Jump to content

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்

சின்னக்கருப்பன்

spacer.png

சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள்.

இரண்டு மொழி கொள்கையால், ஆங்கிலம் தமிழை அழித்துவிட்டது என்று என்னிடம் முதலில் சொன்னவர் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம்.

இது மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுகொள்ளாததன் பின்னணியில் அதன் விமர்சனமாக அவர் வைத்த முக்கியமான பார்வை.

மெல்லத்தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்றந்த பேதை உரைத்தான் என்று பாரதியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பியது இன்னமும் புலம்பலாகவே இருக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன்..

(இந்த நிலையில் கவிதாயினி என்று தமிழ் ஆன்றோர் போன்றோர்களால் புகழப்படும் கனிமொழி எம்பி அவர்களது 2008 உளறலையும் படிக்க நேர்ந்த துரதிர்ஷ்டமும் அடியேனுக்கு வாய்க்கப்பட்டது. அதனை கண்டித்து சரத்குமார் எழுதியதை ஒன் இந்தியா இதழில் படித்து இன்னமும் அதிக துயரடைந்தேன்.
https://tamil.oneindia.com/art-culture/essays/2008/27-sarath-kumar-criticizes-kanimoli-for-talk.html 

“தமிழ் மெல்லச் சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல். தமிழ் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும்” என்று “வீர உரை” ஆற்றினாராம் கனிமொழி.

கருணாநிதி, ஸ்டாலின் (சுடாலின் அல்ல), கனிமொழி, உதயநிதி, இன்பநிதி போன்றோருக்கு சூளுரை செய்தாலே போதுமானது. தமிழ் வளர்ந்துவிடும். ஆகையால் அவர்களிடம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை.

அரைகுறை அரசியல்வாதிகளை விட்டுவிட்டு பாரதியிடம் செல்வோம்.

புத்தம் புதிய கலைகள்
பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவதில்லை
அவை சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத்தமிழினிச் சாகும்
அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்

இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”


புத்தம் புது கலைகள், பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மேன்மைக்கலைஞர் தமிழினில் இல்லை.

உண்மைதானே?

பாரதி இதனை கூறி நூறுவருடங்களுக்கு மேலாகிறது.

2012 இல் நடந்த கணினி தமிழ் வளர்ச்சி மாநாட்டில் கூட

http://kaninithamilvalarccimaanadu.blogspot.com/2012/12/blog-post_4046.html

6 முதுகலை, முது அறிவியல், இளம் பொறியியல், மருத்துவம், இளமுனைவர், முனைவர் பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) 5 பக்கங்களுக்காவது தமிழ்ச்சுருக்கம் கொண்டிருக்கவேண்டும். நேர்முகத் தேர்வில் 15 நுணுத்தங்களாவது (minutes) தமிழில் கேள்விகள் கேட்டு, விடைவாங்கி, அதற்கப்புறமே பட்டமளிப்புத் தேர்ச்சி கொடுக்கவேண்டும். தமிழே தெரியாது தமிழ்நாட்டிற் பட்டம் பெறுவது சரியல்ல.

அவ்வளவே தான் கேட்டிருக்கிறார்கள். அதனைக் கூட தமிழ்நாட்டில் தமிழ் வளர்ப்பதற்காகவே தினந்தோறும் சூளுரை எடுக்கும் திமுகவினரும் அதிமுகவினரும் 60 ஆண்டுகள் ஆளும் தமிழ்நாட்டில் நடத்தி வைக்கமுடியாது. உண்மைதானே?

தமிழ் மொழி மாநாடு நடத்தி அதில் கருணாநிதி குடும்பத்தினரை முன் வரிசையில் அமர்த்தி, கருணாநிதி குடும்பத்துக்கு வாழ்த்துப்பா படித்துவிட்டால் தமிழ் வளர்ந்துவிடும் என்று ஒவ்வொரு திமுகவினரும் கருதலாம்.

நான் துரதிர்ஷ்டவசமாக அப்படி கருதவில்லை.

சொல்லப்போனால், பாரதியார் தமிழ் வளருவதற்கான சரியான யோசனையை சொன்னாலும் தமிழர்கள் வளர்வதற்கான சரியான யோசனை அது அல்ல.

வெறுமே ஆங்கில ப்ரெஞ்ச், ஜெர்மானிய சீன மொழி அறிவியல் தொழில்நுட்ப மற்ற இதர கலை செல்வங்களை தமிழில் மொழிபெயர்த்தால் போதாது.

