Jump to content

பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு

தமிழர்தரப்பின் பலத்தை மேலோங்கச் செய்ததன் காரணத்தாலும், அறிவியலினூடாகவும் தொலைநோக்கினூடாகவும் தமிழீழ அரசின் பொதுக்கட்டுமானங்களை வேகமாகக் கட்டியெழுப்பியதாலும் உலகத்தமிழர்களுக்கெல்லாம் அச்சாணியாகவும் பாடமாகவும் தமிழீழ விடுதலைப்போர் அடையாளப்படுத்தப்பட்டது.

Praba-book1.jpg

இதன்காரணமாக உளக்கிளர்ச்சியுடன் வாழ்ந்துவந்த உலகத்தமிழர்களை, 2009 இல் உலகஅரசுகளின் கூட்டுச்சதியோடு சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பானது ஆழ்ந்த வேதனையையும் உளச்சோர்வையும் தந்து படுகுழிக்குள் தள்ளியது. “நாம் தோற்றுப்போய்விட்டோம்” என்ற அவல மனநிலையுடன் தமிழர்கள் பதினொரு ஆண்டுகளைக் கடந்துவிட்டார்கள். இன்னமும் அப்படியேதான் பலர் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ” நாம் தோற்றுப்போகவோ அன்றி அடிபணியவோ இல்லை” என்பதனையும், மீளெழும் வழிகளைக் கைக்கொள்ளும் நடைமுறை உதாரணங்கள் நம் கண்முன்னே விரிந்துகிடக்கின்றன என்பதையும், தமிழர்களது போராட்டத்தைத் தத்துவார்த்த, அறிவியலினூடாக அடையாளப்படுத்தும் முதல் நூலாகவும் வெளிவருகிறது “பிரபாகரன் சட்டகம்”.

Praba-book4.jpg

கனடா மெமோரியல் பல்கலைக்கழகத்தின் முதுகலைப்பட்டமும், அமெரிக்காவின் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்ற சிறப்புக்குரியவரான கலாநிதி.மு.சேதுராமலிங்கம் அவர்களின் ஆய்வாக வெளிவரும் இந்நூலை, நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி செப்பனிட்டுத் தொகுத்து, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினூடாக வெளியிடுகிறார்கள்.

இதன் முதல் வெளியீடு எதிர்வரும் 03.10.2020 சனிக்கிழமை யேர்மனியின் Soest நகரில் நடைபெறுகிறது. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவுநாள் நிகழ்வில் வெளியிடப்படும் இந்நூல், தொடர்ச்சியாக ஏனைய நாடுகளிலும் வெளியிடப்படவிருக்கிறது.

தொடர்பு :
– நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி
– Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல்

http://www.ilakku.org/பிரபாகரன்-சட்டகம்-நூல்-வ/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் பிரபாகரன் சட்டகம் நூல் வெளியீடு

 

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர், தமிழ்முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தலும், பிரபாகரன் சட்டகம் நூல் வெளியீடும் நேற்று (03.10.2020) யேர்மனியின் Soest நகரில் நடைபெற்றது.

மாலை 16.59 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர் பாபு அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியினை முன்னாள் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு.ஆனந்தராசா அவர்களும் ஏற்றிவைத்தனர். திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்கள் கப்டன் அப்பன் மற்றும் வீரவேங்கை மதன் ஆகியோரின் சகோதரர் திரு.சிறிதரன் அவர்களும், மாவீரர் கப்டன் சிவா அவர்களின் சகோதரர் சந்திரன் அவர்களும், தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களது திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை நாம்தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர் திரு,முகுந்தன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

திருவுருவப்படங்களுக்கான மலர்மாலையை தமிழீழ விடுதலைச்செயற்பாட்டாளர்கள் திரு,புவனேஸ்வரன், திரு.வரதன், திரு,சிவம் , ஆகியோர் ஏற்றிவைத்தனர். அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் பாடல்கள், நடனங்கள், கவிதைகள், உரை ஆகியன இடம்பெற்றன.

தொடர்ந்து பிரபாகரன் சட்டகம் நூல் வெளியீட்டிற்கான அறிமுக உரையை நூலாசிரியர் திரு.சேதுராமலிங்கம் அவர்கள் நிகழ்த்த, ஆய்வுரையை தமிழ்நெற் நிறுவன ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வெளியீட்டுரையை மேஜர்பாரதி கலைக்கூடப்பொறுப்பாளரும் அறிவிப்பாளருமான திரு.வலன்ரைன் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தினார்.

நூலின் முதற்பிரதியை; தவளை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் அன்பு அவர்களின் சகோதரி பெற்று வெளியிட, மாவீரர்கள் கப்டன் அப்பன் , வீரவேங்கை மதன், கப்டன் சிவா, கப்டன் மொழி, லெப்.இயல்வாணன், மேஜர் நிலவன், ஆகியோரின் சகோதரர்கள் தொடர்ச்சியாக பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வினை அறிவிப்பாளர்கள் திரு.வலன்ரைன் , செல்வி. தட்சாயிணி ஆகியோர் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து வழங்கினர்.

இரவு 20.30 இற்கு நிறைவெய்தும் வகையில் திட்டமிடப்பட்ட நிகழ்வு 11 நிமிடங்கள் தாமதமாக 20.41 இற்கு நிறைவெய்தியது, தாமதத்திற்கு வருந்துகிறோம். நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னின்று நடாத்தி, நிகழ்விற்கு வருகைதந்த அனைவரையும் அன்புடன் உபசரித்த Soest நகர மக்களுக்கு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல், மற்றும் நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளியினர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள்.

குறிப்பு,: முதல் வெளியீட்டு நிகழ்விலேயே 120 பிரதிகள் மக்களால் பெறப்பட்டன.

http://www.ilakku.org/யேர்மனியில்-பிரபாகரன்-சட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.