Jump to content

சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்?

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது.

spacer.png

அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது.

இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அண்மைய நாட்களில் வைத்திய ஆலோசனைகளின் பிரகாரம் இரா.சம்பந்தன் போதிய ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் பல்வேறு சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் தொடர்ச்சியாக இரத்துச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/90506

Link to comment
Share on other sites

 

51 minutes ago, கிருபன் said:

எனினும் அண்மைய நாட்களில் வைத்திய ஆலோசனைகளின் பிரகாரம் இரா.சம்பந்தன் போதிய ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் பல்வேறு சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் தொடர்ச்சியாக இரத்துச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் சமபந்தனை தான் ஓய்வு எடுக்க சொல்லியுள்ளார். தமிழருடைய  பிரச்சனைகளும் சிங்கள அரசின் நகர்வுகளும்  ஓய்வு நிலைக்கு இன்னும் செல்லவில்லை. அலைபேசி ஊடாகவோ அல்லது Zoom/Skype/WhatsApp ஊடாகவோ கலந்து கொள்ள மாட்டாரா?. அவரால் அலைபேசியிலும் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல் நிலை குன்றியிருந்தால் இன்னொருவரை தன்  சார்பில் பங்கு பற்ற வைக்க வேண்டும்.

கட்டை ஏறு மட்டும் கதிரையில் இருக்க விரும்புபவரும் அந்த விருப்பை தொடர்ந்து நிறைவேற்ற உதவும் வாக்காளர்கள், கட்சி தொண்டர்கள் எல்லோரும் இந்த கேடு கேட்ட முறைமையால் முழு சமூகத்தின் நிலையையும் குழி தோண்டி புதைகிண்றீர்கள். புலம் பெயர் நாடுகளிலும் எமது அமைப்புகளில் இதே கலாச்சாரம். இதனால் கடமைப்புகள் புதிய அணுகுமுறைகளை உள்வாங்கி காலத்திட்க்கு ஏட்ப முன்னேறமுடியாத நிலை. தாங்கள் கதிரையை விட்டு போகாமல் இருக்கிறதுக்கு இளைய தலைமுறை ஆர்வம் காட்டவில்லை என்ற நொண்டி சாட்டு வேறை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயோதிபருக்கு போதிய ஒய்வு எப்போது கிடைக்கும்? தனது பொறுப்புகள் கடமைகள் என்பவற்றில் இருந்து நிரந்தரமாக விலகினால் தான் அது கிடைக்கும். சம்பந்தன் ஐயா தனது இறுதி காலத்தை அமைதியாக கழிப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எனினும் அண்மைய நாட்களில் வைத்திய ஆலோசனைகளின் பிரகாரம் இரா.சம்பந்தன் போதிய ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால்

இன்று, நேற்றல்ல எப்போதுமே முக்கியமான காலங்களில் ஐயாவுக்கு வைத்தியசாலையும், ஆலோசனைகளும் தேவைப்படும். அதுவும் இது மிக முக்கியமான நேரம், சுமந்திரனின் பதவியை பறிப்பதை தடுக்கவோ, தள்ளிப்போடவோ படுத்திருப்பார். கள்ள மாடு நாடு உளவு நேரம் படுப்பதுபோல். இவரையும் சேர்த்து அனுப்பிவிடவேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா பூரண நலம் பெற்று பாராளுமன்ற குழு கூட்டத்தில் சமூகமளிக்க இறைவனை வேண்டுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவிடம் சொன்னால், வைத்தியசாலையை பாராளுமன்றத்திற்கே மாற்றிவிடுவார். கொலைக் கைதிகளும் பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் என்பதற்காக அவர் சிறைச்சாலையையே பாராளுமன்றத்திற்கு மாற்றவில்லையா? ஐயாவுக்காக இதைச் செய்ய மாட்டாரா என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது.

 

அதாவது; சுமந்திரனை கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் சிங்களம் ஏற்றுக்கொள்ளாது, தடுக்கும். அதற்காக அவசர அவசரமாக ஏதோ ஒரு பேச்சுவார்த்தை நாடகத்தை சுமந்திரனோடு தொடங்கும்.  அவர் இல்லாமல் பேச்சுவார்த்தை தொடர   முடியாது தொடர்ந்தாலும்  வெற்றியளிக்காது எனும் மாயையை ஏற்படுத்துவார்கள். பின் என்ன? எதிர்பார்த்தது போல் எடுக்கவிருந்த நடவடிக்கை தள்ளிப்போகும், ஏற்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுவார்கள், ஓரம் கட்டப்படுவார்கள். சுமந்திரன் தன் ஆட்டத்தை தொடருவார். அது வரையும் ஐயாவுக்கு வைத்திய சாலையும், வைத்திய ஆலோசனைகளும் தொடரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.