ஏனெனில் தமிழர்கள் புத்தகங்களை படிப்பதே இல்லை.

இந்த கேவலமான விஷயத்தை சொல்லிவிடத்தான் வேண்டியிருக்கிறது. தமிழர்கள் புத்தகங்கள் படிப்பதே இல்லை. யாரோ எதையோ சொல்லுகிறார்கள் என்று அதனை திரும்ப சொல்லுகிறார்களே தவிர தமிழர்கள் புத்தகங்கள் வாங்குவதில்லை. படிப்பதில்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் புத்தக கண்காட்சிகள் படு தோல்வி அடைகின்றன.

தமிழில் மிக அதிகம் விற்பவை ஜோதிட புத்தகங்களும், சமையல் குறிப்புகளும்தான்.

8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ஒரு புத்தகம், 500 புத்தகங்கள் விற்பனை ஆகிவிட்டால் மிகப்பெரிய வெற்றி என்று அறிவித்துவிடலாம். அந்த லட்சணத்தில்தான் தமிழில் புத்தகங்கள் வாங்குகிறார்கள் படிக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் எல்லா பதிப்பகத்தினருக்கும் தெரியும். அரசாங்கம் தனது நூலகங்களுக்கு புத்தகம் வாங்குவதாலேயே தமிழ்நாட்டில் நூல் பதிப்பக தொழில் குடிசைத்தொழிலாக இருக்கிறது.

அதுவும் கவிதை கதை புத்தகங்கள்தானே தவிர, க்வாண்டம் இயற்பியல் புத்தகம் அல்ல. க்வாண்டம் இயற்பியல் புத்தகம் தமிழில் வராது. வந்தாலும் ஒரே ஒரு பிரதி கூட விற்காது. காரணம் அதனை படிக்க வேண்டிய கட்டாயம் எந்த இயற்பியல் மாணவருக்கும் இல்லை. எந்த பதிப்பக உரிமையாளரும் க்வாண்டம் இயற்பியலுக்கோ, அல்லது குழு தேற்றம் பற்றிய கணித புத்தகத்துக்கோ மறந்தும் நூல் பதிப்பு செய்யமாட்டார்.

மிக எளிய தமிழில் பாரதியார் எழுதிய கவிதையையே படிக்காமல், பாரதியாரை கண்டித்து வீர உரை ஆற்றும் முதலமைச்சரின் மகள் இருக்கும் நாட்டில், க்வாண்டம் இயற்பியலை யார் தமிழில் படிப்பார்கள்?

சரி ஏன் தமிழர்கள் க்வாண்டம் இயற்பியலை தமிழில் படிக்க வேண்டும்? ஏன் ஆங்கிலத்தில் படித்துகொள்ளக்கூடாதா?

ஏனெனில் தமிழர்களுக்கு சரியாக தமிழே தெரியாத போது, எப்படி ஆங்கிலத்தில் படித்து புரிந்துகொள்வார்கள்?


தமிழர்கள் சரியான மாங்கா மடையர்களாக ஆனதற்கு முக்கிய காரணம், அனைத்து அறிவியல், பொருளாதார, தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதுதான்.

இதுதான் உண்மையான உண்மை.

தமிழை வளர்க்க வேண்டாம். தமிழர்களை முன்னேற்றுங்கள். தமிழர்கள் முன்னேற வேண்டுமானால், தமிழ்நாட்டில் பிரதேச மொழியாக இருக்கும் தமிழில் மட்டுமே அனைத்து உயர்கல்வியும் இருக்க வேண்டும். வெறும் ப்ராஜக்ட் ரிப்போர்ட்டுகள் மட்டுமல்ல.

தமிழில் உயர்கல்வி கற்கும்போதுதான் தமிழர்களுக்கு தாங்கள் என்ன படிக்கிறோம் என்று புரியும். இதனை மறுபடி மறுபடி அழுத்தந்திருத்தமாக சொல்லுகிறேன்.

ஆங்கிலமே முழுக்க முழுக்க பேசும் கான்வெண்டில் கூட தமிழர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதியுள்ள பாடத்தை புரிந்துகொள்வது சிரமம்.

