Jump to content

மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம்?

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும், மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

பிரதேச மக்களினால் இன்று ஏற்பாடு செய்யபட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள் விவசாயிகள் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன நல்லுறவிற்கு பாதகம் ஏற்படும் வகையில், செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பொலிஸார் கடமையினை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என கோசமிட்டு பதாதைகளை ஏந்தி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையளப்படுத்தபட்ட காணியின் முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இந்த சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  ஞானமுத்து அன்னபூரணம் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் வயற்காணியை 1964ஆம் ஆண்டு அவரது மருமகள்களான தருமலிங்கம் ராணியம்மா, தருமலிங்கம் யோகமலர், தருமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கபட்டு அவர்களினால் அன்று முதல் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர், குறித்த பகுதியில் புராதன சிங்கள பௌத்த சின்னங்கள் பௌத்த விகாரை இருந்ததாகவும் கூறி அப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் குறித்த இடத்திற்கு வந்து விகாரைக்குரிய காணி 200 ஏக்கர் உள்ளது காணிக்கு உரிமை கோருவேர் விவசாயம் செய்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்  என மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்து, அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், தினமும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யும் அத்துமீறல்களைக் கண்டித்தும் அதிகாரிகளுக்கு தாக்கியதற்காக சட்ட நடவடிக்கையெடுக்க கோரியும் கண்டனங்கள் தெரிவித்தும்  கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த இடத்திற்கு நில அளவை திணக்கள அதிகாரிகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் கிராம சேவை அதிகாரி சகிதம் சென்று பார்வையிட்டு சென்றனர்.

 

http://www.ilakku.org/demonstration-pankudavell-batticaloa-sumanaratna-thero/

மங்களராமய விகாராதிபதி, மக்கள் மத்தியில் இனக்கலவரத்தினைத் தூண்ட முயற்சி

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மீதான இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

இன்று  மட்டு-ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக இந்த மதகுரு ஒரு வன்முறையாளராக நடந்துகொள்ளும் நிலையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுகின்ற பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டன் பின்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமிழ் பிரதேசங்களில் ஓரு ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளக்கூடியவாறு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகத்தின் மத்தியில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குடாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள இனங்காணப்பட்ட தொல்லியல் தொடர்பான ஒரு இடத்தில் பௌத்த மதகுரு ஒருவரால் நேற்று அரச உத்தியோத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

பன்குடாவெளி பகுதியில் நேற்று தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள்,செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த மதகுருவினை பொறுத்தவரையில் கெவிழியாமடு பகுதியில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவம்,பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்,மட்டக்களப்பு கச்சேரியில் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் என பல சம்பவங்கள் அவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவையெல்லாவற்றினையும் தாண்டி நேற்றைய தினம் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஓரு மதகுரு செயற்பட்டதையெண்ணிவெட்கி தலைகுனியவேண்டும்.

இலங்கையில் பல மதகுருக்கள் உள்ளனர்.பௌத்த மதகுருக்களில் சிறந்த பல மதகுருக்கள் உள்ளனர்.ஆனால் இந்த மதகுருவைப்பொறுத்தவரையில் தமிழர் பகுதிகளில் ஒரு வன்முறையினை பிரயோகிப்பதன் ஊடாக ஒரு இனக்கலவரத்தினை தூண்டும் வகையில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

இந்த மதகுருவானவர் வன்முறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம். பௌத்த மதத்தில் உள்ள இவ்வாறான மதகுருக்களின் மூலம் வன்முறைகளில் ஈடுபடும் செற்பாடுகளை கடந்த ஐந்து வருடமாக முன்னெடுத்துவரும் நிலையில், சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கவேண்டிய பொலிஸார் எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

ஏனைய மத மதகுருக்கள் வன்முறைகளில் ஈடுபடும்போது பொலிஸார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கின்றனர். ஆனால் மட்டக்களப்பு பௌத்த விகாரையில் கடமைபுரியும் மதகுருவினைப்பொறுத்தவரையில் அரச நிர்வாகத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் மீது இவ்வாறு தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்திவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பன்குடாவெளியில் தொல்லியல் திணைக்கள மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அறையில் பூட்டிவைத்து அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடாத்தப்பட்டபோதிலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.பொலிஸார் இருக்கும்போதே குறித்த தேரர் இவ்வாறு நடந்துகொள்ளும் நிலையில் ஏனைய அதிகாரிகள் அச்சம்கொள்ளும் நிலையும் உள்ளது.

இந்த மதகுருவினால் தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சம்பவத்திற்கு ஜனாதிபதி அவர்கள் உரிய நடவடிக்கையெடுத்து சமூகத்தினையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் பாதுகாக்ககூடியவாறு நடவடிக்கையெடுக்கவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/மங்களராமய-விகாராதிபதி-ம/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.