Jump to content

பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோரின் பிறப்பு உறுப்பை அகற்ற நைஜீரியா அதிரடி தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா காலத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளமையால், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


அதனால், சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது.


புதிய சட்டத்தின் பிரகாரம் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல்  துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.


குழந்தைகளை  துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாய் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகப்பட்டசமாக 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதே நைஜீரியாவில் வழமையாக இருந்து வந்து.


இந்நிலையிலேயே இந்த சட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/90482

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.

 இதே செயல்களுக்காகத்தான்  இப்படியான தண்டனைகளை  விடுதலை இயக்கங்கள் கொடுத்தார்கள்.
அதையும் சகோதர படுகொலைகளாக மாற்றி.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத இந்தியாவில கொண்டுவந்தா எப்பிடியிருக்கும்....... 🤔

(சும்மா ஒரு நப்பாசைதான்.. 😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

இத இந்தியாவில கொண்டுவந்தா எப்பிடியிருக்கும்....... 🤔

(சும்மா ஒரு நப்பாசைதான்.. 😂)

அரசியல்வாதிகள் சாமிமாரிலிருந்து பொதுமக்கள் என்று சனத்தொகையில் அரைவாசி அகப்படும்.
இதைச் செய்து முடிக்கவே பல ஆண்டுகள் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இத இந்தியாவில கொண்டுவந்தா எப்பிடியிருக்கும்....... 🤔

(சும்மா ஒரு நப்பாசைதான்.. 😂)

இவன் வில்லங்கமான ஆள் எதுக்கும் நாமள் கவனமாய் இருப்பம்...அடி உதை வாங்கினாலும் பரவாயில்லை.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

அரசியல்வாதிகள் சாமிமாரிலிருந்து பொதுமக்கள் என்று சனத்தொகையில் அரைவாசி அகப்படும்.
இதைச் செய்து முடிக்கவே பல ஆண்டுகள் பிடிக்கும்.

தவறு தவறு... அப்படிச் சொல்லப்படாது...

நீதிபதிகள், அரசியல்வாதிகள்.... என்று வரவேணும்.... 

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுகள்,

அவர்கள் தான் ஏழு பேரை கட்டுப்படுத்தலாமே, பிறகு ஏன் கஷ்டப்படுவான்?

அத்துடன் நைஜீரியா பொம்பிளையல் பாவப்பட்ட அம்பிளை பிள்ளைகளை கடத்தி பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டால் என்ன தண்டனை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.