ஆங்கிலத்தில் அந்த கல்வி இருப்பதற்கு பதிலாக இந்தியில் கூட இருக்கலாம். ஆனால் தயவு செய்து ஆங்கிலம் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

எத்தனை எத்தனையோ பிரம்மாதமான இளைஞர்கள், புத்திசாலி இளைஞர்கள், ஆங்கிலம் புரியாததாலேயே பத்தாம் வகுப்பில் தோற்று வாழ்க்கை இழந்து போனார்கள் இந்த தமிழகத்தில்.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற என் நண்பன், ஆங்கிலத்தில் 30 மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான்.

இன்னும் அவனின் கண்ணீரை என்னால் மறக்க முடியவில்லை. ஆங்கிலம் நமதுமொழி அல்ல. ஆங்கிலம் அன்னிய மொழி. அதன் வார்த்தைகளும், அதன் இலக்கணமும், அதன் சொற்றொடர்களும், அதன் idioms and phrases நமக்கு அன்னியமானவை. அவற்றை புரிந்துகொண்டு அதன் பிறகு அதன்மூலம் கலைகளை கற்பது என்பது தமிழ் மாணவர்களை நெருப்பு பாதையில் இழுத்து வருவது போன்ற கொடுமையானது.

அது நம் நினைவு தெரிந்த நாள் முதலாகவே அறிந்திருப்பதால், அதனை சகஜமாக ஏற்க பழகிவிட்டோம்.

தெலுங்கை, மலையாளத்தை, இந்தியை நாம் மிக எளிதில் கற்றுகொள்ளலாம். ஏனெனில் அவை நமக்கு அன்னிய மொழிகள் அல்ல. அதில் இருக்கும் வார்த்தைகள், இலக்கண அமைப்பு, அதன் idioms and phrases நமக்கு பழக்கமானவை. பரவாயில்லை என்பத பர்வா நஹி என்றுதான் இந்தியில் சொல்லுகிறார்கள். இந்த மொழிகள் நம்முடன் 2000க்கும் மேலான வருடங்களாக நம்முடன் உறவாடி இருக்கின்றன. அதனால்தான் இளையராஜா மிக எளிதில் தெலுங்கில் உரையாடுகிறார். மோகன்லால் தமிழில் பேசுகிறார், ஹர்பஜன் சிங் தமிழில் உரையாடுகிறார்.

இதனால்தான் தமிழ் வியாபாரிகள் பெல்காமுக்கு பஸ்ஸில் சென்று அங்கு வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பின்னால் சென்று வசூலித்துகொண்டு திரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆங்கில ஆதரவு, தமிழ் வளர்க கோஷம், இந்தி அரக்கி கோஷம் ஆகியவற்றை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

இந்தி எதிர்ப்பும், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்பதும் நமது வரலாறு. ஆனால், வரலாறு நமது விலங்காகிவிடக்கூடாது.

இந்திக்கு பதிலாக தமிழ் என்று இருப்பதற்கு பதிலாக, இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்று உருவாக்கிவிட்டோம். அதுதான் மிகப்பெரிய இமாலய தவறு.

இன்று தமிழர்களின் கழுத்தில் தொங்கும் தூக்கு கயிறாக ஆங்கிலம் இருக்கிறது. ஆங்கிலத்தை ஒழித்து, அதன் இடத்தில் தமிழை உட்கார வைப்பதே எதிர்கால தமிழர்களின் முன்னேற்றத்துக்கு நாம் செய்யக்கூடிய ஒரு பணி.

ஆங்கிலம் ஒழிப்போம், தமிழரை காப்போம். தமிழ் தானாக வளரும். தமிழரை ஆங்கிலத்திடமிருந்து காக்கமுடியவில்லை என்றால் தமிழ் நிச்சயம் அழியும்.

 

http://puthu.thinnai.com/?p=40928

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தமிழை வளர்க்க தெரியாதவர்கள் ஆங்கிலத்தை அழிக்க போயினமாம்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

தமிழ் நாட்டில் தமிழை வளர்க்க தெரியாதவர்கள் ஆங்கிலத்தை அழிக்க போயினமாம்  
 

கட்டுரையைப் படித்தால் தமிழை வளர்க்கத்தான் ஆங்கிலத்தை அழிக்கவேண்டும் என்று சொல்கின்றார் என்று தெரியும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

கட்டுரையைப் படித்தால் தமிழை வளர்க்கத்தான் ஆங்கிலத்தை அழிக்கவேண்டும் என்று சொல்கின்றார் என்று தெரியும்😁

ஆங்கிலத்தை அழித்து தான் தமிழை வளர்க்கோணும் என்று இல்லை 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.