலை கிடக்குது. நாடகம் நடிக்க வந்த ராசாத்தி அம்மாவை மடக்கி கலியாணம் கட்டின தலைவரை மாதிரியே இவரும் செய்திருக்கிறார்.

சரி விடுங்கோ. திரியின் நோக்கத்துக்கு வருவோம்.

மறந்திடாம திமுகவில் இணைந்து ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.

https://dmk.in/joindmk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, zuma said:

உதுதான் ஆட்டுக்கில மாட்டை விடுகின்றது என்றது.

நிழலி ஒரு பனங்காட்டு நரி, உந்த சல சலப்புகளுக்கு எல்லாம் மசியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி திமுகவுக்கு தனித்திரி தொடங்கலாம் எண்ட யோசணைல இருக்கிறன்.🤔

மறந்திடாம திமுகவில் இணைந்து ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.

https://dmk.in/joindmk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.