Jump to content

யுத்தக் குற்றவாளிகள் அரசிடமிருந்து இருந்து தமிழ் பேசும் மக்களை காப்போம்.


Nathamuni

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தக் குற்றவாளிகள் அரசிடமிருந்து இருந்து தமிழ் பேசும் மக்களை காப்போம்.

Save the Tamils from the Government of war Criminals

கள உறவு தமிழ்சிறியின் ஆலோசணைபடி, மேலுள்ள தலைப்பில் எமது போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை மாகாநாடு முக்கியமானதாக இருக்கப்போவதால், நாம் இப்போதிருதே சில வேலைகளை செய்ய வேண்டும்.

புலம்பெயர், தமிழக, உலகத் தமிழர் எல்லோரும் ஒருங்கே ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்.

2009ம் ஆண்டு , புலிகள், பயங்கரவாதிகளாக எப்படி தமிழ் மக்களுக்கு சுமையாக உலகம் கருதியதோ, அதே போல, யுத்தக் குற்றவாளிகள் நிறுவிய அரசு சிங்களவருக்கு சுமையானதாக நமது குரல் அமைய வேண்டும்.

வெறுமனே பிரிட்டன், அமேரிக்கா மட்டுமல்லாது, யாழ்பாண ராசதானியை விழுத்திய போர்த்துக்கல், ஒல்லாந்தர் தூதராயங்கள் முன்னாலும், அந்தந்த நாடுகளிலும் தார்மீக ஆதரவு கேட்டு போராட வேண்டும்.

தனது காலனியாக இருந்து, சுதந்திரத்தின் போது, இந்தோனேசியாவிடம் சிக்கிக்கொண்ட, கிழக்கு தீமோருக்கு போர்த்துக்கல் தந்த உறுதியான தாரமீக ஆதரவு அதன் விடுதலையை பெற்றுத் தந்தது.

அதே போன்ற தார்மீக ஆதரவை நாமும் கேட்க வேண்டும்.

இப்போது இல்லையேல் மீண்டும் சந்தர்ப்பம் அமையாது.

உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Nathamuni changed the title to யுத்தக் குற்றவாளிகள் அரசிடமிருந்து இருந்து தமிழ் பேசும் மக்களை காப்போம்.
10 hours ago, Nathamuni said:

யுத்தக் குற்றவாளிகள் அரசிடமிருந்து இருந்து தமிழ் பேசும் மக்களை காப்போம்.

Save the Tamils from the Government of war Criminals

......................

2009ம் ஆண்டு , புலிகள், பயங்கரவாதிகளாக எப்படி தமிழ் மக்களுக்கு சுமையாக உலகம் கருதியதோ, அதே போல, யுத்தக் குற்றவாளிகள் நிறுவிய அரசு சிங்களவருக்கு சுமையானதாக நமது குரல் அமைய வேண்டும்.

...............

உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

 

சிங்களவருக்கு சுமையானதாக அமையும் அரசு பற்றி தமிழர் மட்டும் குரல் கொடுக்கும் போது, சிங்களவர் ஏன் தமக்கு சுமையான அரசுக்கெதிராக குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

சிங்களவருக்கு சுமையானதாக அமையும் அரசு பற்றி தமிழர் மட்டும் குரல் கொடுக்கும் போது, சிங்களவர் ஏன் தமக்கு சுமையான அரசுக்கெதிராக குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழாதா?

சிங்களவர்கள் தானே ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்தார்கள்.

புலிகளை தமிழர்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கவில்லை.

சர்வதேச ரீதியில் நமது போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விடப்பட்டதன் காரணம், பயங்கரவாதிகள் சார்பானது என்ற நிலைப்பாடு தான்.

இன்று அதே சர்வதேச நாடுகள் ஆதரவை மறுக்க முடியாத நிலைப்பாடு எடுக்க வேண்டிய நிலைக்கு காரணமாக இருக்க கூடியது, யுத்தக் குற்றவாளகளின் அரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

சிங்களவர்கள் தானே ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்தார்கள்.

புலிகளை தமிழர்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கவில்லை.

சர்வதேச ரீதியில் நமது போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விடப்பட்டதன் காரணம், பயங்கரவாதிகள் சார்பானது என்ற நிலைப்பாடு தான்.

இன்று அதே சர்வதேச நாடுகள் ஆதரவை மறுக்க முடியாத நிலைப்பாடு எடுக்க வேண்டிய நிலைக்கு காரணமாக இருக்க கூடியது, யுத்தக் குற்றவாளகளின் அரசு.

புலிகளை,மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையா ? அப்ப யார் தேர்ந்தெடுத்தார்கள் ?...உங்களை கருத்தைப் பார்த்தால் புலிகள் ஜனநாயகவாதிகள் இல்லை என்பது போல் இருக்கு 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.